திங்கள், 29 நவம்பர், 2010

யார் அது கவ்வா தானே? S.Ibrahim

 >.>>கம்யூனிசத்தின் பார்வையான தனியுடமை, ஆணாதிக்கம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கம்யூனிசத்தின் நிலைபாடு சரியானது என்கிறேன்<<<
நிலைபாடு என்பது ஏட்டு சுரைக்காய்..செயல்பாடுவைச் சொல்லுங்கள்.உங்களது சோஷலிச காலத்திய ரஷ்யா, சீனாவில் பாலியல் குற்றம் எவ்வாறு இருந்தது? சமூக சூழ்நிலைக் கேற்ப சட்டங்களை,நடைமுறைகளை வகுத்துக்கொண்டு அங்கு என்ன தீர்வு மூலம் பாலியல் குற்றங்களை குறைத்து காட்டினீர்கள்.?அனைத்து பாலியல் வன்முறைகளும் பதிவு செய்யப்பட்டனவா?
நீங்கள் ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் நுகர்பொருட்கள் என்று குறிப்பிடுகிறீர்கள் என்றால் அது எப்படி என்று கூறமுடியுமா? என்று கேட்டு உளீர்கள்.பல பெண்கள் ஆண்களை அழைப்பது நுகர்வுக்காக அல்லாமல் வேறு எதற்கு?மேலும் பெண்ணுக்கு ஆண் நுகர்பொருள் என்பதற்கு பாலியல் இணைய தளங்களே சாட்சி.
 ஆதியில் சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழிநடத்தினாள், யார் அது கவ்வா தானே? உலகில் ஆணாதிக்கமும் இல்லை .பெண்ணாதிக்கமும் இலை.இருபாலரும் இடத்துக்கு தகுந்தவாறு ஆதிக்கம் செலுத்துகின்றனர். பாலியல் தேவை என்பது ஆசையாக இன்பமாகத்தான் நுகரப்படுகிறது இன்றைய உலகில்.ஆனால் இனப்பெருக்கம் தான் உண்மையான நோக்கம் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள்.ஆசை,இன்பம் காதல்,காமம், இவைகள்தான் பாலியல் தேவைக்கான காரணங்கள் .இனபெருக்கம் என்பது எதிர்விளைவே.ஆதி மனிதன் பாலியல் உணர்வுக்கு வடிகாலாகத்தான் பெண்ணை  தேடி இருப்பான்.பெண்ணும் அதற்காகவே இணங்கி இருப்பாள்.அதைப்போலவே பெண்ணின் தேவை மிகைத்திருந்தாலும் ஆணை அவள் அழைத்திருப்பாள்.எல்லா காலத்திலும் பாலியல் தேவை ஆசை இன்பத்திற்கு தான் முதலிடம்.
  மேலாடை அணியாத ..................................................................................ஆயிற்று என்று கூற வருகிறீர்களா?// 
இதில் உங்கள் இலக்கு என்ன?இது உங்கள் கேள்வி .மேலாடை அணியாத பழங்குடிகளிடம் பாலியல் வன்முறை இல்லை என சொல்ல வருகிறீர்கள். கேட்டது ,கேட்ட இடத்தில் கிடைக்கிறது.அவர்களை பொறுத்தவரை ருசியான உணவுகள் வாழ்க்கை வசதிகள் ஆகியவை கிடைக்காது.அது அறுதியாக கிடைக்கும்போது அதை அனுபவித்துவிட்டால் அதன் தேவைக்காக வன்முறை வரும்.மற்றபடி பாலியல் தேவை நினைத்த மாத்திரத்தில் அதை நிறை வேற்றிக் கொள்ளுகிறார்கள்.மேலாடை அணிவது அவர்களுக்கொரு பொருட்டல்ல.மேலும் அதன் மூலம் ஏற்படும் பாலியலும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்லவே,நீங்கள் அவர்களை உதாரணம் காட்டுவது புரட்சி மூலம் வரும் சோஷலிச ஆட்சியில் பழங்குடி மக்களை போல் வரம்பு எது மின்றி மனம் போன போக்கில் வாழ்வதற்கு அதாவது பழங்குடியின் சமூக சூழ்நிலைக்கு  ஏற்றவாறு சட்டம் வகுப்பீர்களா?என்பதற்க்காகத்தான் கேட்டேன்.ஆனால் நீங்கள் சோசலிசம்   நவீன பயன்பாடுகளை முதலாளிய சீரழிவுகள் எதுமின்றி கற்பிக்கும்.  என்று கூறுகிறீர்கள்.அப்படி என்றால் அவர்களும் நம்மைப்போல் ஆகி பாலியல் வன்முறைக்கு உட்படுவார்களே.ஆகவே மேலாடை அணியாவிட்டாலும் பாலியல் வன்முறை இல்லை என்பது தவறு.புர்கா அணிந்தவர்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்றால் தினசரி சாலை விபத்து நடைபெறுகிறது என்பதற்காக சாலை விதிகள் தேவையிலை என்பீர்களா?  
ஒன்றில் எச்சரித்து ஆடையை சரிசெய்யவும், மற்றதில் காம வேட்கையும் கொண்டால் ஆடை தவித்து வேறொன்று அதில் செயல்படுகிறது எனலாம். நீங்கள் சொல்லுவதைப்போலவே தான் சொல்லுவான் .இரண்டு பேரிடத்திலும் காமவேட்கை  கொண்டால் அவன் மிருக நிலையை எய்துவிடுவான்.அதனால் தான் தன சகோதரியை குறைந்த ஆடையில் காணும் வேறு ஆடவன் காம வேட்கை கொண்டால் தன சகோதரி அதற்க்கு பலியாகிவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் அவளை எச்சரித்து ஆடையை சரிசெய்ய சொல்லுகிறான்..பிறர் சகோதரியை பார்த்து தனக்கு வரும் காம உணர்வுதான்  தனது சகோதரியை பார்த்து பிறர்க்கும் வரும் என எண்ணுகிறான். ஆக ஆடை பாலியல் வன்முறைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உங்கள் உதாரணம் மெய்ப்பிக்கிறது.
ஆடம்பரத்தின் காரணமாக ஏற்படும் பொருளாதார சுரண்டல் வீரியமே இருபாலரையும் வேலைக்கு செல்லும் நிர்ப்பந்தத்தை உருவாக்கி உள்ளது .இது தவிர்க்ககூடியதே.வேறு வழியே இல்லாத நேரத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை.இன்றைய கலாச்சார சீரழிவுக்கு காரணம் ஆண்கள் வேலை இல்லாமல் பலர் இருக்க பெண்கள் வேலைக்கு சென்றறது தான் என்பதை மூடி மறைக்க முடியாது.பெண்களுக்கு சமஉரிமை என்று சொல்லும் ஏட்டளவில் முற்போக்கு பேசும் பென்பித்தர்களே இந்த சமூக சீர்கேட்டிற்கு காரணம் . ..
   இது மற்ற நாடுகளில் பதிவாகாமல் இருப்பதைவிட வெகு அதிகம் என்பதால்தான் மற்ற நாடுகளின் பாலியல் குற்றங்களை விட ஒப்பீட்டளவில் சௌதியில் ஒன்றும் குறைந்துவிடவில்லை என்கிறேன்.
இது உங்கள் யூகம்.யூகம் உண்மை ஆகிவிடாது .இதை ஒப்புக் கொண்டால் நம் வாதம் முழுமை பெற்றுவிடும் என்ற பயத்திற்காக தவறான தகவலை தருவதை விட உங்கள் கூற்றுக்கு ஆதாரத்தையோ சரியான வாதத்தையோ சொல்லுங்கள்.
பி.கு.ஜெயகாந்தன் எழுத்துக்களை இலக்கியவாதிகள் மட்டுமே புகழ முடியும் .சாதாரண மக்களுக்கு புரியாதது மட்டுமல்ல.நடைமுறைக்கும் ஒவ்வாதவை.

சுத்தமான கலப்படமற்ற ஆணாதிக்கப் பார்வை. senkodi

நண்பர் இப்ராஹிம்,
புதிய சட்டங்கள் எதையும் இஸ்லாத்தில் இணைக்க முடியாது என்பதும், கம்யூனிசத்தில் இணைத்துக்கொள்ளமுடியும் என்பதும் இந்த இரண்டுக்கும் இடையிலுள்ள முதன்மையான ஒரு வித்தியாசம். இது புரிதலுக்காக, விவாதத்திற்கானதன்று. ஏனென்றால் இந்தத்தலைப்பை நாம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஆகவே எதை எடுத்துக்கொண்டோமோ அதில் தொடர்வோம்.
பாலியல் குற்றங்கள் தொடர்பாக இஸ்லாம் கொண்டிருக்கும் நிலைபாடு மேலோட்டமானது என்பது என்னுடைய குற்றச்சாட்டு. ஏனென்றால் பாலியல் குற்றம் என்பது ஆடை அணியும் விதம், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை. அது தனியுடமையையும், ஆணாதிக்கத்தையும் ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. இந்த ஆணாதிக்க எண்ணங்களால் தான் பாலியல் குற்றங்கள் உருவெடுக்கின்றன. இதற்கு பழக்கவழக்கம்,ஆடை போன்றவை வாய்ப்பை ஏற்படுத்தித்தருகின்றன. ஆனால் ஆடை குறித்துப் பேசும் இஸ்லாம் ஆணாதிக்கம் குறித்து பேசவில்லை, இன்னும் சொல்லப் போனால் அதை அங்கீகரிக்கிறது. அதனால் தான் இஸ்லாமின் நிலைபாடு மேம்போக்கானது என்கிறேன். மேம்போக்கான பார்வையிலிருந்து எழும் தீர்வுகள் சரியானவையாக இருக்க முடியாது. இதில் கம்யூனிசத்தின் பார்வையான தனியுடமை, ஆணாதிக்கம் போன்றவற்றை சமூகத்திலிருந்து நீக்குவது ஆழமானது என்பதுடன் பாலியல் குற்றங்களை சமூகத்திலிருந்து முழுமையாக நீக்கும் இலக்கையும் கொண்டிருக்கிறது என்பதாலும் கம்யூனிசத்தின் நிலைபாடு சரியானது என்கிறேன்.
\\ஆணுககு எப்படி பெண் நுகர்பொருளோ,அதுபோல் பெண்ணுக்கும் ஆண் நுகர்பொருள். இன்றைய பெண்களின் உடை அலங்காரம் பெண்ணாதிக்கத்தின் வெளிப்பாடே என்பதையும் மறுக்க முடியாது// இன்றைய சமூகத்தில் பெண்களின் நிலை குறித்த உங்களின் இந்தப்பார்வை தவறானது. ஆண்களுக்கு பெண்கள் போகப் பொருளாக, நுகர்பொருளாக, பாலியல் பண்டமாக இருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய உலகின் நிலை. இந்த ஆணாதிக்க கருத்தியலை அனைத்து செயல்களிலும் நீங்கள் கவனிக்கலாம். இதை நீங்கள் ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் நுகர்பொருட்கள் என்று குறிப்பிடுகிறீர்கள் என்றால் அது எப்படி என்று கூறமுடியுமா? அதுமட்டுமல்லாம்ல் பெண்களின் உடை அலங்காரம் பெண்ணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒரு பெண் ஆடையைக் குறைப்பதும், உடலை வெளிக்காட்டிக்கொள்வதே அழகு என நினைப்பதும் ஆணாதிக்கமா? பெண்ணாதிக்கமா? உலகில் பெண்ணாதிக்கம் என்ற ஒன்று எப்போதும் நிலவில் இருந்ததேயில்லை என்பதுதான் வரலாறு. ஆதியில் சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழிநடத்தினாள், அதன் பிறகிலிருந்து இன்றுவரை ஆண் பெண்ணை அடிமைப்படுத்தி தன்னுடைய ஆணாதிக்கத்தை நிலைநாட்டி வருகிறான். இதை நீங்கள் மறுக்கிறீர்களா? உங்கள் கருத்து சரியானது என நீங்கள் நினைத்தால் அது எப்படி என்பதை விளக்குங்கள்.
\\பாலியல் தேவைகள் என்பது இனபெருக்கம் ,ஆசை,இன்பம் அத்தனையும் உள்ளடக்கியதே.இன்னும் சொல்லப்போனால் இனபெருக்கத்தின் தேவையை விட ஆசை,இன்பத்தின் வடிகாலாகத்தான்”பாலியல் தேவை” அதிக பங்கு வகிக்கிறது// என நீங்கள் குறிப்பிட்டிருப்பது இன்றைய நிலை. ஆம் பாலியல் தேவை என்பது ஆசையாக இன்பமாகத்தான் நுகரப்படுகிறது இன்றைய உலகில். ஆனால் நான் குறிப்பிட்டது இதையல்ல, “பாலியல் தேவைகள் என்பது உடல்சார்ந்து இனப்பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இனப்பெருக்கம் மட்டுமே நோக்கமாக இருக்கும்வரை அங்கு குற்றம் என்பது இயல்பில் இருக்காது. ஆனால் அது நுகர்வாக மாறும்போது அதாவது ஆசை, இன்பம் என்பனபோன்ற வகைப்பாட்டுக்கு மாறும்போதுதான் அங்கு குற்றம் வருகிறது” என்றுதான் நான் குறிப்பிட்டிருந்தேன். அதாவது இனப்பெருக்கம் எனும் உண்மையான நோக்கம் மறைந்து ஆசை, இன்பம், காதல், காமம் என உடலுறவின் தளம் மாறியபோதுதான் பாலியல் குற்றங்களாக அது உருத்திரிந்தது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? மறுக்கிறீர்கள் என்றால் எப்படி?
\\பாலியல் வன்முறைக்கான கிரியா ஊக்கிகளாக கவர்ச்சியான உடைகளுடன் பெண்ணியம் இழந்தவர்களாக கவர்ச்சி பொருள்களாக பெண்கள் பவனி வரும்போது ஆண்களை எப்படி குறைகூற முடியும்?// இது சுத்தமான கலப்படமற்ற ஆணாதிக்கப் பார்வை. பெண்கள் கவர்ச்சியான உடையணிந்தால் ஆண்கள் பாய்ந்துவிடுவார்கள், அப்படி நேரும்பட்சத்தில் அதில் ஆண்களை குறைகூறக் கூடாது என்கிறீர்கள். இஸ்லாம் கூறும் உடையணிந்த பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாவதே இல்லையா? உள்ளாகிறாள் என்றால் உடை தவிர்த்த வேறு ஏதோ ஒன்று பாலியல் வன்முறையில் தொழிற்படுகிறது என்பது உறுதி. ஒருவனுக்கு நெருங்கிய உறவில் சகோதரி முறையில் ஒரு பெண்ணை குறைந்த ஆடையில் ஒருவன் காண நேர்கிறது என்று கொள்வோம், அதே அவன் அதே அளவு குறைந்த ஆடையில் அன்னிய பெண்ணை காண நேர்கிறது. இந்த இரண்டு நிகழ்வில் எந்த நிகழ்வில் அவனுக்கு பாலியல் வேட்கை கிளர்ந்தெழும்? இரண்டு நிகழ்விலும் ஒரே மாதிரியான பாலியல் வேட்கை அவனுக்கு உண்டாகுமென்றால் ஆடை காரணம் எனலாம், மாறாக ஒன்றில் எச்சரித்து ஆடையை சரிசெய்யவும், மற்றதில் காம வேட்கையும் கொண்டால் ஆடை தவித்து வேறொன்று அதில் செயல்படுகிறது எனலாம். இதில் இரண்டாவதான் மனநிலைதான் ஒருவனுக்கு ஏற்படும் என்றால் அதில் செயல்படும் வேறொன்று என்ன?
இஸ்லாத்தில் நிலைபாடு சரியானதல்ல என்பதற்கு இரண்டு கேள்விகளை உங்களிடம் எழுப்பியிருந்தேன். “ஆணும் பெண்ணும் தனித்திருக்கையில், பெண் ஆணின் உயரதிகாரியாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவதாக இருக்கும் சைத்தானின் முயற்சிகள் பலனளிக்காது. மேலாடை அணியாத பழங்குடியின சமூகங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த சமூகத்தில் இருக்கும் ஆண்கள் ஆடைகுறைவு என்ற காரணத்தினால் பாலியல் அத்துமீறல்களைச் செய்வதில்லை” இந்த இரண்டுமே ஆடை என்பது பாலியல் வன்முறையில் தகுந்த காரணியல்ல என்பதை நிரூபிக்கப் போதுமானது. ஆனால் இதற்கு பதிலளிக்கப் புகுந்த நீங்கள் \\மேலாடை அணியாத பழங்குடியினரின் சமூகங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களையே முன் மாதிரியாகக் கொண்டு அவர்களைப் போலவே அவர்களின் சமுக சூழ்நிலைக்கேற்ப இயங்கியலின் அடிப்படையில் சட்டங்களை ,நடைமுறைகளை வகுத்துககொள்வீர்களா?அல்லது புரட்சி மூலம் சோஷலிச ஆட்சியை எப்போது உலகம் முழுவதும் கொண்டு வருவது சாத்தியமா? சாத்தியமற்ற ஒன்றை சபையில் சொல்லிவைத்தால் ஆயிற்று என்று கூற வருகிறீர்களா?// என்று கூறியிருக்கிறீர்கள். இதில் உங்கள் இலக்கு என்ன? அந்த இலக்கு நாம் எடுத்துக்கொண்டிருக்கும் தலைப்பிற்கு எந்த விதத்தில் பொருத்தமானது? மேலாடை அணியாத பழங்குடியினத்தில் சோசலிச ஆட்சி ஏற்படாது. புதிய ஜனநாயகப் புரட்சிகான தேவை அந்த சமூகத்தில் இருந்தால், அதற்கான தயாரிப்புகளே அந்த பழங்குடியின சமூகத்தை நடப்பு உலகோடு தொடர்பை ஏற்படுத்தி வேண்டிய நவீன பயன்பாடுகளை முதலாளிய சீரழிவுகள் எதுமின்றி கற்பிக்கும். எதையுமே தட்டையாக புரிந்துகொள்ளாமல் எடுத்துவைத்திருக்கும் வாதங்களை உள்வாங்கி பதிலளிப்பது நல்லது.
அடுத்து,\\வெகுசில நிகழ்வுகளில் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருக்கலாம்.வெகுசில நிகழ்வுகளே வெளிவரும். அதை பொருட்படுத்த தேவை இல்லைஎன்றால் நீங்கள் சொல்லுவதுபோல் ஆண்பெண் தனித்திருப்பது சரியான ஒன்றாகவே இருக்கட்டும்// என்று ஆண் பெண் தனித்திருக்கும் விசயத்தில் பதிலளித்திருக்கிறீர்கள். நடப்பு உலகில் பொருளாதார சுரண்டலின் வீரியம் காரணமாக ஆண் பெண் இருவருமே வேலைசெய்து பொருள் ஈட்டியாகவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. இதனால் ஆண் பெண் வேலை நிமித்தம் கலந்து பழக வேண்டியதிருப்பதும், தனித்திருக்க வேண்டியதிருப்பதும் அவசியமாகியிருக்கிறது. தனித்திருக்கும் எல்லாருமே தங்களுக்குள் பாலியல் இணக்கங்களை ஏற்படுத்திக்கொள்கிறார்கள் என்பது தவறானது. சிலர் அவ்வாறு இருக்கின்றனர், அது விதிவிலக்கானது. இந்த விதிவிலக்குகளுக்காக தனித்திருப்பது கூடாது என்பது சரியான தீர்வாக இருக்க முடியாது.
சௌதியில் பாலியல் குற்றங்களைக்கொண்டு சௌதி முழுவதும் இப்படித்தான் என்றோ, சௌதிகள் அனைவரும் இப்படித்தான் என்றோ நான் கூறவரவில்லை. ஒப்பீட்டளவில் சௌதியில் பாலியல் குற்றங்கள் குறைவு என்பதைத்தான் நான் மறுக்கிறேன். காரணம் ஒரு நாட்டின் பாலியல் வன்முறைக்கான புள்ளிவிபரம் என்பது அந்த நாட்டின் முழுமையான வன்முறைகளின் தொகுப்பாக இருக்காது. பதிவு செய்யப்பட்டவைகளை அடிப்படையாகத்தான் இருக்கும். எந்த நாட்டிலும் இதுபோன்ற நிகழ்வுகல் அனைத்தும் பதிவு செய்யப்படுவதும் இல்லை. ஆனால் சௌதியைப் பொருத்தவரை அங்கு பணிபுரியும் பெண்களே அதிகம் பாலியல் வன்முறைக்கு ஆளாவதால் அது வெளிவருவதே இல்லை. இது மற்ற நாடுகளில் பதிவாகாமல் இருப்பதைவிட வெகு அதிகம் என்பதால்தான் மற்ற நாடுகளின் பாலியல் குற்றங்களை விட ஒப்பீட்டளவில் சௌதியில் ஒன்றும் குறைந்துவிடவில்லை என்கிறேன்.
செங்கொடி
பின்குறிப்பு: நான் எழுதுவதில் உங்களுக்கு புரியாத இடம் என்று ஏதாவது இருந்தால் கேளுங்கள் விளக்க முற்படுகிறேன். மாறாக ஜெயகாந்தன், சாகித்ய அகாதமி போன்ற சொல்லாடல்கள் குறிப்பாக வாதம் செய்வதினின்று நம்மை குலைக்க முற்படும். எனவே பரிசீலனை செய்வீர்கள் என நம்புகிறேன்

ஞாயிறு, 28 நவம்பர், 2010

எனது பதில்

  1. இஸ்லாம் எந்தக்காலத்திலும் வரும் புதியவைகளுக்கும் தன்னுள் தீர்வை கொண்டுள்ளது.புதியவைகளை இணைக்க முடியாது என்று நீங்கள் எதை சொல்லுகிறீர்கள் என்பது புரியவில்லை. கம்யுனிஸ்ட் சமுக சூழலுக்கு ஏற்ப சட்டங்களை வகுத்து கொள்ளும் என்கிறீர்கள் .அவ்வாறெனின் அது நியாயத்தின் அடிப்படையில் இருக்காது.இப்போதைய தமிழகத்தின் சமூக சூழ் நிலை மதுவிலக்கு ரத்து,அதைப்போல் மும்பையின் சமூக சூழ்நிலை பெண்கள் உடலை வியபரத்தலமாக்கி கொண்டதுக்கான அங்கீகாரம் .சமூக சூழ்நிலை என்பது நியாயத்தின்,தர்மத்தின் அடிப்படையிலா?இல்லை மெஜாரிட்டியின் அடிப்படையிலா?
    சமுகத்தை மாற்றுவதை தனி மனிதனிடம் இருந்துதான் தொடங்கமுடியும் .நீங்கள் ஜெயகாந்தன் கட்டுரை போல் எழுதுவது சாகித்ய அகடமி பெறுவதற்குத்தான் சிபாரிசு செய்ய முடியுமே தவிர உலக வாழ்க்கைக்கு நடை முறையில் கொண்டு வர முடியாது.தனி மரம் தோப்பாகாது என்றாலும் தோப்பை உருவாக்க ஒரு மரத்தி லிருந்துதான் கணக்கிடமுடியும்.பாலியல் குற்றங்கள் ஆணாதிக்கத்தினால் மட்டும் ஏற்படவில்லை.மேலும் ஆணுககு எப்படி பெண் நுகர்பொருளோ,அதுபோல் பெண்ணுக்கும் ஆண் நுகர்பொருள். இன்றைய பெண்களின் உடை அலங்காரம் பெண்ணாதிக்கத்தின் வெளிப்பாடே என்பதையும் மறுக்க முடியாது. .
    ஆசை, இன்பம் என்பனபோன்ற வகைப்பாட்டுக்கு மாறும்போதுதான் அங்கு குற்றம் வருகிறது<<<பாலியல் தேவைகள் என்பது இனபெருக்கம் ,ஆசை,இன்பம் அத்தனையும் உள்ளடக்கியதே.இன்னும் சொல்லப்போனால் இனபெருக்கத்தின் தேவையை விட ஆசை,இன்பத்தின் வடிகாலாகத்தான்"பாலியல் தேவை" அதிக பங்கு வகிக்கிறது..
    ஆதலின் ,புரட்சி மூலம் சோசலிச நடைமுறைக்கு வரும் ஒரு நாடு, அதன் சமூக சூழலுக்கு ஏற்ப சட்டங்களை நடைமுறைகளை வகுத்துக்கொள்ளும்.பாலியல் குற்றங்களை தவிர்த்து விடமுடியாது என்பதால் ,சமுக சூழ்நிலைக்கு ஏற்ப பாலியல் தேவைகளை எப்படி வேண்டுமானாலும் நிறை வேற்றிக் கொள்ளலாம் என்று சட்டம் கொண்டுவந்து விடலாம் .மேலாடை அணியாத பழங்குடியினரின் சமூகங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களையே முன் மாதிரியாகக் கொண்டு அவர்களைப் போலவே அவர்களின் சமுக சூழ்நிலைக்கேற்ப இயங்கியலின் அடிப்படையில் சட்டங்களை ,நடைமுறைகளை வகுத்துககொள்வீர்களா?அல்லது புரட்சி மூலம் சோஷலிச ஆட்சியை எப்போது உலகம் முழுவதும் கொண்டு வருவது ?சாத்தியமா? சாத்தியமற்ற ஒன்றை சபையில் சொல்லிவைத்தால் ஆயிற்று என்று கூற வருகிறீர்களா?
    ;
    ஆணும் பெண்ணும் தனித்திருப்பது இன்றைய சமூகத்தில் சாதாரணமானது தான்.அப்படியெனின் அவர்களிடையே பாலியல் நடவடிக்கைகளும் சாதரணமானதுதான்.
    >>>வெகுசில நிகழ்வுகளில் அவ்வாறு நடந்துகொள்ளலாம் என்பதால் ஆண் பெண் தனித்திருப்பதையே தவிர்க்கவேண்டும் என்பது சரியற்ற ஒன்றாகவே இருக்கும். <<<
    வெகுசில நிகழ்வுகளில் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருக்கலாம்.வெகுசில நிகழ்வுகளே வெளிவரும் .அதை பொருட்படுத்த தேவை இல்லைஎன்றால் நீங்கள் சொல்லுவதுபோல் ஆண்பெண் தனித்திருப்பது சரியான ஒன்றாகவே இருக்கட்டும்.
    பாலியல் வன்முறைக்கான கிரியா ஊக்கிகளாக கவர்ச்சியான உடைகளுடன் பெண்ணியம் இழந்தவர்களாக கவர்ச்சி பொருள்களாக பெண்கள் பவனி வரும்போது ஆண்களை எப்படி குறைகூற முடியும்? நேற்று கூட டெல்லியில் நடுஇரவில் வேலைமுடித்துசென்ற இரு பெண்களில் ஒருவர் கற்பழிக்கப்பட்டார்.
    ஆண்கள்,சட்டை அணிந்து ,கழுத்துகூட தெரியாதவாறு டை கட்டி,அதற்க்கு மேல் கோட் அணிந்து,கால்கள்,கால் இன்ச் கூட தெரியாதவாறு சாக்ஸ்,சூட்,சூ அணிந்து முகம் மட்டும் தெரியுமாறு உடை அணிந்து வரும்போது பெண்கள் மட்டும் அரைகுறை ஆடையுடன் காட்சிதரவேண்டுமேன்பதை எங்ஙனம் சரிகாணமுடியும்? இஸ்லாம் பெண்களை முகம் கைகள் தெரியும் அளவுக்கே உடை அணிய சொல்லுகிறது.முகம் கைகள் தவிர மற்ற உடலை மறைத்து எந்த ஆடைகள் வேண்டுமானாலும் அணிந்து கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை.
    .
    பணத்தால் உடல் கொழுத்தவர்கள் வேறு வேலையே இல்லாதவர்கள் சிலரை மட்டுமே வைத்து சவூதி முழுவதையும் கணிப்பது தவறு.சவூதியில் மற்ற நாடுகளை ஒப்புநோக்கின் பாலியல் குற்றங்கள் குறைவு என்பதே இதுவரை வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

செங்கொடியின் பதில்

  1. நண்பர் இப்ராஹிம்,
    முதலில் இஸ்லாத்திற்கும் கம்யூனிசத்திற்கு இடையிலுள்ள ஓர் அடிப்படையான வித்தியாசத்திலிருந்து தொடங்குகிறேன். இஸ்லாத்தின் வேதமான குரானில் சிலவகைக் குற்றங்களுக்கு இன்னின்ன தண்டனைகள் என்று சட்டவியல் தொகுப்பு இடம்பெற்றிருக்கும். இதைப்போல கம்யூனிசத்தில் சட்டங்கள் இடம்பெற்றிருக்காது. கம்யூனிசமானது சமூகத்தை நடப்பிலிருக்கும் அமைப்புமுறையை புரட்சிகரமாக மாற்றியமைப்பது குறித்த அழைப்பு. அந்த அடிப்படையில் புரட்சி மூலம் சோசலிச நடைமுறைக்கு வரும் ஒரு நாடு, அதன் சமூக சூழலுக்கு ஏற்ப சட்டங்களை நடைமுறைகளை வகுத்துக்கொள்ளும். சூழலுக்கேற்ப புதிய நடைமுறைகளை சேர்த்துக்கொள்வது இயங்கியலுக்கு அடிப்படையாகிறது. இஸ்லாத்தில் ஏற்கனவே குரானில் கூறப்பட்டவைகளை விரித்துக்கொள்ளலாமேயன்றி புதியவைகளை இணைக்கமுடியாது. இந்த வித்தியாசத்தை நீங்கள் அறிந்துகொண்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.
    பாலியல் குற்றங்கள் தற்போதைய சமூகத்தில் மட்டும் நடப்பவையல்ல. ஆணாதிக்கச் சிந்தனை என்று தொடங்கியதோ அன்றிலிருந்தே பாலியல் குற்றங்களும் தொடங்கிவிட்டன. ஒவ்வொரு காலகட்டத்திலும் பாலியல் குற்றங்களின் தன்மையும் வடிவங்களும் மாறிவந்திருக்கின்றன. பாலியல் மட்டுமல்ல எந்த ஒரு குற்றச்செயலையும் முழுக்கமுழுக்க தனிமனிதன் சார்ந்ததாக கம்யூனிசம் பார்ப்பதில்லை. குற்றம் புரிவதற்கான சூழல் சமூகத்தில் இருந்துகொண்டிருக்கும்வரை தனிமனிதனை மட்டுமே அதற்கு காரணமாக்கிவிட முடியாது. எனவே சமூகத்தை மாற்றுவதிலிருந்துதான் இதைத் தொடங்க முடியும். பாலியல் தேவைகள் என்பது உடல்சார்ந்து இனப்பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இனப்பெருக்கம் மட்டுமே நோக்கமாக இருக்கும்வரை அங்கு குற்றம் என்பது இயல்பில் இருக்காது. ஆனால் அது நுகர்வாக மாறும்போது அதாவது ஆசை, இன்பம் என்பனபோன்ற வகைப்பாட்டுக்கு மாறும்போதுதான் அங்கு குற்றம் வருகிறது. ஆணாதிக்கம் எனும் சிந்தனை தோன்றாதவரை பெண்ணுடல் ஆசையாக, இன்பமாக, நுகர்வாக ஆகியிருக்காது. எனவே பாலியல் குற்றங்களுக்கு தனியுடமையும், ஆணாதிக்கமுமே காரணம். கம்யூனிசம் இந்த இரண்டும் இல்லாத சமூகத்தை அமைப்பதில் துடிப்புடன் இருக்கிறது. தனியுடமையிலும், ஆணாதிக்கத்திலும் தங்கியிருக்கும் எந்தச் சமூகத்தாலும் பாலியல் குற்றங்களைத் தவிர்த்துவிடமுடியாது என்பதுதான் கம்யூனிசத்தின் பார்வை. தனியொரு மனிதனுக்கு அளிக்கப்படும் தண்டனை என்பது நடந்துவிட்ட செயலுக்கான எதிர்வினையாகத்தான் அமையுமேயன்றி சமூக நோக்கில் அதன் காரணியை களைவதற்குப் பயன்படாது.
    இனி நீங்கள் கூறியிருக்கும் இஸ்லாமிய நிலைபாடு சரியானதா எனப்பார்க்கலாம். இஸ்லாம் பாலியல் குற்றங்களுக்கான காரணமாக தனிமனிதனையே கூறுகிறது. இது அடிப்படையிலேயே தவறானதாகும். ஆணும் பெண்ணும் தனித்திருப்பது, பெண்ணின் ஆடை ஆடவனின் ஆசையை தூண்டுவது, இன்றைய நுகர்வுக் கலாச்சாரப் பழக்கங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் போன்றவைகளை பாலியல் குற்றங்களுக்கான காரணங்களாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். இவை மேலோட்டமானவை. சமூகத்திலிருந்து இந்தக் காரணங்களை நீக்கிவிட்டால் பாலியல் குற்றங்கள் நீங்கிவிடுமா? இவைகள் தற்போது இருக்கும் பாலியல் குற்றங்களின் அளவை வேண்டுமானால் சற்று குறைக்கலாம். ஆனால் பாலியல் முறைகேடுகளை இவை நீக்கிவிடாது. இந்தக் காரணங்களுக்கு நடப்பிலிருந்து நீங்கள் எடுத்துக்காட்டுகள் தந்திருப்பதுபோலவே, இதற்கு எதிரான எடுத்துக்காட்டுகளையும் தரமுடியும். ஆணும் பெண்ணும் தனித்திருக்கையில், பெண் ஆணின் உயரதிகாரியாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவதாக இருக்கும் சைத்தானின் முயற்சிகள் பலனளிக்காது. மேலாடை அணியாத பழங்குடியின சமூகங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த சமூகத்தில் இருக்கும் ஆண்கள் ஆடைகுறைவு என்ற காரணத்தினால் பாலியல் அத்துமீறல்களைச் செய்வதில்லை. எனவே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் அதாவது இஸ்லாம் கூறும் காரணங்கள் மேம்போக்கானவை.
    \\மூன்றவதாக அங்கு சைத்தான் இருக்கிறான்” என்ற நபிமொழி பாலியல் குற்றங்கள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் தீர்வுகளையும் ரத்தின சுருக்கமாக சொல்லும்//
    \\ஓரளவு அமல்படுத்தி கொண்டிருக்கும் சவுதிஅரபியாவில் உலக நாடுகளை ஒப்பிடுகையில் பாலியல் குற்றங்கள் மிகக்குறைவாக இருப்பது தெள்ளத் தெளிவானது// இந்த இரண்டு இடங்களிலும் குரான் குறிப்பிடும் தீர்வு என நீங்கள் முன்மொழிந்திருப்பது ௧) ஆணும் பெண்ணும் தனித்திருக்கக்கூடாது, ௨) பெண்கள் புர்கா அணிந்துகொள்வது. இந்த இரண்டுமே அடிப்படையற்றது. ஆணும் பெண்ணும் தனித்திருப்பது என்பது இன்றைய முதலாளிய சமூகத்தில் சாதாரணமானது. வெகுசில நிகழ்வுகளில் அவ்வாறு நடந்துகொள்ளலாம் என்பதால் ஆண் பெண் தனித்திருப்பதையே தவிர்க்கவேண்டும் என்பது சரியற்ற ஒன்றாகவே இருக்கும். பாலியல் குற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும் ஆணாதிக்கப் பார்வைதான் பெண்கள் புர்கா அணிவதை தீர்வு என்று சொல்ல முடியும். பாலியல் வன்முறைக்கான குற்றத்தை ஆண்களிடம் வைத்துக்கொண்டு பெண்களை புர்கா அணியச் சொல்வது எப்படி தீர்வாக முடியும்?
    பிற நாடுகளைப்போலவே சௌதியிலும் பாலியல் குற்றங்கள் மலிந்துதான் கிடக்கின்றன. சௌதியில் பாலியல் குற்றங்களை பதிவு செய்வது அரிது என்பதால் குறைவானதாகத் தோன்றுகிறது.
    செங்கொடி

வெள்ளி, 26 நவம்பர், 2010

சென்கொடியுடன் விவாதம்

அருளும் அன்பும் மிக்க அல்லாஹ்வின் திருப் பெயரால்,
                           அன்புமிக்கவர்களே,இங்கே சகோதரர் செங்கொடியின் அழைப்பை ஏற்று விவாதத்தை தொடங்குகிறேன்.அவர் தேர்ந்தெடுத்த விவாதத் தலைப்பிலே, துணை தலைப்பையும்,அதை பல பிரிவாக்கி அவற்றில் முதலில் பாலியல் குற்றங்கள்,அதற்க்கான காரணங்கள்,தீர்வுகள் என்பது பற்றி இஸ்லாத்தின் பார்வை பற்றி கேட்டுள்ளார்.நான் பல நூல்களை ஆயிந்து அறிந்தவன் அல்ல. நான் கடந்த பல வருடங்களாக சகோதரர் பீ.ஜே அவர்களின் சொற்பொழிவுகள் ,எழுத்துக்கள் மூலம் அறிந்தவற்றில் ,மனதில் தங்கியதை வைத்தே இங்கு விவாதம் செய்ய விழைகிறேன் இறைவனின் துணையோடு. ஆதாரங்கள்,மேலதிகமான விளக்கங்கள் தேவை ஏற்படும்போது காலதாமதம் ஏற்படாத வண்ணம் மூன்று நாட்களுக்குள்ளே பதிலளிக்க முயலுகிறேன்.  
                    "ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் போது மூன்றவதாக அங்கு சைத்தான் இருக்கிறான்" என்ற நபிமொழி பாலியல் குற்றங்கள் நடப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் தீர்வுகளையும் ரத்தின சுருக்கமாக சொல்லும் முகமாய்  நம் முன் காட்சி தருகிறது.ஒரு பெண்ணை சந்திக்கும் வேளையில் இயல்பான பார்வை மிகைக்கும்போது பாலியல் குற்றம் தனது கணக்கை துவங்க தயாராகிறது.ஒரு உயர் அதிகாரி,சக பெண் அதிகாரியின் பின்னழகை எத்தனை தடவைகள் தான் கண்களால் ரசிப்பது என்ற நிலையின் அனிச்சை செயலாக  கைகள் தாண்டவமாடும்போது பாலியல் குற்றம் செயலாக்கம் பெறுகிறது.பாலியல் குற்றங்கள் அங்கு இங்கு என்றல்லாமல் எங்கெங்கும் நடந்து கொண்டிருக்கும் பரவலான செயலாகிவிட்டது. இஸ்லாம் ஒரு பெண்ணை இயல்பான பார்வையை விட கூடுதலாக பார்வை அதிகரிப்பதையே கண் செய்யும் பாலியல் குற்றமாக சொல்லுகிறது.உடைகளும் அது அணியப்படும் விதங்களும் பாலியல் குற்றத்திற்கு கதவுகளை திறந்துவிடுகின்றன. சினிமாவிலும் ,டிவிகளிலும் உடலழகை காட்டும்  நடிகைகளின் உடைகளைப் போலவே டிசைன் செய்யப்பட்ட உடைகளை பெற்றோர்கள் தாங்கள் குழந்தைகளுக்கு அணிந்து அழகு பார்க்க துணிந்து விட்டனர்.  
             பஸ்ஸில்,ட்ரெயினில்,விழாக்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் பாலியல் தவறுகளை விரும்பாதவனுக்கும் அழைப்பிதழ் கொடுக்கிறது.செல்போன்களும் இன்டர்நேட்களும் பாலியல் குற்றங்களை நண்பர்கள் கூடிக்குலாவும் டி பார்ட்டிகளாக்கிவிட்டன.அவர்கள் மத்தியில் பாலியல் குற்றங்கள் நட்பின் நடவடிக்கைகளாகி விட்டன.ஐ.டி.யின் தாக்கம் பெற்றோரர்களை துச்சமென மதிக்க ஊக்கம் தந்துவிட்டது.பெற்றோரும் பணம் போதும் என்ற மனம் கொண்டோராக மாறிவிட்டனர்.சமிபத்தில் ஒரு பெண்டாக்டர் தன்னிடம் பிளஸ் டூ மாணவி தனது பள்ளி தோழனுடன் டி அன்சி செய்யவந்ததையும் அதற்க்கு அவர் மறுத்தபோது தன்னை இன்று மாலை பெண்பார்க்க மாப்பிள்ளை விட்டார் வர இருப்பதாகவும் கூறியதை கேட்கும்போது பாலியல் குற்றங்கள் தடுக்க இயலாத குற்றங்களாக விசுவ ரூபம் எடுத்துள்ளது.டெல்லி,பெங்களூரில் தினசரி நடக்கும் கற்பழிப்புகள் போலீசாரின் பார்வைக்கு வராமலே மறைக்கப்படுகின்றன.பாலியல் பாவங்கள் அன்றாட டி,காப்பி குடிப்பது போல் ,வாக்கின்க் போல், கிரிக்கெட் ஆடுவதுபோல் பாவத்திற்கு அப்பாற்ப்பட்ட செயலாக மாறிவிட்டது.
             இருபாலினரும் மனம் ஒருமித்து பார்வைகளை பகிர்ந்து கொண்டாலுமே அதை பாலியல் குற்றமாக இஸ்லாம் கருதுகிறது.ஆனால் இன்றைய சமுதாயமோ இருவரில் ஒருவர் முரண்பட்டாலே அதனால் வரும் விளைவுகளையே பாலியல் குற்றமாக கருதுகிறது.கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? என்பது போல் ஒட்டு மொத்த சமுதாயமும் பாலியல் குற்றம் நடை பெறுவதற்கான காரணங்களை,சூழ்நிலைகளை உருவாக்கிவிட்டு பாலியல் குற்றத்திற்கான தீர்வுகளை தேடினால் அது எங்கிருந்து ,எப்படி கிடைக்கும் ?பாலியல் தீர்வுகளை சொன்னால் அது பெண்ணடிமை,என்ற கோசம் ஓங்கி ஒலிப்பதை காணமுடிகிறது.இஸ்லாம் மிக மென்மையாகவும்,கடினம் காட்ட வேண்டிய இடத்தில் கடினமாகவும் பாலியல் குற்றத்திற்கான தீர்வுகளை சொல்லுகிறது.ஆனால் இன்று அந்த தீர்வுகளை சவூதி அராபியாவைதவிர மற்ற இஸ்லாமிய நாடுகளே கைவிட்டுவிட்டன.அதை ஓரளவு அமல்படுத்தி கொண்டிருக்கும் சவுதிஅரபியாவில் உலக நாடுகளை ஒப்பிடுகையில் பாலியல் குற்றங்கள் மிகக்குறைவாக இருப்பது தெள்ளத் தெளிவானது.ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்,சவுதிஅரபியாவை பின்பற்றினால் பாலியல் குற்றங்களை வெகுவாக குறைத்திடலாம் என்று.நெய்யை வைத்துக் கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்?
                  முகம்மதுநபி[ஸல்]அவர்கள்,மக்களை எந்த அளவுக்கு பண்படுத்தினார்கள் என்பதற்கு ஓரிரு சம்பவங்களை சொல்லுகிறேன்.ஒரு நபிதோழர் நபி[ஸல்]அவர்களிடம் வந்து   தான் விபச்சாரம் செய்துவிட்டதாகவும் அதற்குரிய தண்டனை வழங்குமாறும் வேண்டுகிறார். நபி[ஸல்] அவர்கள் புன்னகைத்தவாறு இருந்தார்கள். அவரோ மீண்டும் தவறைச்சொல்லி தண்டனை கேட்கிறார்.மீண்டும் புன்னகைத்தே இருக்க,மூன்றாவது முறையாக கேட்கப்படவே அந்த நபித் தோழருக்கு தண்டனை நிறை வேற்றப்படுகிறது.இதே போன்றே ஒரு பெண்ணும் தான் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் அதனால் குழந்தை உண்டாகி விட்டதாகவும் தனக்கு தண்டனை வழங்குமாறும் வேண்டினார்.நபி[ஸல்]அவர்கள் குழந்தை பெற்று விட்டு வருமாறு வேண்டுகிறார்.குழந்தை பெற்றுவிட்டு மீண்டும் அந்த பெண் தண்டனை கேட்கிறார். அக்குழந்தைக்கு பாலூட்டும் காலம் முடித்துவிட்டு வருமாறு வேண்டுகிறார்.பாலூட்டும் காலம் முடிந்த பிறகு அதாவது இரண்டாண்டுகள் கழித்து மீண்டும் நபி[ஸல்] அவர்களிடம் தானாகவே வழிய வந்து தண்டனை பெறுகிறார். இவ்வாறாகவே முகம்மதுநபி[ஸல்] அவர்களால் மக்களை பண்படுத்தியது எந்த சட்டங்களோ,எந்த வழிமுறைகளோ,அவற்றினை மக்கள் மத்தியில் படிப்படியாக நடைமுறை படுத்தினால் பாலியல் குற்றங்களுக்கு அதுவே தீர்வாக அமைந்துவிடும்.     

வியாழன், 25 நவம்பர், 2010

ஹஜ்ஜு பெருநாள் கூட்டுகுர்பானி –வரவு -செலவு

2010 - நவம்பர்
ஹஜ்ஜு பெருநாள்  கூட்டுகுர்பானி  –வரவு -செலவு

வரவு
&
ig
செல்வு
&
ig
பங்கு 1 க்கு    rs.1100.வீதம்  112 பங்குகள்
123200
-
17 மாடு களுக்கான  கிரயம் 
108757
-
1 மாட்டுக்கு தனி  நபர்  கொடுத்தது
  6000
-
போக்குவரத்து  செலவு .
1210

தமாம்  கூடுதல்  வரவு

   595
-
3 நபருக்கான  சம்பளம்
900
-
12 ஆட்டு  தோல்  விற்றுவரவு 
 1800
-
17 மாட்டு  உறிப்பு,வெட்டு  கூலி
14320
-
17 மாட்டு  தோல்  விற்றுவரவு
 8925
-
மண்டப வாடகை 
500
-
மொத்தம்
140520
-
மொத்தம்
125692
-
மீதி  இருப்பு
14828
-
 தகுதி வாய்ந்த நபருக்கு தோல் விற்ற பணம் உதவி செய்யப் பட்டு பின்னர் அறிவிக்கப்படும்                                                                             பொருளாளர்,TNTJ.

செவ்வாய், 16 நவம்பர், 2010

காலண்டரைப்பார்த்து நோம்பு வையுங்கள்,

இரண்டாம் பிறைபார்த்து பெருநாள்
           கடந்த பல வருடங்கள் கேரளாவில் பல இடங்களில் பிறை பார்த்து பெருநாள் கொண்டாடப்பட்ட  போது காலண்டருக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்று கொள்ளாத சென்னை தலைமை காஜி இப்போதோ மகராஷ்டிரா வில் பிறை பார்த்தால் காலண்டரில் போட்டபடி பெருநாள் என்று அறிவித்துவிட்டார்.அதே சமயத்தில் காலண்டரில் 18 தேதி என்று இருந்தால் இன்று தமிழகத்தில் எங்கும் பிறை காணப் படவில்லை அதனால் 18 தேதி தான் பெருநாள் என்று அறிவித்திருப்பார்.முன்பு ஒருதடவை நமதூரில் பிறை பார்க்கப் பட்ட சமயத்தில் கூட காலண்டருக்கு மாற்றமாக இருந்ததால் அதை ஏற்றுக் கொள்ளஅப்போது மறுத்துவிட்டார்.அப்போது முதல் நாள் திருநெல்வேலி ,தூத்துக்குடி,குமரி மாவட்டங்களிலும் மறுநாள் மற்ற மாவட்டங்களிலும் பெருநாள் நடந்தது.ஆக சுன்னத் ஜமாத்தினரும் அதை ஏற்றுகொண்டனர்.ஆயின் இனி இவர்கள் பிறை பார்த்து நோம்பு வையுங்கள்,பிறை பார்த்து நோம்பு விடுங்கள் என்ற நபிமொழிக்கு  மாற்றமாக "காலண்டரைப்பார்த்து நோம்பு வையுங்கள்,காலண்டரைப்பார்த்து நோம்பு விடுங்கள் .  காலண்டரைப்பார்த்து பெருநாள் கொண்டாடுங்கள் "    சென்னை தலைமை காஜியின்   கூற்றை நடைமுறை படுத்தலாம் .சுன்னத்  ஜமாஅத் ,மத்ஹப் ஜமாத்தாக நில்லாமல் இப்போது காஜி ஜமாத்தாக மாறிவிட்டது.  

ஞாயிறு, 14 நவம்பர், 2010

பிறை பார்த்து கொண்டாடுவோம் பெருநாளை .

பிறை பார்த்து கொண்டாடுவோம் பெருநாளை .

‘அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1909

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நோன்பு மற்றும் பெருநாட்கள் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அமைந்து வருகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் சமீப காலமாக இலங்கை, சவூதி என்று பிற நாடுகளையோ அல்லது கேரளா, கர்நாடகா என்று பிற மாநிலங்களையோ பிறை விஷயத்தில் பின்பற்றாமல் தமிழக அளவில் பிறை பார்த்து நோன்பு வைத்து வருவதால் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை.

கடந்த நோன்பு மற்றும் நோன்புப் பெருநாளில் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்ததால் அல்லாஹ்வின் அருளால் தமிழகமெங்கும் ஒரே நாளில் நோன்பும், பெருநாளும் அமைந்தது.

தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதந்தோறும் பிறையைப் பார்த்து வருகின்றது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை (07.11.2010) அன்று பிறை தென்படுகிறதா என்று பார்த்த போது, தமிழகமெங்கும் மேகமூட்டமாக இருந்ததால் அன்று பிறை தென்படவில்லை.

‘மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907

மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக முழுமையாக்குங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி நமக்கு முன்னால் உள்ள ஒரே வழி துல்கஅதா மாதத்தை முப்பதாக முழுமைப்படுத்துவது தான்.

இதன் அடிப்படையில், திங்கள்கிழமை துல்கஅதா மாதத்தின் முப்பதாம் நாள் ஆகும். செவ்வாய்கிழமை (09.11.2010) அன்று துல்ஹஜ் பிறை 1 ஆகும். எனவே 17ம் தேதி அரஃபா நோன்பும், 18ஆம் தேதி வியாழக்கிழமையன்று துல்ஹஜ் பிறை 10 அன்று ஹஜ் பெருநாளும் வருகின்றது.

அந்தந்த பகுதிகளில் பிறை பார்த்தே நோன்பு மற்றும் பெருநாட்களை முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்கம் கூறும் அடிப்படையில் நாம் செயல்படுவதால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த ஆண்டின் அரஃபா நோன்பு மற்றும் ஹஜ் பெருநாளை அமைத்துக் கொள்வோமாக!

பொதுவாக முஸ்லிம்களிடம், ஹஜ் பெருநாளுக்காகப் பிறை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும் இருந்து வருகின்றது. இது தவறாகும்.

காரணம், குர்பானி கொடுப்பவர்கள் பிறை தென்பட்டதிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை நகம், முடிகளைக் களையக் கூடாது என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளையாகும். இத்துடன் துல்ஹஜ் பிறை 9ல் நோன்பு நோற்பதும் சுன்னத்தாகும்.

எனவே இந்த வணக்கங்களைச் செய்வதற்காக துல்ஹஜ் பிறை 1 துவங்கியதும் மக்களுக்குப் பிறையை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை யாரும் பிறையை அறிவிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். எனவே தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த அறிவிப்பைச் செய்கின்றது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற ஹதீஸ் அடிப்படையில் 18.11.2010 வியாழக்கிழமை அன்று பெருநாள் கொண்டாடி, நமது குர்பானி கடமைகளை நிறைவேற்றுவோமாக!

ஒவ்வொருவரும் தத்தமது பகுதியில் பிறை பார்க்க வேண்டும். தமது பகுதி அல்லாத வேறு பகுதிகளில் பார்க்கப்படும் பிறை நமது பகுதியில் பார்த்த பிறையாக முடியாது.

”பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1906

பிறையை கண்களால் பார்த்துதான் நோன்பை துவக்க வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் வலியுறுத்துகிறது உலகில் எங்காவது பார்த்த பிறையை நாம் ஏற்றுக் கொள்ளலாமா? என்பதற்கும் இந்த ஹதீஸில் விடையிருக்கிறது.

உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்று பொருள் கொள்ள இந்த ஹதீஸின் பிற்பகுதியே தடையாக நிற்கிறது.

உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்ற வாசகமே அது.

உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.

எனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பகுதியினரும் தத்ததமது பகுதியாக எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உரிமையை நபியவர்கள் மக்களிடம் கொடுத்துள்ளார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

”நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

பகுதி எது என்பது குறித்து பலவிதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. முடிவில் மொழியாலும் தனி நிர்வாகத்தாலும் ஒருங்கிணைக்க்கப்பட்டுள்ள தமிழகம் என்பது நமது பகுதி என்ற முடிவுக்கு நாம் வந்தோம். அது போல் சுன்னத் ஜமாஅத்தினரும் இந்த அடிப்படையில் தான் முடிவு செய்து வந்தனர்.

கடந்த பல வருடங்களில் வட மாநிலங்களில் பிறை பார்க்கப்பட்டு அவர்கள் நொன்பு நோற்ற போது தமிழகத்தில் உள்ள சுன்னத் ஜமாஅத்தினரும் நாமும் அதை ஏற்காமல் தமிழகத்தில் பிறை காணப்பட்டதன் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்து வந்துள்ளோம்.

டெல்லிக்கு ஒரு பெருநாள் சென்னைக்கு ஒரு பெரு நாள் என பல வருடங்களாக இருந்து வந்ததை நாம் மறந்து விட முடியாது.

அந்த அடிப்படையில் இந்த மாதம் தமிழகம் முழுவதும் நாம் சல்லடை போட்டு விசாரித்ததில் எங்கும் பிறை பார்க்கப்படவில்லை என்பது உறுதியானது. பிறை காணப்படாத போது இதற்கு முன் நாம் எவ்வாறு முடிவு எடுத்து வந்தோமோ அவ்வாறு முடிவு எடுப்பது தான் முரண்பாடு இல்லாத கொள்கை முடிவாக இருக்க முடியும்.

இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் எங்கும் பிறை காணப்படாத நிலையில் வட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டதைப் பின்பற்றி முடிவு செய்தால் எதிர் காலத்தில் ஆண்டு தோறும் மீண்டும் குழப்பங்கள் தொடர் கதையாகி விடும். நபிவழியை மீறியதாகவும் ஆகி விடும் என்று தெரிவித்துக் கொள்கிறது 

சனி, 13 நவம்பர், 2010

Muslim population ‘rising 10 times faster than rest of society’ according to official research collated for The Times. Muslim World: how Muslims are taking over the world via population growth. for every 1 non-Muslim child born there are 8 Muslim children born in the world and that number is conservative. Think about that. The Muslims don’t have to do anything, they will rule the world by virtue of their numbers. 2025 world Muslim population (PROJECTED) will be 30%. Muslim population has steadily grown from 13% in 1800 to 16% in 1850 to 20% in 1900 to 25% in 1947 and anywhere between 30 to 33% today taking into account the geographical area of pre-partitioned India. நீங்கள் கொடுத்துள்ள இந்த ஆதாரத்தை நான் தேடிப்பார்த்து கிடைக்கவில்லை.தாங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? 8 முஸ்லிம் குழந்தைகளுக்கு ஒரு முஸ்லிம் அல்லாத குழந்தை பிறக்கிறது என்பது கின்னசில் இடம் பெறவேண்டிய பொய்
.
  1. >>>இந்த உலகத்தில் மதத்தின் பேரில் மக்களை கொன்ற முதல் மனிதர் நபிகள் நாயகம். வேறு யாரவது மதத்தின் பேரில் மக்களை இப்படி கொன்று இருந்தால் நீங்கள் சொல்லலாம். மனிதனை கொன்று மதத்தை சொன்னவரை வேறு எந்த மதிலும் பார்க்க முடியாது.<<< இப்படி உளறி கொண்டிருப்பதர்க்குதான் ஆதாரம் கேட்டால் அதே உளறல் ஆதார மாகிவிடுமா?நபிகள் நாயகம் மதத்திற்காக யாரையும்  கொல்லவே இல்லை.
  2. அவ்வாறு எனின் ,அவர்களுடன் கிறித்தவர்கள்,யூதர்கள் எங்ஙனம் வாழ்ந்திருக்க முடியும் ?ஒரு இறை நிராகரிப்பாளர் பள்ளிவாசலில் வேண்டுமென்றே சிறுநீர் கழித்து விட்டார்.உடன் அவரை தோழர்கள் அவரைத்தாக்கிவிட முனைந்தனர்.ஆனால் நபி[ஸல்] அதை தடுத்து அவரை பள்ளிவாசலில் கட்டிவைத்து விடுகிறார். மூன்றாவது நாள் அவர் விடுவிக்கப்படுகிறார்.மூன்று நாள் அங்கு நடந்தவைகளை கவனித்த அவர் குளித்து விட்டு வந்து முஸ்லிமாகி விடுகிறார்.நான் இது வரை உங்களைப்போல ஒரு மோசமான மனிதர் இருக்க முடியாது என்று எண்ணி இருந்தேன்,ஆனால் இப்போது சொல்லுகிறேன் உங்களைப்போல் ஒரு அன்பான மனிதரை  பார்க்க முடியாது என்று கூறி இஸ்லாத்தில் இணைத்தார்.இஸ்லாத்திற்கு எதிராக பல கொடுமைகள் இழைக்கப்பட்டபோது இஸ்லாத்தில் இணைந்ததற்காக முதலில் யாசர் என்ற நபிதோழர் கொல்லபட்டார். யூதர்கள் இயேசுவை நிலத்தகராருக்காக கொன்றார்களா?இலையெனில் குடும்பத்தகறாரா ?                                                                                                                                                                                                
    வரலாற்று சூழ்நிலை மட்டும் தான் என்று சொன்னார்களா?பல பொருள் தரக்கூடிய அரபு சொற்கள் இருப்பதால் அரபு கற்று இருப்பது நல்லது.பீ.ஜே சொல்லும் விளக்கம் தவறு என்று வாதிடுவீர்களானால் அப்போது அரபு மொழி தெரிந்து இருப்பது அவசியம் ,அரபு மொழி தெரியாமல் உங்களால் தீர்க்கமாக கருத்து தெரிவிக்க முடியாது.
    லக்கும் தீனுக்கும் "என்பதற்கு அர்த்தம் தெரிந்துதான் கேட்கிறார் ,விளக்கம் தெரியாமல் மத சகிப்புத்தன்மை என்றெல்லாம் எப்படி பேச முடிகிறது.? .மத சகிப்பு முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டும்  என்பதற்க் காகத்தான் அந்த வசனங்களை தினசரி வித்ரு தொழுகையில் ஓத வேண்டும் என நபி[ஸல்]அவர்கள் கூறியுள்ளார்கள்.அதனால் தான் அடுத்த கேள்விக்கு சென்றேன் இதில் மழுப்பல் ஒன்றுமில்லை.
    எங்கள் நேசர் [அவுலியா]பீ.ஜே அவர்கள் இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்லவில்லை.இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை இறைவனும் அவனின் தூதரும் சொல்லியுள்ளதை பறைசாற்றியுள்ளார்.ஆனால் அந்த உருவம் எப்படி இருக்கும் என்று குர்ஆனிலும் ,நபிமொழிகளிலும் வரைந்து காட்டப்படவில்லை.விளக்கப்படவுமில்லை. உலக வாழ்க்கைக்கு அதுதேவையுமில்லை.என்பதாலே.நாங்கள் வணங்கும் இறைவன் ,எங்கள் இறைவனின் உருவம் எங்களுக்கு தேவை இல்லை என்னும்போது டெண்மார்க்கனுக்கு என்ன வந்து விட்டது.உங்களுக்கு தேவை இல்லாத ஒன்றை உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் பெயரில் வெளியிடுவதிலோ நீங்கள் அனுமதிப்பீர்களா?
    முஹம்மது நபி[ஸல்] அவர்கள் கொண்டு வந்த வாழ்வியல் பற்றி விமர்சிக்க வழி இல்லாததால் .சாதாரண  மர மண்டைகள் கூட கேட்கக்கூடிய கடவுள் கருப்பா சிவப்பா அடிப்படையிலான கேள்விகளை பெரிய அறிவு ஜீவியாக ஆராய்ச்சியாளராக காட்டிக்கொண்டு கம்யுனிசத்தை முஸ்லிம்களிடையே திணித்திடலாம் என அவருடைய கற்பனை கோட்டையை நிறுவிவிட இஸ்லாத்தின் வாயிலாக வருகிறார்.இந்த கற்பனைகோட்டை அந்த மறுமை நாள் வரை இருக்காது இன்சால்லாஹ் வரும் காலங்களில் இவைகள் பற்றி ஆய்வு செய்ய முனையும் இஸ்லாமிய அறிஞர் களால் தூள் தூளாக்கப்படும்

செவ்வாய், 9 நவம்பர், 2010


  1. anonymaous நன்றிகள்,ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.சாமியாரின் நல்லபாம்பு உடலெல்லாம் அடிபட்டு ரத்தம் வடிய சாமியாரிடம் வருகிறது .சாமியார் பாம்பிடம் கேட்கிறார்,”என்ன இப்படி ரத்தகோரையுடன்”?என்று. பாம்பு சொல்லுகிறது,தாங்கள் தானே யாரையும் கொட்டக் கூடாது என்று சொன்னீர்கள்.அதனால் அடி வாங்கி கொண்டு தப்பி வந்துவிட்டேன் என்றதாம். உடன் சாமியார் சொன்னார் ,கொட்டவேண்டாம் என்றுதான் சொன்னேன்.சீறவும் கூடாது என்று சொல்லவில்லையே ,அடிபட்டு சாகவும் சொல்லவில்லையே ,என்றாராம் .
    நல்ல அறிவும் ஆய்வும் உள்ளவர்களாக இருந்துகொண்டு தில்லமுல்லு ஸ்டைலில் கருத்து தெரிவிப்பது நியாயமல்ல.அனானிமஸ் ,வல்லோனின் அடிமைக்காகவும்.சங்கருக்காகவும் இந்த குர்ஆன் வசனங்களையும் ,இரு வேறு கருத்துடைய முஸ்லிம் ஹதீத்களையும் எடுத்து வைத்துள்ளீர்கள்.இஸ்லாத்தை விமர்சித்தே தீரவேண்டும் என்று தீர்க்கமான சிந்தனையை கைவிட்டு நடுநிலையோடு ஆராயுங்கள் குர்ஆனுக்கு விரிவுரையான தப்சீர் இப்னு கசிர் பாருங்கள்.’நன்கு கூர்ந்து கவனியுங்கள் , GOD no where என்பது GOD now here என்று தெளிவாக தெரியும்
    >>>ஆதாரம் தந்தால் என்ன செய்யப்போகிறீர்கள்? இஸ்லாத்தை விட்டு விலகிவிடுவீர்களா? <<< வல்லோனின் அடிமையே | இல்லாத ஆதாரத்தை எப்படி தர முடியும்? இஸ்லாத்தை நான் அரை வேக்காட்டுத்தனமாக உங்களைப் போன்று புரிந்து இருந்தால் அல்லவா அதை விட்டு விலக வேண்டும்?
    சங்கர் சார் ,ரஷ்யா ஆப்கானை கைப்பற்றி அட்டூழியம் பண்ணியது மிகப்பெரும் தீவிர வாதம் .இஸ்லாம் போருக்கான உத்தரவுகளையும் தீவிர வாதத்திற்கான ஆதாரம் காட்டுவது மனசாட்சி இல்லாமல் பேசுவதாகத்தான் காட்டும்
  2. பரயோசை ,ஆதாரம் கேட்பது நீங்கள் எந்த ஹதீதை எப்படி புரிந்து உள்ளீர்கள் என்பதை தெரிந்து கொண்டு பதில் சொல்லுவதற்குத்தான்.உங்கள் மன இச்சைப்படி வசனங்களையும் ஹதீத்களையும் புரிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் பண்ணுவதால் தான் . ..இங்கே தில்லு முல்லை பண்ணியவரை காணவில்லை.ஏன் ?ஆதாரங்கள் அடிபட்டுப் போனதாலே .இஸ்லாத்தை பற்றி விளக்கம் அளிக்க எங்களுக்குத்தான் உரிமை உண்டு.நீங்கள் நினைத்தவாறே இஸ்லாம் இருக்க வேண்டும் என்று நினைப்பது எப்படி சரியாகும் .நாங்கள் ஒன்று ஆதாரத்தை புதியதாக கொண்டு வரவில்லை. பழைய நூல்களில் இருந்தே விளக்கங்களை எடுத்து வைத்துள்ளோம்.இன்னும் இஸ்லாத்தைப்பற்றி நீங்கள் ஆழமமாக விவாதிக்க வேண்டுமானால் அரபியை கற்று பேசுவதே சிறந்தது..
  3. //.இஸ்லாம் போருக்கான உத்தரவுகளையும் தீவிர வாதத்திற்கான ஆதாரம் காட்டுவது மனசாட்சி இல்லாமல் பேசுவதாகத்தான் காட்டும்.//
    நண்பர் இப்ராஹிம்
    நான் அப்படி கேள்விகள் இருப்பதாக குறிப்பிட்டேனே தவிர அது என் கருத்து அல்ல. தீவிரவாதம் என்பது பற்றி பேசுவது அவசியமில்லை..அப்படி குறிப்பிட்டதாக நீங்கள் நினைத்தால் வருந்துகிறேன். மன்னிக்கவும்.
    இங்கு தோழர் பிஜே விடம் விவாதிக்க விருப்பமில்லை என்றும் இணையத்தில் விவாதிக்க தயாராக இருப்பதாக கூறினார். இப்போது நீங்கள் விவாதம் செய்கிறீர்கள் நன்றி. சில கேள்விகள்
    1. ஹதிதுகள் முழுமையாக‌ தொகுக்கப்பட்ட்து எந்த கலிபாகாலத்தில்?
    2.ஹதிதுகளை ஏற்று கொள்வது பற்றி அல்லா குரானில் அனுமதி அளித்து உள்ளாரா?
    3 இதைபற்றி தோழர் எழுதிய ஹதிதுகளும் அதன் பிரச்சினைகளும் என்ற பதிவிற்கு ஏதாவது மறுப்பு கட்டுரை வெளியிடப்ப் பட்டு உள்ளதா?
    4. முதலில் ஹதிதுகள் தொகுக்கப் பட்டது,சரி பர்ர்க்கப் பட்டது மற்றும் ஏன் வெவேறு பிரிவு மக்கள் வெவ்வேறு ஹதிதுகளை பயன் படுத்துகிறார்கள்?
    .

சனி, 6 நவம்பர், 2010

இணைய தளத்தில் விவாததிற்கு அழைக்கும் செங்கொடி

  1. இப்ராஹிம்,
    நீங்கள் இந்தப்பகுதியில் வைத்த அனைத்து பின்னூட்டங்களையும் தடுத்து வைத்திருக்கிறேன். இந்த கேள்வி பதில் பகுதியை தாண்டி நீங்கள் விவாதிக்க விரும்புவது தெரிகிறது. உங்களுக்கு ஆமோதிப்பு இருக்கும்பட்சத்தில் அதை தெரிவியுங்கள் விவாதத்திற்கென்று தனிப்பகுதியை உருவாக்கி அதில் விவாதிக்கலாம். இந்தப்பகுதியில் நான் எழுதியதை வெட்டி ஒட்டாமல் உங்கள் கேள்வியை மட்டும் ஒவ்வொன்றாய் கேளுங்கள். (ஒன்றுக்கு பதில் கூறிய பின் அடுத்தது) புரிதலுடன் கூடிய ஒத்துழைப்பை உங்களிடம் எதிர்நோக்குகிறேன்.
  2. செங்கொடியின் கூற்றுக்கு நான் பச்சை கொடி காட்டுகிறேன்.விவாதிக்க வாருங்கள்.
  3. நன்றி இப்ராஹிம்,
    என்ன தலைப்பில் விவதிக்க விரும்புகிறீர்கள். விவாதத்தை நடத்துவது குறித்து நீங்கள் கூற விரும்பும் கருத்துக்கள் விதிமுறைகள் போன்றவைகுறித்து விளக்கமாக ஒரு பின்னூட்டமிடுங்கள். அதன் பிறகு விவாதத்திற்கென்று தனிப்பகுதி தொடங்கி அதில் நாம் தொடரலாம்
    செங்கொடி தடுத்து வைத்து உள்ளவை 
    தனிஒரு நாட்டிலேயே பொதுவுடமையை அமல்படுத்த முடியாது எனும்போது தனியான மனிதர்களை அமல்படுத்தச் சொல்கிறீர்கள், வேடிக்கை தான். முதலில் கம்யூனிசம் என்றால் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்<<<
    "செங்கொடியோனே" ரசித்த நீங்கள் செங்கோடியே என்பதை கண்டு கொள்ளாமைக்கு  காரணம் உண்மை கசப்பதால் அன்றோ . 
    தனியான  மனிதர்களால் அமல் படுத்த முடியாத;அதாவது தமிழகத்தில் உங்கள் இயக்கத்தினர் ஆயிரம் பேர் இருப்பார்களா?இவர்களிடையே அமல் படுத்த முடியாத இசத்தை ஒரு நாட்டில் எப்படி அமல் படுத்த முடியும்? உலகம் முழுவதும் எப்படி அமல் படுத்துவது?ஆயின் கம்யூனிசம் ஒரு கற்பனை கோட்டை என்பது தெளிவாகிறது.உங்கள் கொள்கை வந்து நானூறு ஆண்டுகள் இருக்குமா ?இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஆயிரம்பேரை வைத்து முன்னுதாரணத்தை காட்டுங்கள் என்றால் உயரமாக இருப்பவர்களின் அங்கங்களை வெட்டி சமமாக்கிடலாம் என்று சொல்வீர்கள் போல் உள்ளது என்று கூறியுள்ளீர்கள் .ஆக கம்யுனிசம் நடைமுறை சாத்தியமற்றது என்பதை ஒப்பு கொண்டீர்கள்.நீங்கள் இவ்வாறான கற்பனைகோட்டை மீது நம்பிக்கை வைக்கும்போது நாங்கள் மறுமை நாள் மீது வைக்கும் நம்பிக்கை பற்றி ஏன் கேள்விகள் வைக்கவேண்டும்?  
     .ஏழ்மையைப் போக்க சக்காத்தை அருளியிருக்கிறது என்று அனைவரும் ஆரோகணம் செய்கிறார்கள். சக்காத் எப்படி ஏழ்மையைப் போக்கும் என்றால் யாரிடமும் பதிலிருக்காது. சக்காத் என்பது பணக்காரர்களிடமிருந்து பெறும் 2.5 விழுக்காடு வரி. இதைக்கொண்டு எப்படி ஏழ்மையைப் போக்க முடியும்?<<< சக்காத் ஏழ்மையை போக்கும் .ஓரளவு சவுதியில் போக்கியுள்ளது.இன்னும் சிலதனியார் நிறுவனகள் ,தங்களின் சக்காத் பணமாக வருகின்ற அயிந்து லட்சம்,பத்து லட்சங்கள் வரை தாங்கள் உறவினர்களில் ஏழ்மையானவர்களுக்கு கொடுத்து அவர்கள் அதன் மூலம் தொழில் புரிந்து ஏழ்மை அகண்டு உள்ளதை கண்கூடாக காணமுடியும் .இதைபோன்று ஒவ்வொருஆண்டும் செய்துவருகிறார்கள்.ஒரு நாடு இல்லாமல் ஒரு அமைப்பு இல்லாமல் தனி நபர்களாக அவர்களால் இயன்ற அளவில் இஸ்லாமிய அடிப்படையில் ஏழ்மை ஒழிப்பை நடத்திக் கொண்டிருக்கிரார்கள்.
    >>>மார்க்சிய தீர்வுக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் சோசலிசம் அமலில் இருந்த காலத்தைய ரஷ்ய, சீன சமூகங்களைப் பாருங்கள்<&lt;<முன்னுதாரம் கேட்டால் கடந்தகால ரஷ்யாவை பாருங்கள் ,அங்கே தோல்வி அடைந்தததை எப்படி உதாரணம் காட்டமுடியும் .அதவும் ஏழ்மை நிறைந்த அஜர்பைஜான்,கஜக்கிஸ்தான்,போன்ற பகுதிகளை மட்டும் பிரிந்து போகவிட்டு பெற்றோலியம் வளம் உள்ள செசன்யா வை பிரியவிடாமல் அடக்கு முறையில்  ஆளும் இன்றைய ரஷ்யாவை உதாரணம் காட்ட நீங்கள் வெட்கபடுவது புரிகிறது. கம்யுனிச பாதையே விழி பிதுங்கி விட்டது சீனாவில் துன்பம்,அடக்குமுறை இல்லை என்பதை ஆதாரப்ப் பூர்வமாக நிருபியுங்கள் .மேலும் தென்அமெரிக்காவில் ஒரு குட்டி நாடு சுரங்கத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி யுள்ளது.ஆனால் வல்லரசான சீனாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சுரங்க விபத்தில் தொழிலாளிகள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.சீனாவில் ஆண்டியும் அரசனும் ஒரே மாதிரியான குடில்தான் வைத்திருக்கிறார்களா?இன்னும் அந்த நாட்டில் நேற்றைய செய்திகள் கூட அரசு ஆக்கிரமிப்பை எதிர்த்து மக்கள் போராடுவதை தெரிவிக்கிறது.
    ;உலகம் ஏற்றத்தாழ்வாக இருந்தால்தான் குப்பை அள்ள ஆள்கிடைக்கும் என்பதெல்லாம் மோசடியான கருத்து. நிர்வாகியாகப் பணி செய்வது மதிப்புவாய்ந்தது, குப்பை அள்ளுவது கேவலமானது எனும் மறைமுக தீண்டாமையை முகமூடி போட்டு உலவவிடும் கருத்து. தன்மையில் வேறுபட்டதாக இருந்தாலும் இரண்டும் வேலைதான் இரண்டிலும் கேவலமில்லை எனும் எண்ணம் வந்தால் எல்லா வேலையும் ஒன்றுதான்<&lt;<
    எல்லா வேலைகளும் ஒன்றுதான் என்றால் எல்லோருக்கும் ஊதியம் ஒரே அளவில்தானா?குப்பை அள்ளுவது கேவலமானது ,நிர்வாக பனி செய்வது உயர்வானது என்றில்லை  இரண்டும் ஒன்றுதான் என்றால் நடைமுறை படுத்திகாட்டுங்கள். அதாவது உயர் அதிகாரி அவர் எக்ஸ் உயர் ஜாதிக்காரராக அல்லது எக்ஸ் முஸ்லிமாக இருக்க வேண்டும்  அவரது மகளை குப்பை அள்ளும, ம.க.இ.க தொழிலாளி அதாவது எக்ஸ் சக்கிளியராக இருக்கவேண்டும் அவருக்கோ அவரது மகனுக்கோ திருமணம் செய்து வைத்து உங்களது பொது உடைமைக்கு உயிரோட்டம் கொடுத்து காட்டுங்கள்{.எனக்கு தெரிந்த லெனினிஸ்ட் தலைவர்[நகர அளவில்]தன்னுடைய மகளுக்கு தன ஜாதியிலும் கிளை ஜாதியை பார்த்து மத ,மற்றும் ஜாதி வழக்கப்படிதான் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்}. .இஸ்லாத்தில் இதுபோன்ற  விசயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.இன்னும் டி.ஏன்.டி.ஜே கிளைகள் தங்களது இடங்களில் குற்றவியல் சட்டங்கள் தவிர மற்ற கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன.மேலும் வட்டியில்லா வங்கி கள் சிறிய அளவில் நடத்திவருகிறோம்.எங்களது கிராமத்திலேயே இருபது லட்சத்திற்கு அதிகமாக வட்டி  இல்லாத கடன் கொடுத்து வருகிறோம்.
      .>>>வட்டியை தடுத்திருக்கிறது, அளவு நிறுவைகளில் மோசடி செய்யாதீர்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது என்றெல்லாம். இவைகளெல்லாம் சின்னச்சின்ன சீர்திருத்தங்கள், ஒட்டுமொத்த அளவில் இஸ்லாம் <<<இன்சா அல்லாஹ் பெரிய சீர்திருத்தங்களை சொல்லுவோம்}