சனி, 31 டிசம்பர், 2011


செங்கொடியிலிருந்து


  1. \\\ நண்பர் பண்ணைக்காரன்
    மார்க்க அறிஞர் பி.ஜே ஆண்கள் காமம் மீறினால் 4 திருமணம் வரை செய்ய்லாம என்கிறார்.திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே என்கிறார்.///
    நெருப்பை பெட்ரோல் ஊற்றியணைக்க முடியுமா!!!
    அதுபோலதான் காமமும்…
  2. \\பண்ணைக்காரன்,
    நெருப்பை பெற்றோல்விட்டு அணைக்க முடியாது .ஆனால் கணவனை மனைவி அணைக்க முடியும் .ஒருவர் அணைப்பில் அடங்காதவர் இருவர்,அலது மூவர் அல்லது நால்வர் அணைப்பில் அடக்கிட முடியும் .அதையும் மீறும் காம வெறியர்களை இஸ்லாம் அனுமதிக்க வில்லை .பத்தாயிரத்தில் ஒருவர் இப்படி இருப்பார்கள் .அவர்களை பொதுவில் வைத்து பார்க்க முடியாது.//
    நண்பரே உங்களுடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்க்கு உங்களைப்போன்று உயர்ந்த அறிவு எமக்கில்லை… அன்பே கட்வுள்,பிரபஞ்ச சக்தியே கடவுள்…

செவ்வாய், 27 டிசம்பர், 2011

ஆராம்பன்னையில் நடந்த மார்க்க விளக்க கூட்டம்

வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்க 

தவ்ஹீத் வாதி யார் ?தவ்ஹீத் வாதி யார் ? 

மதரசா நிகழ்ச்சிகள் மற்றும் அல்தாபி உரை












Time : 1.06 
posted By:Admin



  • மதரசா நிகழ்ச்சிகள் மற்றும் அல்தாபி உரை









    Time : 1.06 
    posted By:Admin










    இடம் : ஆறாம்பண்ணை
    Video update : 25/12/11



சனி, 24 டிசம்பர், 2011

நல்லூர் முழக்கம் என்ற இணையதளத்திலிருந்து ,,,,

இஸ்லாமிய இளைஞர்களே! 

எங்கு செல்கிறீர்கள்?


இன்றைய தமிழ் சூழலில் இஸ்லாமியர்களின் துடிப்பான ஆதரவை பெற்ற அமைப்புகளில் முக்கியமானது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு. 1980களின் பிறகான இஸ்லாமிய மீட்டுருவாக்கப் பணிகளில் பிஜே என்றழைக்கப்படும் ஜெய்னுலாப்தீன் என்பவரின் பங்களிப்பு முதன்மையானது. மத அமைப்பு என்றாலும், பெருமளவில் இளைஞர்களை ஈர்த்ததில் பிஜேவின் பங்களிப்பை யாரும் மறுத்துவிட முடியாது. 1984ல் (என எண்ணுகிறேன்) மதுரையில் ஜெபமணி எனும் கிருஸ்தவ பிரமுகருடன் நடந்த பொது விவாதத்தில் தொடங்கி இன்றுவரை அவரின் உழைப்பும், வளர்ச்சியும் அசாதாரணமானவை. தொடக்கத்தில் இருந்த ஜாக் அமைப்பு முதல் இன்று வரை அவர் இருந்த அமைப்புகளை இருந்தபோது, வெளியேறிய பிறகு என இரண்டாகப் பிரித்துப் பார்த்தால் பிஜே எனும் தனிமனித ஆளுமையை உய்த்துணரலாம். இந்த தனிமனித ஆளுமையே அந்த அமைப்பு பலத்தின் ஆதாரசுருதியாக இருக்கிறது.

அதேநேரம், இந்த தனிமனித ஆளுமை மதத்தின் மீதான பற்றுறுதியாக இஸ்லாமிய இளைஞர்களிடம் பொருள்மாற்றம் செய்து உணரப்பட்டிருக்கிறது. தவ்ஹீத் ஜாமாத்தில் செயல்படும் இளைஞர்களிடம் அரசியல் ரீதியான பேச்சுகளில் ஈடுபடும் போது இதை அவர்கள் மறுக்கிறார்கள். தங்களின் அமைப்பு உறுதிக்கான அடிப்படை மத ஒழுங்கில் தங்கியிருக்கிறதேயன்றி குழுவாதத்திலோ, தனிநபர் வழிபாட்டிலோ அல்ல என்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நேரும் சொந்த அனுபவங்கள் அவர்களின் வாழ்வில் அழுத்தங்களை ஏற்படுத்தும் வரை; தங்களின் மத ஒழுங்கை சமூக அரசியல் அரங்குகளில் உரசிப்பார்ப்பதற்கோ, ஒப்பீட்டு முறையில் மீளாய்வு செய்வதற்கோ ஆகுமான தூரத்தில் அவர்கள் இருக்கப் போவதில்லை. என்றாலும் சில கேள்விகளுக்கு அவர்களை உட்படுத்தியாக வேண்டியதிருக்கிறது. எனவே சில தொடக்கநிலை கேள்விகளை முன்வைப்பதற்காகவே இந்தப் பதிவு.

கீழே இருக்கும் காணொளியின் சில துணுக்குகளைக் காணுங்கள்.










இது ஒன்றும் புதிய காணொளி அல்ல, கமுக்கமான காணொளி என்றும் கூறமுடியாது, அமைப்பில் செயல்படும் பலர் ஏற்கனவே இதைக் கண்டும் இருக்கலாம். அமைப்பில் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் இருந்த பாக்கர் (தற்போது தனியாக இந்திய தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பை நடத்தி வருகிறார்) என்பவர் மீது கூறப்பட்ட பாலியல் அத்துமீறல் முறையீட்டில் என்ன முடிவு எடுப்பது என்பதற்காக நிர்வாகிகள் ஒரு விடுதி அறையில் கூடி விவாதிக்கும் காணொளி இது. பின்னாளில் அவர் அமைப்பை விட்டு நீக்கப்பட்டது, தனி அமைப்பை தொடங்கியது, இன்று அந்த இரு அமைப்புகளும் ஒன்றின் மீது மற்றொன்று வசைமாரி பொழிந்து கொள்வது போன்றவைகளெல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

ஆனால், தமிழகத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம் புகுந்து, பரப்புரை, கேள்விபதில் நிகழ்சிகளின் மூலம் இஸ்லாமிய கோட்பாட்டு வாதத்தை இஸ்லாமிய மக்களின் முனைப்பாக மாற்றுவதற்கு ஒழிச்சலின்றி பாடுபட்ட பிஜே, பாக்கர் பாலியல் விவகாரத்தில் பரிந்துரைக்கும் வழிமுறை இஸ்லாமிய கோட்பாட்டு அடிப்படையிலானது தானா? பாக்கர் பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் புரிந்துள்ளார் என்பதும், அது அமைப்பில் முறையீடாக முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதும், அதனடிப்படையில் அமைப்பு நிர்வாகிகள் முறையிட்ட பெண்ணிடம் விசாரணை செய்திருக்கிறார்கள் என்பதும், பாக்கரின் ஆதரவாளர்கள் அந்தப் பெண்ணை மிரட்டியிருக்கிறார் என்பதும், பாலியல் தவிர்த்து பொருளாதார முறைகேடுகளும் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கிறது என்பதும், அமைப்பு ரீதியான விதிமீறலும் கூட அவர் மீது இருக்கிறது என்பதும் அங்கு நிர்வாகிகளால் மறுக்கவியலாத முறையில் வெளிப்படுத்தப் படுகிறது. இந்த நிலையில் பீஜே பரிந்துரைக்கும் வழிமுறைகள் எப்படி இருந்திருக்க வேண்டும்? ஆனால் அவர், இது வெளிப்பட்டால் அது இயக்கத்தை பாதிக்கும் என்பதால் முடிந்தவரை விவகாரத்தை அமுக்கிவிட முயற்சிக்கிறார். சில நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் வற்புறுத்துவதாலும், பாக்கரே பொதுக்குழுவோ, செயற்குழுவோ அதில் நேர்நிற்க தயார் என்றும் அறிவித்ததாலும் இறங்கி வரும் பிஜே, அப்போதும் பொதுக்குழுவா? செயற்குழுவா? என்பதையும் தன்னுடைய கருத்துக்கு இசைவாக தீர்மானிக்க அறிவுறுத்துகிறார்.

தன் மகள் பாத்திமா திருடியிருந்தாலும் அவள் கையைத் தறிப்பேன் என்கிறார் முகம்மது. ஆனால், ஏராளமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவரை, பாடுபட்டு வளர்த்த இயக்கம் அவப்பெயருக்கு உள்ளாகும் என்பதால் விசயத்தை அமுக்கக் கோருகிறார் பிஜே.

யூதர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிரச்சனை உங்கள் முன் வந்தால் அவர் காஃபிர் என்பதால் நீங்கள் நீதம் தவற வேண்டாம் என்கிறார் முகம்மது. ஆனால், முஸ்லீம்களுக்குள்ளேயான பிரச்சனையில் கூட மூடி மறைக்க முயல்கிறார் பீஜே.

இந்த விவகாரத்தில் பிஜே காட்டிய வழிமுறை சரியா? தவறா? சரி என்றால் எந்த அடிப்படையில்? கட்டிக் காத்த இயக்கம் அவப்பெயரை சந்திக்க நேரக் கூடாது என்னும் உன்னத(!) நோக்கம் அவருக்கிருந்தது என்று நம்புபவர்கள், இயக்கம் மீதும், இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அவர் என்ன மாதிரியான எண்ணம் கொண்டிருந்தார்? இயக்கத்தின் மீதான அவர் கருத்து என்ன? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா. இதோ கீழே உள்ள காணொளி துணுக்கை பாருங்கள்.


மேலே குற்றம் சாட்டப்படும் அதே பாக்கர் பிஜே மீது அரசியல் ரீதியான குற்றச்சாட்டை வைக்கிறார். அதாவது டிசம்பர் ஆறில் அயோத்தி சென்று போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட முடிவை பிஜே கிடப்பில் போட்டுவிட்டர் என்பது பாக்கரின் குற்றச்சாட்டு. இதற்கு பிஜே அளிக்கும் பதிலைக் கவனியுங்கள். மேடையில் மக்களை கவர்வதற்காக கண்டதையும் பேசுவோம், அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியுமா? என்கிறார். யார் கூறுவது? மேடையில் பேசியே இயக்கத்தை கட்டியமைத்ததாக கருதப்படும் பிஜே கூறுகிறார், மக்களைக் கவர்வதற்காக மேடையில் கண்டதையும் பேசுவோம் என்று. என்றால் இந்த இயக்கத்தின் மீதும் அந்த இயக்கத்தில் செயல்படும் உறுப்பினர்கள் மீதும் என்ன மதிப்பை வைத்திருக்கிறார் என்பதை உங்களால் உணர முடிகிறதா? மக்களை ஆட்டு மந்தைகளாக கருதும் ஒரு தலைவனின் செயல்பாட்டில் நேர்மை என்ற ஒன்று இருக்க முடியுமா? அல்லது மக்களை உந்தாற்றலாக கருதாத ஒரு இயக்கம் சரியான நிலைப்பாட்டில் நீடித்திருக்க முடியுமா?

மனைவியைப் பிரிந்து அதிகபட்சம் நான்கு மாதங்களுக்கு மேல் தனித்திருக்கக்கூடாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகிறது. ஆனால் பிஜே உட்பட இஸ்லாமிய அமைப்புகளை நடத்தும் அனைவரின் பொருளாதார அடிப்படைகளும் வெளிநாடுகளில் ஆண்டுக் கணக்கில் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் முஸ்லீம் உழைக்கும் மக்களையே சார்ந்திருக்கிறது. வரதட்சனையை இஸ்லாம் தடுக்கிறது. எனவே வரதட்சனை வாங்கி நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என்று உதார் விடும் அண்ணன்கள்; குடும்பத்தை நீண்ட நாட்கள் பிரிந்திருப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை எனவே, அவ்வாறு பிரிந்திருந்து அனுப்பும் பணத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அறிவிப்பார்களா?

இப்போது கூறுங்கள் இளைஞர்களே! இந்த இயக்கத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பிடிப்பு மதத்தின் மீதான பற்றுறுதியினாலா? ஒரு தனிமனிதரின் ஆளுமையினாலா? எனக்குத் தெரியும் இதைப் படிக்கும் பலர் இந்தக் கேள்விகளை அலட்சியப்படுத்தி புறந்தள்ளிவிடக் கூடும் என்பது. ஆனால், குறுகிய வட்டத்திற்கு வெளியே சிந்திக்கும் திறனுள்ளவர்களின் மனதில் ஒரு வீழ்படிவாகவேனும் இந்தக் கேள்விகள் தங்கியிருக்கும்.

நாம் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகில் நிகழும் எந்த ஒரு செயலும் நம் வாழ்வின் மீது தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது, நம்மைப் பிசைந்து உருக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நம்மீது தாக்கம் செலுத்தும் செயல்களை நம்மால் கவனிக்காமல் கடந்துவிட முடியுமா? விலைவாசி உயர்வில் தொடங்கி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டம் வரை ஒவ்வொன்றின் மீதும் உங்களின் கருத்து என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்து இருக்கலாம். ஆனால் அந்தக் கருத்து தனக்கு சாதகமா பாதகமா எனும் அடிப்படையில் எழுந்ததா?, சரியா தவறா எனும் அடிப்படையில் எழுந்ததா? இதை சரிப்படுத்தாமால் உங்களுக்குள் எழும் எந்தக் கருத்தும், – அது மத ரீதியாக ஏற்படும் கருத்தானாலும் கூட – தவறாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம்.

எந்த விசயத்திலும் தவறான கருத்தைக் கொண்டிருக்கக் கூடாது என எண்ணுபவர்கள் முதலில் செய்ய வேண்டியது, தங்களிடம் இருக்கும் கருத்துக்கள் அனைத்தையும் சமூகத்துடன் உரசிப்பார்ப்பது தான்.

வாருங்கள் இளைஞர்களே!

உங்களின் சமூகப் பார்வை இந்தக் கணத்திலிருந்தே தொடங்கட்டும்.


  1. December 24, 2011 இல் 12:25 பிற்பகல் #


    ////1984ல் (என எண்ணுகிறேன்) மதுரையில் ஜெபமணி எனும் கிருஸ்தவ பிரமுகருடன் நடந்த பொது விவாதத்தில் தொடங்கி இன்றுவரை அவரின் உழைப்பும், வளர்ச்சியும் அசாதாரணமானவை.///
    ////1984ல் (என எண்ணுகிறேன்) மதுரையில் ஜெபமணி எனும் கிருஸ்தவ பிரமுகருடன் நடந்த பொது விவாதத்தில் தொடங்கி இன்றுவரை அவரின் உழைப்பும், வளர்ச்சியும் அசாதாரணமானவை.///
    நீங்கள் எண்ணியதும் மட்டும் தவறல்ல .உங்கள் கட்டுரையே தவறு.1989 இல் ஜெபமணியுடன் விவாதம் நடந்தது.
    ////தன் மகள் பாத்திமா திருடியிருந்தாலும் அவள் கையைத் தறிப்பேன் என்கிறார் முகம்மது. ஆனால், ஏராளமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவரை, பாடுபட்டு வளர்த்த இயக்கம் அவப்பெயருக்கு உள்ளாகும் என்பதால் விசயத்தை அமுக்கக் கோருகிறார் பிஜே.///
    செங்கோடியே ,பீஜெவிடம் நீங்கள் அதிகமாகவே எதிர்பாக்கிறீர்கள் .இன்னும் சொல்லப்போனால் நபி[ஸல்] அவர்களின் நேர்மையை பீஜே அவர்களிடம் எதிர்பார்ப்பது நியாயமன்று. இருப்பினும் நபி[ஸல்] அவர்களைப் போன்றே சொல்லடி ,சொல்லவொண்ணா சொல்லடிகள் பட்டு கல்லடி பட்டவர். இன்னும் அடிகளும் உதைகளும் அல்லாமல் ,1990 இல் நெல்லை ,மேலப்பாளையத்தில் அதுவரையில் பொது கூட்டம் நடத்த முடியாத பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அரங்கை விட்டு வெளியேறி ஒரு தெருவில் இரவில பிரச்சாரகூட்டம் முதலாக நடந்த பொழுது அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தது.இறையருளால் அவர் தப்பித்தார் .அவர் கையில் பலமான வெட்டு விழுந்தது.அந்த சமயத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நூற்றுக் கணக்கானோர் அங்கெ இருந்தும் ஐந்து பேர் மட்டுமே அவருடன் செல்லும் நிலை ஏனெனில் ,தாக்குதல் நடத்தியவர்கள் ,அன்று நெல்லையில் முதலிடத்தில் இருந்த தாதாவின் ஆட்கள். அன்று இரவில் மழை பெய்ய துவங்கியதால் தெருவில் போடப்பட்ட மேடை யில் பேசுவது ரத்து செய்யப்பட்டு அதன் அருகில் சிபகத் என்பவர் வீட்டின் திண்ணையில் வைத்து சொற்பொழிவு ஆற்றினார்.இதனால் முதல் வெட்டு கையில் விழுந்த பொழுது அடுத்த வெட்டில் மைக்கை வைத்து தடுத்து உடன் வீடுஉகுள் நுழைந்து கொண்டார். மேடையில் மட்டும் அந்த கூட்டம் நடந்திருக்குமானால் ,நிலைமை விபரீதமாக இருந்திருக்கும்.அரசு மருத்துவ மனையில் அவரை அட்மிட் செய்த பிறகு அவரை காண சிலர் வந்தாலும் அவர்கள் அனைவரும் அவருக்கு பாதுகாப்பாக அங்கு தங்குவார்கள் எனஎதிர்பார்த்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அன்று நானும் அவருடன் ஒரு வெளியூர்காரர் [திண்டுகளை சேர்ந்தவர் '] அரசு மருத்துவமனயில் உடன் இருந்தோம் இரவில்முழுவதும் உறக்கம் இன்றி கடும் வேதனையுடன் கழித்தார். மேலப்பாளையத்தை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட அன்று இரவில் உடன் இல்லாமல் போனது வேதனைக்கு உரியது.அன்று இரவு முழுவதும் இரும்பு கட்டிலில் கழித்த அவருக்கு மறுநாள் காலை வந்த லுஹா அவர்களுடன் தலையணையும் பெட்சீட்டும் எடுக்க அன்று முன்னனணி தலைவராக இருந்த ஒரு நபரிடம் சென்றபொழுது அவர்தரவில்லை அதன் பின்னர் சிபகத் என்ற சகோதரர் கொடுத்த தலையனைகளுடன் அவரை படுக்க செய்தோம் . இந்த கொலை வழக்கில் என்னை சாட்சியாக இருக்குமாறு வேண்டினார்கள் .நான் இரண்டுகெட்டான் நிலையிருந்த வேளையில் ,அது தெரிந்த அந்த ரவுடி கும்பல் எனது கடைக்கு வந்து என்னை அழைத்து வெட்டியவர்கள் முகவரியைத் தருகிறோம் ,நீங்கள் சாட்சி சொல்லாம் என்று கூறினார்கள். இதனால் அந்த வழக்குக்கு சாட்சி கூட இல்லாமற்போயிற்று.இந்த நிலையிலும் பீஜே அவர்கள் விரக்தி அடையாமல் நெஞ்சுரமாக நின்று தனது கொள்கை பிரச்சாரத்தை தொய்வில்லாமல் செய்தார்.அதன்பிறகு அவரை லெப்பைகுடிகாட்டில் பிரச்சாரம் செய்யவென்று அழைத்து அடித்து உதைத்தார்கள் .இத்தனை வேதனைகளுக்கு இடையில் அவர் கட்டிகாத்த அமைப்பை ,பாதுகாக்க வேண்டும் என்ற அவரது உணர்வு உங்களுக்கு நியாயமாக தெரியவில்லையா? உடன் இருந்தவர்கள் எல்லாம் அவர் மீது பொல்லாங்கு கூறி பிரிந்துவிட்ட நிலையிலும் பல அவதூறுகள் அள்ளி வீசப்பட்டாலும் அதை எல்லாம் பொருட் படுத்தாது நிலைகுலையாமல் நிமிர்ந்து நிற்கும் தலைவரை விட்டு ,புரட்சிகரமான தியாக தலைவரை விட்டு தங்களை போன்று பெயர் மாற்றம் செய்யவே இயலாத நீங்கள் ,இஸ்லாமிய இளைஞர்களை எங்கு அழைக்கிறீர்கள்?
    உங்கள் பாசையில் சொல்ல வேண்டும் என்றால் ,எந்த மேடையிலும் தன்னை பற்றி சுய சொரிதல் விரும்பாத அவர் தனது நலனுக்காக் அன்றி இஸ்லாமிய மக்களுக்காக ,பொது நலனுக்காக மிகைப்படுத்தி பேசுவதாக கூறுவதை தவறு காண முன்பு நீங்கள் இஸ்லாம் பற்றி இந்த வலைதளத்தில் எத்தனை பொய்கள் சொல்லியுள்ளீர்கள்?
    போராட்ட களத்தை ஆர்வப்படுத்தும் நோக்கில் அனைவரும் சொல்லக்கூடிய மேடை பேச்சுகளை பீஜே பேசிவிட்டதால் இஸ்லாமிய இளைஞர்கள் மீள்பார்வை செய்ய வேண்டுமா? உங்களைப்போல அல்லாமல் முல்லைபெரியாறு வில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு அங்கு உள்ள கட்சிகள் கருத்து தெரிவிக்காமல் ஒரே கருத்தை கூறிய அமைப்புதான் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்.

    1. nallurmuzhakkamDecember 24, 2011 இல் 9:29 பிற்பகல் #
      நண்பர் இப்ராஹிம்,
      நீங்கள் கதை சொல்லி இருக்கிறீர்கள். பதில் கூற முன்வந்தால் நாம் தொடர்ந்து பேசலாம்.
    2. S.IbrahimDecember 25, 2011 இல் 9:05 பிற்பகல் #
      செங்கொடி,உண்மைகள் உறுத்தும்பொழுது கதை என்று கூறி சமாளிக்கலாம். நீங்கள் நம்பியது மட்டும் உண்மையாகாது. இராயகரன் என்பவர் எழுதிய ”இந்த மண்ணில் சொர்க்கத்தை படைப்போம் ”கதைகளை கண்மூடித்தனமாக நம்பி சொர்க்கத்தை படைக்க,மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியுள்ள தங்களுக்கு ஹதித் களில் உள்ள அதிசயிக்கத் தக்க நேர்மையான சம்பவங்கள் சொன்னால் உடன் அந்த ஹதித்களை கதை என்று கூறுவீர்கள். அதே சமயத்தில் பொய்யான ,இட்டுக்கட்டப்பட்ட ஹதித்களை சுமந்து கொண்டு முஹம்மது நபி[ஸல்]அவர்களை விமர்சித்து வருவதும் உங்களது வாடிக்கையாக உள்ளது.
      கொண்ட கொள்கைக்காக பெயர் மாற்றம் செய்யவே சோம்பேறியான உங்களுக்கு, TNTJ என்ற ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்க அவர்பட்ட கஷ்டங்கள் கதையாகவே தெரியும் .
      4/1/2009 அன்று சேலத்தில் நடை பெற்ற தவ்ஹித் ஜமாஅத் செயற்குழுவில் வெளியிடப்பட்ட வெளிப்படையான விசாரணைகளுடன் உங்களது மகஇக உட்பட அனைத்து இயக்கங்களையும் ஒப்பிட்டு பாருங்கள்.இது போன்று இங்கு எந்த அமைப்பாவது செயல்பட்டுள்ளனவா?என்று உங்கள் நெஞ்சுக்கு நீதி தேடுங்கள். இரண்டு கோடி மக்களை ரசியா என்னும் நரகை விட்டு இந்த மண்ணிலே சொர்க்கத்தை காட்டிய உங்களது தலைவர் ஸ்டாலினிசத்திற்கு அழைக்கும் முன் இஸ்லாமியர்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரத்தை பற்றி சிந்திக்க வேண்டாமா?புதிதாக இஸ்லாத்திற்குள் இணையும் மக்களின் எண்ணிக்கையை ,உங்களால் உண்மை கம்யுனிசம் என்று நம்பப்படும் கொள்கைக்கு வரும் புதியவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் மலைக்கும் கடுகுக்கும் உள்ள வித்தியாசம். இதை நினைக்க மறந்து என்ன நினப்ப்பில் இஸ்லாமிய இளைஞர் களுக்கு அழைப்பு விட்டீர்கள் என்பது புரிய வில்லை.
      http://www.ethirkkural.com/2011/11/blog-post_29.ஹ்த்ம்ல்
      http://www.ethirkkural.com/2011/01/blog-post.ஹ்த்ம்ல்
      இதை எல்லாம் தாங்கள் கவனத்திற் கொள்ளாமல் இஸ்லாமிய இளைஞர் களுக்கு அழைப்பு விட்டடது சரியா?
      இஸ்லாமியத்தை இப்போதே நுகர்ந்து கொண்டிருக்கும் இளைஞர் களிடம் ,உங்களது நடைமுறைபடுத்த இயலாத கானல் நீராக தோணும் கம்யுனிசத்திற்கு அழைக்கும் முன்னர் ஒருமுறை சிந்தித்து இருக்க வேண்டாமா?
      எண்பதுகளில் வரதட்சணை வாங்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்தோம் அதில் வெற்றி கண்டு இப்போது வரதட்சணை வாங்கும் ஆண்களை திருமணம் செய்யாதீர்கள் என்றோம் .மணமகன் தான் விருந்து வைக்க வேண்டும் என்ற நபி வழியை அமல்படுத்தினோம் .அதிலும் வெற்றிகண்டு வரதட்சணை வாங்கும் திருமணம் களில் கலந்து கொள்ளாதீர் என்று நடைமுறைபடுத்தி வருகிறோம்.அதைப்போலவே இப்போது வெளிநாடுகளில் வேலை செய்வதைவிட உள்நாட்டு வேலையே சிறந்தது என்று வற்புறுத்தி வருகிறோம் .இங்கே இட ஒதுக்கீடு போராட்டம் நடத்தி வருகிறோம் ,ரங்கநாத் கமிசன் பரிந்துரையின் படி முஸ்லிம்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு தந்து மக்களும் அதை அனுபவிக்கும் நாள்கள் வரத்துவங்கும் வேளைகளில் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வேலைக்கு செல்லாதவர்களிடம் நன்கொடை பெற மாட்டோம் என்னும் முடிவு எடுக்க செய்வார்கள் .மில்லியன் ஆண்டுகால கம்யுனிசத்திற்கு பொறுமையாக அழைக்கும் தாங்கள் ஓர் பத்து ஆண்டுகள் பொறுக்கக் கூடாதா?

      ///மேடையில் மக்களை கவர்வதற்காக கண்டதையும் பேசுவோம், அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியுமா? என்கிறார். யார் கூறுவது? மேடையில் பேசியே இயக்கத்தை கட்டியமைத்ததாக கருதப்படும் பிஜே கூறுகிறார், மக்களைக் கவர்வதற்காக மேடையில் கண்டதையும் பேசுவோம் என்று. என்றால் இந்த இயக்கத்தின் மீதும் அந்த இயக்கத்தில் செயல்படும் உறுப்பினர்கள் மீதும் என்ன மதிப்பை வைத்திருக்கிறார் என்பதை உங்களால் உணர முடிகிறதா? ////
      மேடையில் சில விசயங்களை மிகைப்படுத்தி பேசவேண்டியது வரும் . மக்களை ஆர்வமூட்டுவதர்க்காக சில பொய்களை சொல்லவேண்டியது வரும்.  தமிழகத்தில் டிசம்பர் ஆறில் அதிகமான மக்களை திரட்ட ,நாம் அயோத்திக்கு சென்று போராடுவது போல் கூறி பிறகு சென்னை போன்ற இடங்களுக்கு அழைத்து போராட்டம் நடத்துவதையே அங்கே கூறுகிறார். அவர் தவறான நோக்கத்தில் சொல்வதாக இருந்தால் வீடியோ எடுத்து வெளியிடுவாரா? மேலும் மேடையில் மட்டும் பேசி இயக்கத்தை அவர் வளக்கவில்லை .அடி உதைகளும் வெட்டுகளும் மற்றும் அவருடைய செயல்பாட்டின் வெளிப்பாடாக அமைந்த நேர்மை ,எளிமை, போன்றவைகளே அவருக்கு வெற்றியை தந்தது. சூழ்நிலை இன்று அவரை மக்களிடமிருந்து பிரித்துவிட்டதே தவிர அவரின் எளிமைக்கு அவரே உதாரணம். அவரது பிரிண்டிங் பிரசில் கம்போசிங் முதல் பல வேலைகளை அவரே செய்து வந்தார். இன்று பல இளம் அறிஞர்களிடம்  போனில் மார்க்க சந்தேகங்களை கேட்டால் கூட அட்டென் பண்ணுவது அரிது. ஆனால் பீஜே அவர்கள் மார்க்க கேள்விகளுக்கு பத்திரிக்கையில்,மேடையில் மட்டும் அல்ல ,கடிதங்களிலும்  பதில் அளித்து வந்தார்.இன்னும் சொல்லப்போனால் அவர் பணத்துக்கு அடிமையாகவில்லை 
       ///மக்களை ஆட்டு மந்தைகளாக கருதும் ஒரு தலைவனின் செயல்பாட்டில் நேர்மை என்ற ஒன்று இருக்க முடியுமா? ///
      மக்களை ஆட்டு மந்தையாக கருதினால் மொத்த சமுதாயத்திற்கும் மாற்றமான கொள்கையில் இத்தனை காலம் அவரால் நீடித்திருக்க முடியுமா?சவுதியிலிருந்து இவர்களுக்கு பணம் வருகிறது என்ற மற்றவர்களின் குற்றசாட்டி வந்த நிலையில் மத்ஹப் விட்டு விலகாமல் ,மவ்லிது,தரிக்கா ,வரதட்சணை ஒழிப்பு போன்றவற்றை மட்டும் சொற்பொழிவு ஆற்ற பீஜே வை அழைத்தோம் .ஆனால் அதன்பிறகு எனக்கும் பணம் வருவதாக புரளியை கிளப்பிவிட்டார்கள்.அப்போதுதான் உண்ம்மை புரிந்தது.பல எதிர்ப்புகளுக்கிடையே இயக்கத்தை வளர்த்தவரை எப்படி ஆட்டு மந்தைபோல் அந்த இயக்கத்தினரை கருத முடியும்? அவரது எதிர்ப்பாளர்களே ,பீஜேவுக்கு எதிராக ஆட்டு மந்தை போல் மக்களை பாவித்து பீஜே மீது அவதூறுகளை அவிழ்த்துவிட்டனர். இன்று வரை பீஜே மீது சொல்லப்படும் அவதூறுகளை ; படித்தவர்கள் கூட அப்படியே நம்புகிறார்கள். 
       ///மக்களை உந்தாற்றலாக கருதாத ஒரு இயக்கம் சரியான நிலைப்பாட்டில் நீடித்திருக்க முடியுமா?///
      மக்களை உந்தாற்றலாக கருதிய ஜனதா கட்சி சரியான நிலைப்பாட்டினால் உடைந்து நொறுங்கி இல்லாமற்போனது. ஆனால் மக்களை ஆட்டு மந்தையாக கருதிய காங்கிரஸ் நீடித்திருக்கிறது. அரசியலில் மக்களை மாட்டு மந்தையாக கருதினாலே நீடிக்க முடியும். ஆனால் சமுதாய சேவை இயக்கங்கள் மக்களை உந்தாற்றலாக கருதவில்லைஎன்றால் நீடிக்க இயலாது .உண்மையே .அதனாலே பீஜே அவர்கள் சரியான நிலைபாட்டிருக்காக பல இயக்கங்கள் காணவேண்டியது ஆயிற்று. சரியான் நிலைபாட்டில் உறுதி இல்லைஎன்றால் ,ஒரே இயக்கத்திலே இருந்திருப்பார்.