எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன....
'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று
இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ,
அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும்மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!
நான் பிறந்த இடமான, பாபநாசம்-பண்டாரவாடையில், இமாம் அபூ ஹனிபா ரஹ் அவர்களை பழிக்கும் கொடியவராக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். பின்னர், நான் படித்து வளர்ந்த இடமான, அதிராம்பட்டினத்தில்... இமாம் ஷாஃபி ரஹ் அவர்களை அவமானப்படுத்தும் இஸ்லாத்தின் வில்லனாக மீண்டும் எனக்கு சொல்லப்பட்டவர் இவர். ஊருக்கு நாலு பேர், இப்படி 'நஜாத்துக்காரன்' என்று இருந்த அக்காலத்திய அவரின் ஆதராவளர்களை 'அஞ்சாம் மதஹப்'காரர்கள் என்று சொல்லி, பள்ளியின் வாசலில், 'நான்கு மதஹபுகளில் ஒருவரையாவது பின்பற்றாதவருக்கு இப்பள்ளியில் அனுமதி இல்லை' என்று பலகை மாட்டி... பள்ளியை விட்டு, தள்ளிவைத்து... இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக எனக்கு காட்டப்பட்ட போது... அத்தோடு 'வேண்டாம்பா இந்த விரோதிகள் சகவாசம்' என்று மெய்யாலுமே மூடத்தனமாக நான் நம்பி... என்பதுகளின் இறுதியில் இவர்களை வெறுத்து ஒதுங்கி விட்டேன்.
ஆனால்.... அதே ஆண்டுகளில்... வெறும் 2 MP மட்டுமே வைத்து இருந்த பாஜக, பாபர் மஸ்ஜிதை இடிக்கும் ஓட்டுப்பொறுக்கி அஜன்டாவை கையில் எடுத்தவுடன்... 88 MPக்களுடன் ஆளுங்கட்சி கூட்டணி என்றாகி... மீண்டும் பாபர் மஸ்ஜித் இடிப்பு ரத யாத்திரை மூலம் 120 MP க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாகி... 'கரசேவை' என்ற சட்டத்துக்கு எதிரான மறைமுக பயங்கரவாதம் செய்து பாபர் மஸ்ஜிதை இடித்தனர். ஆனால், இதன் பிறகு... ராமர் கோவில் கட்டும் ஆர்வத்திலிருந்து அவர்களின் ஆதரவாளர்களை ஆட்சிக்கு வந்தவுடன் அதுபற்றி பார்ப்போம்... என்று திசை திருப்பி... ஹிந்துத்துவா வெறியூட்டப்பட்ட மக்களை தக்க வைப்பதற்கு பாஜக எடுத்த... அடுத்த அரசியல் ஓட்டுப்பொறுக்கி ஆயுதம் தான் 'பொது சிவில் சட்டம்'. இது எந்த அளவு முட்டாள்த்தனமானது என்று இப்போது எல்லாருக்கும் தெரியும். அப்போது, இதுபற்றி அந்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மிகச்சிலருக்கே இருந்தது. அதனால்தான் அவர்களுக்கு 161 அப்புறம் 182 சீட் எல்லாம் வந்தது.
இந்நிலையில் ஒருநாள் (1993 /94 என்று நியாபகம்) அதிராம்பட்டினத்தில் ஒரு சம்பவம் நடந்தது. செக்கடிப்பள்ளி எதிரே வற்றி இருந்த செக்கடி குளத்திடலில் மவுலவி பீஜே வின் பொதுக்கூட்டம். மேடை லைட் எல்லாம் முதல் நாளே போட்டு விட்டார்கள். ஊர் முழுக்க போஸ்டர். 'PJ பேசுகிறார்' என்று. 'என்ன பேசுகிறார்... எதைப்பற்றி பேசுகிறார்' என்பதெல்லாம் யாருக்கு வேணும்...? 'அதெப்படி நம்ம எதிரி நம்ம இடத்துக்கு வந்து பேசலாம்...?' அவ்ளோதான் மேட்டர். விளைவு...? எல்லா போஸ்டரும் கிழிக்கப்பட்டது. அடுத்தநாள், காலையில்... பரபரப்பான தகவல் பஸ் ஸ்டாண்டில் நியூஸ் பேப்பர் வாங்கும்போது நண்பர்களால் பரிமாறப்பட்டது. அதாவது... PJ மீட்டிங்கிற்காக போடப்பட்டு இருந்த மேடை உடைக்கப்பட்டு... கீற்று பிய்த்து எறியப்பட்டு... மைக் செட் லைட் எல்லாம் நொறுக்கப்பட்டு... சொற்பொழிவு இன்று நடத்த முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டு விட்டது என்ற நியூஸ்..!
'இந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பேச்சு காதில் விழாத பாதுகாப்பான(?) தூரத்தில்தான் இருக்கேன் நான்' என்ற நிம்மதியான எண்ணத்தில் இருந்த எனக்கு... வந்தே விட்டது அவரின் உரை எனது காதுக்குள்..! இது எப்படி..? ஆமாம்.! அந்த மீட்டிங் கேன்சல் ஆக வில்லை..! இடம் தான் கேன்சல் ஆகியது. எனவே, மீட்டிங் எங்கள் வீட்டு அருகே இருந்த 'சாரா கல்யாண மண்டபத்தில்' மாற்றப்பட்டு அங்கே நடந்தது. நான் என்னதான் காதை பொத்திக்கொண்டு இருந்தாலும்... வீதி எங்கும் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் எனது செவிப்பறையை தட்டி எனது சிந்தைக்குள் சென்ற அவர் சொன்ன விஷயம் இதுதான்...........
"நான் என்ன, இவர்களை எதிர்த்தா பேச வந்துள்ளேன்..? நான் எதுக்கு இங்கே வந்து இருக்கேன்... எதைப்பற்றி பேச வந்து இருக்கேன்... இதுகூட தெரியாமல்... இப்படி மேடையை கலைத்து இடைஞ்சல் செய்தால் இதுக்கு என்ன அர்த்தம்..? நாளை பேப்பரில் நம்ம எதிரிகள்... என்ன எழுதுவாங்க தெரியுமா..? 'அதிராம்பட்டினத்தில் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பேச வந்தவரின் மேடை உடைத்து சட்டத்துக்கு தம் ஆதரவை தெரிவித்தனர்.' இப்படி ஒரு அவப்பெயர் உங்கள் ஊருக்கு தேவையா...? நமக்குள் இருக்கும் மார்க்கம் பற்றிய வேறுபாட்டையா காரணமாக சொல்வார்கள்..? நான் என்ன சொல்றேன்னு புரியுதா..?" என்றார்.
அதுதான்... நான் அவர் விஷயத்தில் யோசிக்க ஆரம்பித்ததன் முதல் படி. அந்த பேச்சை முழுதாக செவி தாழ்த்தி சொற்பொழிவை கேட்க ஆரம்பித்தேன். 'அடடே... நல்லாத்தானே பேசுறார். நேர்மையான கேள்விகள்தானே இவை. எவ்ளோ பெரிய விஷயம் சொல்ல வந்து இருக்கார்..! ஒருவேளை மக்கள் இவர் மேலே சொல்றது தப்பா இருக்குமோ..? என்று நினைத்துக்கொண்டு... அத்தோடு அவரை மறந்தும் விட்டேன்..! காரணம், எனக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஆரம்பகால இன்புட் அவரை அந்நியராக்கி வைத்திருந்தது. ஆனால், இரண்டு நாள் கழித்து... அவர் சொன்ன மாதிரித்தான் தினமலரில் பெட்டி செய்தியாக ஓர் ஓரத்தில் வந்தது. "பொது சிவில் சட்டம் : அதிரை முஸ்லிம்கள் ஆதரவு". :-)
இதேகாலகட்டத்தில்... பல வருடங்களாக மத்ஹப் சட்டங்களை படித்து (ஃபிக்ஹின் கலைக்களஞ்சியம் : ஹனபி & ஷாபி) அதில் உள்ள குளறுபடிகளை கண்டு நெருடலாக இருந்து... 'ஒரே விஷயத்தில், ஹனபி ஒன்றாக ஷாபி வேறாக இருந்த மசாயில்களில் எது மார்க்க ரீதியில் நபி ஸல் அவர்களின் சரியான செயலாக இருக்கும்' என்று குழம்பி தத்தளித்துக்கொண்டு இருந்து... 'இரண்டுமே சரிதான் தம்பி' என்ற பதிலை இருவரிடமும் பெற்று... 'அப்படின்னா... இரண்டில் எது சிறந்ததோ அதை மட்டும் நான் எடுத்து இரண்டிலிருந்தும் மிக்ஸ் பண்ணி பின்பற்றலாமா' என்றாலும் கூடாதாம்... ஏதாவது ஒன்னை மட்டுமே பின்பற்றனுமாம்... இறுதியில்... அந்த மதஹப் சட்டங்களில் இது நிச்சயம் பிழையானவையாகத்தான் இருக்கும் என்று சுயமாக சிந்தித்து ஒவ்வொன்றாய் வெறுத்து... (உதாரணம்:- திருட செல்லுவதற்கு முன்னர் திருடன் ஓதவேண்டிய துவா) அடுத்து எப்படி, எந்தப்பக்கம் செல்வது, என்ன செய்வது, என்று குர்ஆன் தர்ஜுமாவை மட்டும் படித்துக்கொண்டு இருந்தபோதுதான்...
தூத்துக்குடியில் நான் டிவி வாங்கிய பிறகு... (அதற்கு முன்னர் எங்கள் வீட்டில் டிவி இல்லை) ஒருநாள், விஜய் டிவியில் ஒருவரின் சொற்பொழிவை எதேச்சையாக 'பார்க்கும்' வாய்ப்பு ஏற்பட்டது. 'அடடே... எல்லாம் சரியா சொல்றாரே..! மத்ஹபில் தப்பா இருக்கும் இது... உண்மையில் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று நாம் நினைச்ச படியே நம்ம மார்க்கத்திலும் முன்னமேயே இருக்கே...' என்று வியப்போடும் மனநிறைவுடனும் நன்றியுணர்வோடும் அவரைப்பார்த்துக்கொண்டு இருந்த போதுதான்... நண்பன் அதிரை ஹாரிஸ் சொன்னான்... 'இவர்தாண்டா அவர்' என்று..!
அதற்கு முன்னர் 13 வருடங்களாக அவரை பண்டாரவாடையில் 'ஜெய்லாவுதின்' என்றும், அதிரையில் 'PJ' என்றும் அறிந்திருந்த நான் அன்றுதான்... அவரை 'மவுலவி P.ஜைனுல்ஆபிதீன் உலவி' இவர்தானா என்று பரவசத்துடன் பார்த்தேன். அவரது ஆய்வுத்திறனும் அரபிப்புலமையும் பேச்சாற்றலும் அவர்மீது எனக்கு ஒருவித மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியது. அதேநேரம், 'இவரையா இத்தனை காலம் நாம் நம்மைவிட்டு தள்ளி வைத்து நம்மை நாமே பாழ்படுத்திக்கொண்டோம்..?' என்று உள்ளுக்குள் துணுக்குற்றேன். இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மத்ஹப் காரர்களின் பேச்சை கேட்காது இருந்து சுயமாக ஆராய வேண்டும் என்ற கொள்கையில் இருந்த நான்... 'இவரை மட்டும் சுயமாக ஆராயாமல்.. இவ்வளவு காலம் அவர்கள் பேச்சை கேட்டு எப்படி விலகி ஓடினேன்' என்று என்னை நானே அவமானத்தால் நொந்து கொண்டேன்.
சகோ.பிஜேவின் சொற்பொழிவுகள், ஆய்வுகள், கேள்வி- பதில்கள் போன்றவற்றை, 'இவர் ஒரு சிறந்த இமாம்' என்று நான் அறிந்த ஸ்பிக் நகர் பள்ளியின் சுன்னத் ஜமாஅத் மவுலவியிடம் சொல்லி விவாத்தித்த போது... 'மவுலவி பிஜே சொல்றதுதான் சரி' என்று ஏறக்குறைய எல்லா விஷயத்திலும் அவரை சப்போர்ட் பண்ணியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அப்படியாக, ஓரிரு வருடம் கழித்து, குடந்தை-மேலக்காவேரியில் ஒரு மேடை சொற்பொழிவில்... சகோ.மவுலவி பிஜே அவர்களை நேரில் சந்தித்து சலாம் சொல்லி அருகருகே மேலக்காவேரி பள்ளியில் இஷா தொழுத அன்று (2002) அவர் மூலமாக அல்லாஹ் தந்த உத்வேகம்தான் புஹாரி ஹதீஸ் ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் என்னை வாங்க வைத்தது. அன்று அவர் கூட்டத்தில், 'யார் யாரிடம் ஏதாவது ஒரு குர்ஆன் தர்ஜுமா உள்ளது , கைதூக்குங்கள்' என்றார். நான் உட்பட ஏராளமானோர் கை தூக்கினோம். 'மாஷாஅல்லாஹ்' என்றவர், 'வாங்காதவர்கள் யார் என்று கேட்டு இருக்கனுமோ' என்று கூறி விட்டு.. அடுத்து, 'இம்மாதம் வெளிவந்தபுகாரி ஏழாவது பாகம் யாரிடம் உள்ளது..?' என்றார்..? எவரிடமும் இல்லை. 'சரி, மற்ற ஆறு பாகம் உள்ளவர்கள்..?' எவரிடமும் இல்லை. இப்படியே குறைத்து குறைத்து வந்து 'ஒரு பாகமாவது யாரிடம் உள்ளது..?' என கேட்க ஒரு சிலர் மட்டும் கை தூக்கினர்.
இந்த மாதிரியான மோசமான நிலையிலா நாம் இருக்கிறோம்... என்று அவருக்கு வந்த நியாமான வருத்தத்தில்... முன்வரிசையில் அமர்ந்து இருந்த நான் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அடுத்து அவரின் உரை என்னை மிகவும் பாதித்தது. ஆமாம்..! அவர் உரையின் படி... நான் சினிமாவுக்கு செலவழித்துள்ளேன். காமிக்ஸ், நாவல், விகடன், குமுதம், தினதந்தி, தினமணி, தி ஹிந்து, எக்ஸ்ப்ரஸ்... என்று எதற்கெல்லாமோ... எவ்வளவோ செலவு செய்து உள்ளேனே..! அந்த பணத்தில் எழென்ன... எழுநூறு பாகம் நான் வாங்கி இருக்கலாமே..! ஏன் எனக்கு வாங்க மனம் வரவில்லை..? மறுமைக்காக வாழும் எண்ணம் எனக்கு இல்லையா..? மார்க்கத்தை அறியும் ஆவல் எனக்கு இல்லையா..? இதுபோல யாராவது வந்து எதயாவது மார்க்கம் என்று சொன்னால், 'சொல்பவர் சொல்வது சரியா' என்று எப்படி நான் உரசிப்பார்ப்பது..?
அதே ஊட்டத்தில்... அடுத்த நாளே... குடந்தையில் அலைந்து புஹாரி கிடைக்காமல்... தஞ்சாவூர் ஹாஜியார் புக் டிப்போ சென்று ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வந்தேன். அடுத்து, முஸ்லிம், திர்மிதி என்று என்னை சரியான பாதையில் இவரின் இந்த மனதை தொட்ட உரை மூலம் என்னை சரியான பாதையில் பயணிக்கவைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
.
மேலும், விஜய், விண், மூன் மீடியா சிடிக்கள், ஆன்லைன் பிஜே தளம், DAN தமிழ், இமயம் வாயிலாக... அவரால் நிறைய மார்க்க விஷயங்களில் நான் விளக்கம் பெற்றிருக்கிறேன். அதெல்லாம் நான் குழம்பி வேறு எப்பக்கம் செல்வது என்று முட்டு சந்தில் திக்கு முக்காடி திசை அறியாமல் நின்ற விஷயங்கள். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு பல விளக்கங்களை ஊட்டின அவரது உரைகளும் எழுத்துக்களும்.
அப்போதெல்லாம்... அவற்றில், அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரையில் எனக்கு மிகவும் பிடித்தது யாதெனில்... "நான் சொல்கிறேன் என்பதால் அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" என்பதே..! ஒருவர் மார்க்க விஷயத்தில் முனைந்து கஷ்டப்பட்டு பல நாட்கள் பல நூல்களை ஆய்வு செய்த பின்னரும், இப்படியும் சொல்ல ஒரு கர்வமற்ற மனப்பக்குவம் வேண்டுமே. மாஷாஅல்லாஹ்.
இப்படி, என்னைப்போல... எண்ணற்றோர் சரியான இஸ்லாமிய பாதையை தேர்ந்தெடுக்க அவர் ஒரு கருவியாக இருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகிற்கு, அவர் ஓர் இஸ்லாமிய சொத்து.
கடந்த 27 வருடங்களாக அவரின் இந்த அயராத மார்க்க உழைப்புக்கு உரிய நற்கூலியை வல்ல அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் வழங்கி அவரை மகிழ்விக்கவும், அவரின் அளப்பரிய தொண்டுகள் மேலும் பலருக்கு சென்றடைந்து இன்னும் எண்ணற்றோர் பயன்பெறவும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை அடியோடு முற்றிலுமாக நீக்கி அருளி, இன்னும் பல்லாண்டுகள் அவருக்கு நல்வாழ்வினை தந்து, மார்க்க பிரச்சார அழைப்பு பணியில் இன்னும் சிறப்பாக ஈடுபட அவருக்கு உடலளவிலும் & மன அளவிலும் பெரும் ஆரோக்கியமும் ஊக்கமும் தந்தருளவும்... அவரின் பாவங்களை மன்னிக்கவும், இருகரம் ஏந்தி வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். யா அல்லாஹ், எனது துவாவை ஏற்றுக்கொள்வாயாக..! ஆமீன்.
முஹம்மது ஆஷிக் Citizen of the world என்ற இணையதளத்தில்
NO.1 சிங்கப்பூர் சாம் பிராணி இருப்பது எனக்கு தெரியாது! மன்னிக்க வேண்டும்!
அது சம்மந்த பட்டவர்களுக்கே நன்கு தெரியும், மேலும் இஹ்சாசை மட்டப்படுத்தவேண்டும் என்று கூறவில்லை ராபின் சொன்னதுபோல் விரக்தியில் கூறப்பட்ட வார்த்தை மட்டுமே!
//என்றோ இறந்துவிட்ட ஒரு மனிதரைப் பற்றி அவதூறாக படமெடுத்தது நன்முறையா?//
இல்லைதான்,அதற்காக?
//வக்காலத்து வாங்குவது இதெல்லாம் ஒரு சாராருக்கு தேவைப்படும்பொழுது//
எந்த சாராருக்கு நீங்கள் கூறும் தேவை?
அமெரிக்கனுக்கு,இஸ்ராயிலுக்கு,பிஜேபி க்கு ,R S S க்கு சரியா? நான் சொல்வது ?
இன்னும் ஒட்டுமொத இஸ்லாமிய விரோதிகளுக்கு சரியா ?
நாங்கள் என்ன தவறு செய்தோம்? வன்முறை தேவைப்படும் சாரார் உங்கள் பக்கம்,,
தேவைப்படும்போது எடுத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்வது முறையா?
//வன்முறைக்கு காரணமானவர்களை சாம்பலாக்கி??!!//
என்ன தீர்வு இது? இதற்காக வன்முறையில் ஈடுபடுவது நபியின் மதிப்பை அதிகப்படுத்துமா ? குலைக்குமா?
உங்களுக்கு எப்படி தெரியும்? நடுநிலைவாதிகளை கேளுங்கள், கூறுவார்கள்!
சரி காரணிகள் இருந்தால் வன்முறை செய்யலாம் என்கிறீர்களா? வன்முறையில் ஈடுபட்டு என்னுடைய நண்பனின் இருசக்கரவாகனத்தை சேதப்படுத்தியது சரியா?
இன்னும் எத்தனையோ? பாதிப்பை சரியா முறையில் பதிவு செய்யவே உதாரணம் கூறினேன்.
வன்முறையை தூண்டுவது வன் முறையாலருக்கு சரி? நக்சல் பாரிகளுக்கு சரி,, உங்கள் புரிதலில்!
மூமின்களுக்கு ?
//அப்பாவி மக்களை வன்முறைக்கு ஆளாக்கி//
சகோதரரே அப்பாவி மக்கள் நீங்கள் அல்ல,, முன்னாள் முஸ்லிம்களாகிய நாங்கள்தான்!
கலவரத்தில் பாதிக்கப்படுபவனே அப்பாவி!
கலவரத்தை தூண்டுபவர்கள்,கலவரத்தை செய்பவர்கள் அப்பாவிகள? நல்ல கதை!
முன்னாள் எங்களுடைய,இப்போது உங்களுடைய நபியை தவறாக சித்தரித்து விட்டதனால் அண்ணலாருக்கு இழுக்கு என்றால் சாதாரண திரைப்படத்துக்கு நீங்கள் மதிப்பளித்து,இதனால் இஸ்லாத்துக்கு அவமானம் என்று நினைக்கிறீர்களா? அவ்வளவு பெரிய ஆயுதமா அப்படம்?
நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் பின்னூட்டம் இடுவதில் அத்தளத்தில் ஏற்பட்ட சிக்கலை அதிலுள்ளவர்கள் அறிவர் .அதனால் தடைபட்டது.
மேற்கண்ட சுட்டியில் நான் தொகுக்க வில்லை. இதை வேறு எவரோ செய்துள்ளார். அவர் யாரென்றே எனக்கு தெரியாது.
ஆனால் தவ்ஹித் ஜமாஅத் போல அனைத்து அமைப்புகளும் இருக்க வாய்ப்பில்லை. மற்ற அமைப்புகள் அதிக கூட்டம் கூடினால் உணர்ச்சியால் கொந்தளிப்பார்கள்.அதன் விளைவுகளே உங்களது நண்பனின் பைக் எரிக்கப்பட்டிருக்கலாம்.அதற்கு அந்த அமைப்புகளே அந்த நண்பரை அறிந்து அதற்கான நஷ்ட ஈடு வழங்கியிருக்க வேண்டும்.தமிழ்நாடு தவ்ஹித் ஜ்மாத்ஹாக இருந்தால் அதையே செய்யும்.அதனாலே இது போன்றே ஒற்றுமை கோசங்களில் டிஎன்டிஜே கலந்துகொள்வதில்லை.
////சகோதரரே அப்பாவி மக்கள் நீங்கள் அல்ல,, முன்னாள் முஸ்லிம்களாகிய நாங்கள்தான்!
கலவரத்தில் பாதிக்கப்படுபவனே அப்பாவி!
கலவரத்தை தூண்டுபவர்கள்,கலவரத்தை செய்பவர்கள் அப்பாவிகள? நல்ல கதை!////
நீங்கள் சொல்லியிருப்பது புரியும்படியாக இல்லை .
முஸ்லிமில் முன்னாள்,இந்நாள் என்றெல்லாம் இல்லை. இறைவனையும் அவனது தூதரையும் மறுத்துவிட்டால் அவன் முஸ்லிம் இல்லை.இதில் முன்னாள் என்று சொல்லி பெருமை தேட வேண்டிய அவசியமில்லை .
சகோதரன் ,உங்களில் ஒருவரையும் அவரது மனைவியையும் நீலப்படத்தில் காட்டினால் நீங்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ளுங்கள் .
தெரியாத செங்கொடிக்கு தெளிவு செய்யவே நேரடி விவாதத்திற்கு அழைக்கிறோம் ,அதன் மூலம் உங்களைப் போன்றவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைய வாய்ப்பு உள்ளதால் என்பதாலே செங்கொடி நேரடி விவாதத்திற்கு மறுத்து வருகிறார்,.மேலும் அவர் சார்ந்த அமைப்பும் அதற்கு அனுமதி தராது.
இன்னும் நீங்கள் உண்மையானவராக இருந்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறு முன்னர் தகுந்த இஸ்லாமிய அறிஞர்களை நேரடியாக அணுகி பல விளக்கங்களை பெற்றிருக்க வேண்டும் .
//அதன் விளைவுகளே உங்களது நண்பனின் பைக் எரிக்கப்பட்டிருக்கலாம்.அதற்கு அந்த அமைப்புகளே அந்த நண்பரை அறிந்து அதற்கான நஷ்ட ஈடு வழங்கியிருக்க வேண்டும்//
எவ்வளவு சாதரணமாக சொல்லிவிட்டீர்கள்!
கொளுத்துபவன் பெயர்,இயக்கம் முகவரி இதெல்லாம் எழுதிவைத்துவிட்டா செல்வான்?
உங்களுடைய பெயர் அடிபடுகிறது என்றவுடன் எங்கள் இயக்கம் என்றைக்கும் தவறு செய்யாது,கொந்தளிக்காது என்று நமது அண்ணன் பேசுவதைப்போல பேசுகிறீர்கள்,அதற்கான வருத்தத்தை கூட தெரிவிக்காமல்?
என்னை விடுங்கள் அரசு பேருந்து மற்றும் அதில் பயணம் செய்த பயனாளிகளின் பாதிக்கப்பட்ட பணிகளுக்கு யார் பொறுப்பு? அதையும் உங்கள் இயக்கம் செய்யவில்லையா? கும்பலாக நின்றுகொண்டு சாலையை அடைத்தது யார்?
நீங்கள் சாலையிலேயே நிற்க வில்லையா? அது போகட்டும் முஸ்லிம்களை அழிப்பதற்காக இதுபோன்ற படங்களை எடுக்கிறார்கள் என்று கூறுவது வேடிக்கையாக தெரியவில்லையா?
இஸ்லாத்தை அதன் அடிப்படை நோக்கம் தெரியாத முஸ்லிமல்லாத நபர் என்று என்னை நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் தங்களிடம் அப்படி அடையாலப்படுதினேனே தவிர நீங்கள் சொன்னதுபோல்
//முன்னாள் என்று சொல்லி பெருமை தேட வேண்டிய அவசியமில்லை//
பெருமையை நான் அப்படி கூறி பெறுவதைவிட நான் எந்த மதமும் சாராதவன் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன்! தயவுசெய்து அப்படிமட்டும் கூறாதீர்கள் என்னைபோன்றவர்களால் ஜீரணிக்க முடியாது!
நல்ல விஷயங்கள் எந்த நிலையில்,யாரிடம் இருந்தாலும் ஏற்றுகொள்வோம்,அதே சமயத்தில் ஒழுக்கமாக நடக்கவும்,நல்லவனாக இருக்கிறேன் என்று பெருமைப்படவும் மதம் தேவையில்லை!
//சகோதரன் ,உங்களில் ஒருவரையும் அவரது மனைவியையும் நீலப்படத்தில் காட்டினால் நீங்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்//
இதிலிருந்தே தெரிகிறது நீங்கள் அந்த படத்தை விஷமிகளின் செயலாக பார்க்கவில்லை என்று!
முஹம்மது நபியின் படுக்கையறையில் வைத்து எடுக்கப்பட்டதை போல் பதறுகிறீர்கள்!
நிச்சயமாக, என்னையோ,எங்களில் ஒருவரையோ நீலபடத்தில் காண்பிக்க ஒன்று நாங்கள் அதில் பங்கெடுக்க வேண்டும், அல்லது எங்களுக்கு தெரியாமல் அப்படம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும்! சரியா? இரண்டும் குற்றம்தான்! ஆனால் நீங்கள் கூறுவது எந்தவகையில் என்று தெரியவில்லை எனக்கு.
நங்கள் இப்போதுதான் தெளிவாக உள்ளோம்!
எல்லா விளக்கமும் பெற்றதினால்தான் இஸ்லாத்தின் மறுபக்கம் தெரிந்தது! புரிந்து கொண்டோம்!
உங்களுடைய முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று நன்கு தெரிகிறது!
அதனால்தான் முன்னரே கேட்டேன் நீங்கள் கிருத்துவத்தை நம்புகிறவரா என்று. ஏனெனில் உங்களுக்கு ,அதற்காக நிறைய தளங்கள் உள்ளது, உங்கள் பதிவுகள் பிறருடைய பகுத்தறிவை தூண்டுபவையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்!
இஸ்லாத்தை விமர்சனம் பண்ணும் அதே வேலையில் கிருத்துவத்தையும் கொஞ்சம் திருப்பிப்பாருங்கள் ! இங்கு
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலை பார்க்க வேண்டாம் !
ஏனென்றால் இஸ்லாத்தை எப்படி ஆய்வு பண்ணினோமோ அதைபோலத்தான் கிருத்துவத்தையும் ஆய்வு பண்ணி மேலும் உலகளாவிய கடவுட்கொள்கையினால் எந்த பயனும் இல்லை என்ற முடிவில் ஒரு புள்ளியில் இணைந்துள்ளோம்!
இதில் அவர் சிறந்தவர்,இவர் சிறந்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை,
//கம்யுனிசத்தை நினைத்தால் கிறுக்குத்தனமாக தெரிகிறது.//
நீங்கள் கூறுவதுபோல் உங்களுக்கு பொதுவுடைமை கிறுக்குத்தனமாக தெரிய எதாவது ஒன்றை ஆய்வு செய்தீர்களா?
சகோதரரே பொதுவுடைமை நீங்கள் நம்பும் கிருத்துவத்தை போல் நம்பிக்கை சார்ந்த விடயமல்ல!
கிருத்துவத்தில் நீங்கள் ஆண்டவர் கூறிவிட்டால் எதைவேண்டுமானாலும் நம்புவீர்கள்!
பொதுவுடமையில் எதையும் என்,எதற்கு என்று ஆய்வுக்கு உட்படுத்தி பார்த்துதான் முடிவு ஏற்படும்,தவிர எதனையும் முடிவு என்றோ இதுதான் சரி என்றோ அறிவியலும்,பொதுவுடமையும் ஏற்றுகொள்வதில்லை!
மனிதனுக்கு ஒவ்வாத விடயங்கள் எப்படிப்பட்டதாகிலும் களைந்தெறிய மதவாதிகள் எதனையும் விட்டுக்கொடுப்பதில்லை! நம்பிக்கை சம்மந்தப்பட்டுவிட்டது என்பதால்.,
நீங்கள் அதனோடு இதை கலக்க வேண்டாம்!
நீங்கள் நகைச்சுவை எதிர்பார்ப்பவராக எனக்கு தெரியவில்லை,
என்ன வெறித்தனத்தை கண்டீர்கள் என்னுடைய பின்னூட்டத்தில்?
கூறுங்கள் மாற்றிக்கொள்கிறேன்.
//நாங்க எல்லாம் என்ன, கெட்டவனாக வாழவா ஆசைப்படுகிறோம்?//
அது உங்களுடைய விருப்பம்,.//
//நல்லவனாக வாழ ஆசைபடும் இளைஞன்!// இது என்னுடைய விருப்பம்!
அதற்காக உங்களை நல்லவராக வாழ விரும்பாதவர் என்று கூறவே இல்லையே!
உங்களுடைய பின்னூட்டத்திலேயே தெரிகிறது வெறித்தனம் யாரிடம் உள்ளதென்று!
நீங்களும் செங்கொடிப் போலவே அறையை விட்டு வெளியே வராது எழுதி வருகிறீர்கள்.பைக் எரிக்கப்பட்ட அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் டிஎண்டீஜே கலந்துகொள்ளவில்லை .அதைத்தான் ஒற்றுமை கோசத்தில் டிஎன்டிஜே பங்கேற்காது என்று சொல்லியிருந்தேன் .12/09 இல் தனியாக ஆர்பாட்டம் டிஎன்டிஜே நடத்தியது.அதிக கூட்டத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை தீர்க்க உடனடி நடவடிக்கையுமஎடுக்கப்பட்டது.
பைக் எரித்தவனை கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த அனைத்து அமைப்புகளும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.அந்த அமைப்புகள் அதற்க்கான நஷ்ட ஈடுவை கொடுக்க வேண்டும் என்று நான் கூறிஇருப்பது வருத்தம் தெரிவிப்பதை விட ஒருபடி மேலானது.
////முஸ்லிம்களை அழிப்பதற்காக இதுபோன்ற படங்களை எடுக்கிறார்கள் என்று கூறுவது வேடிக்கையாக தெரியவில்லையா?//
முஸ்லிம்களை சீண்டினால் அவர்கள் இது போன்ற ஆர்ப்பாட்டத்தை செய்வார்கள்.அதன்மூலம் கலவரம் ஏற்படும்.ஏற்படாவிட்டால் ஏற்படுத்தலாம் .அப்புறம் சிறைவாசம் தீவிரவாதம் செட் அப்கள் பண்ணிக்கொள்ளலாம் .அவர்கள் கல்வியிலோ ,பொருளாதரத்திலோ முன்னேறவிடாமல் வைத்துக்கொள்வது என்பது உலக அளவில் யூதர்களின் திட்டமும் ,இந்திய அளவில் சங்க குடும்ப திட்டங்களாகும் .
////இஸ்லாத்தை அதன் அடிப்படை நோக்கம் தெரியாத முஸ்லிமல்லாத நபர் என்று என்னை நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் தங்களிடம் ///
இஸ்லாத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்று தெரிந்து கொண்டீர்கள்?சொல்லுங்களேன் .நானும் தெரிந்து கொள்ளட்டும்.
இஸ்லாத்தின் அடிப்படை நோக்கம் என்று நீங்கள் சொல்லியிருப்பது கிட்டத்தட்ட ஹிந்துத்துவாக்களின் சொற்கள் போல உள்ளது
///எல்லா விளக்கமும் பெற்றதினால்தான் இஸ்லாத்தின் மறுபக்கம் தெரிந்தது! புரிந்து கொண்டோம்!///
இஸ்லாத்தில் ஒரு பக்கமே உள்ளது.இல்லாத மறுபக்கம் எப்படி உங்களுக்கு தெரிந்தது?இஸ்லாத்தின் பெயரால் நீங்கள் கண்ட மறுபக்கத்தை காட்டுங்கள் .
///போர்களத்தில் குழந்தைகளை குதிரையின் காலில் மிதித்து கொன்று விட்டு கேட்டால் அதற்கு பின்னால் நபி தடை செய்த வசனத்தை காண்பிப்பது போல் இதற்க்கு சண்டையில் கிழியாத சட்டை உண்டா?என்று கேட்க வேண்டாம்!///
நீங்கள் சொல்லியிருப்பது புரியும்படியாக இல்லை .இதை விளக்க மறந்துவிட்டீர்களா ?
குற்றம் என்றால் நடவடிக்கை எடுப்பீர்களா?
அல்லது தனிமனித உரிமைகளில் தலையிடக் கூடாது என்று சாதரணமாக எடுத்துக் கொள்வீர்களா?
//கொடுக்க வேண்டும் என்று நான் கூறிஇருப்பது வருத்தம் தெரிவிப்பதை விட ஒருபடி மேலானது.//
ரொம்பவும் சந்தோஷம்,அப்படியானால் மற்ற முஸ்லிம்களின் நிலை வேறு கொந்தளிப்பார்கள்! நீங்களோ
//ஒற்றுமை கோசத்தில் டிஎன்டிஜே பங்கேற்காது// என்று கூறுகிறீர்கள்!
ஆகவே TNTJ முஸ்லிம்களே தனி கூட்டமாக இருப்பார்கள் என்று கூறவருகிறீர்கள்,.
அப்படியானால் நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியிருந்தால் நான் தொடர்ந்து முஸ்லிம்கள் மட்டுமே காரணம்,TNTJ முஸ்லிம்கள் காரணம் இல்லை என்று ஒதுங்கியிருப்பேன் பரவாயில்லை.
//பைக் எரித்தவனை கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை//
தொலைந்து போகட்டும் என்றுதான் நாங்களும் விட்டுவிட்டோம்,நீங்கள் கண்டுபிடிக்க வேண்டாம் அந்த முஸ்லிம் வேறு நீங்கள் வேறு என்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்!
திரைப்படம் எடுத்து இஸ்லாமியர்களை அழிப்பதற்கு நீங்கள் கூறிய யூதர்கள் சதி என்பது நீங்கள் இன்று கூறவில்லை இனவெறியை உண்டுபண்ணும் மதவாதிகளின் பிதற்றல்!
யூதர்கள் கெட்டவர்கள் அரபுலகத்தை விட்டு விரட்டியடிக்கப்படவேண்டும் என்பது என்றைக்கு இஸ்லாம் உருவானதோ அன்றிலிருந்து இன்று வரை காட்டரபுகளின் வேதவாக்கு!
யூதர்களுக்கு நான் வக்காலத்து வாங்குவதாக எண்ணவேண்டாம். உலகில் எந்த இனமும் வெறியுடன் புறப்பட்டால் அடுத்த இனம் எதிரியாகத்தான் தெரியும்! யூதர்களுக்கும் முஸ்லிம்கள்தான் எதிரி! அதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல.அதற்காக யூதர்கள் அனைவரும் நல்லவர்கள் என்றும் கூறவில்லை! தீய எண்ணம் உள்ளவர்கள் உலகில் எல்லா பகுதிகளிலும் உள்ளார்கள்,அது இயற்கை!!
இஸ்லாத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்று கேட்டுள்ளீர்கள்,ஏதோ வெறுமையாய் கேட்பது போல் உள்ளது!
உங்களுக்கு தெரியாததா சகோதரரே எனக்கு தெரியப்போகிறது? மேலும் , உங்களுக்கு தெரியாது என்றோ நான் சொல்லித்தருகிறேன் என்றோ சொல்லவில்லையே!
//இஸ்லாத்தில் ஒரு பக்கமே உள்ளது//
சகோதரரே அது உங்களுக்கு தெரிந்தவரை.
,எல்லோருக்கும் மறுபக்கம் உண்டு உலகில் எல்லாவற்றிற்கும் மறுபக்கம் உண்டு !
ஒருபக்கம் மட்டுமே உள்ளது ,மறுபக்கம் இல்லையென்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று உங்களை கேட்க விரும்பவில்லை காரணம் உங்களுடைய பின்னூட்டங்களை படித்துப்பார்த்து பார்த்து இவ்வளவு விளக்கங்களை பெற்றுமா உங்களுடைய சிந்தனை மற்றகருத்துக்களை பரிசீலிக்கவில்லை?
ஆச்சரியமாக உள்ளது சகோதரரே உங்களுடைய பயிற்சி!!
நீலப்படம் சம்மந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள்
// குற்றம் என்றால் நடவடிக்கை எடுப்பீர்களா?//
தகுதி,பொறுப்பு,அதன்மூலம் வழங்கப்படும் சட்டம் என் கையில் இருந்தால் நிச்சயம் எடுப்பேன்.
அடுத்தது சம்மந்தமே இல்லாமல் கேள்வி கேட்டுள்ளீர்கள்
//அல்லது தனிமனித உரிமைகளில் தலையிடக் கூடாது என்று சாதரணமாக எடுத்துக் கொள்வீர்களா?//
எது தனிமனித உரிமை? எது தலையீடு ? நான் கேட்டது என்ன ? முகம்மதுவின் நற்பெயருக்கு களங்கம் சாதாரண திரைப்படம் ஏற்படுத்திவிடுமா என்றுதானே?
நீங்கள் கண்டனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தியால் தீர்வு அதுவாகி விடுமா?
பாதிப்படைந்த பொதுமக்களுக்கு என்ன தீர்வு? என்றுதான் கேட்டேன், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆயிரம் பிரச்சினை இருக்க ஏனிந்த நிலையில் இஸ்லாமியர்கள் என்ற முறையில்தான் வினா எழுப்பப்பட்டதே தவிர வேறதற்குமில்லை.
சண்டையில் கிழியாத சட்டை எது என்று கேட்டிருந்தேன்! செங்கொடியின் தலைப்பை தாண்டி நான் சென்றதனாலும் விவாதம் வேறுவகையில் செல்வாதாலேயே அதனை விடுத்தேன்!
இன்னும் நீங்கள் இனி வரும் பின்னூட்டங்களை தலைப்பை ஒட்டியே தொடர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்!
ஒருவேளை இஹ்சாசுக்கு பதில் நீங்கள் என்றால் செங்கொடியின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கலாம்!
நீங்கள் கேட்டுவிட்டதால் கூறுகிறேன்!
பின்வரும் ஹதீதுகளை நடுநிலையோடு படித்துப்பாருங்கள் !
புஹாரி ஹதீத் எண்:3012 ,
முஸ்லிம் ஹதீத் எண் :3589 ,3590
படித்து பாருங்கள் இதனையும் !
பின்னர் ஹதீத் எண் : 3014 ,இதனில் பெண்களையும்,குழந்தைகளையும் கொள்வது தடை செய்யப்பட்டது என்று பதிந்துள்ளார்கள்!
அதனாலேயே நான் போர்களக்கொலைகளை போல தெரியாமல் நடந்துவிட்டதென கூறவேண்டாமென கூறினேன்!
மற்றபடி மேற்சொன்ன ஹதீதுகள் பலஹீனமானவை என்றோ,பலமானவை என்றோ உங்கள் மேலிடம் கூறும் விளக்கங்களை பெற்று இங்கு பகிர்ந்து தலைப்புக்கு வெளியில் செல்ல வேண்டாம் என கேட்டுகொள்கிறேன்!
சகோதரன்,/////ஆகவே TNTJ முஸ்லிம்களே தனி கூட்டமாக இருப்பார்கள் என்று கூறவருகிறீர்கள்,.///
இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அதிகமாக திரண்டால் என்னவெல்லாம் நடக்குமோ அதைப்போல அல்லாது முஸ்லிம்களும் அதிகமாக கண்டன ஆர்பாட்டங்களில் திரண்டால் ஒரு சில அசம்பாவிதங்கள் நடக்கும் .கட்டுபடுத்த அவர்களால் இயலாது .ஆனால் டிஎன்டிஜே வில் கட்டுப்படுத்த இயலும் .இதத்தான் உங்களிடம் கூறவந்தேன் ..என்னுடைய கூற்றில் உங்களது குரூர புத்தியை குதுகாலிக்க செய்யவேண்டாம்.
////யூதர்கள் சதி என்பது நீங்கள் இன்று கூறவில்லை இனவெறியை உண்டுபண்ணும் மதவாதிகளின் பிதற்றல்!//
அப்படியெனில் சங்ககுடும்ப பற்றி கூறியது உண்மை .ஏனெனில் ,நீங்கள் இந்தியாவில் உங்களது நாத்திக கொள்கைக்கு அவர்கள் பிரதான எதிரிகள் .ஆதலின் அதை ஒப்புக் கொள்கிறீர்கள் .ஆனால் யூதர்கள் உங்களுக்கு அவசியமில்லாதவர்கள்.ஆனாலும் உங்களுக்கு இன்னொருவகையில் வேண்டியவர்கள்..ஏனெனில் இன்று இஸ்லாத்திற்கு எதிராக பல அயோக்கியத்தனமான கருத்துக்களை உங்களைப் போன்றவர்களுக்கு தந்து உதவியவர்கள் .அமெரிக்காவில் முஸ்லிம் ஜீவ்ஸ் யுனிவர்சிட்டி அமைத்து முஸ்லிம் அறிஞர்களால் புறக்கணிக்கப்பட்ட நூல்களை முஹம்மது நபி[ஸல்] அவர்களைப் பற்றி அவதூறுகள் பரப்புவதற்கு ஆதாரமாக வழங்கி உங்களைப்போன்ற குரூரங்களுக்கு உதவுபவர்கள் .
///அதற்காக யூதர்கள் அனைவரும் நல்லவர்கள் என்றும் கூறவில்லை! தீய எண்ணம் உள்ளவர்கள் உலகில் எல்லா பகுதிகளிலும் உள்ளார்கள்,அது இயற்கை!!////
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட சொன்ன ஒரு அப்பிராணியை சித்திரவதைப்படுத்தி கொன்றது முதல் பாலஸ்தீன குழந்தைகளை கொல்லுகிறவர்கள் வரை ,சதித்திட்டம் தீட்டி கிளிண்டனின் விந்தை ஆடையில் தோய்த்தவர்கள் வரை நல்லவர்களை காணமுடியவில்லை. நீங்கள் கண்டுபிடித்து சொல்லுங்கள்.
///உங்களுடைய பின்னூட்டங்களை படித்துப்பார்த்து பார்த்து இவ்வளவு விளக்கங்களை பெற்றுமா உங்களுடைய சிந்தனை மற்றகருத்துக்களை பரிசீலிக்கவில்லை?///
மற்ற கருத்துக்களை ,மாற்று கருத்துக்களை சொல்லுங்கள்.அது உங்களின் முதல் பக்கமே ஒழிய இஸ்லாத்தின் மறுபக்கம் இல்லையென நிருபிப்போம்
// குற்றம் என்றால் நடவடிக்கை எடுப்பீர்களா?//
தகுதி,பொறுப்பு,அதன்மூலம் வழங்கப்படும் சட்டம் என் கையில் இருந்தால் நிச்சயம் எடுப்பேன்.////
இப்போதுதான் அது உங்களது கையில் இல்லையே !இல்லாத இந்த நிலையில் என்ன செய்வீர்கள்?
அமெரிக்கா அது தனிமனித உரிமை என்கிறது.,நீங்களும் அதே அடிப்படையிதான் ஆதங்கப்படுகிரீர்களோ என்று கேட்டுள்ளேன்.
///முகம்மதுவின் நற்பெயருக்கு களங்கம் சாதாரண திரைப்படம் ஏற்படுத்திவிடுமா என்றுதானே?
நீங்கள் கண்டனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தியால் தீர்வு அதுவாகி விடுமா?/////
கணடனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த ஜனநாயகம் அனுமதிக்கிறது .ஆம் தீர்வு மத்திய அரசு இந்தியாவில் தடை செய்தது.
/////பாதிப்படைந்த பொதுமக்களுக்கு என்ன தீர்வு? என்றுதான் கேட்டேன், ////
முஸ்லிம்களும் மக்கள்தான் .அவர்களும் பல போராட்டங்களினால் பாதிபடைந்திருக்கிரார்கள் .அவர்களுக்கு என்ன தீர்வை செய்தீர்கள்?
/////ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆயிரம் பிரச்சினை இருக்க ஏனிந்த நிலையில் இஸ்லாமியர்கள் என்ற முறையில்தான் வினா எழுப்பப்பட்டதே தவிர வேறதற்குமில்லை.///
ஆர்பாட்ட நடத்த என்னவென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும் .அதற்காக ஆர்பாட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம் .எப்போவாது செங்கொடி பதிவரிடம் ஆலோசனை கேட்கப் படும்வேளையில் நீங்கள் சொல்லுங்கள்..
///ஒருவேளை இஹ்சாசுக்கு பதில் நீங்கள் என்றால் செங்கொடியின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கலாம்!///
செங்கொடி கடவுள் நிறத்தை கேட்பார் .பதில் அளிக்க பாலகன் ஒருவனை அழைத்து வரவேண்டும் .
ஹதித்கள் பற்றி இறைவன் நாடினால் விளக்குவேன்
//நீங்களும் செங்கொடிப் போலவே அறையை விட்டு வெளியே வராது எழுதி//
இஸ்லாம் என்ற அறையை விட்டு வெளியில் வராமல் இருப்பது உங்களை போன்றோர்கள்தன்!
இயக்கம்,போராட்டம் என்பது புரட்சியை மையமாக வைத்து நடத்துபவர்கள் சிந்திக்கவேண்டிய ,மக்கள் திரளின் மாபெரும் சக்தி!
அது உங்களைபோன்ற எது கூறினாலும் ,தேசத்தை எவன்,எங்கு அடகு வைத்தாலும் எனக்கு கவலையில்லை!
எனக்கு தேவை உயிரினும் மேலான எனது நபியும்,மார்க்கமும் தான் என்று நினைப்பவர்களுக்கு உங்களுடைய நிலையில் இருந்து சிந்திப்பவர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை!
இஸ்லாம் சோசலிசத்தை மறுக்கவில்லை. இங்கு எழுதிக்கொண்டிருக்கும் சோசலிசத்தை மறுக்கும் சகோ.கள் தங்களுடை வர்க்கம் சார்ந்தே தங்களின் கருத்தை முன்வைக்கின்றனர்.
ஏற்கனவே சென்கொடிதான் சொல்லியிருக்கிறார் பெயர் மாற்றம் செயக் கூட வீட்டு படியை விட்டு இறங்கினது கிடையாது என்று.பிறகு
எந்த அடகுகடையிளிருந்து தேசத்தை மீட்க செங்கொடி என்ன போராடி,நீவிர் என்ன போராடி ,போராடி .போரடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
///எனக்கு தேவை உயிரினும் மேலான எனது நபியும்,மார்க்கமும் தான் என்று நினைப்பவர்களுக்கு உங்களுடைய நிலையில் இருந்து சிந்திப்பவர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை!///