வெள்ளி, 31 டிசம்பர், 2010

முஹம்மது நபி[ஸல்] அவர்களே அழகிய முன்மாதிரி

செங்கொடி 
///முகம்மது இறந்து சற்றேறக்குறைய நூறிலிருந்து நூற்றைம்பது ஆண்டுகள் கழித்துத் தான் ஹதீஸ்களின் தேவை எழுகிறது///
இஸ்லாத்தை படித்துவிட்டு நீங்கள் இஸ்லாத்தைப்பற்றி எழுதுவதாக துவக்கத்திக் கூறியுள்ளீர்கள்.ஆனால் ஹதீத்கள் பற்றி மேல் குறிப்பிட்ட கருத்துக்கள் முதல் பல கருத்துக்கள் உங்களை அறை வேக்காடு என்பதை படம் பிடித்து காட்டுன்கின்றன.முஹாம்மது நபி[ஸல்]அவர்கள் காலத்திலே எந்த ஒரு உலக விசயங்களும் நபி[ஸல்] அவர்களின் அறிவுரைகளை கேட்டே செய்துள்ளனர்.அவர்களை சந்திக்க முடியாத தூரத்தில் இருந்தவர்கள் கூட அவர்களை சந்தித்தும்,அல்லது உற்ற தோழர்களிடமும் நபி[ஸல்] கருத்துக் களின் அடிப் படையிலேயே செயல் பட்டனர்.நபி[ஸல்] காலத்திற்கு பின்னும் நபிதோழர்கள் தங்களின் வாழ்க்கை தேவைக்கான நபி[ஸல்] சொல்,செயல்,அங்கீகாரங்களை பற்றி நன்றாக மனனம் செய்த அறிஞர்களிடம் கேட்டு தெரிந்து அதன் அடிப்படையில்  செயல் பட்டனர்.அவர்கள் மனனம் செய்வதில் தேர்ச்சி பெற்று இருந்தனர்.இன்னும் எழுத தெரிந்தவர்கள் தாங்கள் அறிந்த ஹதீத்களை தொகுப்பாக  இல்லாமல் எழுதி வைத்தனர்.சிலர் எழுதுவதால் மனன சக்தி குறைந்துவிடும் என்பதால் எழுதிவைப்பதை தவிர்த்தனர்.எனக்கு கூட செல் போன் உபோயோகிக்காத காலத்தில் சுமார் இருநூறு நம்பர்கள் ஞாபஹத்தில் இருந்தன.செல்போன் மெமரி பயன்படுத்திய பிறகு எனது நம்பரே சில சமயங்களில் மறந்துவிடுகிறது.ஷுஹ்ரி  இமாம் போன்றோர் முறைப்படி தொகுக்காமல் அதிகமான ஹதித்களை எழுதி வைத்திருந்தார்.இஸ்லாத்தை ஒழித்துவிடலாம் என எதிர்த்து பின் இஸ்லாத்தில் இணைந்த யூதர்கள் உட்பட சிலர் மக்களிடம் நபி[ஸல்] சொல்களுக்கு இருந்த செல்வாக்கை அறிந்து நபி[ஸல்] பெயரிலே தங்களது சொந்த கருத்துக்களை மக்கள் மத்தியில் உலவ விட்டனர்.ஆனாலும் ஹாதீத்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் ,ஒரு ஹதீதை கேட்கும்போது நபி[ஸல்] அவர்களிடம் அதை முதலில் கேட்டது யார் ,முதல் தனது அறிவுக்கு எட்டும் வரை உள்ள நபர்களையும் மனனம் செய்தனர். அப்துல்லா இப்னு சபா போன்ற யூதர்   ஷீ ஆ க்களுக்கு ஆதரவாக பல பொய்யான ஹதீத்களை பரப்பியவன் ஆவான்.இமாம் மாலிக் ,இமாம் ஷாபி ,இமாம் ஹம்பல் ஆகியோர் ஹதிகளை முறைப்படி தொகுக்க ஆரம்பித்தனர். இவர்களில் மாலிக் இமாம் மட்டுமே பாடங்களை தலைப்பிட்டு எழுதியுள்ளார்.மற்ற இமாம்கள் அறிவிப்பாளர்களின் பெயரில் தலைப்பிட்டு எழுதியுள்ளனர். இவர்கள் ஹதீத்களை முறையான ஆய்வுகள் இல்லாமல் பதிவு செய்தனர்.ஹதீத் அறிவிப்பாளர்கள் வரிசையை ரெபரென்ஸ் க்காக கொடுக்கப்படவில்லை.ஒவ்வொரு ஹதீதும் மத்ன்' இஸ்னாது என்று இரு பகுதிகளாக உள்ளன.மத்ன்  என்றால் ஹதீதின் கருத்து பகுதியாகும்..இஸ்னாது என்பது அறிவிப்பாளர்களின் வரிசை பகுதியாகும்.அதன் பின்னரே ஹதீத்களில் நயவஞ்சகர்களின் ஊடுருவல் மக்களுக்கு புரிய வந்தது பின்னர் வந்த புகாரி,முஸ்லிம் ,திர்மிதி,நஸாயி,இப்னுமாஜா ,அஹ்மது போன்ற நூல்களில் ஹதீத்கள் அதன்தரத்துடன் பதிவு செய்தனர்.செவிவழி பதிவு ஆனாலும் அந்த ஹதீத் அவர்களுக்கு எப்படி கிடைத்தது,அவர்கள் கூறும் நபர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதா என்றெல்லாம் ஆய்ந்தறிந்து பதிவு செய்தனர்.இந்த ஆறு நூல்கள் குரானுக்கு அடுத்த இடத்தில் இருந்தன .இமாம் புகாரி அவர்கள் ஒரு நபி வழி செய்தியை ஒருவரிடம் அறிந்து கொள்வதாக இருந்தால் அவரது ஹதீத் அறிவை பரிட்சித்தே பதிவு செய்வது வழக்கம்.ஒருவரிடம் ஹதீதை பெறும்போது ,தன்னிடம் ஏற்கனவே உள்ள ஹதீதின் கருத்தை கூறி அதன் அறிவிப்பாளர் வரிசையை மாடி கூறி சரி காண்பார். சிலரிடம் ஏற்கனவே தெரிந்த ஹதீதின் ராவிகள் வரிசையை சரியாகா கூறி கருத்தை தவறாக கூறியும் சோதித்து பார்ப்பார்.இமாம் அபு ஹனிபா,இமாம் ஷாபி ,இமாம் மாலிக்,இமாம் ஹன்பலி போன்றோர் நபி தோழர்களுக்கு அடுத்த இடத்தில் மதித்து வந்தாலும் அவர்களது நூல்களை விட சிஹாஹ் சித்தா எனப்படும் புகாரி,முஸ்லிம் போன்ற ஆறு கிதப்களே முன்னிலை வகிக்கின்றன.இதை அப்பாசிய காலத்தில் எழுதியதையும் அவைகள் முதன்மையாக ஏற்கப் பட்டதற்கும் மர்மம் தேட ஒன்றும் இல்லை. இந்திரா காலத்தில் கணினிகளில்    அரசு தஸ்தாவேஜுகளை பதிவு செய்யாமல் மன்மோகன் சிங் காலத்தில் கணினிகளில் பதிவு செய்ததற்கு என்ன மர்மமோ அதே மர்மம்தான் அப்பாசிய காலத்தில் பதிவி செய்யப்பட்ட ஹதீத்கள் ஏற்கப் பட்டதற்கு காரணம்.
 ///நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து தொகுக்கத் தொடங்கிய ஹதீஸ்கள் அப்படியே உண்மையானவை என்பதை நீங்கள் தான் மெச்சிக்கொள்ள வேண்டும்.////
ஹதீத்களை மனனம் செய்தவர்கள் ஒவ்வொருவராக மரணம் அடைந்து ,அவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததால் பதிவு செய்வதன் அவசியத்தை உணர்ந்த பின் பதிவு செய்ய ஆரம்பித்தனர். செங்கொடியின் ஒப்புதலுக்காக ஹதீத்கள் காத்து கொண்டிருக்கவில்லை.இப்போதும் குர்ஆனை உச்சரிப்பு,பல விதமான அளவுகளில் நீட்டல்,நிறுத்தல் களுடன் மனனம் செய்தவர்கள் முஸ்லிம்கள் வாழும் தெருக் களில் தலா பத்து பேர் இருப்பார்கள்.போன நூற்றாண்டு மனிதர் பற்றி குஜராத் பெஸ்ட்பேக்கரி வழக்கு போல் பல்டிகள்.அப்போது காசு வாங்கிஅப்படி  சொன்னோம் இப்போது காசு வாங்காமல் ? இப்படி சொல்லுகிறோம் ,இனி எப்படி சொல்லுவார்களோ?உங்களது தன மான இரும்பு கோட்டை  தலைவரை பற்றி சரியான வரலாறு இல்லாதவர்கள், மிக துல்லியமாக ,இன்னார் ஞாபக சக்தி குறைவு உள்ளவர்.இன்னாரின் தந்தைக்கும் மகனுக்கும் தொடர்பு இல்லை,இந்த  ஆசிரியரின் காலம் இது அவரின் மாணவர் காலம் இது அதனால் தொடர்புக்கு வாய்ப்பு இருக்கிரது,இன்னார் இத்தனை காலம் வரை நன்றாக இருந்தார்,அதன்பின் மனம் குழம்பியவாராக காணப்பட்டார்,என்றெல்லாம் ஆய்வு செய்ய பட்டது. ஷீ ஆ க்களின் நூல்களில் இது போன்று ஆய்வுகள் இல்லாமல் வெறுமனே சொல்லப்பட்டிருக்கும். 
       /// குரானோடு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என நீங்கள் தர்க்கித்து வருகிறீர்கள்/// ஆம் ஹதீத்கள் வடிகட்டுவதர்க்காக எடுக்கப்பட்ட அளவுகளில் குர்ஆன் முரண்பாடு ஒன்று. மற்ற தலைவர்கள் பற்றி அவதூறோ ,குற்ற சாட்டோ மறைக்கப்பட்டிருக்கும்  ஆனால் முகம்மதுநபி[ஸல்] அவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் பதிவு செய்யப் பட்டு அந்த செய்திகளின் தரம் பற்றியும் குறிப்பிடப் பட்டிருக்கும்.இங்கே செவிவழியில் பதிவு செய்யப் பட்டது போல் முன் காலத்தில் பதிவு செய்யப்பட்டதை ஒரு விசயத்தை உங்களால் கூற முடியுமா?
///காலந்தோறும் கிடைக்கும் புதுப்புது ஆதாரங்களைக் கொண்டு உறுதிப்படுத்தி எழுந்த முடிவுகளை கதைகளைப் போல் தள்ளிவிட முடியாது. ஏனென்றால் பழங்காலத்தைக் கண்டுணர இதைவிட சிறந்த ஆய்வுமுறை உலகில் இல்லை///
இந்த ஆய்வுகளெல்லாம் யூகங்கள் தான்.இப்படித்தான் என்று உறுதியிட்டு கூறமுடியாது.உண்மைகளை i நெருங்க முடியுமே தவிர அதுதான் உண்மை என்று அறுதியிட்டு சொல்ல முடியாது.
. ////நீங்கள் ஆதாரம் கேட்டபோது நூல்களின் பட்டியலையே என்னால் தந்திருக்க ,,,,,,,,,,,,,,,                            ஆய்வாளரின் நூலையும் நீங்கள் படித்துப்பார்க்கலாம்// உங்களுக்கு தமிழ் தெரியும் தானே. இதன் பொருள் என்ன என்பது உங்களுக்கு விளங்கவில்லையா///இல்லை கம்யுனிஸ்ட் நூல்களையே ஆதாரமாக   அதாவது பெண் ஆதிக்க மிக்க சமுதாயமாக பாலியல் குற்றங்கள் நடக்காத சமுதாயமாக வாழ்ந்ததுக்கு ஆதாரம் தாருங்கள் .நானும் அரபியில் கேட்கவில்லை.


முகம்மது ஒரு புதிய சமூக ஒழுங்கை படைக்க விரும்பி தன் மதத்தை பிரச்சாரம் செய்த போது எந்த முன்மாதிரியைக் காட்டினார்?////
முஹம்மது நபி[ஸல்] அவர்களே அழகிய முன்மாதிரியாக திகழ்ந்தார்.அவரை கொலை செய்யவந்தவர் பின்னர் அவர் இறந்தபோது கூட அதை நம்ப முடியாமல் தவித்தார்.உங்களைப் போன்று உலகில் ஒரு வெறுப்பான முகத்தை உலகில் பார்க்கவில்லை என்று சொன்னவர் மூன்றே நாட்களில் முகம்மது[ஸல்]அவர்களின் நடவடிக்கைகளை பார்த்தபின் உங்கள் முகத்தைப் போன்று ஒரு விருப்பமான முகத்தை இனி பார்க்கப் போவதுமில்லை என்றார்.தான் செயல்பட்டவாறு மக்களை செயல் படசொன்னார்.செய்ததையே சொன்னார்;சொன்னதையே செய்தார் என்று வெற்று அரசியல் கோசமில்லாமல் தனது வாழ்க்கையையே அதற்க்கு முன்மாதிரியாக்கினார்..அவையில் அமர்ந்திருக்கும்போது உணவை வலதுபுறமாக வழங்கப் படுவதுதான் வழக்கம்.ஒரு முறை முகம்மதுநபி[ஸல்] அவர்களின் வலப்புறம் ஒரு சிறுவன் இருக்கிறார்.இடப்புறத்தில் அபூபக்கர்,உமர் போன்றோர் இருக்கிறார்கள்.இந்நிலையில் உணவு பரிமாறும் வேளையில் நபி[ஸல்] அவர்கள் வலப்பறம் உள்ள சிறுவரிடம் இடதுபுறம் இருக்கும் பெரியவர்களுக்கு முதலில் உணவை வழங்கட்டுமா?என்று கேட்டார்கள்.அதற்க்கு அந்த சிறுவர் வழக்கப்படி வலதுபுறம் இருக்கும் எனக்குத்தான் முதலில் தர வேண்டும் என்றார்.அவ்வாறே முகம்மது நபி[ஸல்] அவர்கள் செய்தார்கள்.நோன்பு,தொழுகை ,சக்காத் போன்றவற்றை சொல்லாக்கும்போதே செயலாக்கினார்கள்.அவர்கள் சிறு குழுவாக இருக்கும்போதே குர்ஆன் மூலம் வந்த  செய்திகளை  அமல் படுத்தினார்கள். வேருமநேவ் பிரச்சாரம் செய்து குறைந்த பட்சம் மக்காவை கைப்பற்றிய பிறகு அப்போது இருக்கும் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப சட்டம் வகுத்து கொள்ளலாம் என்று பிதற்றி  கொண்டிருக்கவில்லை.இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை செயல்படுத்த இந்திய அரசு அனுமதிக்காத பட்சத்தில் மற்றபடி நாங்கள் இதுவரை எதை இஸ்லாம் என்று சொல்லுகிரமோ அதன்படியே தவ்ஹித் ஜமாஅத் அமைப்பில் செயல்படுத்தி வருகிறோம்.எதையும் மறைக்கவில்லை.ஸ்டாலின் காலத்து ரஷ்யா முன்னேரியதை கண்டு மற்ற நாடுகளெல்லாம் பொதுவுடமையை விரும்பியதாக அறிந்தேன்.நமது தமிழக மக்கள் போல் சிறந்த மக்கள் உலகில் எவரும் இல்லை.எது வெற்றி தருகிறதோ ,எது மகிழ்ச்சி தருகிறதோ அதை மதம் இனம் சாதி,மொழி வேறுபாடு இன்றி உடன் ஏற்றுக் கொள்வார்கள் நீங்களும் மகஇக அளவில் "பெற்றோர் பண்ணை'" "குழந்தைகள் பண்ணை" ஆரம்பித்து உங்களது ஆணாதிக்க ,தனியுடமை ஒழிப்பது மூலம் நீங்கள் அடையும் வெற்றி தமிழகத்தை கவர்ந்து ஒருவேளை நீங்களே முதல்வராகவும் வாய்ப்பு உள்ளது.அதை பார்த்து கேரளா போலி கம்யுனிஸ்ட் ஒரிஜினலாக மாறிவிடும் இந்தியாவே மாறி ,பின்னர் உலகமே மாறிவிடும் .பெண் ஆதிக்க மிக்க பொதுவுடைமை சமுதாயத்தில் நீங்கள் உலக தொழிலாள சர்வதிகாரி.
            ////ஆணாதிக்கம். ஒரு பெண்ணால், தந்தையை, சகோதரனை, கணவனை மீறி எதையும் செய்துவிட முடியாது. இந்த விவாதத்தின் தொடக்கத்திலிருந்தே என்னுடைய கேள்விகளுக்கு நேரடியான பதிலை விடுத்து கேள்வியை திரித்து பதில் சொல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள் ///
நீங்கள் கேட்கும் கேள்விகட்க்கு நீங்கள் எதிர் பார்த்தவாறே நான்  பதில் சொல்லவேண்டும்.இல்லையெனில் கேள்வியை திரித்து பதில் சொல்லுவதையே வழக்கமாக வைத்துள்ளதாக கூறுவதையே உங்கள் வழக்கமாக வைத்துள்ளீர்கள்.இப்ப சகோதரன் சொல்லை கேட்டு நடக்கும் சகோதரி  எங்கு இருக்கிறாள்?சம்பாதிக்கும் பெண் தனது தகப்பனை கேட்பதில்லையே ,நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?
///நிக்காஹாஹ கஃபில்து எனத்தொடங்குவதை ஏன் மந்திரம் என அழைக்கக்கூடாது?///
நாங்கள் இப்படி சொல்வது இல்லை.மனப்பெண்ணின் தகப்பனார் மணமகனிடம் இன்ன மகருக்கு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டீர்களா?என்றுதான் கேட்பார்கள்.இதைத்தான் மத்ஹப் வாதிகள் கபில்த்து',,, என்று முதலில்அரபியிலும் பின் தமிழிலும்  மணமகளின் தந்தைக்கு பதிலாக ஆலிம் கேட்கிறார்.இப்போது எங்கே உள்ளது மந்திரம்? ஆண்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் வாட்ச் மேன் வேலை ஆணாதிக்கத்தின் காரணமாகவா கொடுக்கப் படுகிறது ?அதற்க்கு பதில் சொல்லுங்கள்.வாட்ச்வுமேன் பற்றி நீங்கள் செவியுற்ற இடத்தை சொல்லுங்கள்.
///, உறவுக்கான உடலியல் தேவை இல்லாத வரை எந்த ஆண்விலங்கும் பெண்விலங்கை அணுகாது, அருகருகே இருந்தாலும் கூட. மனிதனோ மனைவியுடன் கலந்த அடுத்த சில நிமிடங்களிலேயே வேறொரு பெண்ணுடன் வாய்ப்புக்கிடைத்தால் அதை தவறவிடமாட்டார///
ஆணாதிக்கத்தின் செயல்பாட்டுக்கு உதாரணம் சொன்னால் ஒவ்வொரு செயலையும் மிருகத்தோடு ஒப்பிடுவது சரியா?பெண் வெளிப்படுத்தினால்  என்றால் கற்பு நெறி என்பார்கள்.ஆண் என்றால் வீரம் என்பார்கள்.இப்படி நீங்கள்தான் சொல்வீர்கள்.
///ஆணாதிக்கமே இந்த உலகில் இல்லை என வாதிடுகிறீர்கள். இதை மறுத்து உலகில் ஆணாதிக்கமே நிலவுகிறது என்பதை எடுத்துக்கூறினால்///
ஆண்களுக்கு ஏற்றவாறு சில பொறுப்புகள் பெண்களுக்கென்று சில பொறுப்புகள் ,இதை ஆணாதிக்கம் என்றால் கழிப்பறையை பொதுவாக்குவீர்களா?[இது என் மன விகாரம் அல்ல]
///இஸ்லாத்தால் முடியாது என்பது தெளிவாகிவிட்டது. கம்யூனிசத்தால் எப்படி முடியும் என்பது மட்டுமே மிச்சமிருக்கிறது///
நான் இப்புவியில் நிலவுவதை நிகழ் காலத்திலே  தலைப்புகேற்றவாறு சொல்லிவிட்டேன். நீங்களோ இப்போது நிலவும் பாலியல் குற்றங்களுக்கு உங்களது பில்லியன் ஆண்டுக்கான தீர்வை நிலவில் வைத்து காட்டியுள்ளீர்கள்.
///ஆணாதிக்கம், தனியுடமை குறித்த என்னுடைய கேள்விகளுக்கு நேர்மையாக நீங்கள் பதில் கூறும் போது தெளிவாகிவிடும்////
ஓகோ| நீங்களேதான் பேட்ஸ் மேன் ;நீங்கள்தான் அம்பயர் ;நீங்களேதான் ஆடியன்ஸ் ;நான் பவுலர் மட்டுமே .சரி நான் ஆணாதிக்கம் ,தனியுடமை குறித்து உங்கள் கேள்விகளுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் நேர்மையான பதில்களை நீங்களே கூறி  "அந்த தெளிவை " ஆக்கி காட்டுங்கள் 

புதன், 29 டிசம்பர், 2010


  .
ஆறாம்பண்ணை டி.ஏன்.டி.ஜே.கிளை சார்பாக நடந்த கால்நடை மருத்துவ முகாம் 
.
scan copy.jpgஇன்சா அல்லாஹ் வரும் 9.01.2o11 அன்று ஷீபா பாலி கிளினிக்கும் தவ்ஹித் ஜமாத்தும் இணைந்து நடத்தும் இலவச மருத்துமுகாம்.   

திங்கள், 27 டிசம்பர், 2010

, செங்கொடியின் பதில்கள்

  1. நண்பர் இப்ராஹிம்
    \\அவைகள் கதைகள் என்று அவதூறு பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் கதை என்பதற்கு ஆதாரம் தாருங்கள்// ஹதீஸ்கள் என்பவை கதைகள் தாம். முகம்மது இறந்து சற்றேறக்குறைய நூறிலிருந்து நூற்றைம்பது ஆண்டுகள் கழித்துத் தான் ஹதீஸ்களின் தேவை எழுகிறது. அதாவது மதக்கொள்கைகளே ஆக முதன்மையானவை எனும் நிலையிலிருந்து மாற்றம் பெற்று இஸ்லாமிய ஆட்சித்தலைமை சமூக, அறிவியல் ஆய்வுகளை முற்படுத்தத்தொடங்கிய வேளைகளின் போதாமையை நிறைவு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டவைகள் தான் ஹதீஸ்கள். ராஷிதீன் கலீபாக்களின் காலத்தில் தபரி போன்ற வரலாற்றாசிரியர்கள் எழுதிய முகம்மதின் வரலாறை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இஸ்லாமிய உலகம், அதைவிட காலத்தால் பிந்திய அப்பாஸிய கலீபக்கள் காலத்தில் தொகுக்கப்பட்ட ஹதீஸ்களை குரானுக்கு அடுத்த இடத்தில் ஏற்றுக்கொள்ளும் மர்மம் என்ன? இன்றைக்கு முதன்மையாக கருதப்படும் புஹாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஆறு நூல்களும் ஹதீஸ்களை தொகுக்கத் தொடங்கி நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு வந்தவை அதாவது முகம்மது இறந்து தோராயமாக இருநூற்றைம்பது ஆண்டுகள் கழிந்த பிறகு தொகுக்கப்பட்டவை. இதில் கவனிக்கப்படவேண்டிய அம்சம், முன்னர் தொகுக்கப்பட்டிருந்த ஹதீஸ்களில் எது சரியானது என அறிந்து கொள்ள முடியாத படிக்கு கலப்படமாகிவிட்டதால் அதை தெளித்தெடுக்க ஏற்பட்ட வழிமுறைகள் தான் அறிவிப்பாளர்களின் வரிசை மற்றும் குணநலன்கள். இதைத்தான் நீங்கள் லட்சத்திற்கும் அதிகமான மனிதர்களின் செயல்கள் ஆய்வு என விதந்தோதுகிறீர்கள். புஹாரி போன்றவர்களிலிருந்து முன்னோக்கி நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் அறிவித்தவர்கள் பற்றி மெய்யா பொய்யா என ஆராய்வதற்கு வாய்ப்பிருக்கிறது (அதுவும் குறைந்த விழுக்காடு) என்பதை ஓரளவு ஒப்புக்கொண்டாலும் அதற்கு முந்தைய நூறாண்டுகள் அதாவது முகம்மது இறந்த பிறகான முதல் நூறாண்டு அறிவிப்பாளர்களின் மெய்ப்பாடு குறித்து எந்த நம்பகத்தன்மையும் இல்லை. காரணம் ஹதீஸ்களை தொகுக்க வேண்டும் எனும் எண்ணம் ஏற்பட்டதே முகம்மது இறந்து நூற்றைம்பது ஆண்டுகள் கழித்துத்தான். அதுவரை செவி வழிக் கதைகள் தான். முகம்மது இறந்து சில ஆண்டுகளிலேயே குரான் வசனங்களில் கலப்படம் ஆகிவிட்டது என்பதால் எழுதி தொகுத்து பல பகுதிகளுக்கும் அனுப்பப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்ட நிலையில் நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து தொகுக்கத் தொடங்கிய ஹதீஸ்கள் அப்படியே உண்மையானவை என்பதை நீங்கள் தான் மெச்சிக்கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் ஷியா, சன்னி பிரிவுகளே தனித்தனியான ஹதீஸ் தொகுப்புகளை பயன்படுத்துகையில், அதுவே உண்மையானவை என்கையில் ஒரு பிரிவினரின் ஹதீஸ்களை உண்மை வரலாறு என்பதை எப்படி ஏற்க முடியும்? ஹதீஸ்களின் உள்ளடக்கத்தைக் கொண்டு அதை ஏற்பதா வேண்டாமா என ஆய்வு செய்து கொண்டிருக்கும் நிலையில், வெறும் அறிவிப்பாளர்களின் வாழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட ஹதீஸ்களை வரலாறு என்று எப்படி ஏற்பது? ஹதீஸ்களை அப்படியே வரலாறு என்று எடுத்துக்கொண்டால் குரானே ஐயத்திற்கிடமாகிவிடும். எடுத்துக்காட்டாக ஆய்ஷாவின் பால்குடி வசனம் பற்றிய ஹதீஸ். அதனால் தானே குரானோடு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என நீங்கள் தர்க்கித்து வருகிறீர்கள். பின்னர் எந்த அடிப்படையில் ஹதீஸ்கள் அப்படியே வரலாறு என எங்களை ஏற்கச்சொல்கிறீர்கள்? குரானின் சில வசனங்களை மக்காவில் சொன்னதா? மதீனாவில் சொன்னதா? என்பதைக்க்கூட ஹதீஸைக் கொண்டு பிரித்தறிய முடியாதிருக்கும் நிலையில் முகம்மதின் வாழ்வை திறந்த புத்தகமாக வைத்திருக்கிறது என்பதெல்லாம் உங்களது நம்பிக்கையாகத்தான் இருக்கமுடியுமேயல்லாது வரலாறாக இருக்கமுடியாது.
    இவ்வாறல்லாது, தொன்மைக்கால மனிதகுல ஆய்வுகள் அறிவியல் தன்மை வாய்ந்தவை, அவை செவி வழிக் கதைகளல்ல. தொன்மங்கள், தொல்லுயிர் எச்சங்கள், படிவுகள் போன்றவைகளை ஆராய்ந்து இன்றும் இருக்கும் பழங்குடியினரின் கலாச்சார மூலங்களை, அவைகளுக்கான வேர்களை தேடி ஒப்பிட்டு, காலந்தோறும் கிடைக்கும் புதுப்புது ஆதாரங்களைக் கொண்டு உறுதிப்படுத்தி எழுந்த முடிவுகளை கதைகளைப் போல் தள்ளிவிட முடியாது. ஏனென்றால் பழங்காலத்தைக் கண்டுணர இதைவிட சிறந்த ஆய்வுமுறை உலகில் இல்லை. அப்படியே உங்களால் இதை விட சிறந்த ஆய்வு முறையை உங்களால் கூற முடிந்தாலும் அதன் வழியிலும் பரிசீலனைக்கு உட்படுத்தி ஆய்வு செய்வதுதான் அறிவியல்.
    இவைகளை கற்கவோ பரிசீலனை செய்யவோ நீங்கள் முன்வராதிருக்கும் நிலையில் ஆதாரம் தா எனக் கேட்பது பதில் சொல்வதினின்றும் நழுவும் உத்தி என நான் குறிப்பிட்டால் அதையே நீங்களும் குறிப்பிட வேண்டும் என்பதற்காக \\ஆதாரம் கேட்டால் அதைத் தருவதுதான் சரி.ஆதாரம் தராமல் இருக்க இப்படி ஒரு உத்தியா?// என்றிருக்கிறீர்கள். ஆனால் ஒன்றை மறைத்துவிட்டீர்கள். அது \\நீங்கள் ஆதாரம் கேட்டபோது நூல்களின் பட்டியலையே என்னால் தந்திருக்க முடியும். ஆனால் அவற்றை நீங்கள் கம்யூனிச நூல்கள் என்று எளிதாக ஒதுக்கிவிடுவீர்கள் என்பதால்தான் பண்டைய சமூக வளர்ச்சி குறித்த எந்த ஆய்வாளரின் நூலையும் நீங்கள் படித்துப்பார்க்கலாம்// உங்களுக்கு தமிழ் தெரியும் தானே. இதன் பொருள் என்ன என்பது உங்களுக்கு விளங்கவில்லையா?
    சோசலிச ரஷ்யா குறித்தும் கம்யூனிச இயக்கங்கள் குறித்தும் நீங்கள் கேட்பது அறிந்து கொள்வதற்காகவோ, அதில் தவறிருக்கிறது என சுட்டிக்காட்டுவதோ உங்கள் நோக்கமல்ல என்பதை உங்கள் வார்த்தைகளை கொண்டே தொகுத்துக் காட்டியிருந்தேன். அதோடு மட்டுமல்லாது, \\சோவியத் ரஷ்யாவிலோ, மகஇக விலோ எத்தனை பெண் தலைவர்கள் ……. என்ன செய்யப் போகிறீர்கள்?// என்றும் கூடுதலாக கூறியிருந்தேன். ஆனால் நீங்களோ இவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. உங்கள் நோக்கம்; பதில் சொல்லியது போலும் இருக்க வேண்டும், கேட்ட கேள்வியிலிருந்து நழுவியும் இருக்க வேண்டும் என்பது தான். நேர்மையிருந்திருந்தால் உங்களால் \\ஆணாதிக்க ஒழிய அரும்பாடு படும் ….. தெரிந்து கொள்ள கேட்பது தவறா?// இப்படிக் கூறியிருக்க முடியாது.
    \\ஒரு குழந்தையும் உண்டு என்று நான் கேள்விபட்டது உண்மையா?// நீங்கள் கேள்விப்படுவதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இது போன்று மார்க்சிய ஆசான்கள் குறித்த அவதூறுகள் கொஞ்சமல்ல, ஏராளம், ஏராளம் உலவிக்கொண்டிருக்கின்றன உலகில். அத்தனைக்கும் ஆதாரபூர்வமான மறுப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.
    குழந்தை வளர்ப்பு மையங்களில் எந்த பேதமுமின்றி நிர்வாகத்தில் பங்களித்த தோழரின் குழந்தைகளும், தொழிற்சாலையில் உற்பத்தியில் பங்களித்த தோழரின் குழந்தைகளும் ஒன்றாகவே வளர்ந்தனர். குழந்தைகளுக்கிடையில் எந்த பேதமும் காட்டப்படவுமில்லை, கற்பிக்கப்படவுமில்லை. மற்றப்படி பாலியல் தேவையை பொதுவுடமை அடிப்படையில் தீர்வு கண்டார்களா? தனியுடமை அடிப்படையில் தீர்வுகண்டார்களா? என்பதற்கு ஏற்கனவே நான் ஓரளவு பதிலளித்துள்ளேன், \\ஆணாதிக்க வடிவங்கள் தான். அவை நீக்கப்பட வேண்டியவைகள். ஆனால் எப்போது எப்படி என்பதில் தான் அதன் வீரியத் தன்மை தங்கியிருக்கிறது// இது குறித்து மேலதிக விபரங்களுக்கு கேள்வி பதில் பகுதியில் லிவிங் டுகதர் குறித்து நான் அளித்திருக்கும் பதிலைப் பார்வையிடுங்கள். மற்றப்படி, பண்ணை, வாக்கிங் மேரேஜ் எனத்தொடங்கி நீங்கள் வெளியிட்டிருப்பதெல்லாம் உங்கள் மனவிகாரங்களே. ஏனென்றால், கம்யூனிசம் கூறும் சமூக மாற்றம் என்பது நொடியில் மாற்றப்படும் ஒன்ற‌ல்ல. ஒவ்வொரு படித்தரங்களாக உயரும் அனைத்திற்கும் முன்நிபந்தனைகள் இருக்கின்றன. ‘குன்’ என்றதும் ஆகிவிடும் எனும் உங்கள் வெற்று நம்பிக்கையைப்போல் இதை நீங்கள் கருதிவிட வேண்டாம். மாறாக நீங்கள் கொண்டிருக்கும் கடவுள் நம்பிக்கைதான், மனிதனை சிந்தனையற்று மிருகங்களைப் போல், பொம்மையைப் போல் உலவ விட்டிருக்கிறது.
    \\ஒரு தீர்வுக்கும் முன்மாதிரியையோ, சோதனையோ பரிட்சித்து பார்ப்பதுதான் பொது நியதி.அதே போன்று கம்யுனிச தீர்வுக்கு காட்டுங்கள்//\\இஸ்லாத்தின் தீர்வைவிட சிறந்த தீர்வை நிகழும் உலகில் ஆதாரத்துடன் காட்டுங்கள்// கம்யூனிச தீர்வான தனியுடமையையும், ஆணாதிக்கத்தையும் நீக்குவது தான் பாலியல் குற்றங்களை முற்றிலும் களைவதற்கு சரியானது என்பதை அதன் அடிப்படையை வைத்தே புரிந்து கொள்ளலாம். பாலியல் குற்றங்களின் அடிப்படையாக இருப்பது தனியுடமை, ஆணாதிக்கச் சிந்தனைகளே. அவைகளை நீக்காதவரை பாலியல் குற்றங்களை தடுக்க முடியாது என்பதற்கு, இந்த அடிப்படையை புரிந்துகொள்ளாமல் ஏதேதோ காரணங்களைக் கூறி சட்டங்களைத் தீட்டிய அனைத்து சித்தாந்தங்களும், கொள்கைகளும், மத மூட நம்பிக்கைகளும் இன்றுவரை பாலியல் குற்றங்களை தடுக்க முடியாமல் தோல்வியடைந்திருப்பது ஒன்றே போதுமான ஆதாரமாகும். இங்கு தேவை அதை நேர்மையாக பரிசீலித்துப் பார்க்கும் திற‌ம் மட்டுமே. ஒற்றைக் கேள்வி, கம்யூனிசத்தின் தீர்வான இந்த அடிப்படைகள் தவறு என்றால், ஏன் இதுவரையான உலகில் பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை? முடிந்தால் பதில் கூறிப் பாருங்கள். இல்லை, நீங்கள் நடத்திக் காட்டிய பின்னர் தான் நாங்கள் வருவோம், என்றால் அதற்கும் உங்களிடம் ஒற்றைக் கேள்வி, முகம்மது ஒரு புதிய சமூக ஒழுங்கை படைக்க விரும்பி தன் மதத்தை பிரச்சாரம் செய்த போது எந்த முன்மாதிரியைக் காட்டினார்? எந்த ஒரு புதிய கொள்கையுமே சமூகப் பிரச்சனைகளுக்கு தம் தீர்வை முன்வைக்கும் போது அதை கோட்பாடாகத்தான் முன்வைக்க முடியும். அதைத்தான் கம்யூனிசமும் செய்திருக்கிறது. உங்களால் அதை பரிசீலிக்க முடியுமா என்பதுதான் பிரச்சனை. பரிசீலித்துப் பார்த்து அதில் தவறு கூற முடிந்தால் கூறுங்கள், முடியவில்லை என்றால் ஏற்றுக் கொள்ள முன்வாருங்கள். மாறாக உங்களுக்கு கன்னித்தீவு கதை சொல்ல விருப்பம் என்றால், அது இந்த விவாதக் களத்தில் உங்களுக்கு எந்த விதத்திலும் பயன்படப்போவதில்லை.
    \\நாம் நிகழும் உலகை பற்றி தான் இங்கே பேசுகிறோம்,முன்பு இருந்ததை சொல்லுவதை விட இப்போது என்ன இல்லை என்று சொல்லுங்கள்// இதைத்தான் நான் பல இடங்களில் வைத்து விட்டேன். ஆணுக்கு இருக்கும் உரிமைகளுக்குச் சமமாக பெண்ணுக்கு இல்லை, மட்டுமல்லாது பெண்ணுக்கு வழங்கப்படும் சிற்சில சலுகைகள் கூட ஆணாதிக்கத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறேன். தங்களுடைய சம்பளப்பணத்தை ஆண்களாலும் சுதந்திரமாக செலவு செய்யமுடியவில்லை(அவ்வாறல்ல என்றாலும்) என்பது வேறு. நான் கேட்டது ஆண்கள் சுதந்திரமாக செலவு செய்வது போல் பெண்களால் செய்யமுடியுமா? என்பதுதான். ஒருவனுடைய சம்பளப்பணத்தை அவன் விருப்பப்படி செலவு செய்வதற்கு தனிப்பட்ட முறையில் சில நிர்ப்பந்தங்கள் இருக்கலாம். இது எல்லோருக்கும் பொருந்தக்கூடியதும் அல்ல. ஆனால் ஒரு பெண் தன் சம்பளப்பணத்தை தன்னுடைய விருப்பப்படி செலவு செய்ய முடியாததற்கு வேலை செய்யும் எல்லாப் பெண்களுக்கும் பொதுவில் இருக்கும் காரணம் ஆணாதிக்கம். ஒரு பெண்ணால், தந்தையை, சகோதரனை, கணவனை மீறி எதையும் செய்துவிட முடியாது. இந்த விவாதத்தின் தொடக்கத்திலிருந்தே என்னுடைய கேள்விகளுக்கு நேரடியான பதிலை விடுத்து கேள்வியை திரித்து பதில் சொல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள் அதற்கு இதுவும் ஒரு அத்தாட்சி.
    \\மிருகங்களிலும் பெண் இனங்களை ஆணினம் துரத்திக் கொண்டு அலைகின்றன அப்படியெனின் அதவும் ஆணாதிக்கமா? என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்// இதில் நான் பதில் சொல்ல மறுப்பதாக கூறியுள்ளீர்கள். தவறு, அந்த பதிவில் நான் \\தனித்தனியே விளக்க வேண்டுமென்றாலும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்// என்று குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் என்றால் விரிவாக விளக்கியிருப்பேன். அதனாலென்ன இப்போது கூறுகிறேன். மிருங்களின் பாலியல் உறவை ஆணாதிக்கம் என்று தனித்து கூறமுடியாது. மனித உறவுகளை அப்படி அழைப்பதற்கான முதன்மையான காரணம் மனிதன் உடலுறவு என்பதை உடலியல் தேவையின் அடிப்படையில் என்பதலிருந்து மாற்றி மனவியல் அடிப்படையில் கொண்டுவந்து விட்டான். மனிதனின் உறவில் உடல்தேவையை விட மனத்தேவையே அதிக பங்கு வகிக்கிறது. ஆனால் மிருகங்களில் இந்த நிலை இல்லை, உறவுக்கான உடலியல் தேவை இல்லாத வரை எந்த ஆண்விலங்கும் பெண்விலங்கை அணுகாது, அருகருகே இருந்தாலும் கூட. மனிதனோ மனைவியுடன் கலந்த அடுத்த சில நிமிடங்களிலேயே வேறொரு பெண்ணுடன் வாய்ப்புக்கிடைத்தால் அதை தவறவிடமாட்டான். ஏனென்றால் அவனுக்கு உடலியல் தேவையை விட மனவியல் தேவையே முதன்மையாக இருக்கிறது. அடுத்து மார்கழி மாத நாய்க்கூட்டத்தை பார்த்து விட்டு அது ஆணாதிக்கமா என்கிறீர்கள். இதை விலங்களின் பொதுக்குணமாக கூறவியலாது. காடுகளில் சுதந்திரமாக உலவும் எந்த மிருகமும் இப்படி ஒன்றின் பின்னே பத்து விரட்டுவதில்லை. இங்கு வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களில் பெரும்பாலும் ஆண் நாய்களே, பெண்நாய்களை அதிகம் வளர்ப்பதில்லை. இதனால் ஏற்படும் பற்றாக்குறையினாலேயே ஒன்றை பல விரட்டுகின்றன. இதை ஆணாதிக்கம் என்றும் கூற முடியாது, இதைக்கொண்டு ஒப்பீட்டு மனிதனின் பாலியலலைதலை ஆணாதிக்கமல்ல என தள்ளவும் முடியாது. \\பெண் களுக்கென்று இயற்கையான சில குணங்கள் உண்டு என்பது போல் ஆண்களுக்கும் இயற்கையான குணங்களில் காம வெறியுனர்வும் ஒன்று// இதில் நீங்கள் என்ன கூறவருகிறீர்கள்? காம உணர்வு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது தான். ஆனால் ஆண் வெளிப்படுத்துவது போல் பெண்ணால் வெளிப்படுத்த முடியாது. அப்படி வெளிப்படுத்துவது ஒழுக்கமல்ல என்றுதான் கற்புநெறி கொண்டு பெண்களை அடக்கி வைத்திருக்கின்றனர். அதே நேரம் அதை ஆண் வெளிப்படுத்தினால் அது வீரமாக கருதப்படும். இது ஆணாதிக்கத்தின் விளைவேயன்றி ஆண்பெண் இயற்கையல்ல.
    நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் முறையாக நான் பதிலளித்து வருகிறேன். ஆனால் அவைகளைக் கவனிக்காமல், பொருட்படுத்தாமல், அவைகளிலிருக்கும் உள்ளீடை புரிந்துகொள்ள முயலாமல், தொடர்ந்து வெறொன்றுக்கு நழுவி வருகிறீர்கள். பல முறை இவைகளை சுட்டிக்காட்டியும் நீங்கள் உங்கள் வழமையை தொடர்ந்து கொண்டிருக்கிறீர்கள். தவிரவும் நான் எழுப்பும் கேள்விகளையும் நீங்கள் நீங்கள் வேறொன்றாக திரித்து வருகிறீர்கள். அல்லது கூறப்பட்டிருக்கும் பதிலின் ஏதாவது ஒரு வாக்கியத்தை எடுத்துக்கொண்டு அதற்கு எதையாவது பதிலாகக் கூறிவிட்டு ஒட்டுமொத்தமாக நான் கூறவந்திருக்கும் கருத்தை புறக்கணித்து விடுகிறீர்கள். இவை விவாதத்தின் நோக்கத்தையே பாழடிக்கக் கூடியதாகும் என்பதை உணருங்கள்.
    இதுவரை, ஆணாதிக்கமும் தனியுடமையும் பாலியல் குற்றங்களுக்கான அடிப்படையாக இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கியுள்ளேன். இதை நீங்கள் வலிமையுடன் மாற்றுக்கருத்துகளைக்க்கூறி உங்களால் மறுக்க முடியவில்லை. அதேநேரம் மேலோட்டமாக நீங்கள் கூறும் நடப்பு வாதங்களை நான் தெளிவாக மறுத்திருக்கிறேன். ஆணாதிக்கமே இந்த உலகில் இல்லை என வாதிடுகிறீர்கள். இதை மறுத்து உலகில் ஆணாதிக்கமே நிலவுகிறது என்பதை எடுத்துக்கூறினால் அதை மறுக்க முடியாது இஸ்லாத்தில் இல்லை என நழுவுகிறீர்கள். இப்போதும் கூட \\பெண்கள் தகப்பன் இறந்தால் கொள்ளி வைக்க முடியுமா?கணவன் இறந்தால் மல்லி வைக்க முடியுமா?என்பதெல்லாம் என் முன் உள்ள கேள்விகள் அல்ல// என கூறியுள்ளீர்கள். பின் இது யார் முன் உள்ள கேள்வி? ஆணாதிக்கம் இந்த உலகில் இல்லை என கூறுவது நீங்கள் தானே, அப்படியென்றால் இது உங்கள் முன் உள்ள கேள்விதான். இல்லை என்றால் தெளிவாக கூறிவிடுங்கள். உலகில் ஆணாதிக்கம் இருக்கிறது ஆனால் இஸ்லாத்தில் இல்லை என்பதுதான் என் நிலை என்று. இஸ்லாத்தில் இருக்கும் ஆணாதிக்கத்தை நான் உங்கள் கண் முன்னே காட்டுகிறேன். ஆனால் இதைச் சொன்னால் அது அதைச்சொன்னால் இது என்று நழுவாதீர்கள். கடந்த எனது பதிவில் இருந்த பலவற்றிற்கு பதில் கூறாது நகர்ந்து விட்டீர்கள். கேட்கப்படும் கேள்விகளும், அளிக்கப்படும் பதில்களும் உங்களின் பரிசீலனைக்காக அதை நீங்கள் சுலபமாக நீங்கள் நழுவ விட்டுவிட முடியாது. ஒன்று மறுக்க வேண்டும் அல்லது ஒப்புக்கொள்ள வேண்டும். இனியாகிலும் இதை நீங்கள் கவனத்தில் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
    தொடர்ந்து இஸ்லாத்தில் மந்திரம் இல்லை, வாட்ச்மேன் வாட்ச்உமன் என்றெல்லாம் கூறியுள்ளீர்கள். இஸ்லாமிய திருமணத்தில் கூறப்படும் நிக்காஹாஹ கஃபில்து எனத்தொடங்குவதை ஏன் மந்திரம் என அழைக்கக்கூடாது? வாட்ச்உமன்கள் பற்றி நீங்கள் செவியுற்றிருக்கவில்லை என்பதால் அது இல்லை என்றாகிவிடாது. இஸ்லாத்தில் யாரிடத்தில் கொடுத்தால் சரியாக இருக்கும் என்று ஆண்களுக்கு கொடுக்கப்படுபவை எப்படி ஆணாதிக்கமாக இருக்கிறது என்பதை தேவைப்பட்டால் விளக்குகிறேன்.
    அடுத்து முக்கியமான விசயத்திற்கு நகர்வோம், \\கடைசி நாள் வரை குற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் என்று இஸ்லாம் உண்மை நிலையை சொல்லுகிறது,அதற்க்கான தண்டனைகளை சொல்லுகிறது// ஆக கடைசி வரை இஸ்லாத்தால் பாலியல் குற்றங்களை ஒழிக்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். நன்றி. இங்கு பாலியல் குற்றங்களுக்கு எது சரியான தீர்வு எனும் இந்த தொடக்க விவாதத்தில்; இஸ்லாத்தால் கடைசி வரை தீர்வு காண முடியாது மாறாக தண்டனை பயம்காட்டி ஓரளவு குறைக்க மட்டுமே முடியும் என ஏற்றுக்கொண்டதன் மூலம் ஒரு பகுதி முடிவுக்கு வருகிறது. இஸ்லாமா? கம்யூனிசமா? என்பதில் இஸ்லாத்தால் முடியாது என்பது தெளிவாகிவிட்டது. கம்யூனிசத்தால் எப்படி முடியும் என்பது மட்டுமே மிச்சமிருக்கிறது. அதுவும் ஆணாதிக்கம், தனியுடமை குறித்த என்னுடைய கேள்விகளுக்கு நேர்மையாக நீங்கள் பதில் கூறும் போது தெளிவாகிவிடும்.
    செங்கொடி
    பின்குறிப்பு: உமர் குறித்து நான் குறிப்பிட்ட ஹதீஸுக்கு ஆதாரத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் அது குறித்து விரிவாக பதிவு செய்கிறேன்.


புதன், 22 டிசம்பர், 2010

வாக்கிங் மேரேஜ் அல்லது லிவ்விங் டுகெதர்


செங்கொடி,
///நீங்கள் மீள்பார்வை செய்யாவிடினும், உங்கள் தவறான நிலைப்பாடுகளால் நீங்கள் இடறும்போது கம்யூனிஸ்ட்கள் எங்கள் கரம் நீளும் உங்களைத் தாங்கிப் பிடிக்க, ஏனென்றால் அது எங்கள் கடமை///முதலில் உங்களது போலி கம்யுனிஸ்ட்களை தாங்கி பிடியுங்கள்.அதற்க்கான வலு உங்கள் கரங்களுக்கு இருக்கிறதா என்று பாருங்கள்.எனக்கு நான் நம்பும் வல்லமை மிக்க அல்லாஹ்  உள்ளான். 
முதலில் நீங்கள் ஒரு வித்தியாசத்தை பார்க்கவேண்டும்.பண்டைய காலத்து ஆய்வு நூல்கள் ஒரு நபர் தனது ஆய்வுக்கு உட்பட்டு தனக்கு கிடைத்ததை அவ்வாறாகவே தந்திருப்பார்.மேலும் அது ஒரு தனி மனித சக்திதான்.ஆனால் ஹதீத் தொகுப்புகள் வரலாற்று நூல்களை விட ஆதாரப்பூர்வமானவை.ஒரு மனிதனிடமிருந்து செய்திகள் பெறும்போது அந்த மனிதனின் செயல்பாடுகள்,ஞாபக சக்தி,அவருக்கு அந்த செய்தி கிடைத்த வழி,என்று பல்வேறு கோணங்களில் ஆராயிந்து எழுதப் பட்டதோடு அதன் பின் அந்நூல்கள் பற்றி ஆய்வு செய்து அந்நூல்கள் பற்றிய  விளக்க நூல்கள் எழுதப் பட்டுள்ளன.ஒரு மனிதரின் சொல்,செயல்,அறவுரைகள்,பற்றி உண்மை நிலை அறிந்து கொள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களின் செயல்பாடுகள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப் பட்டன.உலகத்தில் இதுபோன்று எந்த பிரச்னைகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளனவா எண்பது சந்தேகமே. போன நூற்றாண்டு மனிதர்களைப் பற்றியே பக்கம்,பக்கமாக மறுப்பு எழுதும் நிலை. ஆனால் முகம்மதுநபி[ஸல்] அவர்களின் வாழ்க்கை திறந்த புத்தகமாக வைக்கப் பட்டுள்ளது.அவைகள் கதைகள் என்று அவதூறு பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் கதை என்பதற்கு ஆதாரம் தாருங்கள்.
///ஆதாரம் என்ன என்று கேட்பதெல்லாம் பதில் சொல்வதினின்று நழுவும் ஒரு உத்தி. /// 
ஆதாரம்  கேட்டால் அதைத் தருவதுதான் சரி.ஆதாரம் தராமல் இருக்க இப்படி ஒரு உத்தியா? 
///உங்களின் நோக்கம் சோசலிச கால ரஷ்யாவையும் மகஇக வையும் இழிவு படுத்தவேண்டும் என்பதாகத்தான் தெரிகிறது///
கம்யுனிசம் தான் தீர்வு என்று சொல்லக் கூடியவர்கள் அந்த கம்யுனிசத்தின் அடையாளங்களான உங்கள் ம.க.இ.க வையும் உங்களது அபிமானா ரஷ்யாவை பற்றித்தான் கேட்கமுடியும்.ஆணாதிக்க ஒழிய அரும்பாடு படும் போலி பொது உடமைவாதிகளை தவிர்த்து, உங்களிடம் பெண்களின் பங்கு எவ்வாறு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள  கேட்பது தவறா?
.//குருப்ஸ்கயா உட்பட யாரைப் பற்றியும் உங்களுக்கு நான் சொல்லவும் போவதில்லை///
எங்கப்பன் குதிருக்குள் இருக்கிறார் என்பதை நான் சொல்லப் போவதும் இல்லை.நன்றி 
 ///எந்த சோசலிச தலைவர் பாலியல் குற்றம் செய்தார்? கூற முடியுமா உங்களால்?///
உங்களது மார்க்ஸ் அவர்கட்கு மனைவி மூலம் ஏழு குழந்தைகளும் ,வேலைக்கார துணைவி மூலம் ஒரு குழந்தையும் உண்டு என்று நான் கேள்விபட்டது உண்மையா?
/// காமம் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒருவித உணர்ச்சி, ஒருவனுக்குள் இருக்கும் தனியுடமை, ஆணாதிக்க எண்ணங்கள் அந்த உணர்ச்சியை கேடான வழிகளில் பயன்படுத்தி குற்றம் செய்யத்தூண்டுகிறது என்பது தான் ///
 இதைத்தான் மிருகங்களிலும் பெண் இனங்களை ஆணினம்  துரத்திக் கொண்டு அலைகின்றன அப்படியெனின் அதவும் ஆணாதிக்கமா? என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறீர்கள்.                             பெண் களுக்கென்று  இயற்கையான சில குணங்கள்  உண்டு என்பது போல் ஆண்களுக்கும் இயற்கையான  குணங்களில் காம வெறியுனர்வும் ஒன்று .அதை கட்டுபடுத்துபவன் மனிதனாக இருக்கின்றான் இயலாதவனை இஸ்லாமிய சட்டங்கள் கொண்டு கடுமையாக கண்டித்தால்தான் உண்டு.
 பாலியல் குற்றங்களுக்கு ஆணாதிக்கமும் தனியுடமையும்தான் காரணம் என்றும் அதற்குரிய தீர்வு கம்யுநிசம்தான் என்று கூறி வருகிறீர்கள்.எந்த ஒரு தீர்வுக்கும் முன்மாதிரியையோ, சோதனையோ பரிட்சித்து பார்ப்பதுதான் பொது நியதி.அதே போன்று கம்யுனிச தீர்வுக்கு காட்டுங்கள் என்றால் கம்யுனிச ஆட்சி உலகில் இதுவரை எங்கும் இல்லை என்றும் கம்யுனிச தீர்வுக்கு[ஊருக்கு]செல்லக் கூடிய பாதை சோசலிசம் என்றும் அந்த பாதையின் ஆட்சியும் தற்போது இல்லை ,முன்பு ரஷ்யாவில் இருந்தது என்றும் கூறியுள்ளீர்கள்.உங்களது அமைப்பு ரீதியாக செயல்பட்டு காட்டுங்கள் என்றால் ஒரு தேசத்தாலே முடியாது,உலகம் முழுவதும் கொண்டுவந்தால்தான் செயல் படமுடியும் என்று சொன்னால்,போலி வார்த்தைகளில் மயங்கும் அறுநூறு கோடியில் ,ஆறு கோடிகூட ஏற்று கொள்ளமாட்டார்கள் அல்லவா?கடற்கரை ஓரத்தில் நின்றுகொண்டு கண்ணுக்கு எட்டாத தூரத்தை காட்டி ,அதோ பார்,அங்கேதான் கன்னித்தீவு இருக்கிறது,அங்கே போனால் லைலா கிடைப்பாள் என்றால்,சரி,எப்படி போவது என்று கேட்டால்,முன்பு அங்கு செல்ல சோசலிசம் எண்ணும் பாலம் கட்டினோம் ,கட்டத் தொடங்கிய சில நாட்களிலே பாலம் இடிந்துவிட்டது,இப்போது கப்பல் செய்வதற்கு காகிதத்தை சேர்த்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உங்களது தற்போதைய நிலை. இஸ்லாம் அதற்க்கான தீர்வை மக்கள் மத்தியில் வைத்துவிட்டதோடு செயல்படுத்தியும் கொண்டிருக்கிறது.இஸ்லாமிய பாதையில் செல்லும் ஆயிரம் பேருக்கு ௦0 13 பேர் சாலை வீதிகளை மீறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு தண்டனை கொடுத்தும் திருந்தவில்லை என்றால்,உங்கள் கூற்றுப்படி பார்த்தாலும்  ஆயிரம் பேருக்கு ஒரு நபர் சாலைவிதிகளை மீறுவது பதிவு இல்லாமல் இருக்கிறது என்ற காரணத்திற்க்காக , கடற்கரைக்கு அழைத்து சென்று கன்னிதீவை காட்டுவீர்களா?
நீங்கள் கம்யுனிச  தீர்வை சொல்லாவிட்டாலும் இப்போது ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.அதாவது தனிவீடு,உடைமைகள் ஒன்றும் கிடையாது,எல்லோரையும் ஒரே பண்ணையில் அடைத்து வைப்பீர்கள்.காலையில் அவர்களை அழைத்து ஏர்பூட்டி உழவைப்பீர்கள். ,மாலையில் பண்ணைக்கு திரும்ப வேண்டும்,இரவில்" வாக்கிங் மேரேஜ்" அல்லது "லிவ்விங் டுகெதர்" போல் விரும்பியவர்களோடு ஆசை,காமம்,இன்பம் இவற்றுக்காக அல்லாமல் இனப் பெருக்கத்திர்க் காக பாலியல் தேவையைதீர்த்து கொள்ள வேண்டும். அதன்மூலம் பிறக்கும் குழந்தைகள் தனி ஒரு பண்ணையில் அடைக்கப்  படுவார்கள். அங்கு அவர்களுக்கு ஒரே மாதிரியான உணவு ,உடை கல்வி கொடுத்து வளர்த்தால் அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான அறிவில் வளருவார்கள். என்று வைத்துக் கொள்வோம்.[ஒரே பசு ஈன்ற,ஒரே தொழுவத்தில் வளர்ந்த மாடுகள் கூட ஒன்று பக்கத்தில் போனாலே முட்டுகிறது,ஒன்று அதில் ஏறி உட்கார்ந்தால் கூட கண்டு கொள்வது கிடையாது]ஆனால் நமது கம்யுனிச பண்ணையில் வளர்ந்த மனிதர்கள் ஒரே அறிவை பெறுவார்களே யானால்,குப்பை கூடுவதும் கூட்டாட்சி பண்ணுவதும் யார்?எண்பது ஒரு ஓரத்தில் இருக்கட்டும் ,அவர்களும் இனபெருக்கதிர்க்காகத்தான் உடலுறவுகள் கொள்வார்கள் என்பதற்கு உத்தரவாதம் யார்?ஆண்களும் பெண்களும் சமம் என்பதால்,அங்கே பாத்ரூம்கள்,பெட்ரூம்கள் எல்லா குழந்தைகளுக்கும் பொதுவாகத்தான் இருக்கும் ,அப்படித்தானே,செங்கொடி,அவ்வாறெனின் குழந்தைகளுக்கெல்லாம் குழந்தைகள் பிறந்து விடுவார்கள் என்பதை தீர்க்கதரிசனம் இல்லாமல் அற்பதரிசனமாக  சொல்லிவிடலாம். ஆகஇவைகளை நீங்கள் அனுமதிக்கப் பட்ட பாலியல் செயல்கள்தான் என்றால் கண்மூடி திறப்பதற்குள்,மார்க்ஸ் தத்துவம்,லெனின் ,ஸ்டாலின் காலத்தை கடந்து,குருச்சேவ் ,கோர்பசேவ் காலாத்திர்க்கு  வந்து பழைய    காரசேவு தான் போங்கள். அப்புறம் உங்களிடம் எதிர்பார்க்கும் இன்னொரு விஷயம்,   
 ////எல்லா இடங்களிலும் சமையல் கூடங்களையும், குழந்தை வளர்ப்பு மையங்களையும் தொடங்கியது////
இந்த மையங்களில் தான் பிரதம சர்வாதிகார தொழிலாளி,பொலிட்பீரோ தொழிலாளிகள்,அமைச்சர் தொழிலாளிகள்,அரசு அதிகார தொழிலாளிகள் ஆகியோரின் குழந்தைகள் வளர்ந்தார்களா?அவர்கள் இனபெருக்கத்திர்க் காண பாலியல் தேவைகளுக்கு தனியுடமையில் தீர்வுகண்டார்களா?பொது உடமையில் தீர்வு கண்டார்களா? என்பதை நீங்கள் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறான தீர்வை வைத்து கொண்டு முஸ்லிம் ஆண் தோழரும் பெண் தோழரும் இஸ்லாமிய பதிவில் திருமணம் புரிந்ததை எப்படி புரட்சி திருமணம் என்று செய்தியாக்கிநீர்கள்?உங்களளவில் உங்கள் கொள்கையில் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத நீங்கள் 1400.ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கும் இஸ்லாத்தை விமர்சிக்க தகுதி உள்ளதா என்று சிந்தியுங்கள்.                          



நான் உங்களிடம் பெண்களுக்கு இன்னும் என்ன உரிமைகள் இல்லை என்னென்ன உரிமைகள் வேண்டும் என்பதே ?என்று கேட்டால் இப்படிக் கேட்பதின் மூலம் ஆண்தான் பெண்ணுக்கு சிற்சில சலுகைகளை தேவையைப் பொருத்து வழங்கிக்கொண்டிருக்கிறான் என்பதை கோடிட்டுக் காட்டியதன் மூலம் இது ஆணாதிக்க சமூகம் என்பதை நீங்களும் உணர்ந்தே தான் இருக்கிறீர்கள் அல்லவா? நாம் நிகழும் உலகை பற்றி தான் இங்கே பேசுகிறோம்,முன்பு இருந்ததை சொல்லுவதை விட இப்போது என்ன இல்லை என்று சொல்லுங்கள்
 . ////ஆண் தன்னுடைய சம்பளப் பணத்தை சுதந்திரமாக செலவு செய்வது போல் பெண்ணால் செலவு செய்துவிட முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினாலே போதும், இந்த சமம் பல்லிளித்துவிடும்////இப்போதைய இளைய சமுதாயத்தை பார்த்தால் ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்தே வாழுகிறார்கள்.நீங்கள் சொல்லுவது போல் தன்னுடைய சம்பள பணத்தை ஆண்களாலும் சுதந்திரமாக செலவளிக்கமுடியாத சூழ்நிலையும் அதிகரித்துள்ளது என்று நான் கூறினால் உங்களுக்கு பாமரத்தனமாக தெரியலாம்,ஆனால் எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்
 ////சோசலிசம் நீண்ட காலமாக நடப்பிலிருந்தால் அது எதை தன்னுடைய நோக்கமாக கொண்டிருக்கிறதோ அதை அடையும் என்று கூறுவது வெற்றுக்கற்பனையாக ஒருபோதும் இருக்க முடியாது.////

///கடைசி நாள் வரை குற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும், அதற்கு நான் தண்டனை தருவேன் என்பதுதான் இஸ்லத்தின் சாராம்சம். ////.கடைசி நாள் வரை குற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் என்று இஸ்லாம் உண்மை நிலையை சொல்லுகிறது,அதற்க்கான தண்டனைகளை சொல்லுகிறது.இரண்டு வழிப் பாதையை நான்கு வழி ,எட்டுவழிப்பாதை யாக்கினாலும் விபத்துக்கள் குறையுமே தவிர விபதத்தே நடை பெறாமல் இருக்காது..எங்களிடம் முதலீடு செய்தால் பத்து சதவீத வட்டி என்று விளம்பரம் செய்யும் மோசடி கம்பெனி போல் சோசலிசத்தையும் விளம்பரம் செய்யாதீர்கள். 
 ////பெண்களும் ஆண்களும் ஒரே பள்ளிவாசலில் தொழுகை நடத்தியதை (முகம்மது அனுமதித்ததை) உமர் ஏன் தடுத்தார்? அந்த உமரின் ஆட்சியில் பள்ளிவாசல்வரை பாலியல் குற்றங்கள் நீண்டிருந்தது உங்களுக்கு புரியவரும்///
தவறு ,உமரி[ரலி] ஆட்சியில் தடுக்கப் படவில்லை.உமர்[ரலி]அவர்களின் மகன் இப்னுஉமர்[ரலி]அவர்கள் ,,பெண்கள் அதிகமாக சப்தமிட்டு சிரிப்பது போன்ற காரணங்களை மனதிற் கொண்டு ,தனது தந்தையிடம் பெண்கள் பள்ளிக்கு வருவதை தடை செய்யுமாறு  வேண்டுகிறார்கள்..ஆனால் உமர்[ரலி]அவர்களோ,முகம்மதுநபி[ஸல்]அவர்கள் அனுமதித்ததை நான் ஒருபோதும் தடை செய்ய மாட்டேன்,என்று மறுத்துவிட்டார்கள்.இப்போது உங்களுக்கு புரிய வரும் என்று நினைக்கின்றேன்.  மற்றும் பெண்கள் தகப்பன் இறந்தால் கொள்ளி வைக்க முடியுமா?கணவன் இறந்தால்  மல்லி வைக்க முடியுமா?என்பதெல்லாம் என் முன் உள்ள கேள்விகள் அல்ல.இஸ்லாத்தில் மந்திரங்கள் இல்லை .திருமணத்திற்கு "வலி"எண்ணும் பெண்ணின் பொறுப்பாளர் ஆண்தான் இருக்க வேண்டும் என்ற வரைமுறைதான் இருக்கிறது .ஏனெனில் வாட்ச்மேன் தான் உண்டு.சோஷலிச ரஷ்யாவில்  வாட்ச்விமன் உண்டா?அதனால் சில பொறுப்புகளை யாரிடம் கொடுத்தால் சரியாக இருக்கும் என்ற அடிப்படையில் வலி"ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது.
////அரசு பொறுப்பில் பொதுவில் இருந்தால், புதிய குழந்தையின் வரவுக்கு அனைவரும் மகிழ முடியும், இன்னொரு குழந்தையின் இழப்பிற்காக அனைவரும் வருந்தவியலும் ////
அதாவது,அழுது கொண்டே சிரிப்பார்கள்,சிரித்துக் கொண்டே அழுவார்கள்.  ஓ.கே.குழந்தைகள் பெற்றோர் யார் என்று தெரிவார்களா?
///எது இலக்கு(ஊர்) என்பதையும், அந்த இலக்கை சென்றடையும் திசை(வழி) எது என்பதையும் போதிய உள்ளடக்கத்துடன் எடுத்துவைத்திருக்கிறேன்/// 
ஆனால்உங்கள் இலக்கும் கிழக்கும்  எனக்கு என்னவோ பகல் கனவு போல் உள்ளது.
செங்கொடிசார்,உங்க கொள்கையை நூறு சதவீதமன்று,ஒரே ஒரு சதவீதமாவது,உங்களது ம.க.இ.க அளவில் நடத்தி காட்டுங்கள்.
///இஸ்லாமியத்தீர்வை தாராளமாக பின்பற்றலாம். அது உங்கள் உரிமை. ஆனால் அதுதான் சரியான தீர்வு என்று சொல்லாதீர்கள்///
இஸ்லாத்தின் தீர்வைவிட சிறந்த தீர்வை நிகழும் உலகில் ஆதாரத்துடன் காட்டுங்கள்.அதன் பின் மீள்பார்வை யாருக்கு தேவை என்பதை அறியலாம்.அதன்பின்னர் கீழே நீங்கள் கூறியது போன்று நீங்கள் இருந்தால் மகிழ்ச்சியடைவோம்.

 ////சரி என்றால் தைரியமாக ஏற்கவும், தவறு என்றால் தயக்கமில்லாமல் தள்ளவும் முடியவேண்டும். ஆனால் இரண்டு நிலைகளிலும்(இஸ்லாம், கம்யூனிசம்) இந்த மனப்பான்மை உங்களைப் போன்றோரிடம் இருப்பதில்லை என்பதுதான் வேதனைக்குறியது////
.

பெண்கள் பயான்

கடந்த ஞாயிறன்று [19.12.2010]நடந்ததவ்ஹித் மர்கசில் நடந்த பெண்கள் பயான் பிரச்சார கூட்டம்.



ஜனவரி  27 அன்று பாபரி மஸ்ஜித் தீர்ப்பை எதிர்த்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டதிர்க்காக பள்ளிவாசல் எதிரில் எழுதப் பட்டுள்ள சுவர் விளம்பரம்.

திங்கள், 20 டிசம்பர், 2010

செங்கொடியின் பதில்கள்

  1. நண்பர் இப்ராஹிம்,
    மீண்டும் மீண்டும் உங்களை குற்றம்சாட்ட விரும்பவில்லை என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். ஏனென்றால் நான் குற்றம்சாட்டிய பிறகும்கூட நீங்கள் அதை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதால்தான். என்னால் சுட்டிக்காட்ட மட்டும்தான் முடியும் அதைத்தான் செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் உங்கள் வழமையிலேயே தொடர்வீர்களென்றால், இது ஒரு பொதுத்தளம் என்பது உங்கள் நினைவுக்கு, அவ்வளவு தான். என்னுடைய வாதத்தை நான் வலுவாகத்தான் வைத்திருக்கிறேன். அதற்கு உங்கள் பதில்களே சாட்சி.ஒருபக்கம் நான் வலுவான வாதங்களையும், மறுபக்கம் அதற்கு நழுவலான பதில்களும் என்றால் வலுவான வாதம் பயனற்றதாய் ஆகிவிடக் கூடாதல்லவா? அதனாலேயே குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
    முதலில் ஒரு வித்தியாசத்தை சுட்டிக்காட்ட வேண்டும். தொடக்க கால மனிதகுல உறவுகள், சமூக வளர்ச்சி குறித்து பலரும் ஆய்வு செய்து தங்கள் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார்கள். அவைகள் பல்வேறு தலைப்புகளில் நூல்களாக இருக்கின்றன. கல்லூரிகளில் பாடத்திட்டங்களாக இருக்கின்றன. இவைகளிலிருந்து நான் கூறினால் அதை \\பண்டைக்கால ஆய்வு நூல்களே ஆதாரம் என்று கற்பனை ஆதாரம் தந்துள்ளீர்கள் ஆய்வுகள் அனைத்தும் உண்மைகள் அல்ல//என்று கூறியுள்ளீர்கள். ஆனால், ஹதீஸ்க‌ளைத்தவிர வேறு எதிலும் இல்லாத ஆதாரமற்ற கதைகளை கூறும்போது \\இங்கே ஒரு வரலாற்று நிகழ்வை பாருங்கள்// என்று குறிப்பிட்டுள்ளீர்கள். எது கற்பனைக் காவியம்? எது வரலாறு? பார்ப்பனீயர்கள் புராணத்தை வரலாறாகவும், வரலாற்றை புராணமாகவும் சித்தரிப்பதில் வல்லவர்கள். நீங்களுமா?
    என்னுடைய கூற்றுக்கு நீங்கள் ஆதாரம் கேட்டபோது நூல்களின் பட்டியலையே என்னால் தந்திருக்க முடியும். ஆனால் அவற்றை நீங்கள் கம்யூனிச நூல்கள் என்று எளிதாக ஒதுக்கிவிடுவீர்கள் என்பதால்தான் பண்டைய சமூக வளர்ச்சி குறித்த எந்த ஆய்வாளரின் நூலையும் நீங்கள் படித்துப்பார்க்கலாம் என குறிப்பிட்டிருந்தேன். ஆனால் உங்களுக்கு பரிசீலித்துப் பார்ப்பதற்கோ, ஒன்றை தேடி அறிந்து கொள்வதற்கோ, எது சரி என ஆய்வு செய்வதற்கோ துளியும் முயற்சியோ விருப்பமோ கொள்வதில்லை. ஆதாரம் என்ன என்று கேட்பதெல்லாம் பதில் சொல்வதினின்று நழுவும் ஒரு உத்தி. அதற்கு நீங்கள் அளித்திருக்கும் பதிலும் சாட்சியாக இருக்கிறது.
    உங்கள் பதிலைப் பார்ப்போம். பாலியல் குற்றங்கள் தனியுடமையில் நிலை கொண்டிருக்கின்றன என்றும், அதனால் தான் ஒருவனுக்கு இன்னொரு பெண்ணுக்கு என்ன துன்பங்கள் நேர்ந்தால் என்ன? தனக்கு சுகம் கிடைத்தால் போதும் எனும் ஆணாதிக்க சிந்தனை தோன்றி பாலியல் குற்றங்களை நிகழ்த்துகிறது என்பதை விளக்கி; இந்த தனியுடமையும் ஆணாதிக்கமும் இன்னமும் நிலை கொண்டிருப்பதால்தான் என்ன சட்டம் போட்டு எவ்வளவு காலம் நடைமுறைப்படுத்தியிருந்தாலும் பாலியல் குற்றங்களை களைய முடியவில்லை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியிருந்தேன். இதற்கு பதில் சொல்லப் புகுந்த நீங்கள் கூறியிருந்ததென்ன? \\நேற்றைய சோஷலிச ரஷ்யாவில் ஒரு பெண் தலைவரை கூட உருவாக்க முடிய வில்லை.இன்றுவரை உலக பிரபல்ய பெண்களில் ஒருவர் கூட கம்யுனிஸ்ட்களை காணோம்.என்பது வேறு விஷயம்// \\ரஷ்யாவில் இந்த பழைய கலாச்சாரம் பரிசிலனையில் இருந்ததா? இல்லை எனின் அதை நடைமுறை படுத்து முன் சோசலிசம் படுத்து கொண்டதா?// \\உங்கள் ரஷ்யாவில் சோதனைக்காக ஸ்டாலின்.லெனின்.மாவோ போல ஒரு பெண் தலைவரை உலகுக்கு காட்டமுடியவில்லை.எத்தனை பேர் பொலிட் பீரோவில் பெண்கள் அங்கத்தினராக இருந்தார்கள்?அதில் அதிகாரமிக்கவராக ,ஒளிர் விட்டவராக யாரும் உண்டா?// \\உங்களது ம.க.இ..க வுக்கு கிளைகள் தோறும், மாவட்டந்தோறும், மாநிலங்கள்தோறும் பெண்களை தலைவராக்கி பொதுவுடமைக்கு முன்மாதிரியாக வழிகாட்டுங்களேன்.நீங்கள் இப்போதே ஆரம்பித்தால்தான் இன்னும் ஒரு பில்லியன் ஆண்டில் சோசலிசத்தையும் பத்து பில்லியன் ஆண்டில் கம்யுநிசத்தையும் கொண்டுவர முடியும்// \\பழைய பல்லவியைபாடாமல் புது பல்லவியை ம,க,இ,க வில் தொடங்குங்கள்.பாலியல் குற்றத்திற்கு தனியுடமை தான் காரணம் என்றால் உங்களது சோஷலிச தலைவர்கள் பாலியர் குற்றம் செய்தது இல்லையா?இல்லை அங்கே அதிகார வர்க்கத்தில் பெண்கள் பொது உடமை யாக்கப் பட்டார்களா?[ஆதிகாலத்தைபோல்]// \\ஸ்டாலின்,லெனின்,போன்ற அதிபதிகளும் பொலிட்பீரோ உறுப்பினர்களும் அனுபவித்த இன்பங்களை ரஷ்ய மக்கள் அனைவரும் அனுபவித்தார்களா? மக்கள் அனுபவித்த துன்பங்களை ஸ்டாலின்.லெனின் பொலிட்பீரோ உறுப்பினர்கள் அனைவரும் அனுபவித்தார்களா?// என்ன இது? மெய்யாகவே சோசலிச காலத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்பில் இருந்தார்களா என்பதை அறிய விரும்பியிருந்தால் அதற்கு ஒற்றைக்கேள்வி போதுமே. ஆனால் உங்களின் நோக்கம் சோசலிச கால ரஷ்யாவையும் மகஇக வையும் இழிவு படுத்தவேண்டும் என்பதாகத்தான் தெரிகிறது. இதே உத்தியைத்தான் கடந்த விவாதத்தில் கலந்து கொண்டவரும் கடைப்பிடித்தார். கேள்விகளுக்கு பதிலோ மறுப்போ அளிக்கமுடியாதபோது இப்படி தேவையில்லாததைப் பேசினால் ஒன்று நான் கோபபடுவேன் அல்லது அவைகளுக்கு விளக்கமளிப்பேன். இரண்டில் எதைச் செய்தாலும் பதில் கூறுவதிலிருந்து நழுவிக்கொள்ளலாம். உங்களின் எதிர்பார்ப்பும் இதுதானா? ஆனால் நான் கோபப்படவும் போவதில்லை, சோவியத்தில் அமைச்சராக இருந்த தோழர் குருப்ஸ்கயா உட்பட யாரைப் பற்றியும் உங்களுக்கு நான் சொல்லவும் போவதில்லை. ஏனென்றால் அதை தெரிந்து கொள்வது உங்களின் நோக்கமுமில்லை.
    சோவியத் ரஷ்யாவிலோ, மகஇக விலோ எத்தனை பெண் தலைவர்கள் இருந்தார்கள் என்பதற்கும் பாலியல் குற்றங்களின் காரணத்திற்கும் அதை தடுப்பதற்கும் என்ன தொடர்பு என்பதை நீங்கள் விளக்க வேண்டும்? ஒரு வேளை சோசலிச காலத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டிருந்ததா என்பது உங்கள் ஐயமாக இருந்தால்; ஆம். வழங்கப்பட்டிருந்தது. பெண் என்ற காரணத்தினால் எந்த வாய்ப்பும் அங்கு மறுக்கப்படவில்லை, தொழில்துறை தொடங்கி நிர்வாகம் வரை அனைத்திலும் பெண்கள் பங்கு கொண்டிருந்தனர். இன்னும் சாதாரண பெண்களுக்கு குடும்பச்சுமை அவர்களின் வாய்ப்பை தடுத்துவிடக்கூடாது என்பதற்காக சமையல் குழந்தை வளர்ப்பு போன்றவற்றை அரசு ஏற்றுக்கொண்டு எல்லா இடங்களிலும் சமையல் கூடங்களையும், குழந்தை வளர்ப்பு மையங்களையும் தொடங்கியது. நம்முடைய விவாதத்திற்கு இந்தத் தகவல்கள் போதுமானது. இல்லை, சோசலிச காலத்தில் பெண்கள் மதிக்கப்படவில்லை என நீங்கள் கருதினால், அதற்கான சான்றுகளைத் தாருங்கள் பின்னர் பேசுவோம். ஆனால் அதற்காகவேனும் நீங்கள் சோசலிச ரஷ்யாவை படிக்க வேண்டியதிருக்குமே என்ன செய்யப் போகிறீர்கள்?
    \\தனியுடமை உருவானதற்கு நீங்கள் …….. தனியுடைமைதான் காரணம் என்பது பொது மடமை// பொது மடமை என்று எதைச் சொல்லுகிறீர்கள் நீங்கள்? ஐயா, நான் தனியுடமை எப்படி பாலியல் குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது என்பதை விளக்கியிருக்கிறேன். ஒன்று எதிர் வாதங்களின் மூலம் அதை மறுத்திருக்க வேண்டும், அல்லது தனியுடமை காரணமல்ல என்பதற்கு புது வாதங்களை தந்திருக்க வேண்டும். அதைவிடுத்து சினிமா, பொது மடமை என்று வார்த்தைகளால் கடந்து செல்வது உங்களையல்லவா அம்பலப்படுத்தும். எனக்குத்தேவை பதில் உங்களின் தப்பித்தலல்ல.
    \\பாலியல் குற்றத்திற்கு தனியுடமை ………. பொது உடமை யாக்கப் பட்டார்களா?[ஆதிகாலத்தைபோல்]// இதன் மூலம் நீங்கள் கூற வருவதென்ன? எந்த சோசலிச தலைவர் பாலியல் குற்றம் செய்தார்? கூற முடியுமா உங்களால்? முடியவில்லை என்றால் நீங்கள் செய்திருப்பது அப்பட்டமான அவதூறு. நேர்மையானவர்கள் அவதூறு பரப்பமாட்டார்கள். தவறி செய்துவிட நேர்ந்தால் மன்னிப்பு கேட்பார்கள். நீங்கள்….?
    \\காமத்திற்கு கண்ணே இல்லாதபோது உள்ளம் எங்கே இருக்கும்?……… குடை பிடிக்க சொல்வீர்கள் போலிருக்கிறது// காமம் என்பது என்ன? கண், உள்ளம் எல்லாம் இருப்பதற்கு அது என்ன தனி உயிரா? புரிந்து தான் உங்கள் வாதங்களை எடுத்து வைத்திருக்கிறீர்களா? காமம் என்பது மனிதனுக்கு ஏற்படும் ஒருவித உணர்ச்சி, ஒருவனுக்குள் இருக்கும் தனியுடமை, ஆணாதிக்க எண்ணங்கள் அந்த உணர்ச்சியை கேடான வழிகளில் பயன்படுத்தி குற்றம் செய்யத்தூண்டுகிறது என்பது தான் நான் கூறியிருப்பது. இன்னொரு முறை படித்துப் பாருங்கள். அதென்ன பெண்களின் அசாதாரண நடவடிக்கை? யாருக்கு அசாதாரண நடவடிக்கை? தொடர்புடைய பெண்ணுக்கா? இல்லை அதைக் காணும் ஆணுக்கா? அசாதாரண நடவடிக்கையாக இருந்தால் ஆண் பாய்ந்து விடுவானா? பாலியல் வன்முறை அங்கு நடந்தால் அது யாருடைய குற்றமாக இருக்கும்? யோசித்துப்பார்த்தால் உங்களுக்கே புலப்படும் குற்றம் எங்கிருக்கிறது என்பது. அப்புறம், நண்பர் இப்ராஹிம், என்ன இது மழை குடை என்று உவமேயம். இது போன்ற கிண்டலான வார்த்தை விளையாடல்களை தவித்துக் கொள்ளலாமே.
    \\உமரைப்போன்ற ஒரு ஆட்சியை கொண்டு வந்தால் இஸ்லாமிய சட்டங்களும் ஒழுக்க விதிகளும் பாலியல் வன்முறைகளை அடியோடு ஒழித்துவிடும்// உமரின் ஆட்சியிலேயே பாலியல் வன்முறைகள் நிகழ்ந்ததாகக் கூட ஒரு ஹதீஸ் கதை உண்டு தெரியுமா உங்களுக்கு? பெண்களும் ஆண்களும் ஒரே பள்ளிவாசலில் தொழுகை நடத்தியதை (முகம்மது அனுமதித்ததை) உமர் ஏன் தடுத்தார்? என்ற கேள்விக்கு பதிலை தேடிப்பருங்கள். யாருடைய ஆட்சியை கொண்டு வந்தால் பாலியல் வன்முறைகள் அடியோடு ஒழிந்துவிடும் என்கிறீர்களோ அந்த உமரின் ஆட்சியில் பள்ளிவாசல்வரை பாலியல் குற்றங்கள் நீண்டிருந்தது உங்களுக்கு புரியவரும்.
    \\நமது இந்தியாவில் சுப்பர் பவர் ஒரு பெண்தான் ,……………… எல்லாதுறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள்// இன்று பெண்கள் எல்லாத்துறைகளிலும் எங்களால் சாதிக்க முடியும் என்பதை சில இடங்களில் புகுந்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள். என்றால் அதன் பொருள் பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதா? ஆண்களுக்கு நிகராய் வந்து விட்டார்கள் என்பதா? உலக மக்கட்தொகையில் ஏறக்குறைய சரிபாதியாய் இருக்கும் பெண்கள் பத்து விழுக்காடு இடத்தைக்கூட பெற்றுவிடவில்லை. ஆனால் நீங்கள் கேட்கிறீர்கள் \\பெண்களுக்கு இன்னும் என்ன உரிமைகள் வேண்டும் சொல்லுங்கள்?// என்று. இது தான் ஆணாதிக்கப் பார்வை என்று முன்னரே நான் குறிப்பிட்டிருந்தேன். அடிமையாய் அவர்களை அடக்கிவைத்திருந்ததை எதிர்த்து சில இடங்களில் கிளம்பியிருக்கிறார்கள். இதைத்தான் ஆண்களுக்கு சமமாய் பெண்களும் வந்துவிட்டதாய் காட்டுகிறார்கள். குடியரசு தலைவர், பாராளுமன்றத் தலைவர் போன்ற இடங்களில் பெண்கள் வந்துவிட்டால் சமூகத்தில் பெண்கள் சம உரிமை பெற்றுவிட்டதாக ஆகிவிடுமா? கடந்த பிஜேபி ஆட்சி கூட அப்துல்கலாமை ஜனாதிபதியாக வைத்திருந்தது, அதனால் அந்தக் கட்சி முஸ்லீம்களை மதித்து தலையாய இடம் கொடுத்திருக்கிறது என்று பொருளாகுமா?
    \\ஒரு காலத்தில் இல்லாததை எல்லாம் இப்போது சொல்லி ………….. குற்றங்களால் யாருக்கும் பாதிப்பில்லை// ஒரு காலத்தில் விளையாடக்கூட பெண்கள் போராட வேண்டியிருந்தது என்பதை புலம்பலாக அல்ல, இப்போதுதான் பெண்கள் வெளிவரத்தொடங்கியிருக்கிறார்கள் என்பதற்காக சுட்டிக்காட்டினேன். வெளிவரத்தொடங்கியிருந்தாலும் இன்னும் ஆணாதிக்கத்திலிருந்து சமூகம் விடுபடவில்லை. பெண்கள் நுகர்வுப்பொருளாக இன்று சீரழிந்திருப்பது ஆணாதிக்கத்திற்குப் பயன்படத்தான். பெண்ணியம் பேசும் சில குழுக்கள் கூட மிகக்குறைந்த உடையணிந்து பொது இடத்தில் உலவுவதும், மது அருந்துவதும், விரும்பிய ஆடவருடன் உறவு கொள்வதும் தான் பெண்சுதந்திரத்தின் அடையாளம் என பிதற்றித் திரிவது கூட முதலாளியத்துடன் இயைந்த ஆணாதிக்கத்திற்கு சேவை செய்வதற்குத்தான். இதை எடுத்துக்காட்டி பெண்கள் சமமாகிவிட்டார்கள் என கூறவருகிறீர்கள் என்றால் நீங்கள் சமூகத்தைப் பார்க்கவில்லை என்பது பொருள். இதுபோன்ற பிரபல, மாதிரிப் பெண்களை பயன்படுத்தித்தான் சமூகத்தின் பெரும்பான்மையான பெண்களை ஆண்களின் நுகர்வுக்காக தயார்படுத்துகிறார்கள். இன்றைய முதலாளித்துவ கலாச்சாரத்திற்கு அது அவசியமாக இருக்கிறது. எப்படி மக்களை சுரண்டுவதை மக்களின் முன்னேற்றமாக சித்தரிக்கிறார்களோ அதேபோல ஆண்களின் காமப் பொம்மையாக மாறுவதை பெண்களுக்கான சுதந்திரமாக சித்தரிக்கிறார்கள். இதைத்தான் நீங்களும் பெண்கள் சம உரிமை பெற்றதாகக் கருதுகிறீர்களா?
    \\செங்கொடி ,பெண் பொருள் ஈட்டுபவளாக இருந்து ,…………. குடும்ப சுமைகளை பகிர்ந்து கொள்ளும் நிலையே உள்ளது// இப்ராஹிம், என்னை பார்த்துவரச் சொல்வதை விட நீங்கள் பார்த்துவிட்டு வருவது சிறந்தது. எந்தப்பகுதியில் இதுபோன்று நடக்கிறது? ஓரிரு வீடுகளில் சில கட்டாயங்கள் காரணமாக (நீங்களும் முன்னெச்சரிக்கையாக சில இடங்களில் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்) சில வேலைகளை ஆணும் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், சமூகம் அவ்வாறு மாறிடவில்லை. அப்படி கட்டாயம் உள்ள வீடுகளிலும் கூட பெண்ணைப்போல் சமையல் வீட்டு பராமரிப்பை ஆண் செய்வதை காணவே முடியாது.
    \\ஆண்களில் அனைவரும் இது போன்ற நிலையில் ………… கொண்டுவர முயற்ச்சிக்க வேண்டாம்// மொத்த ஆண்களும் இப்படி இருக்கிறார்கள் என்று நான் எழுதியதாக எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? எங்கே நான் எழுதியதை எடுத்துக்காடுங்கள் பார்ப்போம். பாலியல் குற்றம் புரிபவர்களின் சிந்தனை எப்படி இருக்கிறது என்பதைத்தான் நான் எழுதியிருக்கிறேன். இதை மறுக்க முடியாத நீங்கள், அனைத்து ஆண்களும் இப்படித்தான் என எழுதியதாக பம்மாத்து செய்கிறீர்கள். என்னே உங்கள் புரிதல்.
    \\ஆதிகாலத்தில் பெண் தலைமையில் ………. குற்றம் நடைபெறாது என்று சொல்ல வருகிறீர்கள்ஆம் இதுதான் வீரியமான கருத்து// ஆம். இது வீரியமான கருத்துதான். திருமணம், பதிவு, இனிசியல் எல்லாம் ஆணாதிக்க வடிவங்கள் தான். அவை நீக்கப்பட வேண்டியவைகள். ஆனால் எப்போது எப்படி என்பதில் தான் அதன் வீரியத் தன்மை தங்கியிருக்கிறது. தொடரும் விவாதங்களில் இதுகுறித்து விரிவாக பார்க்கலாம், போதுமான வீரியத்துடன் உங்கள் தேடல்கள் இருந்தால்.
    \\இப்போதைய குடும்ப கட்டமைப்பில் ………. பாலியல் குற்றம் வெகுவாக குறையும்// இதை உங்களின் பாமரத்தனம் என்பதா? இல்லை வரட்டுத்தனம் என்பதா? என்று எனக்கு புரியவில்லை. திருமண‌ம் உட்பட வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் ஆண்களின் தீர்மானமே செயல்படுத்தப்படுகிறது என்பதை நாம் கண்கூடாகக் கண்டுவருகிறோம். மணமகளையோ, மணமகனையோ தேர்ந்தெடுப்பதில் ஜாதி, அந்தஸ்து, பொருளாதாரம் போன்றவைகளே முக்கியக் காரணிகள். இவைகள் ஆணை முன்வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன. நீங்கள் கண்ட வெகுசில குடும்பங்களில்(பெரும்பான்மை குடும்பங்களில் அவ்வாறல்ல என்றாலும்) பெண்கள் தேர்ந்தெடுத்தாலுமே ஆணாதிக்கத்திற்கு உட்பட்டுத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். வெகு சில குடும்பங்களில் பெண்கள் குடும்பத்தை நடத்துபவர்களாக இருக்கலாம், அதைக் கொண்டு இக்குடும்பத்தில் ஆணாதிக்கம் இல்லை என்றோ பெண்ணாதிக்கம் என்றோ கூறமுடியாது. ஏனென்றால் நீங்கள் புரிந்து கொண்டிருப்பது போல், ஆண்தலைமை தாங்கினால் ஆணாதிக்கம், பெண் தலைமை தாங்கினால் பெண்ணாதிக்கம் என்பதல்ல, ஆணாதிக்கத்தின் வேர்கள் ஆழமானவை. ஒரு குடும்பத்தில் நிகழ்வுகளில் பெண் தீர்மானிப்பவளாக இருந்தாலும் அவளின் தீர்மானம் ஆணாதிக்கத்தை எதிர்த்து இருக்கமுடியாது. ஒரு குடும்பத்தில் ஆண் பொம்மையாக இருந்து பெண்ணே அனைத்தையும் தீர்மானிக்கிறாள் என்று கொள்வோம், அந்த குடும்பத்தில் நிகழும் ஒரு மரணத்தில் ஆணுக்குப் பதிலாக பெண் கொள்ளிவைக்க முடியுமா? இதையே முஸ்லீம் சமூதாயத்திலும் கூறமுடியும், ஒரு குடும்பத்தை பெண்ணே தலைமை தாங்குகிறாள் என்பதற்காக தன்னுடைய மகளின் திருமண‌த்தில் அவளால் மந்திரம் சொல்லி நடத்திவைக்க முடியுமா? ஆக ஒரு குடும்பத்தையோ அல்லது குழுவையோ பெண்ணே தலைமை தாங்கி நடத்தினாலும் ஆணாதிக்கத்தை மீறமுடியாது. ஏனென்றால் நீங்கள் நினைப்பது போல் யார் தலைமை தாங்குகிறார் என்பதை வைத்து ஆணாதிக்கம் தீர்மானம் பெறுவதில்லை, சமூகமே ஆணாதிக்க சமூகமாய் இருக்கிறது. அடுத்து நீங்கள் கூறியிருக்கும் கருத்து பாலியல் வன்முறை குறித்த உங்களின் படிமத்தை காட்சிப்படுத்துகிறது. உரிய வயதில் திருமணம் செய்து கொண்டால் பாலியல் குற்றங்கள் குறையுமா? உரிய வயதில் திருமணம் செய்துகொள்வதைப் பொருத்தல்ல, கிடைக்கும் வாய்ப்பைப் பொருத்து, பயன்படுத்திக்கொள்ளும் தருணத்தைப் பொருத்து, தப்பிக்கும் சாத்தியத்தைப் பொருத்துத்தான் பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன. இதை உரிய வயதில் திருமணம் செய்தால் வெகுவாக குறையும் என்பது முழுக்க முழுக்க பொருத்தமான கூற்றாக இருக்கமுடியுமா? திருமணம் முடித்தவர்களும் பாலியல் குற்றங்களில் வெகுவாக ஈடுபட்டே வருகின்றனர்.

    \\இப்போது பெண்ணுக்கு என்ன உரிமை இல்லாமல் இருக்கிறாள் ………….. அதிகம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்// இப்போது பெண்களுக்கு என்ன உரிமைகள் இருப்பதாக கருதுகிறீர்கள் நீங்கள்? ஆணுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கு இருக்கிறதா? மிகுந்த போராட்டங்களின் பயனாக, முதலாளிய தேவைகளின் விளைவாக ஆணாதிக்கத்திற்கு உட்பட்டு பெண்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக வேலை செய்ய அனுமதி, சில இடங்களில் தலைமை தாங்க, சொத்துக்களை நிர்வகிக்க என்பன போன்று, ஆனால் இந்த சலுகைகள் ஆணாதிக்க வரம்புக்குள் தான் இருக்கின்றன. இதைத்தான் நீங்கள் பெண்களுக்கு இன்னும் என்ன வேண்டும்? எனக் கேட்கிறீர்கள். ஆக இப்படிக் கேட்பதின் மூலம் ஆண்தான் பெண்ணுக்கு சிற்சில சலுகைகளை தேவையைப் பொருத்து வழங்கிக்கொண்டிருக்கிறான் என்பதை கோடிட்டுக் காட்டியதன் மூலம் இது ஆணாதிக்க சமூகம் என்பதை நீங்களும் உணர்ந்தே தான் இருக்கிறீர்கள் அல்லவா? முந்திய காலத்தைவிட பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பது பெண்களுக்கு சலுகைகள் கொடுத்தது தான் காரணமா? நிச்சயம் இல்லை. முதலாளித்துவ சமுதாயத்தில் ஆணாதிக்கம் நுகர்வுக் கலாச்சாரத்துடன் இணைந்து புதிய தளத்தை அடைந்திருக்கிறது. சுதந்திரம் என்று கூறிக்கொண்டே காலனியாதிக்கத்தை தொடர்வதுபோல, பெண்ணியம் பெண்கள் உரிமை எனக் கூறிக்கொண்டே ஆணாதிக்கத்தை உயர்த்துகின்றன. ஆண்களுக்கான உள்ளாடை விளம்பரங்களில் கூட குறைந்த ஆடையுடன் பெண்ணை தோன்ற வைக்கும் வக்கிரம் பிடித்த அளவுக்கு இன்று ஆணாதிக்கம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இதுதான் பாலியல் வன்முறை அதிக அளவில் நடப்பதற்கான காரணமாக அமைகிறதேயன்றி பெண்கள் போராடிப் பெறும் சலுகைகளினால் அல்ல.

    விஜய் டிவி நீயா? நானா? குறித்து பேசியிருக்கிறீர்கள். இதுபோன்ற ‘டாக் ஷோ’க்களைப் பார்த்துத்தான் சமூகத்தின் யதார்த்தத்தை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அது மெய்யான யதார்த்தத்திற்கு எதிரானதாகத்தான் இருக்கும். ஏனென்றால் இந்த டாக் ஷோக்கள் சமூகத்திற்கு தேவையானவைகளை எடுத்துக்கொள்வதேயில்லை. விளம்பரதாரர் நிகழ்ச்சியாக நடத்தப்படும் இவைகளின் எல்லை, நடப்பு போக்குகளை தக்கவைக்கும் அமைப்பிலேயே இருக்கும். போகட்டும், உங்களின் கணக்கை பார்ப்போம். \\மிச்சம் இருக்கும் ஆணாதிக்கமும் ………. இங்கே ஆணாதிக்கம் எங்கே உள்ளது?// கணவன் அடக்கியாளும் 20 விழுக்காடும், கணவனே பெருமையாக கருதவைக்கக்கப்பட்டிருக்கும் 30 விழுக்காடும் ஆக சரிபாதி நேரடியாக ஆணாதிக்கத்திற்குள் வந்துவிடுகிறது. கணவனுக்கு சமமாக தங்களைக் கருதும் 30 விழுக்காடு பெண்கள் என்ன அடிப்படையில் சமமாக கருதுகிறர்கள்? ஆணுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் தங்களுக்கும் இருக்கிறது என்பதால் சமமாகக் கருதுகிறார்களா? இல்லை. ஆண்களைப் போல் நம்மாலும் வேலைக்கு போக முடிகிறது என்பன போன்ற சலுகைகளை உத்தேசித்துத்தான் சமம் என எண்ணுகிறார்கள். ஆனால் ஆண் தன்னுடைய சம்பளப் பணத்தை சுதந்திரமாக செலவு செய்வது போல் பெண்ணால் செலவு செய்துவிட முடியுமா? என்ற கேள்வியை எழுப்பினாலே போதும், இந்த சமம் பல்லிளித்துவிடும். கணவனை மீறி செயல்படுவதே உரிமையாக கருதும் 10 விழுக்காடு பெண்களும் என்ன விதத்தில் கணவனை மீறுகிறார்கள்? பாலியல் விவகாரங்கள், ஆடை அணிகலன்கள் எடுப்பது போன்றவற்றில் தான் இருக்கும். கணவனை மீறல் என்பது ஆணாதிக்க மீறலாக, எடுத்துக்காட்டாக பூ, பொட்டு வைக்க மாட்டேன், அல்லது கணவனின் மரணத்தின் பின் எடுக்க மாட்டேன் என்பது போன்ற மீறலாக இருக்குமா? ஆக நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துமே ஆணாதிக்க சமூகம் நிலவுவதைத்தான் சுட்டிகாட்டுகிறது(நீங்கள் விட்டுவிட்ட 10 விழுக்காட்டை நானும் கண்டுகொள்ளவில்லை)

    \\நான் மழை பெய்கிறது என்று சொன்னது, …………. சினிமாவில் மழை பெய்வதை காட்டியுள்ளீர்கள்// இதில் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது உங்களுக்காவது புரிகிறதா? இதோ நீங்கள் எழுதிய அந்த வாசகம் \\நான் மழை பெய்தது என்கிறேன்.நீங்கள்,”கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டுள்ளது,அதனால் காற்று சுழன்று அடிக்கிறது,மேகம் திரண்டது,கருமேகம் சூழ்ந்தது,மழை பெய்தது ,என்கிறீர்கள்// நீங்கள் இப்போது சொல்வதுதான் சரி என்றால் விளக்கமாக பொருத்திக்காட்டுங்கள் பின்னர் நான் எனக்கு புரியவில்லை என எடுத்துக்கொள்கிறேன்.

    ஆடைக் குறைவினாலும் பாலியல் குற்றங்கள் ஏற்படும் என்பதை நான் எப்போதும் மறுத்திருக்கவில்லை என்னுடைய முதல் பின்னூட்டத்திலேயே இப்படிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்பது உங்கள் கவனத்திற்கு \\பெண்ணின் ஆடை ஆடவனின் ஆசையை தூண்டுவது, இன்றைய நுகர்வுக் கலாச்சாரப் பழக்கங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் போன்றவைகளை பாலியல் குற்றங்களுக்கான காரணங்களாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். இவை மேலோட்டமானவை. ….. இவைகள் தற்போது இருக்கும் பாலியல் குற்றங்களின் அளவை வேண்டுமானால் சற்று குறைக்கலாம் …… எனவே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் அதாவது இஸ்லாம் கூறும் காரணங்கள் மேம்போக்கானவை// ஆடைக்குறைவு என்பது பாலியல் குற்றத்திற்கான தூண்டுதல்களின் ஒன்று, ஆனால் அதுவே பாலியல் குற்றங்களுக்கான அடிப்படைக் காரணமல்ல என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. அதனால் தான் இஸ்லாமிய காரணம் மேம்போக்கானது என்றும் கூட சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதே போல், இன்ப உணர்ச்சியா இனப்பெருக்கமா என்பதிலும் நன் எழுதியிருப்பதை மீண்டும் படித்துப்பார்த்தால் நீங்கள் நினைப்பது பிழை என்பது உங்களுக்கே தெரியும். இதோ அந்த வாசகம், \\வடிகாலாக இல்லாமல், உடலியல் ரீதியான தேவை அவனை செலுத்தாமல், மனம் சிந்தனை அதைச் செலுத்தும்போதுதான் அங்கு இன்பம், காதல், காமம் என்பது தொடங்கி குற்றமாக முடிகிறது// இவைகளை நீங்கள் சுட்டிக்காட்டிய பின் நான் என் நிலையை மாற்றிக்கொண்டேன் என நினைப்பது உங்களின் பிழை. மட்டுமல்லாது, நான் தவறான நிலையில் இருந்து நீங்கள் சான்றுகளுடன் அதை சுட்டிக்காட்டினால் என்னுடைய நிலையை மாற்றிக்கொள்வதில் என்னிடம் எந்த தயக்கமும் இருக்காது.

    \\கம்யுனிச ஆரம்பகால கவர்ச்சி கோசத்தில் மயங்கிய மக்கள் …… குற்றமற்ற உலகமாய் மாற்றி காட்டுவோம்// இந்த விவாதம் தொடங்குவதற்குமுன் சோசலிசம் எப்படி நடந்தது எப்படி முடிவுக்கு வந்தது என்பதை தலைப்பாக தேர்வு செய்திருக்கலாம். அப்படியிருந்தால் அதை நாம் விரிவாக விவாதித்திருக்கலாம். ஏனென்றால் அதுகுறித்து நீங்கள் அதிக ஆர்வத்துடன் இருப்பதை அறிய முடிகிறது. சோசலிச ஆட்சியை மக்கள் நீக்கினார்களா? முதலாளித்துவம் சதி செய்து அதை நீக்கியதா? என்பது நாம் எடுத்துக்கொண்ட தலைப்புக்கு உட்படாது என்பதால் அதை விட்டுவிட்டு மற்றவைகளைப் பார்ப்போம். சோசலிசம் நீண்ட காலம் நிலவில் இருந்தால் பாலியல் குற்றங்கள் உட்பட அனைத்துவகை குற்றங்களையும் சமூகத்திலிருந்து நீக்கியிருக்கும் என நான் கூறினால் அது வெறும் கற்பனை மட்டுமல்ல, எவ்வாறென்றால் கம்யூனிசத்தின் நோக்கமே அனைத்துவகை அடக்குமுறைகளிலிருந்தும் சமூகத்தை விடுவித்து சம உரிமை, சம வாய்ப்பு, சம வசதிகளுடன் மக்களை வாழவைப்பது தான். அப்படி வாழவைப்பதற்காக, மனித குலத்தின் வரலாற்றை ஆய்ந்து, எங்கிருந்து அடக்குமுறைகளும் அடிமைத்தனங்களும் தொடங்கியதோ, அங்கிருந்து தன் சீர்படுத்தலை தொடங்குகிறது. அடக்குமுறைகளுக்கான அடிப்படை எதுவாக இருக்கிறதோ அதை நீக்க புரட்சி நடத்துகிறது. சோசலிசம் நீண்ட காலமாக நடப்பிலிருந்தால் அது எதை தன்னுடைய நோக்கமாக கொண்டிருக்கிறதோ அதை அடையும் என்று கூறுவது வெற்றுக்கற்பனையாக ஒருபோதும் இருக்க முடியாது. ஆனால் இஸ்லாத்தின் நோக்கம் என்ன? மக்களை சமத்துவமாக வாழவைப்பது அதன் நோக்கமல்ல. எவ்வாறெனில், மனிதர்களின் குற்றங்களுக்கும், பாவங்களுக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் தண்டனை தருவேன் என கூறுகிறது. அதே நேரம் மறுமைக்கு முன்னால் குற்றமற்ற சமூகம் இருக்கும் என முன்னறிவிக்கவும் இல்லை. ஆகவே கடைசி நாள் வரை குற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும், அதற்கு நான் தண்டனை தருவேன் என்பதுதான் இஸ்லத்தின் சாராம்சம். குற்றமற்ற சமுதாயத்தை அமைக்கும் நோக்கத்தை கொண்டிருக்காத ஒன்று ஆயிரமல்ல கோடிக்கணக்கான ஆண்டுகள் நடைமுறையில் இருந்தாலும் குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்க முடியாது. எனவே நோக்கமாக கொண்டிராத ஒன்றை, முடியாத ஒன்றை உருவாக்கிக்காட்டுவோம் என்று கூறுவது தான் கற்பனையேயன்றி; எதை நோக்கமாக கொண்டிருக்கிறதோ, எதை முடியும் என்று கூறுகிறதோ, எதற்காக போராடுகிறதோ அதை உருவாக்கிக் காட்டுவோம் என்று கூறுவது கற்பனையாக இருக்க முடியாது. எனவே இஸ்லாமிய ஆட்சியில் குற்றங்களில்லாத சமூகத்தை ஏற்படுத்திக் காட்டுவோம் என்பது கற்பனை மட்டுமல்ல கேலிக்கூத்தானதும் கூட. மட்டுமல்லாது உமரின் ஆட்சியில் கூட பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது என்பதையும் மேலே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

    \\பாலியல் குற்றங்களுக்கு காரணமென்ன ……. நிலவும் பிரச்சனையின் சாராம்சம் தெரியாது// எந்த ஒரு பிரச்சனையிலும் சரியா தப்பா எனும் கோணத்தில்தான் பரிசீலனை இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத இடங்களில் விதிவிலக்காக நடுநிலமை ஏற்படலாம். இதை மீறி நடுநிலமைக் கண்டோட்டம் என்பது நாடகமாகத்தான் இருக்கும். சரி, நீங்கள் கூறியபடி செய்தித்தாள் செய்திகளையோ எடுத்துக்கொள்வோம். பெண்ணின் காம வெறியால் குடும்பநாசம் என்பது என்றாவது வரும் செய்தி தான். ஆனால் ஒரு நாளுக்கு பத்து செய்தியாக வருவது வன்புணர்ச்சி செய்திகள். ஆணாதிக்க வக்கிரவெறியர்களால் குதறப்படும் செய்திகள் முடிவில்லாமல் வந்துகொண்டே இருக்கின்றன. ஆடையே அணியத் தொடங்காத பச்சிளங் குழந்தை முதல் ஆடை விலகலை அனிச்சைச் செயலாய் மூடமுடியாத கிழவிகள்வரை வன்புணர்ச்சி செய்யப்படுவது தினம் தினம் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது. இவைகளுக்கு என்ன காரணம் கூறுவீர்கள்? அண்மையில் கௌரவக் கொலைகள் நாடாளுமன்றம் வரை பேசப்பட்டது. இந்த கௌரவக் கொலைகளின் இலக்கு காதலித்து மணமுடிக்கும் பெண்கள். நீதிமன்றங்கள் கௌரவக் கொலைகளுக்கு ஆதரவாய் தீர்ப்பு வழங்குகின்றன. வட மாநிலங்களில் கௌரவக் கொலைகளை தடுத்தால் ஓட்டு கிடைக்காது என்று மக்கள் பிரதிநிதிகள் வெட்கமில்லாமல் பேட்டியளிக்கிறார்கள். தன் சொந்த மகளையே காதலித்ததற்காக கொல்லத் துடிப்பவர்கள் அதே காரணத்திற்காக மகனை கொல்வதில்லையே ஏன்? தினமும் செய்தித்தாள்களில் வரும் இதுபோன்ற செய்திகளை நீங்கள் ஆழமாக மூழ்கிப் பார்த்தாலும், மேலாக மிதந்து பார்த்தாலும், நடுவாந்திரமாக மூழ்கு நீச்சலில் பார்த்தாலும் ஆணாதிக்கம் எனும் முடிவைத்தான் நீங்கள் வந்தடைய வேண்டியதிருக்கும்.

    \\இதைவிட வேறு என்ன தெரிந்துகொள்ளுமாறு செயல்பட்டு விட்டீர்கள்? கிரக்கிக்கத் தெரியவில்லை உளவாங்கி கொள்ள தெரியவில்லை,அப்படியெனில் செயல்முறை விளக்கம் வேண்டும் என்றால் நடைமுறை படுத்த முடியாத ஒன்று என சொல்லவருகீறிர்கள்// நான் எடுத்துவைக்கும் வாதங்களை உள்வாங்கிப் பதிலளியுங்கள் என உங்களைக் கேட்டால் கம்யூனிசம் நடைமுறைப் படுத்தமுடியாதது என்று என்மீது ஏற்றிக்கூறுகிறீர்கள். ஓ… இதைத்தான் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சுப்போடுவது என்பார்களோ.

    தொடரும்
  2. தொடர்கிறது
    \\ஒரு வீட்டுக்காரனுக்கு அழகான குழந்தை ….. உங்களுக்கு புரிதல் இல்லை.என்பீர்கள்// உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை அல்லது நீங்கள் புரிந்து கொள்ள முனையவில்லை என்பதை நீங்களே அழகாகக் கூறிவிட்டீர்கள். இன்பத்தையும் துன்பத்தையும் பொதுவில் வைப்பது என்பதை உங்களால் இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும் என்றால் உங்களுக்கு புரிதல் இல்லை என்று கூறுவதில் தவறொன்றும் இல்லையே. குழந்தையை வளர்ப்பதும், பராமரிப்பதும், பாதுகாப்பதும் பெற்றொர்களின் கடமையாக இருப்பது விலக்கப்பட்டு அரசு பொறுப்பில் பொதுவில் இருந்தால், புதிய குழந்தையின் வரவுக்கு அனைவரும் மகிழ முடியும், இன்னொரு குழந்தையின் இழப்பிற்காக அனைவரும் வருந்தவியலும். ஒன்றை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அது என்ன சொல்கிறது என கற்க வேண்டும், அது சரியா தவறா என ஆராயவேண்டும். சரி என்றால் தைரியமாக ஏற்கவும், தவறு என்றால் தயக்கமில்லாமல் தள்ளவும் முடியவேண்டும். ஆனால் இரண்டு நிலைகளிலும்(இஸ்லாம், கம்யூனிசம்) இந்த மனப்பான்மை உங்களைப் போன்றோரிடம் இருப்பதில்லை என்பதுதான் வேதனைக்குறியது.

    \\சூழ்நிலைகளில் சிக்காதவரை 95 சதவீத மக்கள் கற்புக்கரசர்கல்தான். மனிதனின் காம உணர்வுகளுக்கு முன் பொது உடமையாவது, கத்தரிக்கையாவது// ஆம். சூழ்நிலையில் சிக்காதவரை பெரும்பாலானவர்கள் நேர்மையானவர்கள் தான், சூழ்நிலை நேர்ந்துவிட்டால் வரம்பு மீறிவிடுகிறார்கள். இங்கு சூழ்நிலை என்பது என்ன? காம உணர்வா? அது எல்லோருக்கும் இருக்கிறது, என்றால் சூழ்நிலை என்பதென்ன? செயல்படுத்தும் வசதியும் தப்பிக்கும் வாய்ப்பும் இது தான் சூழ்நிலை என்பது. சரி இந்த சூழ்நிலை அமைந்த எல்லோருமே வரம்பு மீறிவிடுகிறார்களா? இருக்கமுடியாது. ஆணாதிக்கம் எந்த அளவில் ஒருவனை ஆள்கிறதோ, தனியுடமைச் சீரழிவு எந்த அளவுக்கு அவனில் ஆழ்கிறதோ, அந்த அளவிற்குத்தான் ஒருவன் வரம்பு மீறிப்போவான்.

    சௌதி பாலியல் குற்றங்களில் ஏதோ நான் ஒப்புக்கொள்ள மறுப்பதுபோல் போக்குகாட்டியிருக்கிறீர்கள். ஆனால் நான் மிகத்தெளிவாகவே கேட்டிருக்கிறேன், \\இஸ்லாமியத்தீர்வு என்ன? குரான் குறிப்பிடும் தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும், பெண்கள் பிற அன்னிய ஆடவர்முன்னால் தங்களை மறைத்துக்கொள்ள வேண்டும் என்பது தானே. 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக சௌதியில் இது நடைமுறையில் இருக்கிறது. உங்கள் வாதத்தை அப்படியே நான் ஒத்துக்கொள்கிறேன் என்று கூட வைத்துக்கொள்வோம். மற்ற நாடுகளைவிட சௌதியில் பாலியல் குற்றங்கள் கொஞ்சம் குறைவாக இருக்கிறது என்றே கொள்வோம்(ஒரு வாதத்திற்கு) ஆக இஸ்லாமியத் தீர்வினால் பாலியல் குற்றங்களை கொஞ்சம் குறைக்கலாமே தவிர இல்லாமல் செய்ய முடியாது. இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?// என்று. மீண்டும் கேட்கிறேன், உங்கள் பதில் என்ன?

    இப்ராஹிம், உங்களைப் போல் கேட்ட கேள்விகளை வேறொன்றாக திரிக்காமல் தெளிவான, நேரிய‌ பதிலை அளித்திருக்கிறேன். தேவைப்படின் இன்னும் அதிக விபரங்களுடன் ஆயத்தமாக உள்ளேன். இவைகளை பரிசீலனை செய்யத் தயாரா நீங்கள்? எது இலக்கு(ஊர்) என்பதையும், அந்த இலக்கை சென்றடையும் திசை(வழி) எது என்பதையும் போதிய உள்ளடக்கத்துடன் எடுத்துவைத்திருக்கிறேன். எது இல்லாத ஊருக்கான வழி என்பதையும் இது எடுத்துக்காட்டியிருக்கிறது. நீங்கள் இஸ்லாமியத்தீர்வை தாராளமாக பின்பற்றலாம். அது உங்கள் உரிமை. ஆனால் அதுதான் சரியான தீர்வு என்று சொல்லாதீர்கள், சொன்னால் அதற்கான சான்றுகளை, தரவுகளை, விளக்கங்களை எடுத்துவைக்க வேண்டும். அல்லாவிடின் மீள்பார்வை செய்யுங்கள் உங்கள் நிலையை.நீங்கள் மீள்பார்வை செய்யாவிடினும், உங்கள் தவறான நிலைப்பாடுகளால் நீங்கள் இடறும்போது கம்யூனிஸ்ட்கள் எங்கள் கரம் நீளும் உங்களைத் தாங்கிப் பிடிக்க, ஏனென்றால் அது எங்கள் கடமை.