திங்கள், 31 ஜனவரி, 2011

19 கோடி பாக்கர்


இதஜவின் தேர்தல் முடிவில் 100 சதவீதம் சமுதாய நலன் இருக்கும் இன்ஷா அல்லாஹ்!


கருணாநிதி இடஒதுக்கீட்டை 3.5% லிருந்து 5% ஆக உயர்த்துவதாக நாடகமாடி அதைவைத்து முஸ்லிம்களின் வாக்கை கவர நினைக்கின்றார். அப்படியே மாற்றி அமைத்தாலும் அதை நாம் வரவேற்க வேண்டுமே தவிர மீண்டும் கருணாநிதியை நம் சகோதரனை போல நினைத்து முஸ்லிம் சமுதாயம் வாக்களிக்க வேண்டுமா? 
பாவம் கருணாநிதிக்கு தோல்வி பயம்வந்துவிட்டது போல அதான் முஸ்லிகளை தக்கவைத்து கொள்ள இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகின்றார். அப்படி மாற்றி அமைத்தால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வரும் தேர்தலில் கருணாநிதிக்கு ஆதரவளிக்குமா?
முத்துப்பேட்டை முகைதீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புடன் சகோதரர் முத்துப்பேட்டை முகைதீன் அவர்களுக்கு அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.
சகோதரர் அவர்களே! நம் சமுதாயத்திற்கு நன்மையை செய்யத்தான் நாம் அமைப்புகளை உருவாக்கி செயல்படுகிறோமே தவிர, நாம் சுய விருப்பு வெறுப்புகளுக்காக அல்ல.
முதல்வர் நேற்று (30.01.2011) அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றி இடஓதுக்கீட்டின் அளவை மாற்றினால் நிச்சயம் அவருக்கு வாக்களிக்க வேண்டியது நம் கடமைதானே. அதுதானே நியாயமும் கூட. 
எல்லா அரசியல்கட்சியுமே தான், தான் வெற்றிப் பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதே நோக்கம். தேர்தல் தேதி வெளியான பிறகு இன்ஷா அல்லாஹ் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சமுதாயத்தின் நலன் நாடி நல்ல முடிவை அறிவிக்கும். அதில் நிச்சயமாக சமுதாயம் நலன்தான் 100 சதவீதமும் இருக்கும்.
வஸ்ஸலாம்.
தேவனாதனை  இடைத்தரகராக்கி முனிருடன் பன்னிர்செல்வத்தை சந்தித்து தேர்தல் கமிசனாக 19  கோடியை பெற்றுக்கொண்டு பி,ஜே வை ஏமாற்ற வின் டிவியை ஜெயலலிதா 19 கோடிக்கு வாங்கி விட்டார் என்று நடகமாடியவ்ர் பாக்கர் .பிறகு வின் டிவியில் பங்கு வாங்கிய தனது நெருங்கிய சகாக்கள் தவிர மற்ற சிறு முதலீட்டாளர்களுக்கு இரண்டு மடங்கு லாபம் என்று கூறி அவர்களின் பங்குளை திருப்பி கொடுத்து தன்னை வின் டிவி யின் டைரக்டராக பதிவு செய்து கொண்டார்.மீண்டும் பி.ஜே.வையும் டி.ஏன்.டி.ஜே வை ஏமாற்ற ஜெயலலிதா WINடிவியும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்,பணமும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று பொய்யைக் கூறி நாடகத்தின் பிற்பகுதியையும் அரேங்கேற்றி  விட்டார், இனி இவரையும் இவரது ட்ரஸ்ட் ஐயும் யாரும் தேர்தல் ஆதரவுக்காக ஏறெடுத்து கூட பார்க்கமாட்டார்கள். சமுதாயம் நலனே பாக்கர் நலன் என்று சொல்லி சமாளிக்க வேண்டியது தான்  

செவ்வாய், 25 ஜனவரி, 2011

எனது பதிலும் செங்கொடியின் புலம்பலும் அதற்க்கு பதிலும்



  1. நண்பர் இப்ராஹிம்,

    அடேயப்பா… ஏன் இவ்வளவு கோபம்? கதவிடுக்கில் மாட்டிக்கொண்ட எலி கத்துவதைப்போல் கீச்சிட்டு இருக்கிறீர்கள். தகுதி இருக்கிறதா? வெட்கமாக இல்லையா? சினிமா எடுத்தீர்களா? சீரியல் எடுத்தீர்களா? ஓட்டல் கட்டினீர்களா? உங்களின் இந்த பதிவை நிதானமாக இருக்கும் போது மீண்டும் ஒருமுறை நீங்களே படித்துப்பாருங்கள்.

    ஐயா இப்ராஹிம், நான் தெளிவாக இப்படி கூறியிருக்கிறேன், \\ஹதீஸ்களிலிருந்தே ஹதீஸ்களுக்கு சான்று தருவதை விடுத்து உருப்படியாய் எதாவது இருந்தால் பேசுங்கள்// என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை படித்து புரிந்துகொள்ள ஆற்றலில்லாத நிலையில் கோபம் மட்டும் எதற்கு? நீங்கள் விதந்து போற்றும் அறிவிப்பாளர் வரிசை கொண்ட ஹதீஸ்கள் மட்டுமே உலகில் இருந்து வேறு ஹதீஸ்களோ, எதிர்கருத்துகளோ இல்லாதிருக்கும் நிலையிருந்தால் அறிவிப்பாளர் வரிசை மட்டுமே போதுமானதாக இருந்திருக்கக் கூடும். ஆனால் நிலை அப்படியில்லையே. தபரி உள்ளிட்டவர்கள் எழுதிய முகம்மதின் வாழ்க்கை வரலாறுகளோடு ஹதீஸ்கள் முரண்படுகின்றன. முஸ்லீம்களின் ஒவ்வொரு பிரிவினரும் தமக்கென ஹதீஸ்களைக் கொண்டிருந்து அதுதான் உண்மையானது என நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு பிரிவினரின் நம்பகத்தன்மையற்ற அறிவிப்பாளர்கள் வரிசையை மட்டுமே ஆதாரமாக கொள்வது போதுமானதல்ல. எளிமையான இந்த விசயம் உங்களுக்கு புரியவில்லை என்றால், அதன் பொருள் அந்த அளவுக்கு நீங்கள் மதக்குட்டையில் மூழ்கிக் கிடக்கிறீர்கள் என்பது பொருள். சரி, ஹதீஸ்கள் அப்படியே வரலாற்று உண்மைகள் என்பதற்கு நீங்கள் வைக்கும் ஆதாரமான அறிவிப்பாளர் வரிசையை, நீங்களே தூக்கி வீசுகிறீர்கள். பால்குடி வசனம் குறித்த ஹதீஸ், முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டது குறித்த ஹதீஸ்களில் நீங்கள் விதந்து போற்றும் ஆதாரங்களை நீங்களே ஏற்க மறுக்கிறீர்கள். குரானுக்கு மாற்றமாக இருக்கிறது என்பதால் நீங்கள் ஏற்க மறுக்கும் ஆதாரங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறீர்கள். முகம்மதின் காலத்திலேயே ஹதிஸ்களை எழுதியும் வைத்தார்கள் எனக் கூறும் நீங்கள் அதை எங்காவது பாதுகாத்து வைத்திருக்கிறார்களா எனக் கூறலாமே. உருப்படியாக செய்யவேண்டியவைகளை விடுத்து வெற்றுக் கூச்சல்களால் பலன் என்ன? உங்கள் ஜல்லியடிகளை அப்படியே வரலாற்று என ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் ஒன்றும் முஸ்லீம்கள் அல்லவே.

    உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகிறீர்கள். ஜோதிபாசு உதாரணத்தில் புளிபோட்டு விளக்குவதற்கு இன்னும் ஏதாவது மிச்சமிருக்கிறதா என்ன? மூன்றாம்வரிடம் கேட்டதைத்தான் நான்கம்வர் ஐந்தாம்வரிடம் கூறினார் என்பதை உறுதிப்படுத்த ஒன்றுமில்லாதபோது, அவரிடமிருந்து இவர் கேட்டார், இவரிடமிருந்து இன்னொருவர் கேட்டார் என அட்டவணையிடுவதில் என்ன முக்கியத்துவம் இருந்துவிடமுடியும்? அல் ஜசீரா தொலைக்காட்சி ஈராக்கில் இன்ன பெயருடைய எங்கள் செய்தியாளர் இவரிடம் சொன்னார், இவர் அவரிடம் சொன்னார் அவர் தொலைக்காட்சி நிலையத்திற்கு தொலைபேசியில் சொன்னர் என்று ஒரு செய்தியை ஒலிபரப்பினால் அதை நீங்கள் எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வீர்கள். ஒரு ஆதாரம் மட்டும் இருக்கிறதா? பல ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதல்ல விவகாரம். டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில் ஒருதடவை மட்டும் சொன்னார்களா? பத்து நாளுக்கு மறு ஒளிபரப்பு செய்தார்களா என்பது பொருட்டே அல்ல. ஐயம் என வந்துவிட்ட பிறகு உறுதிப்படுத்துவதற்கு என்ன இருக்கிறது என்பதே விவகாரம். அரபுகளுக்கு வெளியே உரசிப்பார்க்க என்ன ஆதாரம் இருக்கிறது என்கிறீர்கள். தோராயமாக அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் சோழர்கள் ஆட்சி பொற்கால ஆட்சியென்றும், கள‌ப்பிரர்கள் காலம் இருண்ட காலமென்றும் அண்மைக்கால வரலாறு கூறிக்கொண்டிருந்தது. ஆனால் சோழர்கள் ஆட்சியில் பார்ப்பன ஆதிக்கம் மீண்டது என்றும் களப்பிரர்களே அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி நடத்தினார்கள் என்றும் சோழர்களின் வரிவிதிப்பு, பிரம்மத்தோயங்கள் குறித்த கல்வெட்டுகள் வெளிவந்து உரைகல்லாகி நிற்கின்றன. இதில் முக்கியமான விசயமே வரலாறு, நீங்கள் கூறும் ஹதீஸ்களைப் போல அப்படியே நூறு விழுக்காடு வரலாறு என யாரும் கூறிக்கொள்வதில்லை. குரானுக்கு எதிராக இருக்கிறது என்றால், எதை ஆதாரம் என்கிறோமோ அதையே தூக்கி வீசுவோம் என்பதுபோல‌ யாரும் நடந்துகொள்வதில்லை.

    இதற்கு மேலும் ஹதீஸ்கதைகளைப் பற்றி உங்களிடம் பேசுவது வீண் எனக் கருதுகிறேன்.

    ஒரு நூலைக் குறிப்பிட்டால் அதை முழுவதும் படித்து விமர்சனங்களை வைக்க வேண்டும். நீங்கள் எழுப்பியுள்ள இரண்டு ஐயங்களுக்குமே யானையை தடவிப்பார்த்த உருவகம் பொருந்தும். நல்ல நூல்களை இப்போதுதானே படிக்கத்தொடங்கியுள்ளீர்கள், தொடக்கத்தில் கசப்பாகத்தான் இருக்கும், தொடர்ந்து படியுங்கள் பேசுவோம்.

    இந்த உலகில் நடப்பில் இருக்கும் பிரச்சனைகளுக்கு இஸ்லாமா? கம்யூனிசமா? எது தீர்வு எனத்தொடங்கிய விவாதத்தில் பாலியல் குற்றங்கள் முதலாவதாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் இஸ்லாம் கூறும் தீர்வுகளான சட்டத்தண்டனைகள் கவைக்குதவாதவை என்பதை தெளிவாகவே நிருவியுள்ளேன். கம்யூனிசத்தின் தீர்வான ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் நீக்குவது என்பதில் அதை செயல்பாட்டுக்கு கொண்டுவராதவரை பாலியல் குற்றங்களை நீக்க முடியாது என்பதையும் தெளிவாக நிருவிவிட்டேன். இவைகளை சுற்றிவளைத்து ஒப்புக்கொள்ளும் நீங்கள், அதை வெளிப்படையாக அறிவிக்க தயங்குகிறீர்கள். காரணம், உங்கள் மதம். அதை மறைப்பதற்காக பண்ணை வாழ்க்கை என்றும், விஞ்ஞானத்தை மறுப்பது போல போக்குக் காட்டுவதும், கட்டை வண்டி காலத்திற்கு திரும்பச் சொல்கிறார் என்றும், சோசலிசம் தோற்றுவிட்டது என்றும், ஸ்டாலின் கொலைகள் செய்தார் என்றும், இரும்புத்திரை ஆட்சி என்றும் ஏதேதோ எழுதி தப்பித்து ஓடப் பார்க்கிறீர்கள். நடப்பு விவாதத்தில் இஸ்லாமியத்தீர்வு ஒன்றுமில்லை என்றாகிவிட்டபிறகு கம்யூனிசத்தீர்வான ஆணாதிக்கத்தை, தனியுடமையை நீக்காமல் பாலியல் குற்றங்களை ஒழித்துவிட முடியுமா? என்பதிலோ ஆணாதிக்கம் தனியுடமையையை நீக்கிய பிறகும் பாலியல் குற்றங்கள் இருக்குமா என்பதிலோ உங்களுக்கு எவ்வளவு கேள்விகள் இருந்தாலும் என்னென்ன ஐயங்கள் இருந்தாலும் பதில் கூற, தீர்த்துவைக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஏனென்றால் விவாதம் அது குறித்துத்தான். அதிலும் இதுவரை உங்களால் பதில் கூறாமல் நழுவி வந்திருக்கும் அனைத்திலும் பதில்கூற முன்வந்த பிறகு. இந்த விவாதத்தில் ஒரு முடிவுக்கு வந்த பிறகு வேண்டுமானால், ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் நீக்கியபிறகு உலகம் எப்படி இருக்கும்; இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக அமல்படுத்திய பிறகு உலகம் எப்படி இருக்கும் எந்த உலகம் மக்களுக்கானதாக இருக்கும் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு இப்போது நீங்கள் கேட்கும் கேள்விகளை அடுக்குங்கள். அதன் பிறகு உங்களுக்கு வேண்டிய வீரியத்தில் பதிலளிக்கிறேன். ஆனால் தற்போது கிட்டத்தட்ட முடிவை நெருங்கிவிட்ட இவ்விவாதத்தில் உங்கள் வரட்டுத்தனமான கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் அதை நீர்த்துப்போக வைப்பதில் நான் ஆர்வம் கொள்வதாக இல்லை.

    செங்கொடி




செங்கொடிக்கு பதில் 
////இதற்கு மேலும் ஹதீஸ்கதைகளைப் பற்றி உங்களிடம் பேசுவது வீண் எனக் கருதுகிறேன்///
"சீ,சீ,இந்த பழம் புளிக்கும் "
///இதை நாளையே செயல்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டால் நாளையே கம்யூனிச தீர்வு வந்துவிடும்///
இப்படியெல்லாம் எழுதும் உங்களுக்கு குர்ஆனிலுள்ள அற்புதங்கள் பற்றி கேலி பேச வெட்கமாக இல்லையா?
ஒருவாதத்திர்காக கம்யுனிசம் தீர்வு என்று ஒப்புக் கொண்டால்,ஆணாதிக்கத்தை ஒழித்து தாம்பத்திய வாழ்க்கையில் எப்படி பொதுவுடமையை கொண்டு வருவீர்கள்?என்று விளக்கம் கேட்டால் ,அதை சொல்லுவதை விட்டு விட்டு நான் அதை நிறுவி விட்டேன் ,இதை நிறுவி விட்டேன் நீங்கள் கம்யுநிசம்தான் தீர்வு என்று ஒப்பு கொண்டுவிட்டீர்கள் என்று மொட்டை பாப்பாத்தி அள்ளி முடிய ஆசைப்பட்டது போல் பேசினால் வெட்கமாக இல்லையா என்று கேட்டதில் என்ன தப்பு?ஆண்டிகளாக  சேர்ந்து ஐந்து நட்சத்திர ஓட்டல் கட்ட ஆசை பட்டது போல் என்று கேட்டதில் என்ன தவறு கண்டு விட்டீர்கள்?
////ஒரு நூலைக் குறிப்பிட்டால் அதை முழுவதும் படித்து விமர்சனங்களை வைக்க வேண்டும். நீங்கள் எழுப்பியுள்ள இரண்டு ஐயங்களுக்குமே யானையை தடவிப்பார்த்த உருவகம் பொருந்தும்////
முதல் கோணலை நேர்செயுங்கள் என்றால் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் இருந்து கொண்டு நான் யானையை தடவி சுவர் என்று கூறுவதாக வருகிறீர்கள்.நான் தடவியது சுற்றுலாமையத்திலுள்ள யானை சிலையை. உங்கள் தூரத்து பார்வைக்கு அது அசல் யானையாக தெரிந்துள்ளது.
.////நல்ல நூல்களை இப்போதுதானே படிக்கத்தொடங்கியுள்ளீர்கள், தொடக்கத்தில் கசப்பாகத்தான் இருக்கும், தொடர்ந்து படியுங்கள் பேசுவோம்////
கம்யுனிச ஸ்கூலில் மாதாந்திர தேர்வு,காலாண்டு தேர்வு,அரையாண்டு தேர்வு எல்லாம் கிடையாதா?ஆண்டு இறுதி தேர்வு மட்டுமே உண்டா?நீங்கள் நல்ல நூல்கள் என்று தலையில் தூக்கி வைத்து ஆடினால் அதை நான் ஏற்று கொள்வதற்கு நான் என்ன போலி கம்யுனிஸ்ட்டும் இல்லை.சவடால் கம்யுனிஸ்ட் டும் இல்லை.  
. ///ஐயம் என வந்துவிட்ட பிறகு உறுதிப்படுத்துவதற்கு என்ன இருக்கிறது என்பதே விவகாரம்///
இது உங்களுக்கு மட்டும்தானா? உங்களுக்கு ஐயம் வந்துவிட்டால் அதை உறுதிபடுத்த வேண்டும்.எனக்கு ஐயம் வந்துவிட்டால் காலத்தை கடத்தி உமர் பற்றிய வராற்று குறிப்பு போல் மறக்கடிக்க வேண்டும்.

////தோராயமாக அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் சோழர்கள் ஆட்சி பொற்கால ஆட்சியென்றும், கள‌ப்பிரர்கள் காலம் இருண்ட காலமென்றும் அண்மைக்கால வரலாறு கூறிக்கொண்டிருந்தது. ஆனால் சோழர்கள் ஆட்சியில் பார்ப்பன ஆதிக்கம் மீண்டது என்றும் களப்பிரர்களே அடித்தட்டு மக்களுக்கான ஆட்சி நடத்தினார்கள் என்றும் சோழர்களின் வரிவிதிப்பு, பிரம்மத்தோயங்கள் குறித்த கல்வெட்டுகள் வெளிவந்து உரைகல்லாகி நிற்கின்றன. இதில் முக்கியமான விசயமே வரலாறு, நீங்கள் கூறும் \/ஹதீஸ்களைப் போல அப்படியே நூறு விழுக்காடு வரலாறு என யாரும் கூறிக்கொள்வதில்லை///
இந்த கல்வெட்டுகள் இருந்து விட்டால் அதை அப்படியே ஏற்றுகொள்ளவேண்டுமா?இப்போது எனக்கு ஐயம் வந்துவிட்டது,அதாவது சோழர் ஆட்சி பற்றிய வரலாறு பார்ப்பனர்கள் எழுதியதாக இருக்கவேண்டும்.களப்பிரார்கள் பற்றிய கல்வெட்டுகளை எழுதியது நமது பெரியாரின் முன்னோடிகளான   
அந்தகால பெரியார்களாக இருக்கவேண்டும்.இந்த எனது ஐயத்தை போக்கும் உரைகல்லை சொல்லுங்கள்.
மேலும் ,உங்கள் கல்வெட்டு ஆதாரங்களை 'ஹதீத்கலை'அளவுகோலுடன் ஆய்வு செய்தால் அவை கள் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும்.ராஜ ராஜ சோழன் பற்றி ஒருவர் புகழ்ந்து எழுதி இருந்தால் அந்த கல்வெட்டு யார்காலத்தில் எழுதப்பட்டது? மன்னரே தன ஊழியர்களை வைத்து எழுதினாரா?மன்னரால் பலனடைந்த மக்கள் எழுதி வைக்கப்பட்டதா?அந்த மக்கள் தாங்கள் பகுதிக்கு மட்டும் சாதகமாக இருந்ததால் அவ்வாறு எழுதினார்களா? பொய் அழகர்கள் எழுதிய ஓலை சுவடிகளாக இருந்தால் அவர்கள் வாங்கிய பொற்காசுக்கு தகுந்தவாறு எழுதியுள்ளனரா? வெள்ளிக்காசுகள் கூட கிடைக்காத தால் எழுதி உள்ளனரா?கருணாநிதி பற்றி கண்ணதாசன் அவரோடு குடித்து கொண்டிருந்த காலத்தில் எழுதியதா?அவரை இடித்து கொண்டிருந்த காலத்தில் எழுதியதா?வைரமுத்து, கருணாநிதி பற்றி எழுதியதை அப்படியே ஏற்று கொள்ளாமல் அடுத்த நடுநிலையான  தலைமுறை விமர்சர்கள் ஆய்வுசெய்தால் அவர்களின் கருத்து எவ்வாறு இருக்கும் ?வைரமுத்து கவிதைகள் குப்பைக்கு போய்விடும்.  
////ஹதீஸ்களில் நீங்கள் விதந்து போற்றும் ஆதாரங்களை நீங்களே ஏற்க மறுக்கிறீர்கள். குரானுக்கு மாற்றமாக இருக்கிறது என்பதால் நீங்கள் ஏற்க மறுக்கும் ஆதாரங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறீர்கள். ////
நான்  இஸ்லாத்தை  கற்றுத்தான் எழுதுகிறேன்,என்று ஆரம்பித்தீர்கள் ஆனால் ஹதீஸ் கலை பற்றி ஒன்றுமே தெரியாமல் உளறி கொட்டுகிறீர்கள். 
ஹதீத்களை ஆதாரபூர்வமாக ஏற்று கொள்ளப் படுவதற்கான நிபந்தனைகளில் அறிவிப்பாளர் வரிசையை சரி பார்ப்பதும் ஒன்று.அதுமட்டும்தான் நிபந்தனைபோல் கூறியுள்ளீர்கள்.குரானுக்கு முரன்படக்கூடாததும் என்பதும் ஒரு நிபந்தனை  .
./// முஸ்லீம்களின் ஒவ்வொரு பிரிவினரும் தமக்கென ஹதீஸ்களைக் கொண்டிருந்து அதுதான் உண்மையானது என நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் ஒரு பிரிவினரின் நம்பகத்தன்மையற்ற அறிவிப்பாளர்கள் வரிசையை மட்டுமே ஆதாரமாக கொள்வது போதுமானதல்ல////
ஹதீத்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக பலமான ஹதீத் ,பலவீனமான ஹதீத் என்று இல்லை. ஹதீத்களின் அளவுகள் பொதுவானவையே.சிலர் ஸஹிஹ் ஹதீத்களை மட்டுமே பின்பற்றுபவர் .சிலர் ஹசன் ஸஹிஹ் ஹதீத்களையும் பின்பற்றலாம் என்பர்.சிலர் லயிப் [பலவீனமான ]ஹதீத்களையும் பின்பற்றுவார்கள்.இன்னும்சிலர் தங்களுக்கு சாதகமாக இருக்கும் மவ்லூஆ [இட்டுகட்டப்பட்ட]ஹதீத்களையும் பின்பற்றலாம் என்பர்
.///ஒரு பிரிவினரின் நம்பகத்தன்மையற்ற அறிவிப்பாளர்கள் வரிசையை மட்டுமே ஆதாரமாக கொள்வது போதுமானதல்ல////
அது என்ன ஒரு பிரிவினரின் நம்பகத்தன்மையான வரிசை ,ஒவ்வொரு பிரிவினருக்கும்  தனித்தனியாக நம்பகத்தன்மையான வரிசை இருப்பதாக யார் சொன்னார்கள்.?
. ///முகம்மதின் காலத்திலேயே ஹதிஸ்களை எழுதியும் வைத்தார்கள் எனக் கூறும் நீங்கள் அதை எங்காவது பாதுகாத்து வைத்திருக்கிறார்களா எனக் கூறலாமே////
அப்படி எழுதப்பட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டு புகாரி போன்றவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.
. ///அப்படியே வரலாற்று என ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் ஒன்றும் முஸ்லீம்கள் அல்லவே///
நீங்கள் ஏற்று கொண்டால் தான் உண்மை என்றும் வரலாறு என்றும்  உங்களது அங்கீகாரத்திற்காக ஹதீஹ்கள் காத்திருப்பது போல பாவனை செய்கிறீர்கள்.
./// தபரி உள்ளிட்டவர்கள் எழுதிய முகம்மதின் வாழ்க்கை வரலாறுகளோடு ஹதீஸ்கள் முரண்படுகின்றன///
இப்போது உங்களது அறியாமை வெளிபடுகிறது, தபரி என்ற நீங்கள் குறிப்பிடும் நூல் ஹதீத்கள் ஆய்வு தெளிவாக்கப்படுமுன் அனைத்து ஹதீதகளை ஆதாரமாக வைத்து எழுதப் பட்டது .இப்போது அதில் பலவீனமான ஹதீத்களை ஆதாரமாக எழுதப்பட்ட வரலாற்றைத் தவிர சஹிஹ்காண ஹதீதகளை ஆதாரமாகக் கொண்டவை ஏற்று கொள்ளப்பட செய்கின்றன..இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.ஹதீத் என்பது வரலாற்று நூல்களை விட பல படித்தரங்கள் உயர்ந்தது.
நெற்கதிர்கள் "தபரி" என்றால் வைக்கோல் நீக்கப்பட்டு சாவிகள் எனப்படும் சோடைகள் அகற்றப்பட்டு,ஆலைகளில் உமி ,தவிடு போன்றவை தவிர்க்கப்பட்டு கல்,கறுப்புகள் நீக்கப்பட்டு சுத்தமான அரிசி தான் ,ஸஹிஹ் ஹதீத்கள்.   
நீங்கள் நெற்கதிர்களை சாப்பிடலாம் என கூற வருகிறீர்கள். 
ஷீஆ;பிரிவினர் சாவிகளுடன் கூடிய நெல்லை சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள்.  
மத்ஹப் ஜமாத்தினர் நெல்லை சமைத்து சாப்பிடுகின்றனர்.  
சலபி ஜாக் போன்றோ கல்லுடன் கருப்புகளை சேர்த்து சாப்பிடுகின்றனர். 
ஏனையோர் சுத்த அரிசியை சாப்பிட்டு வருகின்றனர்
.///மூன்றாம்வரிடம் கேட்டதைத்தான் நான்கம்வர் ஐந்தாம்வரிடம் கூறினார் என்பதை உறுதிப்படுத்த ஒன்றுமில்லாதபோது, அவரிடமிருந்து இவர் கேட்டார், இவரிடமிருந்து இன்னொருவர் கேட்டார் என அட்டவணையிடுவதில் என்ன முக்கியத்துவம் இருந்துவிடமுடியும்////
நான்காமவர்பற்றி அவர்  காலத்து மக்கள் அவர் எப்படிபட்டவர் என்பதை கருத்து தெரிவித்திருந்தனர்,அந்த கருத்தின் அடிப்படையிலேயே ஐந்தாமவரிடம் அவர் கூறியது பரிசீலனை செய்யப்பட்டிருக்கும்.ஒரு கருத்துக்கு ஒரே அறிவிப்பாளர் வரிசை மட்டும் இருப்பது இல்லை.ஒவ்வொரு மத்ன்[கருத்து].பகுதிக்கும் மூன்று அல்லது நான்கு அல்லது அதற்க்கும் மேற்ப்பட்ட  வெவ்வேறு செட் அறிவிப்பாளர்கள் இருப்பார்கள் ஒரே கருத்துடைய ஹதீதை வேறு வேறு செட் அறிவிப்பாளர்களுடன் ஒப்பிட்டுபார்ப்பதும் ஹதீத் ஆய்வுகளில் ஒன்று.
.////அல் ஜசீரா தொலைக்காட்சி ஈராக்கில் இன்ன பெயருடைய எங்கள் செய்தியாளர் இவரிடம் சொன்னார், இவர் அவரிடம் சொன்னார் அவர் தொலைக்காட்சி நிலையத்திற்கு தொலைபேசியில் சொன்னர் என்று ஒரு செய்தியை ஒலிபரப்பினால்,,,,,,,////
அல் ஜசீரா நிருபர் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் கண்ட வர்களிடம் விசாரித்து செய்தியை விடியோவுடன் நிறுவனத்துக்கு அனுப்ப அது வெளியிடுகிறது. இங்கே ஏன் அவர் தொலைபேசியில் பேசினார்,இவர் பேசினார் என்று நான்கு நபர்களை வலிந்து திணிக்க வேண்டும் .ஒரே நாளில் நடக்கும் செய்தியை சேகரித்து வெளியிட இரண்டு நபர்கள் போதுமே.ஹதீதில் 150 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள காலத்திற்குத் தான் ஐந்து நபர்கள் வருகிறாகள் , இப்போது அதிநவீன பதிவு சாதனங்கள் இருக்கும்போது எதற்கு அவர் இவரிடம் சொன்னார், இவர் அவரிடம் சொன்னார் என்று நான்கு நபர்களை திணிக்க வேண்டிய அவசியம் என்ன?மேலும் நீங்கள் சொல்லியதே ஹதீதிர்க்கு ஆதாரமும் கூட .  பதிவு உபகரணங்கள் அதிகரித்துள்ள இக்காலத்திலேயே ஒரு செய்தியை சேகரிக்க இரண்டு நபர்களின்  பங்கு தேவையாக உள்ளது.அவ்வாறெனின் இமாம் புகாரிக்கு ஐந்து,ஆறு நபர்கள் தேவைப்படாதா? இந்த நிருபர்களின் தரம் ,செய்தி நிறுவனங்களின் தரம் என்று இப்போது ஒரு மதிப்பீடு இருக்கிறதா இல்லையா?இதைத்தான் ஹதீதில் அறிவிப்பாளர்களின் தரம் பற்றிய தனி ஆய்வு நூல்கள் உள்ளன.உங்களது வாதங்களை கொண்டே உங்களது வரலாற்று ஆதாரம் களைவிட ஹதீத்கள் பலமடங்கு உயர்ந்த நிலை ஆதாரங்களாக உள்ளன.
///பல ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பதல்ல விவகாரம். டைம்ஸ்நவ் தொலைக்காட்சியில் ஒருதடவை மட்டும் சொன்னார்களா? பத்து நாளுக்கு மறு ஒளிபரப்பு செய்தார்களா என்பது பொருட்டே அல்ல. ஐயம் என வந்துவிட்ட பிறகு உறுதிப்படுத்துவதற்கு என்ன இருக்கிறது என்பதே விவகாரம்.///
டைம்ஸ் நவ் செய்தி நான் பார்த்தேன் பெரும்பாலானோர் பார்க்கவில்லை .என் சொல்லை நம்பாதவர்களை நான் எப்படி உறுதிபடுத்த முடியும்?
 ////பாலியல் குற்றங்களை நீக்க முடியாது என்பதையும் தெளிவாக நிருவிவிட்டேன். இவைகளை சுற்றிவளைத்து ஒப்புக்கொள்ளும் நீங்கள், அதை வெளிப்படையாக அறிவிக்க தயங்குகிறீர்கள். காரணம், உங்கள் மதம். அதை மறைப்பதற்காக பண்ணை வாழ்க்கை என்றும், விஞ்ஞானத்தை மறுப்பது போல போக்குக் காட்டுவதும், கட்டை வண்டி காலத்திற்கு திரும்பச் சொல்கிறார் என்றும், சோசலிசம் தோற்றுவிட்டது என்றும், ஸ்டாலின் கொலைகள் செய்தார் என்றும், இரும்புத்திரை ஆட்சி என்றும் ஏதேதோ எழுதி தப்பித்து ஓடப் பார்க்கிறீர்கள். ///
நீங்கள் எதையும் நிறுவ வில்லை.ஆணாதிக்கத்தையும் தனியுடமையையும் ஒழித்துவிட்டால் பாலியல் வன்முறை குறைந்துவிடும் என்று சொல்லுவது ஒரு நிருபணமா?இதை எப்படி செய்வீர்கள் ?இதற்க்கு முன் செய்ததற்கு ஒரு ஆதாரம் உண்டா?ஒரு குழு அளவிலாவது உங்களது காதல்,காமம் இன்பம் இல்லாமல் இனபெருக்க பொதுவுடைமை வாழ்க்கை யை செயல்படுத்தி காட்டுங்கள் என்றால் மூச் காட்டாத நீங்கள் இஸ்லாத்தை விமர்சிக்க வழி இல்லாமல் மீனையும் குரங்கையும் தூக்கிக் கொண்டு வளைய வருகிறீர்கள்.நிருவிவிட்டாராம் எதை  நிறுவினீர்கள்?   ஓசி வலைதளத்தை தவிர வேறு எதையும் நிறுவியதை உங்களால் நிருபிக்க முடியாது. ஒரு வாதத்திற்காக உங்களது பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு கம்யுனிச தீர்வுதான் என்று சொன்னால் நான் சுற்றி வளைத்து ஒப்பு கொண்டதாக சொல்லுவது எங்ஙனம் சரியாகும்?இங்கேயே இப்படி கதை விட்டால்  உங்களது ஸ்டாலின் இரும்பு திரை  ஆட்சியை பற்றி எந்த அளவுக்கு உண்மையை கூறி இருப்பீர்கள்? அப்படியாவது பண்ணை வாழ்க்கை பற்றி வாய் திறப்பீர்கள் என்றால் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டேன் நிறுவிவிட்டேன் என்று ஜமாலியா நடையில்  பின்பற்றுவது நியாயமா?
நான் ஒப்புக்கொண்டு விட்டேன் என்று சொன்னதை மட்டும் கூறும் நீங்கள் பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு என்பதை ஏன் சொல்லவில்லை?அந்த பில்லியன் ஆண்டுகள் வரை சோஷலிச காலத்து ரஷ்யாவில் , சீனாவில் ,கிழக்குஜெர்மனி யையும் சேர்த்து கொண்டு அப்போது அங்கு நடந்த பாலியல் வன்முறைகளையும் சம காலத்தில் சவூதி அரபியாவில் நடந்த பாலியல் வன்முறைகளையும் ஒப்பிட்டு பார்த்து எங்கு குறைவோ அதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்றால் அதை பற்றி வாய் திறப்பதில்லையே ஏன்?
////உலகம் எப்படி இருக்கும் எந்த உலகம் மக்களுக்கானதாக இருக்கும் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு இப்போது நீங்கள் கேட்கும் கேள்விகளை அடுக்குங்கள். அதன் பிறகு உங்களுக்கு வேண்டிய வீரியத்தில் பதிலளிக்கிறேன்/// 
பதில் இருந்தால் எப்ப கேட்டாலும் எப்படி கேட்டாலும் வெளிக்கொண்டு வந்துவிட வேண்டியதுதானே இப்போது கேட்டதுக்கு இப்போதே பதில் சொல்ல முடியாதவர் பின்னர் கேள்விகளை அடுக்க வேண்டுமாம் அவர் வீரியாமாக பதில் சொல்லுவாராம் .இப்படியெல்லாம் மிடுக்க வேண்டாம் ,பதில் இருந்தால் சொல்லுங்கள் .இல்லையெனில் சோஷலிசபோனது போல் நீங்களும் போங்கள். 
 ///தற்போது கிட்டத்தட்ட முடிவை நெருங்கிவிட்ட இவ்விவாதத்தில் உங்கள் வரட்டுத்தனமான கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் அதை நீர்த்துப்போக வைப்பதில் நான் ஆர்வம் கொள்வதாக இல்லை/// 
பதில் சொல்ல வழி இல்லை என்பதற்கு இப்படி ஒரு சப்பை கட்டா?முதலில்எனது வரட்டுத்தனமான கேள்விகளுக்கு  உங்கள் வீரியமான பதிலைத் தாருங்கள் நீர்த்துப் போனது,போகப் போவது  கம்யுனிசமா?இஸ்லாமா ?என்பது அப்புறம் பார்ப்போம் .அடுத்தவர்கள் பேசினால் சொல்லாடல் ,தாங்கள் பேசினால்,ஒரு வேளை வெல்லாத சாடலா?

  1. நண்பர் இப்ராஹிம்,

    உண்மைகள் தெளிவாக வேண்டுமென்றால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டே ஆகவேண்டும். உங்களிடம் தற்போது காணப்படும் கொதிப்பு, பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதால் உண்டாகும் படப்படப்பா? அல்லது இருப்புக்கு பங்கம் வந்துவிடக்கூடாதே எனும் பதைப்பா? என்பதை நீங்கள் வெளிப்படுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிற்கிறீர்கள்.

    பாலியல் குற்றங்களுக்கு இஸ்லாமா? கம்யூனிசமா? எது சரியான தீர்வு? எனும் விவாதத்தில்; இஸ்லாமின் சட்டத்தண்டனைகளைத் தவிர வேறெதையும் உங்களால் முன்னிருத்த முடியவில்லை. முன்னிருத்தவும் முடியாது. அந்த சட்டமோ அதன் வழியான தண்டனைகளோ பாலியல் குற்றங்களை ஒழிக்கும் நோக்கில் எதையும் செய்ய முடியாது என்பதை நிரூபித்திருக்கிறேனா இல்லையா என்பதற்கு \\ஏன் இதுவரையான உலகில் பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை?// எனும் கேள்விக்கு இன்றுவரை நீங்கள் நேரிய பதில் கூறாமல் இருக்கிறீர்களே. இது நிரூபணம் இல்லையா? இஸ்லாம் கூறும் தீர்வு கவைக்குதவாதது என்பதை நீங்களும் உணர்ந்திருப்பதனால் அல்லவா இதற்கு பதில் கூற மறுக்கிறீர்கள். பின் எதற்கு சவடால்?

    கம்யூனிசம் கூறும் தீர்வு என்ன? சமூகத்திலிருந்து ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் நீக்கவேண்டும் என்பது. ஆணாதிக்கத்தையும் தனியுடமையையும் நீக்காதவரை பாலியல் குற்றங்களை நீக்கமுடியாது என்பதை நிரூபித்திருக்கிறேனா? இல்லையா என்பதற்கு \\உங்களின் நிலை என்ன? ஆணாதிக்கம் உலகில் இருக்கிறது ஆனால் இஸ்லாத்தில் இல்லை என்பதா? அல்லது உலகில் ஆணாதிக்கம் இல்லை என்பதா?// இதற்கு பதில் கூறாமல் நழுவி ஓடிக்கொண்டிருப்பதிலிருந்தே தெரியவில்லையா? ஆணாதிக்கம் உலகத்தில் இல்லை எனவும் உங்களால் கூறமுடியவில்லை, உலகில் இருக்கிறது இஸ்லாத்தில் இல்லை என்றும் உங்களால் கூறமுடியவில்லை, ஏனென்றால் உங்கள் நிலையை தெளிவாகக் கூறிவிட்டால் பதிலளிக்க முடியாத நிலை வரும் என்பதை உணர்ந்திருப்பதால் அல்லவா பதில் கூற மறுக்கிறீர்கள். பின் எதற்கு சவடால்?

    இது மட்டுமா? \\ஆணாதிக்கத்தை, தனியுடமையை நீக்காமல் பாலியல் குற்றங்களை ஒழித்துவிட முடியுமா? என்பதிலோ ஆணாதிக்கம் தனியுடமையையை நீக்கிய பிறகும் பாலியல் குற்றங்கள் இருக்குமா என்பதிலோ உங்களுக்கு எவ்வளவு கேள்விகள் இருந்தாலும் என்னென்ன ஐயங்கள் இருந்தாலும் பதில் கூற, தீர்த்துவைக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஏனென்றால் விவாதம் அது குறித்துத்தான். அதிலும் இதுவரை உங்களால் பதில் கூறாமல் நழுவி வந்திருக்கும் அனைத்திலும் பதில்கூற முன்வந்த பிறகு// என்பதையும் மிகத்தெளிவாக பதிவு செய்திருக்கிறேன். இதை மட்டும் உங்கள் உள்ளம் படிக்காமல் விட்டுவிட்டதேன்?

    ஆக, எது குறித்த விவாதமோ அது குறித்த தெளிவுகளை நிரூபணங்களை உங்களால் மறுக்க முடியாத அளவுக்கு தந்திருக்கிறேன். அதை உங்களால் மறுக்கவும் முடியவில்லை, பதில் கூறவும் முடியவில்லை. ஆனாலும், அதை மறைப்பதற்காக கேள்விகளால் சீறிப்பார்க்கிறீர்கள். சரி, உங்கள் கேள்விகளின் பொருள் எத்தகையதாய் இருக்கிறது? சமூகத்திலிருந்து ஆணாதிக்கத்தையும், பொதுவுடமையையும் நீக்கியபின் சமூகத்தின் பாலியல் செயல்பாடு எப்படி இருக்கும்? ஒரு குழுவாக நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள், பார்ப்போம்? சோசலிச நாட்டையும், சௌதியையும் ஒப்பிட்டுப் பார்ப்போமா? ஸ்டாலின், பண்ணை வாழ்க்கை, இத்யாதி, இத்யாதி…

    \\சட்டம் என்பது நடந்துவிட்ட ஒரு செயலுக்கு அல்லது குற்றத்திற்கான எதிர்வினையாக மட்டுமே இருக்க முடியும். ஒரு குற்ற நிகழ்வில் ஒரு மனிதனின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பாடாதவரை சட்டங்களால் ஒரு பலனும் இல்லை// என ஏற்கனவே நான் பதிலளித்துள்ளேன். எந்த நாட்டின் சட்டமும் இதைத்தாண்டி செயல்படமுடியாது, சோசலிச சட்டம் உட்பட. சட்டத்தினால் ஒருபயனும் இல்லை என தெளிவாகிவிட்டபின்னர், எந்த நாட்டில் குறைவு எந்த நாட்டில் கூடுதல் எனப்பார்ப்பது எப்படி பாலியல் குற்றங்களுக்கான தீர்வைத்தரும்? இதை தெளிவாக விளக்கிய பின்னரும் சௌதியா? ரஷ்யாவா? எனக் கேள்வி கேட்பது கிழிந்த சாக்கைக் கொண்டு காட்டாற்றை தடுக்க நினைப்பதற்கு ஒப்பானது.

    ஆணாதிக்கத்தை சமூகத்திலிருந்து நீக்கவேண்டும் என்று தீர்வு சொன்னால், நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள் என்கிறீர்கள். துஆ கேட்டு ஆணாதிக்கத்தை நீக்கிவிட முடியுமா என்ன? உலக சமூகத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் ஆணாதிக்கமும், தனியுடமையும் தாக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் நிலையில், தனி மனிதனாலோ, தனியொரு குழுவாலோ அதை விட்டு நீங்கி இருந்துவிட முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவரும் சமூகத்தில் ஒரு அங்கம். தனிமரங்கள் சேர்ந்தது தோப்பு என்பதல்ல, தோப்பின் ஒரு அங்கமே தனிமரம். இரண்டுக்கும் ஒரே பொருளல்ல. தனி மனிதனிலிருந்து சமூகத்திற்கு, சமூகத்திலிருந்து தனிமனிதனுக்கு என்று இரண்டு திசைகள் இருக்கின்றன. சமுகத்திற்கான பங்களிப்பைத்தான் ஒரு மனிதனோ, தனிக்குழுவோ செய்யமுடியும். சமூகத்தின் பங்களிப்பை ஒரு மனிதனோ, தனிக்குழுவோ செய்துவிடமுடியாது. நீங்கள் வாழ்ந்து காட்ட முடியுமா?, உங்கள் சொத்தை பொதுவாக எழுதிவைக்க முடியுமா? என்பன போன்ற கேள்விகள் இந்த பேதத்தைப் புரிந்து கொள்ளாமல் எழுகின்றவைகள். இதற்கு இஸ்லாத்திலிருந்தே என்னால் எடுத்துக்காட்டுகளைத் தரமுடியும். ஆனால் ஹதீஸ்கதைகள் குறித்த விவாதத்தைப் போல் இந்த விவாதம் வேறொருபக்கம் திரும்பிவிடக்கூடும் என்பதால் தவிர்க்கிறேன்.

    தனியுடமை, ஆணாதிக்கத்தை சமூகத்திலிருந்து நீக்கியபின் பாலியல் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதற்கு ஏற்கனவே ஒரு குறிப்பு தந்திருந்தேன், என்ன செய்வது உங்கள் காமலைக் கண்களில் தான் அவை நிறமாறி விடுகிறதே, \\ஆணாதிக்க வடிவங்கள் தான். அவை நீக்கப்பட வேண்டியவைகள். ஆனால் எப்போது எப்படி என்பதில் தான் அதன் வீரியத் தன்மை தங்கியிருக்கிறது. இது குறித்து மேலதிக விபரங்களுக்கு கேள்வி பதில் பகுதியில் லிவிங் டுகதர் குறித்து நான் அளித்திருக்கும் பதிலைப் பார்வையிடுங்கள்//

    \\நான் ஒப்புக்கொண்டு விட்டேன் என்று சொன்னதை மட்டும் கூறும் நீங்கள் பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு என்பதை ஏன் சொல்லவில்லை?// என்று கூறியிருக்கிறீர்கள், அப்படி அரைகுறையாக திரிப்பது என்னுடைய வழக்கமல்ல முழுமையாகவே பதில் கூறியிருக்கிறேன். இதோ \\கம்யூனிசம் கூறும் தீர்வு பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகுதான் நடைமுறைக்கு வரும் என்பது உங்களுடைய கேலி, அவ்வளவு தான். ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் நீக்க வேண்டும் என்பது தான் தீர்வு. இதை நாளையே செயல்பாட்டுக்கு கொண்டுவந்துவிட்டால் நாளையே கம்யூனிச தீர்வு வந்துவிடும். ஒரு பில்லியன் அல்ல கோடி பில்லியன் ஆண்டுகள் கடந்தபின்னும் தீர்வை எட்ட முடியாது என்றால் அப்போதும் வராது. இங்கு தீர்வுக்கு காலவரைமுறை எதுவும் இல்லை. அதை எவ்வளவு விரைவில் எட்டுகிறோம் என்பதே வரையறைக்கு உட்படுகிறது// எனவே உங்கள் சகதியை என்மீது பூசாதீர்கள்.

    அடுத்து \\ஒரு வாதத்திற்காக உங்களது பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு கம்யுனிச தீர்வுதான் என்று சொன்னால் // என்று சந்தடி சாக்கில் நழுவ முயல்கிறீர்கள். இதோ நீங்கள் கூறியது \\பிலியன் ஆண்டுகளுக்கு பிறகு நிகழ இருக்கும் பாலியல் குற்றங்களுக்கு கம்யுநிசம்தான் தீர்வு என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.இதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால் நானும் அதனுடன் உடன் படுகிறேன்// கம்யூனிச தீர்வோடு நீங்கள் உடன்படுகிறீர்கள். ஆனால் அது பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தான் வரும் என்பது தான் உங்கள் கவலை. அதற்காகத்தான் மேற்கூறிய பதிலையும் நான் உங்களுக்குக் கூறியிருந்தேன். உங்கள் மதக் கிழிசலை மறைக்க பொய் எனும் ஊசியை கொண்டுவர வேண்டாம்.

    ஆக இந்த விவாதத்தின் பேசு பொருளை விட்டு விலகிச் செல்லவேண்டும் எனும் நோக்கில் உங்கள் கேள்விகள் அமைந்திருப்பதால்தான் \\இந்த விவாதத்தில் ஒரு முடிவுக்கு வந்த பிறகு வேண்டுமானால், ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் நீக்கியபிறகு உலகம் எப்படி இருக்கும்; இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக அமல்படுத்திய பிறகு உலகம் எப்படி இருக்கும் எந்த உலகம் மக்களுக்கானதாக இருக்கும் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு இப்போது நீங்கள் கேட்கும் கேள்விகளை அடுக்குங்கள். அதன் பிறகு உங்களுக்கு வேண்டிய வீரியத்தில் பதிலளிக்கிறேன்// என்று கூறியிருந்தேன். ஆனால் நீங்கள் பதில் கூறாமலிருக்கும் கேள்விகளோ நீங்கள் விலகி ஓடிவிடாமல் இந்த வாதத்தின் தலைப்பில் கொண்டுவந்து நிறுத்துகிறது. இந்த எனது நிலையில் இப்போதும் மாற்றமில்லை. உங்கள் மேலதிக கேள்விகளை அதுகுறித்த தலைப்பை எடுத்தபின் பார்த்துக்கொள்வோம். இப்போது இந்த விவாதத்தில் நில்லுங்கள்.

    உங்களின் பதிவில் ஹதீஸ்கதைகள் குறித்து விளக்கமளிக்க அதிக இடம் எடுத்துக்கொண்டீர்கள் என்பதனால் அது குறித்து ஒரே ஒரு விளக்கம் மட்டும். இதன் பிறகு ஹதீஸ் குறித்து உங்களுடன் நான் பேசப்போவதில்லை. \\ஹதீத்களை ஆதாரபூர்வமாக ஏற்று கொள்ளப் படுவதற்கான நிபந்தனைகளில் அறிவிப்பாளர் வரிசையை சரி பார்ப்பதும் ஒன்று.அதுமட்டும்தான் நிபந்தனைபோல் கூறியுள்ளீர்கள்.குரானுக்கு முரன்படக்கூடாததும் என்பதும் ஒரு நிபந்தனை// இல்லை அப்படி ஒரு நிபந்தனை இல்லை. இருந்திருந்தால், புஹாரி ஏன் தன்னுடைய ஆதாரபூர்வமான தொகுப்பில் அது போன்ற ஹதீஸ்களை இடம்பெறச் செய்ய வேண்டும்? அவரே அந்த ஹதீஸ்களை ஆதாரபூர்வமானது என்று ஏற்று பதிவு செய்திருக்கும் போது யார் அதை ஏற்றுக்கொள்ளக் கூடாதென்பது? புஹாரி, முஸ்லிம் தொகுப்புகள் தான் நம்பகமானது என்று குரானுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் போது, அதிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது, கூடாதது என்றால் எது தான் ஆதாரபூர்வமான முழுத்தொகுப்பு?

    கடைசியாக, இதற்குப் பிறகும் கண்ணீரை துடைத்துக்கொண்டே வலிக்கவில்லை என நடிக்க முயலாதீர்கள்.

    செங்கொடி


  1. ////உண்மைகள் தெளிவாக வேண்டுமென்றால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டே ஆகவேண்டும். உங்களிடம் தற்போது காணப்படும் கொதிப்பு, பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவதால் உண்டாகும் படப்படப்பா?////
    ஹதீத் கதை என்னும் உங்கள் கற்பனை உதிப்பெல்லாம் ஆதாரமற்று உதிர்ந்து போன பிறகு படபடப்பா, படபிடிப்பா, பதைப்பா புதைப்பா என்று நிதானம் இழந்து போனதை உங்கள் ஆதங்கம் வெளிபடுத்துகிறது.
    ////இருப்புக்கு பங்கம் வந்துவிடக்கூடாதே எனும் பதைப்பா? என்பதை நீங்கள் வெளிப்படுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் நிற்கிறீர்கள்///
    கல்வெட்டு ஆதாரங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் அளிக்க முடியாமல்.லட்ச கணக்கான ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாற்று ஆதாரங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு பதில் சொல்ல வழி இன்றி ;உங்களது வரலாற்று ஆதாரங்களுக்கு பங்கம் வந்துவிட்டதை மறைக்க அடுத்தவர்களமீது பலி கூறி திசை திருப்ப வேண்டாம்.
    ////பாலியல் குற்றங்களுக்கு இஸ்லாமா? கம்யூனிசமா? எது சரியான தீர்வு? எனும் விவாதத்தில்; ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,. அந்த சட்டமோ அதன் வழியான தண்டனைகளோ பாலியல் குற்றங்களை ஒழிக்கும் நோக்கில் எதையும் செய்ய முடியாது என்பதை நிரூபித்திருக்கிறேனா இல்லையா என்பதற்கு \\ஏன் இதுவரையான உலகில் பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை?// எனும் கேள்விக்கு இன்றுவரை நீங்கள் நேரிய பதில் கூறாமல் இருக்கிறீர்களே. இது நிரூபணம் இல்லையா? இஸ்லாம் கூறும் தீர்வு கவைக்குதவாதது என்பதை நஉங்களின் நிலை என்ன? ஆணாதிக்கம் உலகில் இருக்கிறது ஆனால் இஸ்லாத்தில் இல்லை என்பதா? அல்லது உலகில் ஆணாதிக்கம் இல்லை என்பதா?// இதற்கு பதில் கூறாமல் நழுவி ஓடிக்கொண்டி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, உலகில் இருக்கிறது இஸ்லாத்தில் இல்லை என்றும் உங்களால் கூறமுடியவில்லை, ஏனென்றால் உங்கள் நிலையை தெளிவாகக் கூறிவிட்டால் பதிலளிக்க முடியாத நிலை வரும் என்பதை உணர்ந்திருப்பதால் அல்லவா பதில் கூற மறுக்கிறீர்கள். பின் எதற்கு சவடால்?///
    ஒரு வியாபாரி கூடை நிறைய காய்கறிகளை சைக்கிளில் கொண்டு சென்று ஊர்,ஊராக விற்று வந்ததில் 2 சதவீத காய்கறிகள் விற்காமல் திரும்ப கொண்டு வந்ததில் அழுகி விட்டது. அங்கு இருந்த இரண்டு கைகளும் கால்களும் இழந்த ஊனமுற்ற ஒருவர் காய்கறிகளை என்னிடம் கொடுத்து இருந்தால் எல்ல ஊர் மக்களுக்கும் சைக்கிள் வாங்கி கொடுத்து அவர்கள் அனைவரும் சைக்கிளில் வந்து என்னிடம் வாங்கி சென்று இருப்பார்கள். ஒரு துண்டு கூட அழுகி இருக்காது.
    முடவரின் சவாலும் உங்களது ஆணாதிக்கம் தனிஉடமை ஒழித்து பாலியல் குற்றம் இல்லாமல் செய்வோம் என்னும் உங்களது வாய் சவடாலும் ஒன்றுதான்.
    பிளஸ் டூவில் தனது இளைய மகன் 1185 மதிப்பெண்கள் பெற்றதை பாராட்டினார் தந்தை .உடன் அங்கு இருந்த மூத்த மகன் சொன்னான் ,”அவன் இன்னும் 15 மதிப்பெண்கள் எடுக்க தவறிவிட்டான் .எனனை மட்டும் பரீட்சை எழுத அனுமதித்திருந்தால் 1200 மதிப்பெண்களும் பெற்றிருப்பேன். உடன் தந்தை சொன்னார் .நீதான் ஐந்தாவது வகுப்பிலே பெயிலாகிவிட்டாயே உன்னை எப்படி பரீட்சை எழுத அனுமதிப்பார்கள்?என்றார் தந்தை. இல்லை,இல்லை எனனை பரீட்சை எழுத அனுமதிக்கட்டும் நான் 1200 மார்க் எடுத்து காண்பிக்கிறேன் என்றான் மூத்த மகன் .உடன் தந்தை சொன்னார் ,மகனே உனக்கு ப்ளஸ் டூ தேர்வு பற்றி ஒன்னும் தெரியாது,உந்தம்பிதான் மாநிலத்திலே முதலிடம் ,முழு மதிப்பெண்கள் யாராலும் பெற முடியாது.இன்னும் பில்லியன் ஆண்டுகளானால் ஒருவேளை நீ சொல்லுவது நடக்கலாம் என்றார். உடன் மூத்த மகன் சொன்னார் ,இப்ப.நான் சொன்னதை ஒப்புகொண்டுவிட்டீர்களா”என்று நமது செங்கொடி ஐய்யா சொன்னதை போல் சொன்னானாம்.இதேபோன்றுதான் உள்ளது உங்கள் சவடால்.
    ///உங்களுக்கு எவ்வளவு கேள்விகள் இருந்தாலும் என்னென்ன ஐயங்கள் இருந்தாலும் பதில் கூற, தீர்த்துவைக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஏனென்றால் விவாதம் அது குறித்துத்தான்.///
    ஆரம்பத்தில் இருந்தே இதைத்தான் கேட்டுகொண்டே இருக்கிறேன் அதை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது தீர்த்து வைக்க ஆயத்தமாக இருக்கிறேன்,என்றால் தனிஉடமையை எவ்வாறு ஒழிப்பீர்கள் ?ஒழித்த பின் பொது வுடைமை வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க செய்யுங்கள்.விவாதம் அது குறித்துத்தான் என்பதை மறக்காமல் இதுவரை கேட்ட கேள்விகட்கு பதில் சொல்லுங்கள்


  2. செங்கொடி ////ஏன் இதுவரையான உலகில் பாலியல் குற்றங்களை தடுக்க முடியவில்லை?////சமூகத்திற்கான பங்களிப்பைத்தான் ஒரு மனிதனோ, தனிக்குழுவோ செய்யமுடியும். சமூகத்தின் பங்களிப்பை ஒரு மனிதனோ, தனிக்குழுவோ செய்துவிடமுடியாது.///
    பாலியல் குற்றங்களை குறைக்க முடியுமே தவிர ௦ ௦௦0% ௦பாலியல் குற்றங்களை கொண்டு வர முடியாது.எப்படி சமூகத்தின் பங்களிப்பை தனி மனிதனோ தனி குழுவோ செய்துவிட முடியாது என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ அதை போலவே பாலியல் குற்றங்களே இல்லாமற் செய்ய முடியாது.ஆனால் எனனை பொறுத்தவரை சமூகத்தின் பங்களிப்பை தனி மனிதனோ தனி குழுவோ செய்துவிடமுடியும். அப்படி முடியாது என்று ஒன்று இருந்தால் அதை எப்போதும் யாராலும் முடியாது.
    ///உங்கள் சொத்தை பொதுவாக எழுதிவைக்க முடியுமா? என்பன போன்ற கேள்விகள் இந்த பேதத்தைப் புரிந்து கொள்ளாமல் எழுகின்றவைகள்///
    இயலாமையின் வெளிப்பாடுகள்.
    ////உங்களின் நிலை என்ன? ஆணாதிக்கம் உலகில் இருக்கிறது ஆனால் இஸ்லாத்தில் இல்லை என்பதா? அல்லது உலகில் ஆணாதிக்கம் இல்லை என்பதா?// இதற்கு பதில் கூறாமல் நழுவி ஓடிக்கொண்டிருப்பதிலிருந்தே தெரியவில்லையா?////
    தாங்கள் புரிந்து கொண்டே குழப்புவது போல் தெரிகிறது.உலகில் நிலவும் பாலியல் குற்றங்களுக்கு தீர்வு இஸ்லாம் என்ற தலைப்பு. பொதுவாக உலகில் ஆணாதிக்கம் குறைந்துவருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டும் கொள்ளிவைப்பு ,இஸ்லாமே தீர்வு ஆகும்போது இல்லாமற் போய்விடுமே .உலகில் இருக்கும் மிச்ச ஆணாதிக்காங்களுக்கும் இஸ்லாம் தீர்வாகும்போது அவைகள் அறவே இல்லாமற் போகிவிடும்.
    பண்ணை வாழ்க்கையில் ஓடி ஒழிந்து கொண்டு இது வேறா?
    ///இது குறித்து மேலதிக விபரங்களுக்கு கேள்வி பதில் பகுதியில் லிவிங் டுகதர் குறித்து நான் அளித்திருக்கும் பதிலைப் பார்வையிடுங்கள்///
    லிவிங் டுகெதர் பற்றி படித்துத்தான் பண்ணை வாழ்க்கை பற்றி கேட்டால் மீண்டும் அதை படியுங்கள் இதை படியுங்கள் என்று எழுதி கொண்டிருப்பதை விட உங்களால் வாழ இயலாத ,எழுதுவதற்கே அருவருப்பாக இருக்கும் பண்ணை வாழ்க்கை பற்றி சொன்னால் ,கம்யுனிச த்தால் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும் என்பதை என்னால் நிருபிக்க முடியும். மக்களை அடிமைகளாக்கி பண்ணை வாழ்க்கையில் கசக்கி பிழிந்த கதை யை மக்களிடம் தெளிவாகச் சொன்னால் ,ரபி,நிசாம்,மேலப்பாளையம் மூப்பன் ஹாஜா எல்லாம் ஓடிவிடுவார்களோ என்று பயப்பட வேண்டாம்.
    தபரியை ஏற்று கொள்வதில்லை .புகாரியை ஏற்றுக் கொள்ளுகிறோம் என்ற உங்களது வாதம் தவறு .தபரியில் அதிக பலவீனமான ஹதீத்கள் இருப்பதால் அதிலுள்ள ஸஹிஹ் ஹதீத்கள் மட்டும் ஏற்கப்பட்டு மற்றவை புறக்கணிக்கபடுகிறது .புகாரியில் 100ஹதித்களே பலவீனமானவை .ஸஹிஹ் ஹதீத்கள் அதிகாமாக இருப்பதால் புகாரிக்கு முதன்மையும் முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது. குர்ஆனுக்கு முரண்படுமானால் குரானுக்கு எதிராக நபி[ஸல்] அவர்கள் ஒருபோதும் சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை ஆகையால் குரானுக்கு எதிராக இருப்பின் ஹதீதை நிராகரிக்க வேண்டும்.என்பது
    ஹதீத் கலை விதி. இனியாவது ஹதீத் ,உங்களது அறிவியல்பூர்வமான வரலாறுகளை விட உயரியது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்.

    ///கடைசியாக, இதற்குப் பிறகும் கண்ணீரை துடைத்துக்கொண்டே வலிக்கவில்லை என நடிக்க முயலாதீர்கள்.///
    ஹதீத்களுக்கு எதிராக உங்களது வாதங்கள் தளர்ந்தது கண்டு கண்ணீர் வடிந்தது ,அது ஆனந்த கண்ணீர் அது நல வழி காட்டுமே தவிர வலிக்க செய்யாது

நண்பர் இப்ராஹிம்,

நிகழ் உலகில் நிலவும் பாலியல் பிரச்சனைகளுக்கு எது சரியான தீர்வு இஸ்லாமா? கம்யூனிசமா? என்ற தலைப்பில் வாதம் செய்து வருகிறோம். தோராயமாக இரண்டு மாதங்களைக் கடந்தபின்பு இப்போது நீங்கள் எழுதியிருப்பது \\பாலியல் குற்றங்களை குறைக்க முடியுமே தவிர ௦ ௦௦0% ௦பாலியல் குற்றங்களை கொண்டு வர முடியாது// என்று. அதாவது பாலியல் குற்றங்களைக் களைவதற்கு இஸ்லாமே சரியான தீர்வு என வாதிட வந்த நீங்கள் அதை குறைக்க முடியுமே தவிர நீக்க முடியாது என்கிறீர்கள். இதன் பொருள் என்ன? இஸ்லாம் தீர்வல்ல என்பதற்கான‌ ஒப்புதல் வாக்குமூலம். ஆனால் இதை நீங்கள் இயல்பாக கூறவில்லை, என்னுடைய வாதங்கள் தவிர்க்கமுடியாத‌படி உங்களை இப்படி கூற வைத்திருக்கிறது. இதை உங்களால் மறுக்க முடியாது ஏனென்றால் விவாதத்தின் இடையே இப்படி சவடால் விட்டதும் நீங்கள் தான்,\\ எங்கள் தவ்ஹித் ஜமாஅத் கையில் உலகம் வந்தால்,………. இறையருளால் குற்றமற்ற உலகமாய் மாற்றி காட்டுவோம்// ஆக இஸ்லாமே திர்வு என வாதாட வந்து, நீக்கிக் காட்டுவோம் என சவடால் விட்டு, இப்போது முழுவதும் குறைக்க முடியாது என மென்று முழுங்குகிறீர்கள். இதுதான் தெளிவாக எடுத்துக்காட்டுகிறதே உங்களின் இருப்புக்கு பங்கம் வந்துவிட்டது என்பதை. இதற்கு மேல் என்ன வேண்டும்?

மறுபக்கம், கம்யூனிசத்தீர்வை ஒத்துக்கொள்கிறேன் என கூறியிருக்கிறீர்கள். அதுவும் நேரடியாக ஒத்துக்கொண்டால் உங்கள் ஓரிறைக் கொள்கை என்னாவது அதனால் பில்லியன் ஆண்டு எனும் கிண்டலோடு ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள். எப்போது வரும் என்றே தெரியாத மறுமை நாளே அனைத்திற்குமான நியாயத் தீர்ப்பு நாள் என நம்பிக்கொண்டிருக்கும் உங்களுக்கு கம்யூனிசத்தீர்வை பில்லியன் ஆண்டு என கிண்டலடிக்க எந்தவித அறுகதையும் இல்லை என்பது ஒருபுறமிருக்க. நாம் விவாதம் செய்வது எதை முன்னிட்டு? எது சரியான தீர்வு என்பது தானேயன்றி, அது எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பதையல்ல. கம்யூனிச தீர்வை விமர்சிக்கும் நீங்கள் எந்த அடிப்படையில் அதைச் செய்கிறீர்கள், அது பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகுதான் செயல்பாட்டுக்கு வரும் என்பதிலிருந்து. ஆக அது தவறானது என்றோ, தீர்க்க முடியாதது என்றோ உங்களால் கூற முடியவில்லை. தெளிவாகச் சொன்னால் கம்யூனிச தீர்வை குறை சொல்ல உங்களுக்கு துணிவில்லை. நீங்கள் சொல்வதெல்லாம் இப்போது செயல்பாட்டுக்கு வராதே என்பது தான். அது நமது விவாதமல்ல.

இப்போது நான் ஏற்கனவே கூறியவற்றை மீண்டுமொருமுறை படித்துப்பாருங்கள், \\ஆணாதிக்கத்தை, தனியுடமையை நீக்காமல் பாலியல் குற்றங்களை ஒழித்துவிட முடியுமா? என்பதிலோ ஆணாதிக்கம் தனியுடமையையை நீக்கிய பிறகும் பாலியல் குற்றங்கள் இருக்குமா என்பதிலோ உங்களுக்கு எவ்வளவு கேள்விகள் இருந்தாலும் என்னென்ன ஐயங்கள் இருந்தாலும் பதில் கூற, தீர்த்துவைக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஏனென்றால் விவாதம் அது குறித்துத்தான்// இந்த விவாதத்தில் எதற்கு பதில் கூற ஆயத்தமாக இருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறேன். \\இந்த விவாதத்தில் ஒரு முடிவுக்கு வந்த பிறகு வேண்டுமானால், ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் நீக்கியபிறகு உலகம் எப்படி இருக்கும்; இஸ்லாமிய சட்டங்களை முழுமையாக அமல்படுத்திய பிறகு உலகம் எப்படி இருக்கும் எந்த உலகம் மக்களுக்கானதாக இருக்கும் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டு இப்போது நீங்கள் கேட்கும் கேள்விகளை அடுக்குங்கள். அதன் பிறகு உங்களுக்கு வேண்டிய வீரியத்தில் பதிலளிக்கிறேன்// எது இந்த விவாதத்திலிருந்து விலகியிருக்கிறதோ அதற்கு இந்த விவாதத்தை முடித்துக்கொண்ட பிறகு உகந்த தலைப்பை எடுத்துக்கொண்டு விரிவாக விவாதிக்கலாம் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

கம்யூனிச தீர்வான ஆணாதிக்கத்தை சமூகத்திலிருந்து நீக்குவது குறித்து \\பொதுவாக உலகில் ஆணாதிக்கம் குறைந்துவருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது// என்று இப்போது கூறியிருக்கிறீர்கள். ஆனால் உங்கள் விவாதம் நெடுக மீள்வாசிப்பு செய்துபாருங்கள். இந்த உலகில் ஆணாதிக்கம் இல்லை என்பதே உங்களின் வாதமாக இருந்துவந்திருக்கிறது. இப்போதோ குறைந்து வருகிறது இஸ்லாம் வந்தால் அதையும் கிழித்துவிடும் என சால் ஓட்டிப்பார்க்கிறீர்கள். மறந்து விட்டீர்களா நான் முன்னர் கூறியதை, \\உலகில் ஆணாதிக்கம் இருக்கிறது ஆனால் இஸ்லாத்தில் இல்லை என்பதுதான் என் நிலை என்று. இஸ்லாத்தில் இருக்கும் ஆணாதிக்கத்தை நான் உங்கள் கண் முன்னே காட்டுகிறேன்// இப்படி நான் சவால் விடுத்த பின்னர் கள்ள மௌனத்தை அடைகாத்திருந்துவிட்டு, இப்போது சந்தடி சாக்கில் அவிழ்த்து விடுகிறீர்கள் \\உலகில் இருக்கும் மிச்ச ஆணாதிக்காங்களுக்கும் இஸ்லாம் தீர்வாகும்போது அவைகள் அறவே இல்லாமற் போகிவிடும்// என்று. இஸ்லாம் ஒரு ஆணாதிக்க மதமே. எங்கள் ஊரில் ஒரு சொலவடை சொல்லுவார்கள், அறுக்கமாட்டாதவன் இடுப்பில் நூறு கருக்கறிவாள்.

உங்கள் கேள்விகள் எதற்கும் நான் பதில் கூற மறுத்ததில்லை, விலகி ஓடவில்லை. இந்த விவாதத்தின் பாற்பட்டது இப்போது, அப்பாற்பட்டது பின்னர் என்று மட்டுமே கூறுகிறேன். அதில் தவறொன்றுமில்லை. சரி, பின்னர் நான் கூறவிருக்கும் பதில்களை இப்போது ஏன் கூறக்கூடாது? காரணம், உங்கள் போக்கு. பாலியல் குற்றங்களுக்கு எது சரியான தீர்வைக்கொண்டிருக்கிறது எனும் இந்த விவாதத்திலிருந்து நீங்கள் விலகிச் செல்ல விரும்புகிறீர்கள். சுள்ளென்ற வெயிலைப்போல் இந்த விவாதம் உங்கள் முதுகில் உறைக்கிறது. அதனால் அங்கும் இங்கும் இழுத்துச் சென்று தப்பிக்க விரும்புகிறீர்கள். எனவே தான் நான் இந்த விவாதத்திற்கு அப்பாற்பட்டவைகளை விலக்கி, இந்த விவாதத்தை முழுமை செய்யும் நோக்கில் வேறு எதற்கும் இப்போது பதில் கூற மறுக்கிறேன். இந்த விவாதத்தை அதன் தலைப்பிற்குள் நின்று நகர்த்திச் செல்ல உங்களிடம் சரக்கில்லாவிட்டால், முழுக்க நனைந்தபின் முக்காடெதற்கு, வெளிப்படையாக அறிவித்து விடுங்கள். அதன்பிறகு நீங்கள் கேட்க விரும்புவது எதனைப் பற்றியதென்றாலும் அதை தலைப்பாக நீங்களே தேர்வு செய்யுங்கள்.

நான் தயார்.


செங்கொடி