புதன், 20 ஜூலை, 2011



பதிப்புரை
 ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.
தற்போது டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள இவர், ஜாமியா உல்ஃபலா மதரசாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் படித்து முடித்தவர். இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் பற்றி இவர் விரிவாக ஆய்ந்தெழுதியுள்ளார். கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் “”ஃபிராண்டியர்” (பிப்ரவரி 511, 2006) என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர், இவை குறித்து அலசுகிறார். புறக்கணிக்கப்படும் பிரச்சினை குறித்த இச்சிறுவெளியீடு இந்துமதத்தின் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திலும் மனு”தர்ம’ அடிகொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சாதியத்திற்கு எதிராகவும் விடாப்பிடியாகப் போராட விரிந்த பார்வையை அளிக்குமென்று நம்புகிறோம்.
-கீழைக்காற்று

கேள்வி: “இஸ்லாமிய‘ ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த “மேல்‘ சாதி முஸ்லிம் எழுத்தாளர்களும் உலேமாக்களும் சாதிய அமைப்புக்கு மதரீதியாக இசைவாணை வழங்க முயற்சித்திருக்கலாம். ஆனால்அதற்குப் பிந்தைய காலத்தில் இந்த நிலையிலிருந்து நிச்சயம் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?
பதில்: இப்போது அந்த விசயத்துக்கு நான் வருகிறேன். “”ஜிந்தகிஇநவ்” இதழுக்கு நான் எழுதிய சில கட்டுரைகளில், காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்த பிரபலமான உலேமாக்கள் பற்றியும், இப்போதைய சமகால இந்தியாவிலுள்ள உலேமாக்கள் மற்றும் உலேமாக்களின் அமைப்புகள் பற்றியும் நான் பரிசீலித்தேன். பாரெல்விஸ், தியோபண்டிஸ், ஹல்இஹதித், ஜமாத்இஇஸ்லாமி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் போன்ற அமைப்புகளைப் பரிசீலித்தேன். குறிப்பாக, திருமண உறவு பற்றிய விசயங்களில், இவர்கள் சமூக சமத்துவம் அல்லது காஃபா பற்றிய கருத்தாக்கத்தை எப்படிக் கையாண்டனர் என்பதைப் பரிசீலிப்பதில் நான் கவனத்தைக் குவித்தபோது, அவர்களுக்கிடையில் வியப்பிற்குரியதொரு கருத்தொற்றுமை நிலவுவதைக் கண்டேன்.
சாதியைச் சட்ட சம்மதம் கொண்டதாக்குவதற்கு காஃபா பற்றிய கருத்தாக்கத்தைத் தமது ஹனாஃபி மரபில் பாரெல்விஸ் மற்றும் தியோபண்டிஸ் அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். அஷ்ரப் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் மேன்மையையும் ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் தாழ்நிலையையும் இவர்கள் சட்ட மரபாக்குகின்றனர். சமூகத் தகுதி பற்றிய விசயத்தில் ஹனாஃபி மரபினர் மிகவும் கறாராக இருக்கின்றனர். எனவே, காஃபா பற்றிய விசயத்தில் பிறப்பு அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாக்குகின்றனர். ஹனாஃபி சிந்தனை மரபு உருவான ஈராக்கைச் சேர்ந்த குஃபாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்ததும், அவற்றை அது நியாயப்படுத்த முனைந்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சன்னி சட்டப்பள்ளியைப் பின்பற்றுகின்ற அராபிய மையத்துக்கு வெளியில் உருவாகி வளர்ந்த ஷஃபி, ஹன்பாலி போன்ற மரபுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன.
ஆனால், இமாம் ஷஃபி, இமாம் அகமது பின் ஹன்பால் ஆகிய இருவரும் பிறப்பு அடிப்படையிலான காஃபாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறப்பு அல்லது குடும்பத்தை அடிப்படையாக்குவதற்கு நேர்மாறாக, மாலிகி சிந்தனைப் பிரிவு விதிவிலக்காக நிமிர்ந்து நிற்கின்றது. காஃபாவைத் தீர்மானிப்பதில் பிறப்பை ஒரு காரணியாகக் கொள்ளாமல், கடவுட்பற்றையே அடிப்படைக் காரணியாக மாலிகி சிந்தனைப் பிரிவு கருதுகிறது. இதுதான் உண்மையான இஸ்லாமிய அளவுகோலாகும். மாலிகி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தவரான இமாம் மாலிக் உண்மையான இஸ்லாமிய போதனையின் மையமான மெதினாவில் வாழ்ந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஹனாஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம். ஆனால் தியோபண்டி மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், “”சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது” என்று கற்பிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனாஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.
18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷா வலியுல்லா, இந்தியாவின் பிரபலமான முன்னணி இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர்; சன்னி பிரிவைச் சேர்ந்த சிந்தனை மரபினர் பலர், இவரைப் பெரிதும் மதித்தனர்; இவர் பிறப்பு அடிப்படையிலான காஃபாவை உறுதியாக ஆதரித்து உயர்த்திப் பிடித்தவராவார். காஃபா என்பது ஒருவரின் இயற்கையிலேயே உள்ளார்ந்து உறைந்திருப்பது என்றும், தமது சொந்த காஃபாவுக்கு வெளியில் மணஉறவு கொள்வதானது, கொலை செய்வதை விடவும் அபாயகரமானது என்றும் அவர் தனது “”ஹுஜ்ஜாத்துல்லா அல் பாலிகா”, “”ஃபிக்இஉமர்” ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இறை தூதருடன் இருந்த அவரது சகாக்களில் பலர் அடிமைப் பெண்களை மணந்த பல நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட போதிலும், இந்த அறிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. இறைதூதர் நபிகளார், தமது அத்தை மகளான ஜைனப் பிந்த்இஜஹாஷ்க்கு விடுவிக்கப்பட்ட தனது அடிமையான சையத்ஐ மணமுடித்து வைத்தார். தனது மாமன் மகளான ஜுபா ஏ பிந்த்இஜுபைர்க்கு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மிக்தாத் என்பவரை மணமுடித்துள்ளார்.
தீவிர ஹனாஃபி ஆதரவாளர்களான தியோபண்டி மரபினர், பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற கருத்தாக்கத்தைத் தீவிரமாக ஆதரித்துச் செயல்படுத்துவோராக உள்ளனர். “”தியோபண்ட் இயக்கமும் சஹரான்பூர் முஸ்லிம்களும்” என்ற நூலின் பாகிஸ்தானிய ஆசிரியரான குலாம் முஸ்தஃபா, அதில் பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்லியுள்ளார். தியோபண்ட் மதரசாவை நிறுவியவர்களில் ஒருவரும், ஷேக் சாதியைச் சேர்ந்தவருமான மௌலவி காசிம் நானோத்வி, நான்கு சாதியினரை மட்டுமே இறைவன் தமது மதத்துக்குச் சேவை செய்யப் படைத்துள்ளார் என்று அறிவித்துள்ளாராம்; சையத், ஷேக், மொகல், பத்தான் ஆகியவையே இந்நான்கு சாதிகளாம்!
தியோபண்டி மரபைச் சேர்ந்த மற்றொரு நூலாசிரியரும், தியோபண்ட் மதரசாவின் முதல் முஃப்தியுமான மௌலானா அஸிசுர் ரஹ்மான் உஸ்மானி, பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்கிறார். அஷ்ரஃப் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது தந்தை, பாட்டன் போன்ற தனது ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதியின்றி, ரஸில் சாதியைச் சேர்ந்த ஒரு ஆண்மகனைத் திருமணம் செய்வாரானால், அந்தத் திருமணம் உண்மையிலேயே நடந்ததாகக் கருத முடியாது; எனவே, அந்தத் திருமணத்தை முறிப்பது (ஃபஸ்க்இநிக்காஹ்) என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று அவர் அறிவிக்கிறார். தியோபண்ட் மதரசாவால் வெளியிடப்பட்ட “”ஃபடாவா இ தார்உல்உலும் தியோபண்ட்” என்ற தியோபண்டி ஆணைகளின் (ஃபத்வா) தொகுப்பில் இந்த விசயம் கூறப்பட்டுள்ளது.
அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவருடைய வாதத்திலிருந்து தெரிவது என்னவென்றால், இத்தகைய மண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் முறைகேடாகப் பிறந்தவர்கள்; இத்தம்பதியினரும் ஒழுக்கக் கேடானவர்கள்; இவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி, நூறு கசையடி தரப்பட வேண்டும்! இருப்பினும், ஒரு “கீழ்’ சாதிப்பெண் தனது நெருங்கிய ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதி இல்லாமலேயே “மேல்’ சாதி ஆண்மகனைத் திருமணம் செய்து கொள்ள இந்த உஸ்மானி அனுமதித்திருப்பார் என்பதை நாம் துணிந்து கூற முடியும். உண்மையில், இது பார்ப்பனிய மனோபாவத்தையும் அதேபோல முஸ்லிம்களிடம் உள்ளார்ந்து ஆழப்பதிந்துள்ள மூத்த குல ஆணாதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
தியோபண்டி மரபைச் சேர்ந்த இன்னுமொரு இஸ்லாமிய அறிஞரான மௌலவி முகம்மது சகாரியா சித்திகி என்பவர், இன்றைய உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான தப்லிஹி ஜமாத் இன் தலைமைச் சித்தாந்தவாதியாவார். “”மெய்யான சமயப் பணிகளின் நற்பேறுகள்” என்ற தமது நூலில் அவர், “”முஸ்லிம்களின் ஒரு குழு, மெக்காவுக்குப் புனிதப் பயணம் (ஹஜ்) அல்லது வேறிடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுமானால், அவர்கள் தம்மில் ஒருவரைத் தலைவராக (அமிர்) நியமிக்க வேண்டும்; இந்தக் குழுவில் குரைஷி (சைய்யத் அல்லது ஷேக்) சாதியைச் சேர்ந்தவர் எவராவது இருப்பின், அவரையே தலைவராக நியமிப்பது சிறந்தது” என்று கூறுகிறார். அவர் முஸ்லிம்களை அஷ்ரஃப் (“மேல்’ சாதி) என்றும் அர்ஸல் (“கீழ்’ சாதி) என்றும் வகைப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முதலாவது அரசாங்க முஃப்தியாக (முஃப்திஇஆஜம்) பின்னாளில் அமர்த்தப்பட்ட தியோபண்டி முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி எழுதிய, “”நிஹாயத் அல்அராப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற சர்ச்சைக்குரிய சாதி பற்றிய நூலையும் இவர் ஆதரித்தார். தியோபண்டி உலேமாக்கள் பலராலும் ஆதரிக்கப்பட்ட இந்த நூலில், அஷ்ரஃப் சாதிகள் என்றழைக்கப்பட்ட நான்கு வகை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் தனிச்சிறப்பாகக் கருணை காட்டுவார் என்று இந்த உஸ்மானி கூறியிருக்கிறார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி தமது இந்த நூலில், சக தியோபண்டி அறிஞரான அகமத் உஸ்மானி என்பவரின் ஒரு கட்டுரையும் இடம்பெறச் செய்திருந்தார். அந்தக் கட்டுரையில், “கீழ்’ சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள் கல்வி கற்கத் தொடங்கியதால்தான் எல்லாவகையான இடர்ப்பாடுகளும் ஆரம்பித்தன என்று அகமது உஸ்மானி எழுதியிருக்கிறார்!
இன்னுமொரு முன்னணி தியோபண்டி அறிஞரான மௌலவி அஷ்ரஃப் அலி ஃபரூக்கி தான்வி என்பவர், முஸ்லிம் நெசவாளர்களைச் சிறுமைப்படுத்தும் சொற்களில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் நெசவாளர்கள் தொழுகை செய்வது பற்றி தனது “”அல்ரஃபிக் ஃபிசவாய் அல்தாரிக்” நூலில் அவர் எள்ளி நகையாடினார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி என்பவரின் “”நிஹாயத் அல்அரப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற நூலை ஆதரித்து, அவர் எழுதி “”வாஸ்லஸ் சபாப் ஃபி ஃபாஸ்லின் நஸ்ப்” என்ற தனது நூலில் நெசவாளர் சாதியினரை வெறுப்புடன் “”ஜுலாஹா” என்று குறிப்பிட்டார். அன்சாரிகள் (“”உதவி செய்பவர்கள்”) என்று நெசவாளர்கள் தம்மை அழைத்துக் கொள்வதை அவர் கண்டனம் செய்தார்.
இவ்வாறு அவர்கள் தம்மை அழைத்துக் கொள்வது, ஒருவர் தமது குடும்ப மரபை அல்லது பரம்பரையை மாற்றிக் கொள்ளும் செயலாகும்; மெக்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்று அங்கு இறைதூதர் வாழ்ந்தபோது அவருக்கு உதவி செய்த மெதினாவைச் சேர்ந்த அன்சார்களின் வழித்தோன்றல்கள் என்று உரிமை பாராட்டுவதாகும்; இது தவறானதும் தடை செய்யப்பட்டதுமாகும் என்று தான்வி வாதிட்டார். தமது வாதத்துக்கு வலுசேர்க்க, இறைதூதர் கூறியதாக ஒரு வழிவழிச் செய்தியை இட்டுக்கட்டி கூறினார். தனது தந்தையைத் தவிர வேறொருவருக்கு மகன் என்று உரிமை பாராட்டும் ஒருவன் விண்ணுலகை அடையமாட்டான் என்பதே இறைதூதர் கூறியதாகச் சொல்லப்படும் அந்த வழிவழிச் செய்தியாகும்.
ஷப்பிர் அகமது ஹக்கீம் என்ற முஸ்லிம் அறிஞர், தான்வியின் “மசாவத்இ பகார்இ ஷாரியத்” என்ற இன்னொரு நூலிலிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாண்டுள்ளார். ஜுலாஹாஸ் (நெசவாளர்கள்), நயிஸ் (நாவிதர்கள்) ஆகியோரைத் தூய முஸ்லிம்கள் தமது இல்லங்களில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தான்வி அதில் வாதிடுகிறார். மேலும், சைய்யது சாதி தந்தைக்கும் சைய்யது அல்லாத தாய்க்கும் பிறக்கும் குழந்தை தூய சைய்யது தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தையைவிட சமூகத் தகுதி குறைந்தது என்று தான்வி “”பாஹிஸ்டி ஜேவார்” என்ற தனது நூலில் வன்மத்தோடு வாதிடுகிறார். இதே விசயத்தைத்தான் பிராமணர்கள் ஏற்றிப் போற்றும் மனுவும் தனது மனுதர்ம சாஸ்த்திரத்தில் (மனுஸ்மிருதி) சொல்லியிருக்கிறார்! சைய்யதுகள், ஷேக்குகள், மொகல்கள், பத்தான்கள் ஆகியோர் “மரியாதைக்குரிய மேல்குடி’ (ஷரிப்) சாதியினர் என்றும், எண்ணெய் பிழிபவர்கள் (டெலி), நெசவாளர்கள் (ஜுலாஹா) ஆகியோர் “கீழ்’ சாதிகள் (ரஸில் அக்வம்) என்றும் “”இம்தாத் உல்ஃபடாவா” என்ற தனது நூலில் தான்வி அறிவித்தார்.
இவர், இஸ்லாத்துக்கு மதம் மாறிய அராபியர் அல்லாதவர்களை “”நவ்முஸ்லிம்கள்” என்று குறிப்பிடுகிறார். காந்தானி முசல்மான் எனப்படும் பாரம்பரியமாக உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் திருமண உறவுக்கான காஃபாவுக்கு, நவ்முஸ்லிம்கள் கருதத்தக்கவர்களே அல்ல என்று இவர் வாதிடுகிறார். பத்தான்கள் அரபுவழி வந்தவர்கள் அல்ல என்பதால் அவர்களும் நவ்முஸ்லிம்கள்தாம் என்கிறார். அரபுவழி வந்தவர்களான சையத்துகள், ஷேக்குகளின் காஃபா வேறானது; எனவே அவர்களுடன் நவ்முஸ்லிம்களான பத்தான்கள் கலப்பு மணம் புரியக்கூடாது என்று எச்சரிக்கிறார்.
அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் முதலாவது தலைவரும், தியோபந்த் மதரசாவின் துணைவேந்தருமான மௌலவி காரி மொகம்மது தய்யீப் சித்திகி என்பவரும்கூட, சாதியத்தின் ஆதரவாளராக இருந்தார். — இவை எனது ஆய்வில் நான் கண்டறிந்த உண்மைகளாகும்

வியாழன், 30 ஜூன், 2011


கம்யுனிசம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்  
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – I,
வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – II,
வேதபிரகாஷ், கம்யூனிஸம், கம்யூன், காதல், காமம், கலவி,கற்பு, பாலியல், இத்யாதி – III,

வெள்ளி, 20 மே, 2011


பண்ணையில் இஸ்லாம்

பள்ளிவாசலின் உட்புறம்.

பள்ளிவாசலின் வெளித்தோற்றம்


,










அஸ்ஸலாமுஅலைக்கும்.. தப்லீக்ஜமாத்தின் சாதனை:நமதூரில் முப்பது ஆண்டு காலமாக மவ்லவி முஹம்மது மைதீன் பாக்கவி என்பவர் இமாமாக இருந்துவந்தார்.இவரது கம்பீரமான தோற்றமும் குரல்வளமும் மக்களிடம் இவருக்கு மிகுந்த மரியாதையை பெற்றுத்தந்தது.இவரது தந்தையும் ஆலிம்தான் மிகுந்த தக்வாதாரி .கண்ணியமிக்கவர்.தனது தள்ளாத வயதிலும் சிறுவர்களுக்கு கூட முதலில் சலாம் சொல்லும் இயல்பு உடையவர்.ஆனால் அவர் தம் மைந்தரோ அதற்கு நேர் மாற்றம் .இன்னார் எனக்கு சலாம் சொல்லவில்லை என்று புகார் சொல்லும் வழக்கமுடையவர். 1983 இல் இவர் மரணம் அடைந்தபோது அவரது மகனாகிய இமாம் முஹம்மது மைதீன் மௌலவி தனது தந்தையை தனது சொந்த ஊரான  மேலப்பாலயத்தில் அடக்கம் செய்யப்போவதாக சொன்னார். ஆனால் மக்கள் வற்புறுத்தலின்  பேரில் ஆராம்பண்ணைனையில் தனி இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.அதன்பின் சில மாதங்களுக்கு பிறகு தனது தந்தையின் கப்ரில் தர்கா கட்ட அனுமதி கேட்டார்.பலர் அனுமதி கொடுக்கமுன் வந்ததும் தப்லீக் ஜமாத்தில் முக்கியமான சிலர் கொதித்தெழுந்தனர்.தர்கா கட்ட அனுமதி மறுத்தனர்.இதனால் இமாம் ஊரைவிட்டு போகப்போவதாக மிரட்டினார்.அவரின் ஆதரவாளர்கள் ஆத்திரமுற்றனர்.தர்கா கட்டுவதற்கு அனுமதி அளிக்குமாறு நிர்வாகத்தை வலியுறித்தி வந்தனர்.இருந்தாலும் நிர்வாகத்தில் இருந்த தப்லீக்ஜமாத்தினர் தர்கா கட்டுவதற்கு அனுமதி அளிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்ததால் இமாம் ,வேலையைவிட்டு விலகி மேலப்பாளையம் சென்றார்.இவர் விலகியதும் இவரது ஆதரவாளர்கள் பிரிவு உபச்சார விழா நடத்தினார்கள்.அதில் டிஜெஎம்.சலாவுத்தின் ஆராம்பன்னையில் அராஜாகம் நடந்ததால் முஹம்மது மைதீன் மௌலவி ஹிஜ்ரத் செய்ததாக வர்ணித்தார்.கள்ளனுக்கு கள்ளன் புகழாரம் .
மேலாப்பாலயத்தில் தனது தந்தையின் தர்காவை துவங்கி  வருடந்தோறும் முப்பெரும் விழா நடத்தி வருகிறார் .தப்லீக் ஜமாத்தினரின் பெரும் முயற்சியால் நமதூரில் குப்ரியத் தடுக்கப்பட்டது.தப்லிக் ஜமாத்தில் முதன்மையாக இருந்தவர்கள் ,நண்ணி அஹ்மது மைதின் அவர்களும்,காசுலெப்பை மதார் மைதின் அவர்களும் ஆவார்கள். இப்போதைய நமதூர் தப்லிக் ஆக இருந்தால் கர சேவை செய்து தர்கா கட்டியிருப்பார்கள்.மேலும் மவுலவி.முஹம்மது மைதீனின்  தந்தை அவர்களை இறைவன் நல்லடியாராக ஏற்று கொண்டதால்தான் அன்னார் நமதூரில் அடக்கம் செய்யப்பட்டார் போலும் . இல்லையெனில் அவரது கப்ர் சிர்க்குகளும் அனாச்சாரங்களும் நிறைந்த விழா நடைபெறும் இடமாக ஆகியிருக்கும். இறைவனே அனைத்தையும் அறிந்தவன்.
ஆராம்பன்னையில்  21/05/2011 அன்று  நடந்த  இரத்ததான  படங்கள் 

                 

திங்கள், 16 மே, 2011


மதஹபை முழுமையாக விசமி பின்பற்றத் தயாரா?

Sunday, May 15, 2011 10:43 PM Posted by பொய்யன் டிஜே0 comments


மார்க்கத்தை முழுமையாக அறியாத மந்தி, பிஜேவை மட்டும் எதிர்த்தால் போதும் என்ற நோக்குடைய கூட்டத்தில் சேர்ந்து கும்மியடிக்கும் விசமி தான் இந்த சம்சுதீன் காசுமி. இந்த விசமியின் கேடு கெட்டச் செயல்களை பட்டியலிட்டு காட்டி அவரது முகத்திரையை முந்தய பதிவில் கிழித்தோம்.
இந்த விசமி ஒரு சகோதரரின் கேள்விக்கு பதில் அளித்த போது, வெறும் குர்ஆன் ஹதீஸை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் ஒரு வருடம் ஆனாலும் நாம் தொழுகவே போகவே முடியாது. எனவே மத்ஹபுகளைப் பின்பற்றி அவர்களின் விளக்கத்தைப் பெற வேண்டும் என்று சொல்கிறார்.
அதற்கான வீடியோ காட்சி.

ஒளு செய்வதற்கு எங்கிருந்து தொடங்கி எங்கிருந்து முடிக்க வேண்டும் என புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள தெளிவான ஹதீஸ்.
உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள். தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை (பாத்திரத்தில்) விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும்மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள். பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர், 'எனது இந்த உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்என்று உஸ்மான் (ரலி) தெரிவித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹும்ரான்
நூல்: புகாரீ 160
இதை விசமி படித்து விட்டே வேண்டுமென்றே மறைக்கிறார் என்று தான் சொல்லத்தோன்றுகிறது. மதஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என அடித்துச் சொல்லும் இவர், அதே இமாம்கள் எழுதிவைத்த குடும்பவியல் சட்டங்களை ஏற்றுக்கொள்ளத்தயாரா? என பகிரங்மாக அறிவிக்கத் தயாரா?
1) ஹனபி மதஹபில் ஒரு பெண்ணை கன்னியா என கண்டுபிடிப்பதற்கு முட்டை பரிசோதனை ஒன்று கூறப்பட்டுள்ளது. மதஹபைப் பின்பற்ற வேண்டும் என மற்றவர்களை வலியுறுத்தும் இவர் தன் குடும்பப் பெண்களை யாராவது பெண் பார்க்க வரும் போது இதை அமுல்படுத்துவாரா?
2) ஹஜ்ஜில் இஹ்ராம் அனிந்த ஒரு ஆண் மகன், ஒருகழுதையுடன் உறவு கொண்டால் அவருக்கு ஒளு முறியாது, அதே நேரம் ஒரு பெண் கழுதையுடனோ அல்லது வெட்டிப்போட்ட கழுதையின் ஆண்குறியை வைத்தோ உறவை மேற்கொண்டால் அவளது ஒளு முறியும் என்ற மதஹபுச் சட்டத்தை தன்னுடைய மக்கா ஹஜ் சர்வீஸ் மூலம் சட்டமாக அமுல்படுத்த இந்த மவ்லானா தயாரா?
3) ஒரு பெண்ணின் கணவன் காணாமல் போய் விட்டால் அவள் 90 வருடம் இத்தா இருக்க வேண்டும் என்ற அதிபுத்திசாலி மதஹபு சட்டத்தை மக்கா ஷரியத் சார்பில் அமல்படுத்த தயாரா?
4) திருடச்செல்லும் இரண்டு பேர் ஒருவர் வெளியே நிற்க, மற்றவர் உள்ளே செல்ல, உள்ளே சென்றவர் பொருட்களை எடுத்து வெளியே போட, அதை வெளியே இருப்பவர் எடுத்துக் கொண்டு சென்றால் அது திருட்டு ஆகாது என்ற அறிவுப்பூர்வமான மதஹபு சட்டத்தை சம்சுதீன் காசிமி அவர்களின் வீட்டில் வந்து அமல்படுத்தினால் அவர் காவல்துறையில் கம்ப்ளைண்டு கொடுக்காமல் ஏற்றுக்கொள்ளத்தயாரா?
5) ஊமைப்பெண்ணைக் கற்பழித்தால் அவனுக்கு தண்டனை இல்லை என சொல்லும் அற்புதமான மதஹபுச் சட்டத்தை அண்ணன் காசிமி அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தயாரா?
6) குழந்தையைக் கடத்திச்சென்று நகை பறித்தால் அது குற்றமாகாது என்ற பிரமாதமான மதஹபுச் சட்டத்தை மவ்லானா மௌலவி அவர்களின் வீட்டுக்குழந்தைகள் மீது சோதனை செய்து பார்த்தால் மவ்லானா ரிஸ்க் எடுப்பாரா? அல்லது மவ்லானா என்ற கம்பெனி ரஸ்கைப் போல இருந்து விடுவாரா?
7) கராமத் (அற்புதம்) முறையில் மஸ்ரிக் மற்றும் மஹ்ரிப் (கிழக்கு மற்றும் மேற்கு) திசையில் இருக்கும் இருவர் திருமணம் செய்து கொண்டு 6 மாத்த்தில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற அற்புத மதஹபுச் சட்டத்தை மவ்லானா ஏற்றுக்கொண்டு தன் குடும்பத்திற்கு அமல்படுத்துவாரா?

இதுபோன்ற கேவலமான மதஹபுச் சட்டங்கள் இன்னும் 1000 இருக்கிறது. ஆனால் இது கொஞ்சமே போதும். இதையெல்லாம் அமுல்படுத்தினால் தான் விசமி உண்மையாகவே மதஹபைப் பின்பற்றுகிறார் என்று அர்த்தம். ஆனால் அதை நியாயப்படுத்த மேற்கண்ட கட்டளைகளை அவர் நடைமுறைப் படுத்த வேண்டும். பொருத்திருந்து பார்ப்போம். இந்த விசமி என்ன சொல்கிறது என்று!!!

சனி, 30 ஏப்ரல், 2011


நறுக்கு குத்தாட்டம் போட்ட நாகூர் கலீபா

Friday, April 29, 2011 10:12 PM Posted by பொய்யன் டிஜே

மேன்மைதங்கிய மாட்சிமை பொருந்திய நாகூர் ஷரீப் கவர்ன்மென்ட் டவுன் காஜீ மௌலான மௌலவி சுல்த்தான் கலீபா சாஹிப் காதிரி அவர்கள் ஆடிய கல்லீஜ் ஆட்டத்தின் அதிரடி வீடியோ காட்சி இப்போது வெளியாகியுள்ளது. என்னத்த சொன்னாலும் திருந்தாத மக்களை நாம் என்னவென்று சொல்வது?அடுத்த  ஆண்டு ஆறாம்பண்ணை சிந்தாதர்கா கலீபாவும் விழா கமிட்டியினரும் நாகூர் கலிபாவை விட சிறந்த குத்தாட்டம் போட்டு தவ்ஹித் ஜமாத்தினரின் மூக்கை உடைப்பார்களா? 
இன்சா அல்ல்லாஹ் அடுத்த ஆண்டு ஆராம்பன்னையிலும் சிந்தா கலீபாவும் அவர்களது பண்ணை சிஷ்யர்களும் இதை விட சிறப்பாக  குத்தாட்டம் போட்டு தவ்ஹித் ஜமாத்தின் மூக்கை உடைப்பார்கள்.

வியாழன், 28 ஏப்ரல், 2011

நம்மால் முடியும்

        அருளும் அன்பும் மிக்க அல்லாஹ்வின் திரு பெயரால்,                                                                                                                       

விவேகத்துடனும்,அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக,அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக|உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்'நேர்வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.        குர்ஆன்16';125                                                                                                                                                                 அன்பார்ந்த இளைஞர்களே| அஸ்ஸலாமு அலைக்கும்.                                                                                                  பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருப்பதாலோ என்னவோ நமது இளைஞர்கள் அவ்விளையாட்டில் மிகுந்த ஆர்வமாய் உள்ளனர்.குக்கிராமத்திலும் இருபதினாயிரம் செலவழித்து டோர்ணமன்ட் நடத்தும் அளவில் ஆர்வமாய் உள்ளனர்.இந்த ஆர்வம் இந்தியன் டீமில் முஸ்லிம்கள் இரண்டு அல்லது மூன்று பேர் சிலசமயங்களில் நான்கு பேர்களை கூட இருக்க வைத்துள்ளது.இது 20percent க்கும் அதிகம்.ஆனால் இந்திய,மற்றும் மாநில அரசுகளின் அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் 2percent க்கும் குறைவு.நாம் எந்த வகையிலும் எவரை விடவும் ஆற்றலில் குறைந்தவர்கள் அல்ல என்பதற்கு கிரிக்கெட் ஒரு சாட்சி.இன்னும் 90 களில் 10th,plus2 ரிசல்ட் ஐ  பார்த்தால் டாப் 10 rank holder களில் ஒரு முஸ்லிம் பெயரைக்கூட பார்க்க முடியாது.2000 க்கு பிறகு பல ஆண்டுகள் state 1st முதல் 10th ரேங் வரை பல முஸ்லிம் மாணவர்கள் இடம்பெற ஆரம்பித்தனர்.அது மட்டுமன்று பல ஸ்கூல்கள் தங்களது ஸ்கூலின் டாப்பெர்ஸ் லிஸ்ட் ஐ விளம்பர படுத்தும் போது பார்த்தால் அதில் இருபது முதல் நாற்ப்பது சதவீதம் வரை முஸ்லிம் மாணவர்கள் இடம்பெறுவதை பார்க்கமுடிகிறது.ஆம் ,நாம் படிக்க ஆரம்பித்துவிட்டோம் என்பதையே இந்த தேர்வு முடிவுகள் காட்டுகின்றன.நாம் கல்வியில் நல்லதொரு வழிகாட்டலுடன் நமது முனைப்பை காட்டினால் இட ஒதுக்கீடு அவசியமே என்பது ஒரு புறம் ,இட ஒதுக்கீடு இல்லாமலே நாம் இருபது சதவீத அரசு வேலைகளில் நுழைய முடியும்.மெடிக்களிலும் பொதுப்பிரிவில் நாம் முன்னூறுக்கும அதிகமான இடங்களில் இடம் பெற்றிட முடியும் அதேப்போன்று ஐ.பீ.எஸ்.'ஐ.எ.எஸ்.;ஐ.ஐ.டி.யிலும் நமது பங்கை நாம் மீட்டெடுக்கமுடியும்.ஆனால் நமது சமுதாயத்தில் உள்ள கல்வியாளர்கள்,அரசு உயர் பதவி வகிப்பவர்கள்,அதிலிருந்து ரிடையர்ட் ஆனவர்கள்,இதில்  கவனம் கடுகளவும் கொள்வதில்லை.தங்களை முஸ்லிம்களாக காட்டிகொள்வதிலேயே சிலர் வெட்கப்பட்டனர்,இன்னும் சிலர் அச்சப்பட்டனர்.யஸ்வந்த் சின்ஹா,ஜக்மோகன் போன்ற உயர் பதவி வகித்தவர்கள் போன்று ஏராளமானோர் ரிடயர்ட் ஆனபிறகும் ரிசைன் பண்ணியும் தங்களது காவி முகத்தை காட்டினர்.ஆனால் நம்மவர்களை நாம் அப்படி இருக்கச்  சொல்லவில்லை.சமுதாயப்பணி ஆற்றினாலே போதும். வருவார்களா?                          

      நமது மரியாதைக்குரிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இருக்கிறார்.இன்று சமுதாயம் கொள்கை யளவில் சிதறுண்டு கிடக்கும்போது,கல்வியை மட்டுமே   மையமாக்கி ,டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தலைமை ஏற்று வழிகாட்டினால்,இன்சா அல்லாஹ் வெற்றி கிடைக்கும்.                         நான் கடந்த ஆண்டு ரமளானில் டி.வி.நிகழ்ச்சியில் பார்த்தேன்.ஈரோடு முஸ்லிம்  கல்விமாநாட்டில்  நீலகிரி மாவட்ட கலைக்டர் சகோதரர் நசீம் என்பவர் சொற்பொழிவைக் கேட்டேன்.யன்காக ஸ்மார்ட்டாக இருத்த அவரின் அந்த பேச்சை எந்த அறிஞர் களிடமும் கேட்கவில்லை.இஸ்லாத்தையும் கல்வியையும் இணைத்து மிக அருமையாக பேசினார்.மேலும் அவர் சக்காத்தை வரைமுறை படுத்த வழி காண வேண்டும்.தனக்கு தெரிந்த வரை கோடிக்கணக்கில் சக்காத் கொடுக்கும் செல்வந்தர்கள் இருக்கின்றார்கள். இவற்றை செம்மையாக வரை முறை படுத்தினால்,இந்தியாவில் எந்த முஸ்லிமும் ஏழையாக இருக்கமாட்டான் என்றும் தனது பேச்சினூடே தெரிவித்தார். இவர்களைப் போன்ற கல்வியாளர்கள் கண்ணுக்குதெரியாமல் நிறையவே இருக்கிறார்கள்.இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து டாக்டர் அப்துல் கலாமை சந்திக்க வேண்டும் யார் முயற்ச்சி செய்வார்கள்.அல்லாஹ்விடம்தான் இந்த நல்ல நாளில் துவா செய்ய வேண்டும்.                                                                       
                                 தேசத்திற்கு எதிராக,வலிமை மிக்க ராணுவத்திற்கு,காவல் துறைக்கு எதிராக வெடிகுண்டை தூக்கும் இளைஞன் திருமண விசயத்தில் வரதட்சணைக்கு பெற்றோருக்கு பெட்டிப்பாம்பாய் அடங்குவது ஏன்?  இன்சா அல்லா தொடருவோம்