வியாழன், 27 டிசம்பர், 2012

திங்கள், 26 நவம்பர், 2012

கூட்டு குர்பானிதோல் விற்ற பணம்



ஆறாம்பண்ணை தவ்ஹித் ஜமாஅத் கிளை சார்பாக நடத்திய கூட்டு குர்பானி யில் மாடு ,ஆடு தோல் விற்ற பணம் 22000/=த்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நடத்தும் முதியோர் இல்லத்திற்கு ரூ.10000/=வழங்கப்பட்டது .23.11.1012 அன்று அந்த பணத்தை தூத்துக்குடி மாவட்டத் தலைமையகத்தில் வைத்து ஆராம்பண்ணை கிளை தலைவர் முஹம்மது சலீம் ,மாவட்ட தலைவர் அப்பாஸிடம் வழங்குகிறார்.


திங்கள், 12 நவம்பர், 2012

கிளிப்பிள்ளை முஸ்தபா பதில் தர மறுக்கிறார்.


Ibrahim Sheikmohamed asaina7g@gmail.com
Oct 4
to nicemusthafa
பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம் ,,,,
எஸ்.இப்ராஹீம் ,
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் 
ஆறாம்பண்ணை .
அன்பு சகோதரர் முஸ்தபா ஆலிம் அவர்கட்கு ,அஸ்ஸலாமு அலைக்கும் 
                                               பீஜே அவர்களுடன் நீங்கள் நடத்திய இரண்டு நாள் விவாதத்தில் கலந்து கொண்டேன்.அவ்விவாதத்தில் இரண்டு வருடங்களாக போராடி அழைத்து இன்று இங்கு அமர வைத்துள்ளேன் .நான் கேட்பதற்கு பதில் இல்லாமல் மற்றொன்றை விவாதித்திக் கொண்டிருப்பது சரியா என்ற முறையில் ஆதங்கப்பட்டீர்கள்.லாக்கின்ன,லிதஸ்லூவ ,லி யப்லூவ ,வ நப்லூவ போன்ற சொற்களில் உள்ள பிழைகளை கூறுமாறு வற்புறுத்தி வந்தீர்கள்.
நீங்கள் இரண்டு வருடங்களாக போராடியது அவர்களிடமிருந்து பிழைகளை தெரிந்து அதன் பிறகு நிருபிக்காவா?
பீஜே அவர்கள் 19 பிழைகளை தனது தர்ஜுமாவில் வெளிப்படையாக அறிவித்து விட்டார்.இரண்டு வருடங்களாக அழைத்தீர்கள் என்றால் அதற்கு முன்பே அப்பிழைகள் பற்றி ஆய்வு செய்து வருகிறீர்கள் என்று பொருள்.பீஜே வுக்கே பாடம் எடுப்பதாக அலட்டிக் கொண்ட நீங்கள் ,பலவருடங்களாக ஆய்வு செய்த பிழைகள் பற்றி மக்கள் மத்தியில் போட்டு உடைக்காமல் ,அவர்களிடமே அதிலுள்ள பிழைகளை கூறுங்கள் என்று கெஞ்சி கொண்டிருந்தது எங்ஙனம் சரியாகும்?
நீங்கள் இரண்டு வருட போராட்டத்திற்கு பின்னர் அழைத்து வரப்பட்டவர்களிடம் டாஸ் கூட போட விடாமல் ,நீங்களாகவே முதலில் 19 பிழைகளையும் மக்கள் மத்தியில் வைத்து அவற்றில் பிழைகள் இல்லை என்ற உங்களது வாதங்களை நிறுவியிருக்க வேண்டும் .அதன் பிறகு அவர்கள் வைத்த நுஞ்சி என்ற சொல்லிலும் பிழைகள் இல்லை என்று நிருபித்திருக்க வேண்டும்.ஆனால்  ஆரம்பத்தில் தாங்கள் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக அவர்கள் நுஞ்சி பற்றி பேசியபொழுது அதற்கு விளக்கம் இல்லாமல் நஞ்சி போன உங்களுக்கு நீங்கள் வேண்டியவாறு லாக்கின்ன என்ற சொல்லில் உள்ள பிழை பற்றி கடைசியாக கூறினார்கள் .உங்களுக்கு பலவருட ஆய்வு போதாது என்று இரவில் கூடுதலாக நேரம் தந்த பிறகும் மறுநாளும் உங்களால லாகின்ன வில் பிழை இலை என்பதை நிறுவ முடியவில்லை.முட்டுக்கட்டைகளை வைத்தே  வீடுகட்ட முயற்சித்தீர்கள்.வீடு கட்டும் வேளையில் முட்டுக்கட்டை கொடுத்து பின்னர் எடுத்து விடுவார்கள் ஆனால் தங்களோ முட்டுகட்டைகளை வைத்தே வீடுகட்ட முயல்வது சரியா? அடுத்து பீஜே தரப்பினர் நப்லூவ என்ற சொல்லை சொன்னதும் அங்கிருந்து லாகின்ன அப்புறம் பார்ப்போம் என்று நப்லூவ வுக்கு வந்தீர்கள் .அதோடு லாகின்ன முடிந்தது.திரும்ப லாகின்ன பற்றி பேசவே இல்லை .நுஞ்சி பற்றி பேசவில்லை.அப்படியெனில் முதலில் வைக்கப்பட்ட இரு பிழைகளும் பீஜே வால் பிழைகள் என்று நிருபிக்கப்பட்டது என்பதே விவாதம் வெளிப்படுத்தும் உண்மையை உங்களால் மறுக்க முடியுமா?
அடுத்து முதல் கட்டமாக யூதர்கள் தான் குர்ஆனில் எழுத்து பிழை உள்ளதாகவும் அதன் பின்னர் பீஜெதான் அவ்வாறு கூறியிருப்பதாகவும் வாதம் வைத்துள்ளீர்கள்.அவ்வாதம் தவறு என்று பாக்கியான் முதல் ஆயிசா [ரலி] அவர்கள் வரை கூறியுள்ள கருத்துக்கள் எடுத்து வைக்கப்பட்டு உங்கள் வாதம் தகர்க்கப்பட்டது.அதை ஒப்புக் கொண்டிருப்பதுதான் நாகரிகம் .ஒப்புக் கொண்டதை பகிரங்கமாக சொல்லாவிட்டாலும் மவுனியாக இருந்து இருக்க வேண்டும். ஆனால் ஆரம்பம் முதல் கடைசி வரை சஹாபாக்கள் மீது அபாண்டம் சொல்லிவிட்டார்கள் என்று அபாண்டமாக முழங்கியதும் உங்களது மனசாட்சி ஏற்றுக் கொள்கிறதா?
Ibrahim Sheikmohamed asaina7g@gmail.com
Oct 14
to mohamed
பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம் ,,,,,,

எஸ்.இப்ராஹீம் ,
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,
ஆறாம்பண்ணை .

அன்பு சகோதரர் முஸ்தபா ஆலிம் அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் .
                                                      
                                           நான் உங்களுக்கு முன்பு மெயில அனுப்பி போனிலும் விளக்கம் கேட்டேன்.நீங்கள் அதற்கு குர்ஆனை பார்த்து வாசிக்க சரளமாக தெரியுமா?வாசிக்க தெரியாதவரா? இல்லை ஆலிமா ? என்று கேட்டீர்கள்.உங்கள் தரப்பில் பார்வையாளராக அனுமதித்தவர்களை இந்த கேள்விகள் கேட்டு அதன் அடிப்படையில்தான் உங்களது வாதங்களை கேட்க அனுமதி கொடுத்தீர்களா?
இல்லையெனில் உங்களது பில்டப் வார்த்தைகளை கேட்டு கை தட்ட அழைத்து வந்தீர்களா? 

நீங்கள் நான் கேட்டதற்கு எனக்கு விளக்கம் அளித்துவிட்டு அதிலிருந்து கேள்விகள் கேட்டிருந்தால் எனக்கு புரிந்துள்ளதா ?இல்லையா என்பது தெரிந்துவிடும் .அதற்கு தாங்கள் தயங்குவது ஏன்?எனக்கு அரபு தெரியாது .ஆனால் அரபுமொழியில் பீஜே பிழை என்று கூறியுள்ளதை அவைகள் பிழை இல்லை என்று விளக்கம் அளித்தால் அதை புரிய முடியும் .இது போன்று உங்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியாவிட்டாலும் சொல் என்பதற்கும் வார்த்தை என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் நீங்கள் அச்சொற்களை பயன்படுத்தினாலும் அதை நான் விளக்கினால் உங்களுக்கு புரியும்.

னுஞ்சி என்ற சொல்லில் உள்ள பிழையை உங்களால் மறுக்க முடியவில்லை .இரண்டு நூன் வந்தால் ஒரு நூனை விட்டுவிட்டு எழுதுவது பழையகாலத்து நடைமுறை என்றால் நுன்சிய என்ற சொல்லிலும் நனசஹு என்ற சொல்லிலும் இரண்டு நூன்கள் வருகிறதே என்பதற்கு அது கிராதுக்காக அங்ஙனம் எழுதினார்கள்என்று வாதித்தீர்கள் 
உங்களது வாதப்படியே நசஹு, நுசிய என்று எழுதி அதன் பின்னர் நூன் ஐ சிறிதாக போட்டிருக்கலாமே.
மேலும் நீங்கள் பழையகாலத்து எழுத்து சட்டம் என்று சொல்லிவிட்ட அதற்கு ஆதாரமாக தகவல் தரும் நூலை கூறினீர்கள் சட்டம் என்றால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று இருக்க வேண்டும் .அப்படி சொல்லாமல் இங்ஙனம் எழுதப் பட்டுள்ளது என்று தகவல் ஆக தருகிறார்,இமாம் மாலிக் அவர்களும் எங்ஙனம் எழுதப் பட்டுள்ளதோ அவ்வாறே எழுதுங்கள் என்கிறார்.இங்கு மாலிக் அவைகள் பிழை இல்லை என்று மறுக்கவில்லை .
லில்லதி என்ற சொல்லும் ஒரு இடத்தில் மட்டும் அளிப் சேர்க்கப் பட்டு எழுதப்பட்டிருப்பதை அது பிழை தான் என்பதற்கு ஆதாரம் என்பதை நான்கு இடத்தில் அவ்வாறு இருக்கிறது என்ற உங்களது வாதம் மிகத் தெளிவாக நிருபிக்கிறது 
குர்ஆனில் எழுத்து பிழைகள் இருக்கிறது என்பதை இவர்கள் ஆய்வு செய்யாமல் ஈ அடிச்சான் காப்பியாக எழுதியுள்ளதாக ஜமாலி கடைசியில் கூறுகிறார்.யூதர்களை தவிர வேறு யாரும் பிழைஉள்ளது என்று யாரும் சொல்லவில்லை என்றால் யாரைப்பார்த்து காப்பி அடித்தார்கள் ?
முன்பக்கம் பின் பக்கம் தாருங்கள் என்று சொன்னவர் நான்கு பக்கங்கள் கொடுத்த பின்னரும் ஏன் வாசிக்கவில்லை?
786 ஐ கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டே 786 விமர்சனத்திற்கு சிரிக்கும் அளவில் நான் இல்லை.ஆதலின் நீங்கள் விளக்கம் தருவீர்களானால் அதில மிக தெளிவாக புரிந்து கொள்ள எனக்கு இறைவன் அறிவைத் தந்திருக்கிறான் .ஏற்கனவே நீங்கள் கிளிப் பிள்ளைக்கே பாடம் சொல்லிகொடுக்கும் திறனுடையவர்.அதையாவது நிருபியுங்கள் 
                                                            நன்றிகள் .                                                         அன்புடன் ,
                                                                                                                                              எஸ்.இப்ராஹீம்
Ibrahim Sheikmohamed asaina7g@gmail.com
Oct 16
to mohamed
பிஸ்மில்லா  ஹிரஹ்மாநிர் ரஹீம்,

எஸ்.இப்ராஹீம் ,
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாஅத் 
ஆறாம்பண்ணை .

அன்பு சகோதரர் முஸ்தபா ஆலிம்  அவர்கட்கு ,அஸ்ஸலாமு அலைக்கும் .


நான் உங்களுக்கு இதுவரை இரண்டு மெயில்கள் அனுப்புயுள்ளேன் தங்களிடம் எந்த பதிலும் இல்லை ,ஏற்கனவே போனில் பேசிய பொழுது நாங்கள் சிடி வெளியிட்ட பிறகு விளக்கம் தருவதாக கூறினீர்கள் .நீங்கள் வெளியிட்டுவிட்டீர்களா? பீஜே அவர்கள் ஆன்லைன் பீஜே வில் ஒரு வாரத்திகு முன்பே வெளியிட்டு உள்ளார்கள் .அதில் ஏதும் கூடுதல் குறைவு உள்ளதா? அவ்வாறெனின் நீங்கள் அதை வைத்தே விளக்கம் தரலாமே ,கிளிபிள்ளைக்கே விளக்கம் அளிக்கும் விரிவுரை  மார்க்க அறிஞர் பெருந்தகையே! ,இந்த அவாமுக்கு கொஞ்சம் விளக்கம் தர மறுப்பது மார்க்க முரணாகாதா?
                                                                                                                         அன்புடன் ,
                                                                                                                        எஸ்.இப்ராஹீம் 
Ibrahim Sheikmohamed asaina7g@gmail.com
Nov 3 (9 days ago)
to mohamed
பிஸ்மில்லா ஹிரஹ்மா நிரஹீம் ,,,,,,,,                                                            3.11.2012

எஸ்.இப்ராஹீம் .,
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத்,
ஆறாம்பண்ணை .


அன்பு சகோதரர் முஹம்மது முஸ்தபா ஆலிம் அவர்கட்கு ,அஸ்ஸலாமு அலைக்கும் .

                                            தங்களிடம் போனில் மீண்டும் தொடர்பு கொண்ட சமயத்தில் உங்களுக்கான பதிலைத்தான் ரெடி பண்ணிக் கொண்டு இருக்கிறேன் .விரைவில் பதில் தருகிறேன் என்று கூறி பல நாட்கள் சென்றுவிட்டன .ஆக பதில் கொடுத்து ,தங்கள்  மீதுள்ள கடமையை காலம் தாழ்த்தாது செய்யுமாறு வேண்டுகிறேன் .
                                                                          அன்புடன் ,
                                                                             எஸ்.இப்ராஹீம் 
இப்போது போன் பண்ணினாலும் அட்டென் பண்ண மறுக்கிறார்.பலமுறைகள் போன் பண்ணியும் அவர் பதில் தரவில்லை .முஸ்தபாவுக்கு மார்க்கம் பற்றி உங்களிடம் கேட்டால் பதில் சொல்லாதவர்களுக்கு நெருப்பிலான கடிவாளம் இடப்படும் என்ற ஹதீதை உங்களுக்கு ஞாபகப்படுத்தி கொள்கிறேன் 

வெள்ளி, 2 நவம்பர், 2012



நந்தன் ,செங்கொடி யில் எழுத விருப்பமில்லை .நீங்கள் விரும்பினால் இங்கு வந்து விவாதித்துக் கொள்ளுங்கள்
///சொத்தை,வீடை,தோட்டத்தை,பங்குவைத்ததை போன்று தங்கள் மனைவியையும் ஓடிவந்த சஹாபிகளுக்கு அவர்களுக்கு பிடித்தவர்களை விவாகரத்து செய்து மணமுடித்து வைத்த கதை உங்களுக்கு ஹதீதாக சொல்லப்படவில்லையா?
உங்களுக்கு இது கிறுக்குத்தனமாக தெரியவில்லை போலும்!////


கம்யுனிசத்தில் திருமண வாழ்க்கை என்பது ஆணாதிக்கத்தனம் .எனவே அங்கு திருமணம் இன்றி எங்ஙனம் வாழவேண்டும் என்று கேட்டு பாருங்கள் .அந்த கிறுக்குத்தனத்தை படித்தீர்களானால் இந்த ஹதித்கள் சொல்லும் விஷயங்கள் புரியும்.

நீங்கள் உங்களுடைய இப்போதைய மனோபாவத்துடன் தவிர்க்க முடியாத ,நிர்பந்தமான காலகட்டத்தில் நடந்ததை ஒப்பு நோக்காதீர்கள்.
ஒருவரை அறிமுகமாகும் வேளையில் ,
உங்களுக்கு மனைவி இருக்கிறாரா?
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா?
உங்களிடம் வீடு ,கார் இருக்கிறதா?

என்றெல்லாம் கேட்கிறோமே ,இதெல்லாம் ஆணாதிக்கமா?

அந்நபர் ,எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர் என்று கூறினார் என்று வைத்துக் கொள்வோம் .இந்த சமயத்தில் உங்களது உள்ளத்தில் ஏற்படும் தாக்கமும்  ,
இதே கேள்விக்கு ;ஒரு பெண் ,எனக்கு இரண்டு கணவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களது உள்ளத்தில் ஏற்படும் தாக்கமும் வேறுபடுமா?வேறுபடாதா? 
அப்படியெனில் அதற்கு பெயர் ஆணாதிக்கமா?


////முகம்மதின் வளர்ப்பு மகன் ஸைது தனது மனைவியை விவகாரத்துச் செய்து முகம்மது நபிக்கே திருமணம் செய்துவைத்த நிகழ்வும் உள்ளது.////
நடந்த சம்பவத்தை தவறாக விளங்கிக் கொண்டு இவ்வாறு கூறியுள்ளீர்கள்.
சைதுவுக்கும் அவரது மனைவிஜைனபுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருந்து வந்தது .இதனால் அவர்கள் செய்வதறியாது திளைத்தனர் .
அதனாலேயே அவர்கள் விவாகரத்து செய்து கொள்ள முஹம்மது நபி[ஸல்] அவர்கள் அனுமதித்தார் .ஜைனப் முஹம்மது நபி[ஸல்] அவர்களின் மாமி மகளாவர் .அவர் அதன் பின்னர் முகம்மதுநபி[ஸல் அவர்களை விரும்பவே அவரை திருமணம் செய்து கொண்டார்கள் .

வியாழன், 11 அக்டோபர், 2012


PJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்

 
எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும்மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!


நான் பிறந்த இடமான, பாபநாசம்-பண்டாரவாடையில், இமாம் அபூ ஹனிபா ரஹ் அவர்களை பழிக்கும் கொடியவராக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். பின்னர், நான் படித்து வளர்ந்த இடமான, அதிராம்பட்டினத்தில்... இமாம் ஷாஃபி ரஹ் அவர்களை அவமானப்படுத்தும் இஸ்லாத்தின் வில்லனாக மீண்டும்  எனக்கு சொல்லப்பட்டவர் இவர். ஊருக்கு நாலு பேர், இப்படி 'நஜாத்துக்காரன்' என்று இருந்த அக்காலத்திய அவரின் ஆதராவளர்களை 'அஞ்சாம் மதஹப்'காரர்கள் என்று சொல்லி, பள்ளியின் வாசலில், 'நான்கு மதஹபுகளில் ஒருவரையாவது பின்பற்றாதவருக்கு இப்பள்ளியில் அனுமதி இல்லை' என்று பலகை மாட்டி... பள்ளியை விட்டு, தள்ளிவைத்து... இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக எனக்கு காட்டப்பட்ட போது... அத்தோடு 'வேண்டாம்பா இந்த விரோதிகள் சகவாசம்' என்று மெய்யாலுமே மூடத்தனமாக நான் நம்பி... என்பதுகளின் இறுதியில் இவர்களை வெறுத்து ஒதுங்கி விட்டேன்.

ஆனால்.... அதே ஆண்டுகளில்... வெறும்  2 MP மட்டுமே வைத்து இருந்த பாஜக, பாபர் மஸ்ஜிதை இடிக்கும் ஓட்டுப்பொறுக்கி அஜன்டாவை கையில் எடுத்தவுடன்... 88 MPக்களுடன் ஆளுங்கட்சி கூட்டணி என்றாகி... மீண்டும் பாபர் மஸ்ஜித் இடிப்பு ரத யாத்திரை மூலம் 120 MP க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாகி... 'கரசேவை' என்ற சட்டத்துக்கு எதிரான மறைமுக பயங்கரவாதம் செய்து பாபர் மஸ்ஜிதை இடித்தனர். ஆனால், இதன் பிறகு... ராமர் கோவில் கட்டும் ஆர்வத்திலிருந்து அவர்களின் ஆதரவாளர்களை ஆட்சிக்கு வந்தவுடன் அதுபற்றி பார்ப்போம்... என்று திசை திருப்பி... ஹிந்துத்துவா வெறியூட்டப்பட்ட மக்களை தக்க வைப்பதற்கு பாஜக எடுத்த... அடுத்த அரசியல் ஓட்டுப்பொறுக்கி ஆயுதம் தான் 'பொது சிவில் சட்டம்'. இது எந்த அளவு முட்டாள்த்தனமானது என்று இப்போது எல்லாருக்கும் தெரியும். அப்போது, இதுபற்றி அந்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மிகச்சிலருக்கே இருந்தது. அதனால்தான் அவர்களுக்கு 161 அப்புறம் 182 சீட் எல்லாம் வந்தது.

இந்நிலையில் ஒருநாள் (1993 /94 என்று நியாபகம்) அதிராம்பட்டினத்தில் ஒரு சம்பவம் நடந்தது. செக்கடிப்பள்ளி எதிரே வற்றி இருந்த செக்கடி குளத்திடலில் மவுலவி பீஜே வின் பொதுக்கூட்டம். மேடை லைட் எல்லாம் முதல் நாளே போட்டு விட்டார்கள். ஊர் முழுக்க போஸ்டர். 'PJ பேசுகிறார்' என்று. 'என்ன பேசுகிறார்... எதைப்பற்றி பேசுகிறார்' என்பதெல்லாம் யாருக்கு வேணும்...? 'அதெப்படி நம்ம எதிரி நம்ம இடத்துக்கு வந்து பேசலாம்...?' அவ்ளோதான் மேட்டர். விளைவு...? எல்லா போஸ்டரும் கிழிக்கப்பட்டது. அடுத்தநாள், காலையில்... பரபரப்பான தகவல் பஸ் ஸ்டாண்டில் நியூஸ் பேப்பர் வாங்கும்போது நண்பர்களால் பரிமாறப்பட்டது. அதாவது... PJ மீட்டிங்கிற்காக போடப்பட்டு இருந்த மேடை உடைக்கப்பட்டு... கீற்று பிய்த்து எறியப்பட்டு...  மைக் செட் லைட் எல்லாம் நொறுக்கப்பட்டு... சொற்பொழிவு இன்று நடத்த முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டு விட்டது என்ற நியூஸ்..!

'இந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பேச்சு காதில் விழாத பாதுகாப்பான(?) தூரத்தில்தான் இருக்கேன் நான்' என்ற நிம்மதியான எண்ணத்தில் இருந்த எனக்கு... வந்தே விட்டது அவரின் உரை எனது காதுக்குள்..! இது எப்படி..? ஆமாம்.! அந்த மீட்டிங் கேன்சல் ஆக வில்லை..! இடம் தான் கேன்சல் ஆகியது. எனவே, மீட்டிங் எங்கள் வீட்டு அருகே இருந்த 'சாரா கல்யாண மண்டபத்தில்' மாற்றப்பட்டு அங்கே நடந்தது.  நான் என்னதான் காதை பொத்திக்கொண்டு இருந்தாலும்... வீதி எங்கும் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் எனது செவிப்பறையை தட்டி எனது சிந்தைக்குள் சென்ற அவர் சொன்ன விஷயம் இதுதான்...........

"நான் என்ன, இவர்களை எதிர்த்தா பேச வந்துள்ளேன்..? நான் எதுக்கு இங்கே வந்து இருக்கேன்... எதைப்பற்றி பேச வந்து இருக்கேன்... இதுகூட தெரியாமல்... இப்படி மேடையை கலைத்து இடைஞ்சல் செய்தால் இதுக்கு என்ன அர்த்தம்..? நாளை பேப்பரில் நம்ம எதிரிகள்... என்ன எழுதுவாங்க தெரியுமா..? 'அதிராம்பட்டினத்தில் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பேச வந்தவரின் மேடை உடைத்து சட்டத்துக்கு தம் ஆதரவை தெரிவித்தனர்.' இப்படி ஒரு அவப்பெயர் உங்கள் ஊருக்கு தேவையா...? நமக்குள் இருக்கும் மார்க்கம்  பற்றிய வேறுபாட்டையா காரணமாக சொல்வார்கள்..? நான் என்ன சொல்றேன்னு புரியுதா..?" என்றார்.

அதுதான்... நான் அவர் விஷயத்தில் யோசிக்க ஆரம்பித்ததன் முதல் படி. அந்த பேச்சை முழுதாக செவி தாழ்த்தி சொற்பொழிவை கேட்க ஆரம்பித்தேன். 'அடடே... நல்லாத்தானே பேசுறார். நேர்மையான கேள்விகள்தானே இவை. எவ்ளோ பெரிய விஷயம் சொல்ல வந்து இருக்கார்..! ஒருவேளை மக்கள் இவர் மேலே சொல்றது தப்பா இருக்குமோ..? என்று நினைத்துக்கொண்டு... அத்தோடு அவரை மறந்தும் விட்டேன்..! காரணம், எனக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஆரம்பகால இன்புட் அவரை அந்நியராக்கி வைத்திருந்தது. ஆனால், இரண்டு நாள் கழித்து... அவர் சொன்ன மாதிரித்தான் தினமலரில் பெட்டி செய்தியாக ஓர் ஓரத்தில் வந்தது. "பொது சிவில் சட்டம் : அதிரை முஸ்லிம்கள் ஆதரவு". :-)

இதேகாலகட்டத்தில்... பல வருடங்களாக மத்ஹப் சட்டங்களை படித்து (ஃபிக்ஹின் கலைக்களஞ்சியம் : ஹனபி & ஷாபி) அதில் உள்ள குளறுபடிகளை கண்டு நெருடலாக இருந்து... 'ஒரே விஷயத்தில், ஹனபி ஒன்றாக ஷாபி வேறாக இருந்த மசாயில்களில் எது மார்க்க ரீதியில் நபி ஸல் அவர்களின் சரியான செயலாக இருக்கும்' என்று குழம்பி தத்தளித்துக்கொண்டு இருந்து... 'இரண்டுமே சரிதான் தம்பி' என்ற பதிலை இருவரிடமும் பெற்று... 'அப்படின்னா... இரண்டில் எது சிறந்ததோ அதை மட்டும் நான் எடுத்து இரண்டிலிருந்தும் மிக்ஸ் பண்ணி பின்பற்றலாமா' என்றாலும் கூடாதாம்... ஏதாவது ஒன்னை மட்டுமே பின்பற்றனுமாம்... இறுதியில்... அந்த மதஹப் சட்டங்களில் இது நிச்சயம் பிழையானவையாகத்தான் இருக்கும் என்று சுயமாக சிந்தித்து ஒவ்வொன்றாய் வெறுத்து... (உதாரணம்:- திருட செல்லுவதற்கு முன்னர் திருடன் ஓதவேண்டிய துவா) அடுத்து எப்படி, எந்தப்பக்கம் செல்வது, என்ன செய்வது, என்று குர்ஆன் தர்ஜுமாவை மட்டும் படித்துக்கொண்டு இருந்தபோதுதான்... 

தூத்துக்குடியில் நான் டிவி வாங்கிய பிறகு... (அதற்கு முன்னர் எங்கள் வீட்டில் டிவி இல்லை) ஒருநாள், விஜய் டிவியில் ஒருவரின் சொற்பொழிவை எதேச்சையாக 'பார்க்கும்' வாய்ப்பு ஏற்பட்டது. 'அடடே... எல்லாம் சரியா சொல்றாரே..! மத்ஹபில் தப்பா இருக்கும் இது... உண்மையில் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று நாம் நினைச்ச படியே நம்ம மார்க்கத்திலும் முன்னமேயே இருக்கே...' என்று வியப்போடும் மனநிறைவுடனும் நன்றியுணர்வோடும் அவரைப்பார்த்துக்கொண்டு இருந்த போதுதான்... நண்பன் அதிரை ஹாரிஸ் சொன்னான்... 'இவர்தாண்டா அவர்' என்று..!

அதற்கு முன்னர் 13 வருடங்களாக அவரை பண்டாரவாடையில் 'ஜெய்லாவுதின்' என்றும், அதிரையில் 'PJ' என்றும் அறிந்திருந்த நான் அன்றுதான்... அவரை 'மவுலவி P.ஜைனுல்ஆபிதீன் உலவி' இவர்தானா என்று பரவசத்துடன் பார்த்தேன். அவரது ஆய்வுத்திறனும் அரபிப்புலமையும் பேச்சாற்றலும் அவர்மீது எனக்கு ஒருவித மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியது.  அதேநேரம், 'இவரையா இத்தனை காலம் நாம் நம்மைவிட்டு தள்ளி வைத்து நம்மை நாமே பாழ்படுத்திக்கொண்டோம்..?' என்று உள்ளுக்குள் துணுக்குற்றேன். இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மத்ஹப் காரர்களின் பேச்சை கேட்காது இருந்து சுயமாக ஆராய வேண்டும் என்ற கொள்கையில் இருந்த நான்... 'இவரை மட்டும் சுயமாக ஆராயாமல்.. இவ்வளவு காலம் அவர்கள் பேச்சை கேட்டு எப்படி விலகி ஓடினேன்' என்று என்னை நானே அவமானத்தால் நொந்து கொண்டேன்.

சகோ.பிஜேவின் சொற்பொழிவுகள், ஆய்வுகள், கேள்வி- பதில்கள் போன்றவற்றை, 'இவர் ஒரு சிறந்த இமாம்' என்று நான் அறிந்த ஸ்பிக் நகர் பள்ளியின் சுன்னத் ஜமாஅத் மவுலவியிடம் சொல்லி விவாத்தித்த போது... 'மவுலவி பிஜே சொல்றதுதான் சரி' என்று ஏறக்குறைய எல்லா விஷயத்திலும் அவரை சப்போர்ட் பண்ணியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

அப்படியாக, ஓரிரு வருடம் கழித்து, குடந்தை-மேலக்காவேரியில் ஒரு மேடை சொற்பொழிவில்... சகோ.மவுலவி பிஜே அவர்களை நேரில் சந்தித்து சலாம் சொல்லி அருகருகே மேலக்காவேரி பள்ளியில் இஷா தொழுத அன்று (2002) அவர் மூலமாக அல்லாஹ் தந்த உத்வேகம்தான் புஹாரி ஹதீஸ் ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் என்னை வாங்க வைத்தது. அன்று அவர் கூட்டத்தில், 'யார் யாரிடம் ஏதாவது ஒரு குர்ஆன் தர்ஜுமா உள்ளது , கைதூக்குங்கள்' என்றார். நான் உட்பட ஏராளமானோர் கை தூக்கினோம். 'மாஷாஅல்லாஹ்' என்றவர், 'வாங்காதவர்கள் யார் என்று கேட்டு இருக்கனுமோ' என்று கூறி விட்டு.. அடுத்து, 'இம்மாதம் வெளிவந்தபுகாரி ஏழாவது பாகம்  யாரிடம் உள்ளது..?' என்றார்..? எவரிடமும் இல்லை. 'சரி, மற்ற ஆறு பாகம் உள்ளவர்கள்..?' எவரிடமும் இல்லை. இப்படியே குறைத்து குறைத்து வந்து 'ஒரு பாகமாவது யாரிடம் உள்ளது..?' என கேட்க ஒரு சிலர் மட்டும் கை தூக்கினர். 

இந்த மாதிரியான மோசமான நிலையிலா நாம் இருக்கிறோம்... என்று அவருக்கு வந்த நியாமான வருத்தத்தில்... முன்வரிசையில் அமர்ந்து இருந்த நான் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அடுத்து அவரின் உரை என்னை மிகவும் பாதித்தது. ஆமாம்..! அவர் உரையின் படி...  நான் சினிமாவுக்கு செலவழித்துள்ளேன். காமிக்ஸ், நாவல், விகடன், குமுதம், தினதந்தி, தினமணி, தி ஹிந்து, எக்ஸ்ப்ரஸ்... என்று எதற்கெல்லாமோ... எவ்வளவோ செலவு செய்து உள்ளேனே..! அந்த பணத்தில் எழென்ன... எழுநூறு பாகம் நான் வாங்கி இருக்கலாமே..! ஏன் எனக்கு வாங்க மனம் வரவில்லை..? மறுமைக்காக வாழும் எண்ணம் எனக்கு இல்லையா..? மார்க்கத்தை அறியும் ஆவல் எனக்கு இல்லையா..? இதுபோல யாராவது வந்து எதயாவது மார்க்கம் என்று சொன்னால், 'சொல்பவர் சொல்வது சரியா' என்று எப்படி நான் உரசிப்பார்ப்பது..? 

அதே ஊட்டத்தில்... அடுத்த நாளே... குடந்தையில் அலைந்து புஹாரி கிடைக்காமல்... தஞ்சாவூர் ஹாஜியார் புக் டிப்போ சென்று ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வந்தேன். அடுத்து, முஸ்லிம், திர்மிதி என்று என்னை சரியான பாதையில் இவரின் இந்த மனதை தொட்ட உரை மூலம் என்னை சரியான பாதையில் பயணிக்கவைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
 .
மேலும்,  விஜய், விண், மூன் மீடியா சிடிக்கள், ஆன்லைன் பிஜே தளம், DAN தமிழ், இமயம் வாயிலாக... அவரால் நிறைய மார்க்க விஷயங்களில் நான் விளக்கம் பெற்றிருக்கிறேன். அதெல்லாம் நான் குழம்பி வேறு எப்பக்கம் செல்வது என்று முட்டு சந்தில் திக்கு முக்காடி திசை அறியாமல் நின்ற விஷயங்கள். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு பல விளக்கங்களை ஊட்டின அவரது உரைகளும் எழுத்துக்களும்.

அப்போதெல்லாம்... அவற்றில், அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரையில் எனக்கு மிகவும் பிடித்தது யாதெனில்... "நான் சொல்கிறேன் என்பதால்  அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" என்பதே..! ஒருவர் மார்க்க விஷயத்தில் முனைந்து கஷ்டப்பட்டு பல நாட்கள் பல நூல்களை ஆய்வு செய்த பின்னரும், இப்படியும் சொல்ல ஒரு கர்வமற்ற மனப்பக்குவம் வேண்டுமே. மாஷாஅல்லாஹ்.

இப்படி, என்னைப்போல... எண்ணற்றோர் சரியான இஸ்லாமிய பாதையை தேர்ந்தெடுக்க அவர் ஒரு கருவியாக இருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகிற்கு, அவர் ஓர் இஸ்லாமிய சொத்து.

கடந்த 27 வருடங்களாக அவரின் இந்த அயராத மார்க்க உழைப்புக்கு உரிய நற்கூலியை வல்ல அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் வழங்கி அவரை மகிழ்விக்கவும், அவரின் அளப்பரிய தொண்டுகள் மேலும் பலருக்கு சென்றடைந்து இன்னும் எண்ணற்றோர் பயன்பெறவும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை அடியோடு முற்றிலுமாக நீக்கி அருளி, இன்னும் பல்லாண்டுகள் அவருக்கு நல்வாழ்வினை தந்து, மார்க்க பிரச்சார அழைப்பு பணியில் இன்னும் சிறப்பாக ஈடுபட அவருக்கு உடலளவிலும் & மன அளவிலும் பெரும் ஆரோக்கியமும் ஊக்கமும் தந்தருளவும்... அவரின் பாவங்களை மன்னிக்கவும், இருகரம் ஏந்தி வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். யா அல்லாஹ், எனது துவாவை ஏற்றுக்கொள்வாயாக..! ஆமீன்.

முஹம்மது ஆஷிக் Citizen of the world என்ற இணையதளத்தில் 

திங்கள், 1 அக்டோபர், 2012

குர்ஆனில் எழுத்து பிழைகள் -விவாதம் டிஎன்டிஜே VS தூத்துக்குடிஉலமா சபை



பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம் ,,,,,,
தூத்துக்குடியில் டிஎன்டிஜே வும் ஷேக் அப்துல்லா ஜமாலியின் ஜமாத்துல் உலாம சபையும் குர்ஆனில் எழுத்து பிழைகளா ?என்ற தலைப்பில் விவாதத்தை நேற்று  துவக்கினார்கள் .நேற்றைய விவாதத்தில் குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்று இதுவரை எந்த முஸ்லிம்களும் சொன்னதில்லை ,யூதர்கள் மட்டுமே அவ்வாறு சொல்லி வருகின்றனர் என்று ஜமாலி தரப்பினர் குற்றசாட்டு வைத்து அதற்கு  answering islam  என்ற இணைய தளத்தில் இருந்து பிரின்ட் அவுட் எடுத்து ஆதாரம் வைத்தனர்.
குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்பதை ஹிஜ்ரி 5ஆம் நூற்றாண்டில் பாக்கியான் என்னும் முஸ்லிம் அறிஞர் கூறியதையும் இப்னு ஹுதைபா,தப்ரி கூறியுள்ளதையும் ஆதாரமாக டிஎன்டிஜே எடுத்துவைத்து அவர்கள் வாதத்தை உடைத்ததோடு நில்லாது அவர்கள் கூறிய யூதனும் குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்பதை நேரடியாக கூறாமல் ,ஒரு முஸ்லிம் அறிஞரின் கருத்தையே எடுத்து மேற்கோள் காட்டி கூறியுள்ளதையும்  நிருபித்து ஜமாலி குருப்பின் ஆதாரங்களை தவிடுபொடியாக்கினார்கள் .
அடுத்து குர்ஆனில் நுன்ஜி என்று வரக்கூடிய சொல்லில் நூன் விடுபட்டு நுஜி என்று எழுதப்பட்டிருப்பதையும் அதில் விடுபட்ட நூன் சிறிதாக மேலே சேர்க்கப்பட்டிருப்பதையும் எடுத்து வைத்து குர்ஆனில் பிழை உண்டு என்று தங்கள் வாதத்தை நிலை நிறுத்தினார்கள் இதை மறுக்க பல திரிபு வாதங்களை எடுத்து வைத்து சமாளிக்க முயன்ற ஜமாலி வகையறாக்களின் வாதங்கள் சல்லடையாக்கப்பட்டது 
மேலும் ஜமாலி மாணவர் முஸ்தபா என்பவர் லாகின்ன ,போன்ற நாலு சொற்களை  மட்டுமே வைத்துக் கொண்டு அதிலுள்ள பிழைகளை சொல்லுமாறு மீண்டும் மீண்டும் வேண்டி வந்தார் .அவர் அவ்வாறு கோருவது தவறு..ஏனெனில் தலைப்பு குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டுஎன்றும் இல்லை என்றும் என்பதே .அவ்வாறிருக்க எழுத்து பிழைகள் எதுவானாலும் சொல்லலாம்.குர்ஆனில் பிழையான வார்த்தைகள் என்று சொல்லப்பட்ட லாகின்ன ,போன்ற சொல்லில் பிழை இல்லை என்பது மட்டுமே தலைப்பாக இருந்தால் அந்த சொற்களோடு நிற்க முடியும்  ஆனால் அதற்கு மாற்றமாக குர்ஆனில் எழுத்து பிழைகள் இல்லை என்று பொதுவாக சொல்லி விட்டு நான்கு சொற்களில் மட்டுமே நிற்பது தலைப்புக்கு மாற்றமானது 
இறுதியில் லாகின்ன என்ற சொல் எழுதப்பட்ட நிலையிலும் உள்ள.தவறுகள் விளக்கப்பட்டது.அத்ற்கு கடைசி வாதத்தில் லாகின்ன கேட்டு துடித்துக் கொண்டிருந்த முஸ்தபா கடைசி 15 நிமிடங்களையும் அவர் எடுத்து அதற்கு விளக்கம் தந்திருக்க வேண்டும் .ஆனால் ஜமாலி குறுக்கிட்டு சொதப்பி அதன் பின்னர் முஸ்தபாவும் உளறி நேரம் முடிந்தது .

விவாதம் 2 வது  நாள் 

லாக்கின்ன,லிதஸ்லூவ ,லி யப்லூவ ,வ நப்லூவ என்ற சொற்களில் உள்ள பிழைகள்பற்றி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த முஸ்தபா முதலில் சொல்லப்பட்ட லாக்கின்ன என்ற சொல்லில் உள்ள பிழையை கூட நிருபிக்க முடியாமல் தவித்தார். அந்த ஒரு சொல்லில் கூட பிழை இல்லை என்பதை நிருபிக்க அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்த ஆய்வுகள் அவருக்கு கைகொடுக்கவில்லை .ஆக டிஎன்டிஜே தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட னுஞ்சி என்ற சொல் பிழையாக நுஜி என்று எழுதப்பட்டுள்ளதை அவர்களால் மறுத்து  ஆதாரங்கள் தரமுடியவில்லை .மேலும் அவர்கள் தர்ஜுமாவில் சொல்லப்பட்டுள்ள 19 பிழைகளில்  நான்கை மட்டும்  விளக்கம் கேட்டு வற்புறுத்தி வந்த முஸ்தபா அதில் ஒன்றை கூட பிழை இல்லை என்பதை நிருபிக்க இயலாமற் சகாபாக்களை குறை  சொல்லிவிட்டார்கள் என்று ஆரம்ப முழக்கத்தையே இறுதி முழக்கமாக முழங்கிக் கொண்டு சென்றார்.

இரண்டு விவாதங்கள் நடத்தி அதில் தனது கொள்கைகளை நிலை நிறுத்தமுடியாமல் வெறும் சால்ஜாப்புகளையும் ,வெளிப்படையான சமாளிப்புகளையும் வைத்து வாதாடிய ஜமாலி இந்த விவாதத்தில் கலந்து கொண்டார். இவர் கலந்து கொள்வதை ரகசியமாக வைத்து பெரிய ஒரு பூச்சாண்டி காட்டுவது போல தங்களைத்தானே ஏமாற்றிக் கொண்டனர்.  ,பீஜேயுடன் யாரும் விவாதிக்க முன்வராத நிலையில் ஜமாலி தனது கோமாளித்தன வாதங்களுடன் களியக்காவிளை விவாதம் நடத்தி அதில் தன்னைத்தானே வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்ட சர்க்கஸ் கோமாளி விவாதம் நடத்திய பிறகு அறியாத மக்களிடம் பிரபல்யம் ஆகி அதன் மூலம் பல் இடங்களில் கூட்டங்கள் நடத்த offer கிடைத்தது .இஸ்லாத்திற்கு புதிதாக வந்தவர்களுக்கு முஸ்லிம்களிடையே கிடைக்கும் மரியாதை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்தி பண அறுவடை செய்து கொண்ட பெரியார் தாசன் போல ,அதன் பின்னர் பெரியார்தாசனும் பாக்கரும் முகவரி இல்லாமற் போனது போல ஜமாலி நிலையும் கேட்பார் இல்லாமற் போயிற்று.அடுத்து அவர் ,உருவம் அற்ற இறைவன் என்பது முஸ்லிமகள் மத்தியில் ஊறிப்போன விஷயம் அதற்கு மாற்றமான கருத்துடைய பீஜே யுடன் அதன் பின்னர் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா என்ற தலைப்பில் நடத்திய விவாதமும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை .
அதன் பின்னர் ,குர்ஆனில் பிழைகள் என்று பீஜே சொல்லுகிறார். முஸ்லிம்களே 
அய்யையையோ இது அபத்தம் என்று கூறி நாம் நேரடியாக அழைத்தால் அவர் நோக்கம் புரிந்து ஜமாலியின் விளம்பர வேட்டைக்கு பலியாகிவிடக் கூடாது என்று டிஎன்டிஜே மறுத்துவிடும் என்பதால் ,தனது மாணவர் ஜிப்பாவுக்குள் ஒழிந்து கொண்டு விவாதத்திற்கு ஒப்பந்தம் போட்டு கள்ளத்தனமாக் விவாதத்தில் கலந்து கொண்டார்.
விவாதத்தில் எப்போதும் பீஜே அவர்களின் பல வாதங்களை மறுத்து சால்ஜாப்புகளுடன் சமாளித்து வரும் ஜமாலி ,பீஜேயின் வாதங்களால் அவர் மாறியிருக்கும் நிலையை பகிரங்கமாக இறைவன் வெளிப்படுத்தி விட்டான் களியக்காவிளை விவாதத்திர்க்கான கடித பரிமாற்றங்களில் உள்ள கடிதங்களில்  786/92 என்று பிஸ்மில்லாஹ்வுக்கும் கிர்கரிக்கும் அப்ஜத் முறையில் எழுதிய அவர் இப்போது அவர் 786 என்று எழுதுவதில்லை என்றும் பிஸ்மில்லாஹ் என்றுதான் உண்ண முடியும் 786 என்று சொல்லி உண்ண முடியுமா? என்று கேட்டு நீங்கள்தான் நபி [ஸல்] அவர்கள்  சொல்லுக்கு மாற்றமாக இறைவனின் திருப் பெயரால் ,,, என்று எழுதுவதாகவும் கூறினார் .இதை அவர் சொன்னதும் அதை ரசித்து அவர்கள் தரப்பில் வந்த பார்வையாளர்கள் சிரித்தனர்..அதன் பிறகு அங்கு வந்த பார்வையாளர் ஒருவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டையில் 786 எழுதியுள்ளதையும் சுட்டி காட்டி அந்த அட்டையை பீ ஜெவிடம் கொடுத்தார்.இந்த அடையாள அட்டையில் 786 எழுதியதற்கும் ஜமாலிக்கும்  எவ்வித தொடர்பும் இல்லை யென்பது வேறு விஷயம் .அதைப்போல அங்கு வந்த மக்களுக்கு அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்தெரியாது என்பதும் மற்றொரு விஷயம்..ஆனால் களியக்காவிளை விவாதத்திற்கு முன்னர் 786/92 என்று எழுதியதோடு அந்தவிவாததில் அப்ஜதுக்கு ஆதரவாக வாதாடிய ஜமாலி இன்று நாம் 1980-90 களில் 786 ஐ கேலி செய்தது போல இன்று அவரும் கேலி செய்ததோடு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ,,,,,,,என்று தான் எழுத வேண்டும் என்று திருநெல்வேலிக்கார னுக்கே அல்வா கொடுத்தார் போல நமக்கே பிஸ்மில்லாஹ் பற்றி சொல்லுமளவில் மாறிவிட்டார் .அல்ஹம்துலில்லாஹ் 
முஸ்தபா நல்ல வாதங்களுடன் விவாதிக்க வந்திருந்தால் ,அவர் தனது வாதத்தில் பீஜே தர்ஜுமாவில் அறிவிக்கப்பட்டுள்ள 19 பிழைகளையும் அடுக்கி அவைகளில் பிழைகள் இல்லை என்பதற்கான தனது ஆதாரங்களை எடுத்து வைத்திருக்க வேண்டும் .அதோடு நில்லாது அவர் எதிர் பார்க்காத நிலையில் பீஜே தரப்பினர் பிழைக்கு கூடுதலாக வைத்த னுஞ்சி பற்றியும் அவர் இறுதியில் பேசியிருக்க வேண்டும் .ஆனால் அதற்கு திராணியற்ற அவர் தனது ஈராண்டு ஆய்வு செய்த லாக்கின்ன போன்ற நாலு சொற்களையாவது அவராகவே முன்வந்து பிழைகள் இல்லை என்பதையும் நிருபித்து காட்டியிருக்க வேண்டும்.மாறாக லாகின்ன போன்ற நாலு சொற்களில் உள்ள பிழைகள் சொல்லுங்கள் என்று எதிர் தரப்பினரிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தது அவர் அறைவேக்காடாகவே வந்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது .எவ்விதத்திலும் எதிர்கொள்ளாமற் பீஜே  தரப்பினருக்கு பாடம் நடத்துவதாக நடித்துக் காண்பித்தார். அதை அவர்கள் தரப்பினர் படம் எடுத்துள்ளார்கள் .படபிடிப்பில் கலந்து கொண்ட மகிழ்ச்சியுடன் அவரது தரப்பில் வந்திருந்த மக்களும் நாரே தக்பீர் கோசங்கள் முழங்க கர கோசத்துடன் சென்றனர்.

வியாழன், 27 செப்டம்பர், 2012

செங்கொடி விவாதம்


ஹலோ செங்கொடி உங்க சவடால்களை நீங்களே சாக்கில் கட்டி வைத்துக் கொள்ளுங்கள். எனக்குத் தேவை உங்கள் ஆன்சர். முடியுமா? முடியாதா? தி இஸ் மை சிம்பிள் கொஸ்ஷன். நேரடி விவாதம்ண்ணா தலை தெறிக்க ஓடும் குரூப் நீங்கள் அது எல்லோருக்கும் தெரியும். எழுத்து விவாதம் என்று வெண்ணை வெட்டி பயில்வானாக இருந்தீர்கள். இப்போ இதுலயும் சீப் ட்ரிக்ஸ். நேரடியா கூப்பிட்டோம் டுமிக்கி கொடுக்கிறீர்கள். எழுத்துவிவாதத்துக்கும் இப்போ எஸ்கேப். அறிவாளித்தனமா எழுதுவது தான் மிச்சம். தைரியமிருந்தால் எழுத்து விவாதத்துக்கு வாருங்கள், முடியாவிட்டால் வெளிப்படையாக சொல்லிவிட்டு எஸ்ஸாகிடுங்க. சும்ம சீன் போடுற வேலையெல்லாம் வேண்டாம்.
மூமின் நல்லூர் முபாரக்
ஏன் மூமின்கள் முகமது சிறந்தவரா என விவாதம் செய்வது இல்லை?
ஆகவே முகம்து சிறந்தவரா? நித்யானந்தா சிறந்தவரா என்பதே சரியான விவாதம் ஆக இருக்கும். எனினும் விவாதத்திற்கு முன்பு இக்கட்டுரையை படித்து விட்டு தைரியம் இருந்தால் வரவும்!!
நித்யானந்தாவும் மொஹம்மத் இப்னு அப்தல்லாவும் – ஒரு ஒப்பீடு
முஹம்மதின் வழிப்பறி கொள்ளைகள் (ஆர்ய ஆனந்த் vs எஸ் இப்ராஹிம்)
http://goo.gl/7klVK
Ready?????????????
நிலா ,
அதற்கு முந்தைய விவாத சுட்டியையும் கொடுத்துள்ளேன் .அதையும் பாருங்கள் உண்மை புரியும் .பதில் தராமல் ஆர்யா ஆனந்த் ஓடியதை அறிவீர்கள்..
http://pagadu.blog.com/2012/04/10/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-vs-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE/
மேலும் கீழ்க்கண்ட சுட்டியில் ஆர்யாஆனந்த் அந்தவிவாதத்தை தொகுத்துள்ளார் .அதில் எனது வாதங்கள இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது அதிலிருந்தே உண்மைகளை உணர முடியும் .
நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் பின்னூட்டம் இடுவதில் அத்தளத்தில் ஏற்பட்ட சிக்கலை அதிலுள்ளவர்கள் அறிவர் .அதனால் தடைபட்டது.
http://newindian.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=48724317
சகோதரர் இப்ராகிம்
உங்களுடைய குடுமி சண்டையில் அவர் இவரை திட்டுவது,இவர் அவரை திட்டுவது என்று எதனை காலம்தான் இருக்கபோகிறீர்கள்?
உண்மை என்னவென்று இன்னுமா நீங்கள் உணரவில்லை?
முகம்மதுவை விமர்சனம் பண்ணி எடுக்கப்பட்ட படத்தை கண்டித்து இந்த முஸ்லிம்கள் பண்ணிய அழிட்சாட்டியத்தை பார்த்தீர்களா?
என்றோ இறந்துவிட்ட ஒரு மனிதருக்காக இவ்வளவு வன்முறை தேவையா?
இதுதான் சமாதானத்தை போதிக்கும் லட்சணமோ?
சகோதரன் ,////உண்மை என்னவென்று இன்னுமா நீங்கள் உணரவில்லை?///
கம்யுனிசமும் ஜனநாயகமும் போடு குடுமி சண்டையில் பல உண்மைகளை உணர்ந்தோம் .அதனாலே முஹம்மது நபி[ஸல்] அவர்கள் வழியில் நிலைத்தோம் .
ஆப்கானிஸ்தானில் ரஷ்யா செய்த அளிசாட்டியத்தை விடவா ?
இராக்கில் அமெரிக்க செய்த அளிசாட்டியத்தைவிடவா.?
பாலஸ்தினத்தில் இஸ்ரேல் செய்யும் அளிசாட்டியத்தைவிடவா?
முஸ்லிம்கள் அழிசாட்டியம் செய்துவிட்டார்கள்.?
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைதியான முறையில் தனது எதிர்ப்பை காட்டவில்லையா?
தனிமனிதனின் கருத்துக்களின் சுதந்திரத்தில் தலையிட மறுப்பதாக கூறும் அமேரிக்கா எத்தனை தனிமனிதர்களை கருத்துக்களையும் கழுத்துக்களையும் நெரித்துள்ளது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டுமா?
சகோதரன் ///என்றோ இறந்துவிட்ட ஒரு மனிதருக்காக இவ்வளவு வன்முறை தேவையா?////
என்றோ இறந்துவிட்ட ஒரு மனிதரைப் பற்றி அவதூறாக படமெடுத்தது நன்முறையா?
இவ்வளவு மோசமாக படமெடுப்பது அதை வெளியிடுவது அதற்கு வக்காலத்து வாங்குவது இதெல்லாம் ஒரு சாராருக்கு தேவைப்படும்பொழுது மறு சாராருக்கு வன்முறை தேவையாகிறது.
ஆக வன்முறைக்கு காரணமானவர்களை சாம்பலாக்கி ,அதில் வெந்நீர் ஊற்றி அழிப்பதை செய்யாமல் அப்பாவி மக்களை வன்முறைக்கு ஆளாக்கி தங்களை அழித்துக் கொள்ள செய்து வேடிக்கை பார்ப்பதும் சமாதானம் பற்றி குரலிடுவதும் எம்முறையில் சரி?
//இஹ்சாஸ் ஒரு மண்ணாங்கட்டி என்று வைத்துக் கொள்வோம்//
மடசாம்பிராணி என்று கூட வைத்துக்கொள்ளலாம்!!
sagodharan, //இஹ்சாஸ் ஒரு மண்ணாங்கட்டி என்று வைத்துக் கொள்வோம்//
மடசாம்பிராணி என்று கூட வைத்துக்கொள்ளலாம்!!/////
அப்படியெனில் NO.1 சிங்கப்பூர் சாம் பிராணி யார்?
  1. சகோதரரே
    NO.1 சிங்கப்பூர் சாம் பிராணி இருப்பது எனக்கு தெரியாது! மன்னிக்க வேண்டும்!
    அது சம்மந்த பட்டவர்களுக்கே நன்கு தெரியும், மேலும் இஹ்சாசை மட்டப்படுத்தவேண்டும் என்று கூறவில்லை ராபின் சொன்னதுபோல் விரக்தியில் கூறப்பட்ட வார்த்தை மட்டுமே!
    //என்றோ இறந்துவிட்ட ஒரு மனிதரைப் பற்றி அவதூறாக படமெடுத்தது நன்முறையா?//
    இல்லைதான்,அதற்காக?
    //வக்காலத்து வாங்குவது இதெல்லாம் ஒரு சாராருக்கு தேவைப்படும்பொழுது//
    எந்த சாராருக்கு நீங்கள் கூறும் தேவை?
    அமெரிக்கனுக்கு,இஸ்ராயிலுக்கு,பிஜேபி க்கு ,R S S க்கு சரியா? நான் சொல்வது ?
    இன்னும் ஒட்டுமொத இஸ்லாமிய விரோதிகளுக்கு சரியா ?
    நாங்கள் என்ன தவறு செய்தோம்? வன்முறை தேவைப்படும் சாரார் உங்கள் பக்கம்,,
    தேவைப்படும்போது எடுத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்வது முறையா?
    //வன்முறைக்கு காரணமானவர்களை சாம்பலாக்கி??!!//
    என்ன தீர்வு இது? இதற்காக வன்முறையில் ஈடுபடுவது நபியின் மதிப்பை அதிகப்படுத்துமா ? குலைக்குமா?
    உங்களுக்கு எப்படி தெரியும்? நடுநிலைவாதிகளை கேளுங்கள், கூறுவார்கள்!
    சரி காரணிகள் இருந்தால் வன்முறை செய்யலாம் என்கிறீர்களா? வன்முறையில் ஈடுபட்டு என்னுடைய நண்பனின் இருசக்கரவாகனத்தை சேதப்படுத்தியது சரியா?
    இன்னும் எத்தனையோ? பாதிப்பை சரியா முறையில் பதிவு செய்யவே உதாரணம் கூறினேன்.
    வன்முறையை தூண்டுவது வன் முறையாலருக்கு சரி? நக்சல் பாரிகளுக்கு சரி,, உங்கள் புரிதலில்!
    மூமின்களுக்கு ?
    //அப்பாவி மக்களை வன்முறைக்கு ஆளாக்கி//
    சகோதரரே அப்பாவி மக்கள் நீங்கள் அல்ல,, முன்னாள் முஸ்லிம்களாகிய நாங்கள்தான்!
    கலவரத்தில் பாதிக்கப்படுபவனே அப்பாவி!
    கலவரத்தை தூண்டுபவர்கள்,கலவரத்தை செய்பவர்கள் அப்பாவிகள? நல்ல கதை!
    போர்களத்தில் குழந்தைகளை குதிரையின் காலில் மிதித்து கொன்று விட்டு கேட்டால் அதற்கு பின்னால் நபி தடை செய்த வசனத்தை காண்பிப்பது போல் இதற்க்கு சண்டையில் கிழியாத சட்டை உண்டா?என்று கேட்க வேண்டாம்!
    முன்னாள் எங்களுடைய,இப்போது உங்களுடைய நபியை தவறாக சித்தரித்து விட்டதனால் அண்ணலாருக்கு இழுக்கு என்றால் சாதாரண திரைப்படத்துக்கு நீங்கள் மதிப்பளித்து,இதனால் இஸ்லாத்துக்கு அவமானம் என்று நினைக்கிறீர்களா? அவ்வளவு பெரிய ஆயுதமா அப்படம்?
    @இப்ராஹீம்,
    //அதற்கு முந்தைய விவாத சுட்டியையும் கொடுத்துள்ளேன் .அதையும் பாருங்கள் உண்மை புரியும் .பதில் தராமல் ஆர்யா ஆனந்த் ஓடியதை அறிவீர்கள்..//
    நம்முடைய விவாதத்தில், முஹம்மது செய்த வழிப்பறி கொள்ளைகளை பட்டியலிட்டு விளக்கி உள்ளேன். அதற்கு எந்த பதிலும் தராமல், சம்பந்தமில்லாத சில குர் ஆன் வசனங்களை குறிப்பிட்டு அதற்கு என்னை பதவுரை, தெளிவுரை எழுத சொல்லி விவாதத்திலிருந்து பயந்து ஓடி விட்டு, பல நாள்கள் கழித்து இப்படி ஒரு அலம்பல் தேவையா உங்களுக்கு?
    //மேலும் கீழ்க்கண்ட சுட்டியில் ஆர்யாஆனந்த் அந்தவிவாதத்தை தொகுத்துள்ளார் .அதில் எனது வாதங்கள இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது அதிலிருந்தே உண்மைகளை உணர முடியும் .
    நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் பின்னூட்டம் இடுவதில் அத்தளத்தில் ஏற்பட்ட சிக்கலை அதிலுள்ளவர்கள் அறிவர் .அதனால் தடைபட்டது.
    //
    நம்முடைய விவாதத்தை
    மேற்கண்ட சுட்டியில் நான் தொகுக்க வில்லை. இதை வேறு எவரோ செய்துள்ளார். அவர் யாரென்றே எனக்கு தெரியாது.
    1. சகோதரன் ,தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமெரிக்க தூதரகம் முன்னால் தனது கடுமையான எதிர்ப்பை எவ்வித வன்முறை இன்றி நடத்தியது .மேலும் அதிகமான கூட்டம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதால் உடனடியாக அதை நீக்கும் முகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
      ஆனால் தவ்ஹித் ஜமாஅத் போல அனைத்து அமைப்புகளும் இருக்க வாய்ப்பில்லை. மற்ற அமைப்புகள் அதிக கூட்டம் கூடினால் உணர்ச்சியால் கொந்தளிப்பார்கள்.அதன் விளைவுகளே உங்களது நண்பனின் பைக் எரிக்கப்பட்டிருக்கலாம்.அதற்கு அந்த அமைப்புகளே அந்த நண்பரை அறிந்து அதற்கான நஷ்ட ஈடு வழங்கியிருக்க வேண்டும்.தமிழ்நாடு தவ்ஹித் ஜ்மாத்ஹாக இருந்தால் அதையே செய்யும்.அதனாலே இது போன்றே ஒற்றுமை கோசங்களில் டிஎன்டிஜே கலந்துகொள்வதில்லை.
      ////சகோதரரே அப்பாவி மக்கள் நீங்கள் அல்ல,, முன்னாள் முஸ்லிம்களாகிய நாங்கள்தான்!
      கலவரத்தில் பாதிக்கப்படுபவனே அப்பாவி!
      கலவரத்தை தூண்டுபவர்கள்,கலவரத்தை செய்பவர்கள் அப்பாவிகள? நல்ல கதை!////
      முஸ்லிம்களே அப்பாவிகள் .அவர்களது அப்பாவித்தனத்தை பயன்படுத்தி அவர்களை அழிப்பதற்காகவே இது போன்ற படங்கள் எடுக்கப் படுகின்றன .இதுவரை நடந்த அனைத்து கலவரங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே .
      ////போர்களத்தில் குழந்தைகளை குதிரையின் காலில் மிதித்து கொன்று விட்டு கேட்டால் அதற்கு பின்னால் நபி தடை செய்த வசனத்தை காண்பிப்பது போல் இதற்க்கு சண்டையில் கிழியாத சட்டை உண்டா?என்று கேட்க வேண்டாம்!///
      நீங்கள் சொல்லியிருப்பது புரியும்படியாக இல்லை .
      ////முன்னாள் எங்களுடைய,இப்போது உங்களுடைய நபியை தவறாக சித்தரித்து விட்டதனால் அண்ணலாருக்கு இழுக்கு என்றால் சாதாரண திரைப்படத்துக்கு நீங்கள் மதிப்பளித்து,இதனால் இஸ்லாத்துக்கு அவமானம் என்று நினைக்கிறீர்களா? அவ்வளவு பெரிய ஆயுதமா அப்படம்?///
      முஸ்லிமில் முன்னாள்,இந்நாள் என்றெல்லாம் இல்லை. இறைவனையும் அவனது தூதரையும் மறுத்துவிட்டால் அவன் முஸ்லிம் இல்லை.இதில் முன்னாள் என்று சொல்லி பெருமை தேட வேண்டிய அவசியமில்லை .
      சகோதரன் ,உங்களில் ஒருவரையும் அவரது மனைவியையும் நீலப்படத்தில் காட்டினால் நீங்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ளுங்கள் .
    2. சகோதரன் ///தெரியாத செங்கோடிக்கு நீங்கள்தான் சந்தேகத்தை தெளிவுசெய்து விடுங்களேன்,என்னை போன்றவர்கள் மீண்டும் இஸ்லாத்தில் முழுமையாக நுழைகிறோம்!!////
      தெரியாத செங்கொடிக்கு தெளிவு செய்யவே நேரடி விவாதத்திற்கு அழைக்கிறோம் ,அதன் மூலம் உங்களைப் போன்றவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைய வாய்ப்பு உள்ளதால் என்பதாலே செங்கொடி நேரடி விவாதத்திற்கு மறுத்து வருகிறார்,.மேலும் அவர் சார்ந்த அமைப்பும் அதற்கு அனுமதி தராது.
      இன்னும் நீங்கள் உண்மையானவராக இருந்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறு முன்னர் தகுந்த இஸ்லாமிய அறிஞர்களை நேரடியாக அணுகி பல விளக்கங்களை பெற்றிருக்க வேண்டும் .
    3. சகோதரரே
      //அதன் விளைவுகளே உங்களது நண்பனின் பைக் எரிக்கப்பட்டிருக்கலாம்.அதற்கு அந்த அமைப்புகளே அந்த நண்பரை அறிந்து அதற்கான நஷ்ட ஈடு வழங்கியிருக்க வேண்டும்//
      எவ்வளவு சாதரணமாக சொல்லிவிட்டீர்கள்!
      கொளுத்துபவன் பெயர்,இயக்கம் முகவரி இதெல்லாம் எழுதிவைத்துவிட்டா செல்வான்?
      உங்களுடைய பெயர் அடிபடுகிறது என்றவுடன் எங்கள் இயக்கம் என்றைக்கும் தவறு செய்யாது,கொந்தளிக்காது என்று நமது அண்ணன் பேசுவதைப்போல பேசுகிறீர்கள்,அதற்கான வருத்தத்தை கூட தெரிவிக்காமல்?
      என்னை விடுங்கள் அரசு பேருந்து மற்றும் அதில் பயணம் செய்த பயனாளிகளின் பாதிக்கப்பட்ட பணிகளுக்கு யார் பொறுப்பு? அதையும் உங்கள் இயக்கம் செய்யவில்லையா? கும்பலாக நின்றுகொண்டு சாலையை அடைத்தது யார்?
      நீங்கள் சாலையிலேயே நிற்க வில்லையா? அது போகட்டும் முஸ்லிம்களை அழிப்பதற்காக இதுபோன்ற படங்களை எடுக்கிறார்கள் என்று கூறுவது வேடிக்கையாக தெரியவில்லையா?
      இஸ்லாத்தை அதன் அடிப்படை நோக்கம் தெரியாத முஸ்லிமல்லாத நபர் என்று என்னை நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் தங்களிடம் அப்படி அடையாலப்படுதினேனே தவிர நீங்கள் சொன்னதுபோல்
      //முன்னாள் என்று சொல்லி பெருமை தேட வேண்டிய அவசியமில்லை//
      பெருமையை நான் அப்படி கூறி பெறுவதைவிட நான் எந்த மதமும் சாராதவன் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன்! தயவுசெய்து அப்படிமட்டும் கூறாதீர்கள் என்னைபோன்றவர்களால் ஜீரணிக்க முடியாது!
      நல்ல விஷயங்கள் எந்த நிலையில்,யாரிடம் இருந்தாலும் ஏற்றுகொள்வோம்,அதே சமயத்தில் ஒழுக்கமாக நடக்கவும்,நல்லவனாக இருக்கிறேன் என்று பெருமைப்படவும் மதம் தேவையில்லை!
      //சகோதரன் ,உங்களில் ஒருவரையும் அவரது மனைவியையும் நீலப்படத்தில் காட்டினால் நீங்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்//
      இதிலிருந்தே தெரிகிறது நீங்கள் அந்த படத்தை விஷமிகளின் செயலாக பார்க்கவில்லை என்று!
      முஹம்மது நபியின் படுக்கையறையில் வைத்து எடுக்கப்பட்டதை போல் பதறுகிறீர்கள்!
      நிச்சயமாக, என்னையோ,எங்களில் ஒருவரையோ நீலபடத்தில் காண்பிக்க ஒன்று நாங்கள் அதில் பங்கெடுக்க வேண்டும், அல்லது எங்களுக்கு தெரியாமல் அப்படம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும்! சரியா? இரண்டும் குற்றம்தான்! ஆனால் நீங்கள் கூறுவது எந்தவகையில் என்று தெரியவில்லை எனக்கு.
      நங்கள் இப்போதுதான் தெளிவாக உள்ளோம்!
      எல்லா விளக்கமும் பெற்றதினால்தான் இஸ்லாத்தின் மறுபக்கம் தெரிந்தது! புரிந்து கொண்டோம்!
    4. சகோதரரே
      உங்களுடைய முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று நன்கு தெரிகிறது!
      அதனால்தான் முன்னரே கேட்டேன் நீங்கள் கிருத்துவத்தை நம்புகிறவரா என்று. ஏனெனில் உங்களுக்கு ,அதற்காக நிறைய தளங்கள் உள்ளது, உங்கள் பதிவுகள் பிறருடைய பகுத்தறிவை தூண்டுபவையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்!
      இஸ்லாத்தை விமர்சனம் பண்ணும் அதே வேலையில் கிருத்துவத்தையும் கொஞ்சம் திருப்பிப்பாருங்கள் ! இங்கு
      குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலை பார்க்க வேண்டாம் !
      ஆதலால் இஸ்லாமியர்கள் அப்படியே திருந்தி இடையில் நீங்கள் போடும் பின்னூட்டத்தில் கிருத்துவம்தான் சிறந்தது என்று நினைத்துவிடுவார்கள் என்று மனப்பால் குடிக்கவேண்டாம்!
      ஏனென்றால் இஸ்லாத்தை எப்படி ஆய்வு பண்ணினோமோ அதைபோலத்தான் கிருத்துவத்தையும் ஆய்வு பண்ணி மேலும் உலகளாவிய கடவுட்கொள்கையினால் எந்த பயனும் இல்லை என்ற முடிவில் ஒரு புள்ளியில் இணைந்துள்ளோம்!
      இதில் அவர் சிறந்தவர்,இவர் சிறந்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை,
      //கம்யுனிசத்தை நினைத்தால் கிறுக்குத்தனமாக தெரிகிறது.//
      நீங்கள் கூறுவதுபோல் உங்களுக்கு பொதுவுடைமை கிறுக்குத்தனமாக தெரிய எதாவது ஒன்றை ஆய்வு செய்தீர்களா?
      சகோதரரே பொதுவுடைமை நீங்கள் நம்பும் கிருத்துவத்தை போல் நம்பிக்கை சார்ந்த விடயமல்ல!
      கிருத்துவத்தில் நீங்கள் ஆண்டவர் கூறிவிட்டால் எதைவேண்டுமானாலும் நம்புவீர்கள்!
      பொதுவுடமையில் எதையும் என்,எதற்கு என்று ஆய்வுக்கு உட்படுத்தி பார்த்துதான் முடிவு ஏற்படும்,தவிர எதனையும் முடிவு என்றோ இதுதான் சரி என்றோ அறிவியலும்,பொதுவுடமையும் ஏற்றுகொள்வதில்லை!
      மனிதனுக்கு ஒவ்வாத விடயங்கள் எப்படிப்பட்டதாகிலும் களைந்தெறிய மதவாதிகள் எதனையும் விட்டுக்கொடுப்பதில்லை! நம்பிக்கை சம்மந்தப்பட்டுவிட்டது என்பதால்.,
      நீங்கள் அதனோடு இதை கலக்க வேண்டாம்!
      நீங்கள் நகைச்சுவை எதிர்பார்ப்பவராக எனக்கு தெரியவில்லை,
      என்ன வெறித்தனத்தை கண்டீர்கள் என்னுடைய பின்னூட்டத்தில்?
      கூறுங்கள் மாற்றிக்கொள்கிறேன்.
      //நாங்க எல்லாம் என்ன, கெட்டவனாக வாழவா ஆசைப்படுகிறோம்?//
      அது உங்களுடைய விருப்பம்,.//
      //நல்லவனாக வாழ ஆசைபடும் இளைஞன்!// இது என்னுடைய விருப்பம்!
      அதற்காக உங்களை நல்லவராக வாழ விரும்பாதவர் என்று கூறவே இல்லையே!
      உங்களுடைய பின்னூட்டத்திலேயே தெரிகிறது வெறித்தனம் யாரிடம் உள்ளதென்று!
    5. மிஸ்டர் செங்கொடி உங்கள் கேள்விகளை விவாதத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன காலேஜ் லெக்சரரா? நான் என்ன ஃபஸ்ட் ஸ்டாண்டர்ட் பாப்பாவா? டெஸ்ட் வைத்து என்னை தெரிந்து கொள்வதற்கு. தைரியமிருந்தால் விவாதத்துக்கு வா. இல்லாவிட்டால் முடியாது என்று சொல்லிவிட்டு ஓடிப்போ. ஆனாலும் இந்த அளவுக்கு சீன் காட்டக் கூடாது நீங்கள்.
    6. சகோதரன் ////உங்களுடைய பெயர் அடிபடுகிறது என்றவுடன் எங்கள் இயக்கம் என்றைக்கும் தவறு செய்யாது,கொந்தளிக்காது என்று நமது அண்ணன் பேசுவதைப்போல பேசுகிறீர்கள்,அதற்கான வருத்தத்தை கூட தெரிவிக்காமல்?///
      நீங்களும் செங்கொடிப் போலவே அறையை விட்டு வெளியே வராது எழுதி வருகிறீர்கள்.பைக் எரிக்கப்பட்ட அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் டிஎண்டீஜே கலந்துகொள்ளவில்லை .அதைத்தான் ஒற்றுமை கோசத்தில் டிஎன்டிஜே பங்கேற்காது என்று சொல்லியிருந்தேன் .12/09 இல் தனியாக ஆர்பாட்டம் டிஎன்டிஜே நடத்தியது.அதிக கூட்டத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை தீர்க்க உடனடி நடவடிக்கையுமஎடுக்கப்பட்டது.
      பைக் எரித்தவனை கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த அனைத்து அமைப்புகளும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.அந்த அமைப்புகள் அதற்க்கான நஷ்ட ஈடுவை கொடுக்க வேண்டும் என்று நான் கூறிஇருப்பது வருத்தம் தெரிவிப்பதை விட ஒருபடி மேலானது.
      ////முஸ்லிம்களை அழிப்பதற்காக இதுபோன்ற படங்களை எடுக்கிறார்கள் என்று கூறுவது வேடிக்கையாக தெரியவில்லையா?//
      முஸ்லிம்களை சீண்டினால் அவர்கள் இது போன்ற ஆர்ப்பாட்டத்தை செய்வார்கள்.அதன்மூலம் கலவரம் ஏற்படும்.ஏற்படாவிட்டால் ஏற்படுத்தலாம் .அப்புறம் சிறைவாசம் தீவிரவாதம் செட் அப்கள் பண்ணிக்கொள்ளலாம் .அவர்கள் கல்வியிலோ ,பொருளாதரத்திலோ முன்னேறவிடாமல் வைத்துக்கொள்வது என்பது உலக அளவில் யூதர்களின் திட்டமும் ,இந்திய அளவில் சங்க குடும்ப திட்டங்களாகும் .
      ////இஸ்லாத்தை அதன் அடிப்படை நோக்கம் தெரியாத முஸ்லிமல்லாத நபர் என்று என்னை நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் தங்களிடம் ///
      இஸ்லாத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்று தெரிந்து கொண்டீர்கள்?சொல்லுங்களேன் .நானும் தெரிந்து கொள்ளட்டும்.
      இஸ்லாத்தின் அடிப்படை நோக்கம் என்று நீங்கள் சொல்லியிருப்பது கிட்டத்தட்ட ஹிந்துத்துவாக்களின் சொற்கள் போல உள்ளது
      ///எல்லா விளக்கமும் பெற்றதினால்தான் இஸ்லாத்தின் மறுபக்கம் தெரிந்தது! புரிந்து கொண்டோம்!///
      இஸ்லாத்தில் ஒரு பக்கமே உள்ளது.இல்லாத மறுபக்கம் எப்படி உங்களுக்கு தெரிந்தது?இஸ்லாத்தின் பெயரால் நீங்கள் கண்ட மறுபக்கத்தை காட்டுங்கள் .
      ///போர்களத்தில் குழந்தைகளை குதிரையின் காலில் மிதித்து கொன்று விட்டு கேட்டால் அதற்கு பின்னால் நபி தடை செய்த வசனத்தை காண்பிப்பது போல் இதற்க்கு சண்டையில் கிழியாத சட்டை உண்டா?என்று கேட்க வேண்டாம்!///
      நீங்கள் சொல்லியிருப்பது புரியும்படியாக இல்லை .இதை விளக்க மறந்துவிட்டீர்களா ?
    7. சகோதரன் ////நிச்சயமாக, என்னையோ,எங்களில் ஒருவரையோ நீலபடத்தில் காண்பிக்க ஒன்று நாங்கள் அதில் பங்கெடுக்க வேண்டும், அல்லது எங்களுக்கு தெரியாமல் அப்படம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும்! சரியா? இரண்டும் குற்றம்தான்!///
      குற்றம் என்றால் நடவடிக்கை எடுப்பீர்களா?
      அல்லது தனிமனித உரிமைகளில் தலையிடக் கூடாது என்று சாதரணமாக எடுத்துக் கொள்வீர்களா?
    8. சகோதரரே
      //கொடுக்க வேண்டும் என்று நான் கூறிஇருப்பது வருத்தம் தெரிவிப்பதை விட ஒருபடி மேலானது.//
      ரொம்பவும் சந்தோஷம்,அப்படியானால் மற்ற முஸ்லிம்களின் நிலை வேறு கொந்தளிப்பார்கள்! நீங்களோ
      //ஒற்றுமை கோசத்தில் டிஎன்டிஜே பங்கேற்காது// என்று கூறுகிறீர்கள்!
      ஆகவே TNTJ முஸ்லிம்களே தனி கூட்டமாக இருப்பார்கள் என்று கூறவருகிறீர்கள்,.
      அப்படியானால் நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியிருந்தால் நான் தொடர்ந்து முஸ்லிம்கள் மட்டுமே காரணம்,TNTJ முஸ்லிம்கள் காரணம் இல்லை என்று ஒதுங்கியிருப்பேன் பரவாயில்லை.
      //பைக் எரித்தவனை கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை//
      தொலைந்து போகட்டும் என்றுதான் நாங்களும் விட்டுவிட்டோம்,நீங்கள் கண்டுபிடிக்க வேண்டாம் அந்த முஸ்லிம் வேறு நீங்கள் வேறு என்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்!
      திரைப்படம் எடுத்து இஸ்லாமியர்களை அழிப்பதற்கு நீங்கள் கூறிய யூதர்கள் சதி என்பது நீங்கள் இன்று கூறவில்லை இனவெறியை உண்டுபண்ணும் மதவாதிகளின் பிதற்றல்!
      யூதர்கள் கெட்டவர்கள் அரபுலகத்தை விட்டு விரட்டியடிக்கப்படவேண்டும் என்பது என்றைக்கு இஸ்லாம் உருவானதோ அன்றிலிருந்து இன்று வரை காட்டரபுகளின் வேதவாக்கு!
      யூதர்களுக்கு நான் வக்காலத்து வாங்குவதாக எண்ணவேண்டாம். உலகில் எந்த இனமும் வெறியுடன் புறப்பட்டால் அடுத்த இனம் எதிரியாகத்தான் தெரியும்! யூதர்களுக்கும் முஸ்லிம்கள்தான் எதிரி! அதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல.அதற்காக யூதர்கள் அனைவரும் நல்லவர்கள் என்றும் கூறவில்லை! தீய எண்ணம் உள்ளவர்கள் உலகில் எல்லா பகுதிகளிலும் உள்ளார்கள்,அது இயற்கை!!
      இஸ்லாத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்று கேட்டுள்ளீர்கள்,ஏதோ வெறுமையாய் கேட்பது போல் உள்ளது!
      உங்களுக்கு தெரியாததா சகோதரரே எனக்கு தெரியப்போகிறது? மேலும் , உங்களுக்கு தெரியாது என்றோ நான் சொல்லித்தருகிறேன் என்றோ சொல்லவில்லையே!
      //இஸ்லாத்தில் ஒரு பக்கமே உள்ளது//
      சகோதரரே அது உங்களுக்கு தெரிந்தவரை.
      ,எல்லோருக்கும் மறுபக்கம் உண்டு உலகில் எல்லாவற்றிற்கும் மறுபக்கம் உண்டு !
      ஒருபக்கம் மட்டுமே உள்ளது ,மறுபக்கம் இல்லையென்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று உங்களை கேட்க விரும்பவில்லை காரணம் உங்களுடைய பின்னூட்டங்களை படித்துப்பார்த்து பார்த்து இவ்வளவு விளக்கங்களை பெற்றுமா உங்களுடைய சிந்தனை மற்றகருத்துக்களை பரிசீலிக்கவில்லை?
      ஆச்சரியமாக உள்ளது சகோதரரே உங்களுடைய பயிற்சி!!
      நீலப்படம் சம்மந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள்
      // குற்றம் என்றால் நடவடிக்கை எடுப்பீர்களா?//
      தகுதி,பொறுப்பு,அதன்மூலம் வழங்கப்படும் சட்டம் என் கையில் இருந்தால் நிச்சயம் எடுப்பேன்.
      அடுத்தது சம்மந்தமே இல்லாமல் கேள்வி கேட்டுள்ளீர்கள்
      //அல்லது தனிமனித உரிமைகளில் தலையிடக் கூடாது என்று சாதரணமாக எடுத்துக் கொள்வீர்களா?//
      எது தனிமனித உரிமை? எது தலையீடு ? நான் கேட்டது என்ன ? முகம்மதுவின் நற்பெயருக்கு களங்கம் சாதாரண திரைப்படம் ஏற்படுத்திவிடுமா என்றுதானே?
      நீங்கள் கண்டனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தியால் தீர்வு அதுவாகி விடுமா?
      பாதிப்படைந்த பொதுமக்களுக்கு என்ன தீர்வு? என்றுதான் கேட்டேன், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆயிரம் பிரச்சினை இருக்க ஏனிந்த நிலையில் இஸ்லாமியர்கள் என்ற முறையில்தான் வினா எழுப்பப்பட்டதே தவிர வேறதற்குமில்லை.
      சண்டையில் கிழியாத சட்டை எது என்று கேட்டிருந்தேன்! செங்கொடியின் தலைப்பை தாண்டி நான் சென்றதனாலும் விவாதம் வேறுவகையில் செல்வாதாலேயே அதனை விடுத்தேன்!
      இன்னும் நீங்கள் இனி வரும் பின்னூட்டங்களை தலைப்பை ஒட்டியே தொடர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்!
      ஒருவேளை இஹ்சாசுக்கு பதில் நீங்கள் என்றால் செங்கொடியின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கலாம்!
      நீங்கள் கேட்டுவிட்டதால் கூறுகிறேன்!
      பின்வரும் ஹதீதுகளை நடுநிலையோடு படித்துப்பாருங்கள் !
      புஹாரி ஹதீத் எண்:3012 ,
      முஸ்லிம் ஹதீத் எண் :3589 ,3590
      படித்து பாருங்கள் இதனையும் !
      பின்னர் ஹதீத் எண் : 3014 ,இதனில் பெண்களையும்,குழந்தைகளையும் கொள்வது தடை செய்யப்பட்டது என்று பதிந்துள்ளார்கள்!
      அதனாலேயே நான் போர்களக்கொலைகளை போல தெரியாமல் நடந்துவிட்டதென கூறவேண்டாமென கூறினேன்!
      மற்றபடி மேற்சொன்ன ஹதீதுகள் பலஹீனமானவை என்றோ,பலமானவை என்றோ உங்கள் மேலிடம் கூறும் விளக்கங்களை பெற்று இங்கு பகிர்ந்து தலைப்புக்கு வெளியில் செல்ல வேண்டாம் என கேட்டுகொள்கிறேன்!
    9. நபி[ஸல்] அவர்களிடம் ,குதிரைப் படையினர் ,இரவுநேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தும்பொழுது எதிரிகளான இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு விடுவார்களே என்று கேட்கப்பட்டது அதற்கு அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையை சேர்ந்தவர்களே என்று பதிலுரைத்தார்கள்.
      சகோதரன்,/////ஆகவே TNTJ முஸ்லிம்களே தனி கூட்டமாக இருப்பார்கள் என்று கூறவருகிறீர்கள்,.///
      இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அதிகமாக திரண்டால் என்னவெல்லாம் நடக்குமோ அதைப்போல அல்லாது முஸ்லிம்களும் அதிகமாக கண்டன ஆர்பாட்டங்களில் திரண்டால் ஒரு சில அசம்பாவிதங்கள் நடக்கும் .கட்டுபடுத்த அவர்களால் இயலாது .ஆனால் டிஎன்டிஜே வில் கட்டுப்படுத்த இயலும் .இதத்தான் உங்களிடம் கூறவந்தேன் ..என்னுடைய கூற்றில் உங்களது குரூர புத்தியை குதுகாலிக்க செய்யவேண்டாம்.
      ////யூதர்கள் சதி என்பது நீங்கள் இன்று கூறவில்லை இனவெறியை உண்டுபண்ணும் மதவாதிகளின் பிதற்றல்!//
      அப்படியெனில் சங்ககுடும்ப பற்றி கூறியது உண்மை .ஏனெனில் ,நீங்கள் இந்தியாவில் உங்களது நாத்திக கொள்கைக்கு அவர்கள் பிரதான எதிரிகள் .ஆதலின் அதை ஒப்புக் கொள்கிறீர்கள் .ஆனால் யூதர்கள் உங்களுக்கு அவசியமில்லாதவர்கள்.ஆனாலும் உங்களுக்கு இன்னொருவகையில் வேண்டியவர்கள்..ஏனெனில் இன்று இஸ்லாத்திற்கு எதிராக பல அயோக்கியத்தனமான கருத்துக்களை உங்களைப் போன்றவர்களுக்கு தந்து உதவியவர்கள் .அமெரிக்காவில் முஸ்லிம் ஜீவ்ஸ் யுனிவர்சிட்டி அமைத்து முஸ்லிம் அறிஞர்களால் புறக்கணிக்கப்பட்ட நூல்களை முஹம்மது நபி[ஸல்] அவர்களைப் பற்றி அவதூறுகள் பரப்புவதற்கு ஆதாரமாக வழங்கி உங்களைப்போன்ற குரூரங்களுக்கு உதவுபவர்கள் .
      ///அதற்காக யூதர்கள் அனைவரும் நல்லவர்கள் என்றும் கூறவில்லை! தீய எண்ணம் உள்ளவர்கள் உலகில் எல்லா பகுதிகளிலும் உள்ளார்கள்,அது இயற்கை!!////
      ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட சொன்ன ஒரு அப்பிராணியை சித்திரவதைப்படுத்தி கொன்றது முதல் பாலஸ்தீன குழந்தைகளை கொல்லுகிறவர்கள் வரை ,சதித்திட்டம் தீட்டி கிளிண்டனின் விந்தை ஆடையில் தோய்த்தவர்கள் வரை நல்லவர்களை காணமுடியவில்லை. நீங்கள் கண்டுபிடித்து சொல்லுங்கள்.
      ///உங்களுடைய பின்னூட்டங்களை படித்துப்பார்த்து பார்த்து இவ்வளவு விளக்கங்களை பெற்றுமா உங்களுடைய சிந்தனை மற்றகருத்துக்களை பரிசீலிக்கவில்லை?///
      மற்ற கருத்துக்களை ,மாற்று கருத்துக்களை சொல்லுங்கள்.அது உங்களின் முதல் பக்கமே ஒழிய இஸ்லாத்தின் மறுபக்கம் இல்லையென நிருபிப்போம்
      // குற்றம் என்றால் நடவடிக்கை எடுப்பீர்களா?//
      தகுதி,பொறுப்பு,அதன்மூலம் வழங்கப்படும் சட்டம் என் கையில் இருந்தால் நிச்சயம் எடுப்பேன்.////
      இப்போதுதான் அது உங்களது கையில் இல்லையே !இல்லாத இந்த நிலையில் என்ன செய்வீர்கள்?
      அமெரிக்கா அது தனிமனித உரிமை என்கிறது.,நீங்களும் அதே அடிப்படையிதான் ஆதங்கப்படுகிரீர்களோ என்று கேட்டுள்ளேன்.
      ///முகம்மதுவின் நற்பெயருக்கு களங்கம் சாதாரண திரைப்படம் ஏற்படுத்திவிடுமா என்றுதானே?
      நீங்கள் கண்டனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தியால் தீர்வு அதுவாகி விடுமா?/////
      கணடனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த ஜனநாயகம் அனுமதிக்கிறது .ஆம் தீர்வு மத்திய அரசு இந்தியாவில் தடை செய்தது.
      /////பாதிப்படைந்த பொதுமக்களுக்கு என்ன தீர்வு? என்றுதான் கேட்டேன், ////
      முஸ்லிம்களும் மக்கள்தான் .அவர்களும் பல போராட்டங்களினால் பாதிபடைந்திருக்கிரார்கள் .அவர்களுக்கு என்ன தீர்வை செய்தீர்கள்?
      /////ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆயிரம் பிரச்சினை இருக்க ஏனிந்த நிலையில் இஸ்லாமியர்கள் என்ற முறையில்தான் வினா எழுப்பப்பட்டதே தவிர வேறதற்குமில்லை.///
      ஆர்பாட்ட நடத்த என்னவென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும் .அதற்காக ஆர்பாட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம் .எப்போவாது செங்கொடி பதிவரிடம் ஆலோசனை கேட்கப் படும்வேளையில் நீங்கள் சொல்லுங்கள்..
      ///ஒருவேளை இஹ்சாசுக்கு பதில் நீங்கள் என்றால் செங்கொடியின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கலாம்!///
      செங்கொடி கடவுள் நிறத்தை கேட்பார் .பதில் அளிக்க பாலகன் ஒருவனை அழைத்து வரவேண்டும் .
      ஹதித்கள் பற்றி இறைவன் நாடினால் விளக்குவேன்
    10. சகோதரரே
      //நீங்களும் செங்கொடிப் போலவே அறையை விட்டு வெளியே வராது எழுதி//
      இஸ்லாம் என்ற அறையை விட்டு வெளியில் வராமல் இருப்பது உங்களை போன்றோர்கள்தன்!
      இயக்கம்,போராட்டம் என்பது புரட்சியை மையமாக வைத்து நடத்துபவர்கள் சிந்திக்கவேண்டிய ,மக்கள் திரளின் மாபெரும் சக்தி!
      அது உங்களைபோன்ற எது கூறினாலும் ,தேசத்தை எவன்,எங்கு அடகு வைத்தாலும் எனக்கு கவலையில்லை!
      எனக்கு தேவை உயிரினும் மேலான எனது நபியும்,மார்க்கமும் தான் என்று நினைப்பவர்களுக்கு உங்களுடைய நிலையில் இருந்து சிந்திப்பவர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை!
    11. சகோதரன்,
      இஸ்லாம் சோசலிசத்தை மறுக்கவில்லை. இங்கு எழுதிக்கொண்டிருக்கும் சோசலிசத்தை மறுக்கும் சகோ.கள் தங்களுடை வர்க்கம் சார்ந்தே தங்களின் கருத்தை முன்வைக்கின்றனர்.
    12. சகோதரன், தேசத்தை அல்லாஹ்விடமா அடகு வைத்துவிட்டார்கள் .அதற்காகத்தான் செங்கொடி தேசத்தை மீட்க இந்த தளத்தில் கடுமையாக போராடி கொண்டிருக்கிறாரோ.
      ஏற்கனவே சென்கொடிதான் சொல்லியிருக்கிறார் பெயர் மாற்றம் செயக் கூட வீட்டு படியை விட்டு இறங்கினது கிடையாது என்று.பிறகு
      எந்த அடகுகடையிளிருந்து தேசத்தை மீட்க செங்கொடி என்ன போராடி,நீவிர் என்ன போராடி ,போராடி .போரடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
      ///எனக்கு தேவை உயிரினும் மேலான எனது நபியும்,மார்க்கமும் தான் என்று நினைப்பவர்களுக்கு உங்களுடைய நிலையில் இருந்து சிந்திப்பவர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை!///
      ஆம் உண்மையே ,அதனால்தான் தெருவில் நடக்கையில் பாதைக்கு இடையூறாக பழத்தோல் முதல் அனைக்கப்பாடாத பீடி,சிகரெட் துண்டுகள் அகற்றுவது முதல் இந்த தேச மக்களுக்கு ரத்த தானம் செய்வதிலிருந்து பல்வேறுவகையில் தொண்டு செய்து வருகிறோம் .தனது சொத்தை தனது வாரிசுகளுக்கு கொடுக்காமல மக்களுக்காக ஒதுக்கிய நபி[ஸல் ]மக்களுக்காகவே வாழ்ந்தார்.