செவ்வாய், 28 செப்டம்பர், 2010

விவாதத்திற்கு அழைத்த சிறை வாசிகளிடம் ஆதாரத்தை கேட்டு
தட்டி கழிக்க பார்க்கும் விவாதப்புலிகளே!நீங்கள் இந்திய தவ்ஹீத்
ஜமாத்தை இழுப்பதேன்?

இது வரைக்கும் ஆதாரம் வாங்கித்தான்
விவாதத்திற்கு சென்றீர்களா?ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி
'இறைவனுக்கு உருவம் இல்லை' என்று ஆதாரங்களை
சமர்பித்த பின் தான் விவாதத்திற்கு ஒப்பு கொண்டீர்களா?


பாக்கர் விசயத்தில் ஆதாரம் கேட்டதற்கு விவாதத்திற்கு வா
நிரூபிக்கிறோம் என்றீர்கள்! இப்போது ஆதாரம் தந்தால் தான்
விவாதம் என சொல்ல வெட்கமில்லையா ? உங்களுக்கு நீங்களே
முரண்பட்டு ஏன் பொய்யர்கள் என்பதை மீண்டும் மீண்டும்
நிருபிகின்றீர்கள்?

இதில்
'ஆண்மையாளர்களாக இருந்தால்'
என
சவால் வேறு! அப்துல் ரஹீம் சவாலை ஏற்று முதலில் 'அதை'
நீங்கள் நிருபியுங்கள் ! யார் யார் கூடி ,உங்களை கொல்ல,
எங்கு சதி செய்தனர்? என நீங்கள் ஆதாரத்தை தந்து நிருபியுங்கள்!                                                                                                         
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ,,,,,                                                                                              அன்புச்சகோதரர் செங்கிஸ்கானுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் .                உங்கள் தலைவர் இரு பக்கமும் நல்லவராக நடித்துள்ளாரே ,பிறகு அவருடைய சுயரூபம் வெளி கொண்டு வரவேண்டாமா?சிறையில் சிலர் தாக்கினார்கள் என்று பேட்டி கொடுத்ததிலே அவர் எப்படிபட்டவர் தென்பது புரியவில்லையா?                                                                     குமுதம் ரிப்போர்ட்டரில் பீ.ஜே யின் மைத்துனர்தான் ஹாஜிமுஹம்மதை சிதம்பரத்தில் சரணடைய வைத்தார் என்று கூறியதாலும்  இருக்கலாம்.                
ஷேக் அப்துல்லா ஜமாலியிடம் அவர் வீட்டு விசயமாகவா விவாதம் நடந்து வருகிறது.?   மார்க்க விவாதத்திற்கு குரானும் ஹதீத்களும் இருக்கின்றன. இதில் விவாதம் செய்வோர் சம்பந்தப்பட்ட பொருளுக்கு ஆதாரமாக குர்-ஆனிலும் ஹதீத்களிலும் ஆதாரம் எடுத்துக்கொள்ளாலாம்.குர்-ஆன் ஹதீத்கள் வட்டத்திற்குள் வாதாடும்போது அவை நம்மிடமே இருக்கும்போது யாரும் யாரிடம் கேட்கவேண்டிய அவசியமில்லை.இதை உங்களால் புரியமுடிய வில்லையா?                                                                                                                            
!                                                                                                  
பாக்கர் விசயத்தில் ஆதாரம் கேட்டீர்களா? பாக்கர் விசயத்தில் ஆதாரமா ? இதற்கல்லவா வெட்கப்பட்டிருக்கவேண்டும்? நாடறிந்த இயக்கம் ,அதன் பொதுசெயலாளர் மற்றும் அழைப்பாளார் என்று பொறுப்பை வைத்துகொண்டு ஒரு அந்நிய பெண்ணை மடியில் சாயிந்த நிலையில் பனிரண்டு மணி நேரம் பயணம் செய்ததை பலர் முன்னிலையில் ஒப்புக்கொண்டு பின் அதை லட்ச கணக்கான மக்கள் வீடியோவில் பார்த்த பின் ஆதாரம் வேறு கேட்டோம் என்று சொல்வதற்கு நாகூசவில்லையா? "யாரும் அறியாத ,நிலையில் விபச்சாரம் செய்த ஒருவர் நபி[ஸல்] அவர்களிடம் வந்து இறைவன் பார்த்தவனாக இருக்கிறான் என்ற நம்பிக்கையில் தனது குற்றத்திற்கு தண்டனைகேட்ட நபிதோலர்களின் வரலாற்றினை மக்களுக்கு எடுத்துசொல்லும் நிலையில் உள்ள நாம் இத்தனை கையும் களவு மாக மாட்டிய பிறகாவது கவரிமானாக உயிரிழக்க வேண்டாம்.பொதுசெயலாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கவேன்டாமா? களியாக்க விளையில் மார்க்க விவாதத்தில் சிரமம் எடுத்துவந்து விவாதத்தை உன்னிப்பாக கவனித்த அதேவேளையில் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்ற டென்சனுடன்  அரங்குக்குள் இருக்க உங்களது தலைவர் டீனேஜ் பையனைப்போல் திற்பரப்பு அருவியில் குளித்தகையோடு கணவன் விவாத அரங்குக்குள் இருக்கிறார் என்றுதெரிந்து கொண்டு ஒரு பெண்ணை  சந்திக்க செல்வதற்கு எத்தனை துணிச்சல்? சினிமாககாரனை மிஞ்சிய செயல் அல்லவா? அந்த சமயத்தில் விஷயம் கசிந்திருந்தால் விவாத மேடை நாறியுருக்காதா? திருச்சி செயற்குழுவில் மீண்டும் அவரை  பொ.செ. ஆக்கினார் களே அப்போது நபித்தோழரின் ஞாபகம் வந்து உள்ளம் கூனிகுருகி இருக்கவேண்டாமா? அப்பதவி தனக்கு வேண்டாம் என்று சொல்லியிருந்தால் அவரை மானமுள்ள மனிதராக ஏற்று கொள்ளலாம்.ஆனால் பீடுநடை போட்டல்லாவா மேடை ஏறினார்.கழிசடை அரசியல்வாதிகள் கூட இவரை தலைவராக ஏற்றுகொள்ள தயங்குவான். பாக்கர் சம்பவத்திற்கும் சிறைவாசிகள் விசயத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு.சிறைவாசிகள் குற்ற சாட்டையும் அதற்க்கான ஆதாரங்களையும் வைத்தால் ,அதை அடிப்படையாகவைத்துத்தான் விவாதம் பண்ண முடியும்.அங்கே தவறான ஆதாரங்கள் வைக்கப்பட்டால் அதை தவறு என்று நிருபிக்க அங்கிருந்து எதைத்தேட முடியும்? ஒரு குறிப்பிட்ட நாளில் இன்னாரை சந்தித்து இவ்வாறு கூறினீர்கள் என்று குற்றச்சாட்டை வைத்தால் அந்நாளில் பீ.ஜே.யாரையும் சந்திக்கவில்லை இந்த ஊரில் இருந்தேன் என்று எவ்வாறு நிருபிக்கமுடியும்? சிறைவாசிகள் ,காட்டிகொடுத்ததர்க்கான ஆதாரத்தை கொடுத்தால், பீ.ஜே கொல்லுவதற்கான சதித்திட்டத்தை அவர் ஆதாரமாக கொடுப்பார்.பீ.ஜே வின் ஆண்மைபற்றி நீங்கள் சதேகபடுவது தவறு.சிறை வாசிகளை  தயவு செய்து உசுப்பிவிட்டு அவர்களை சிறைக்கு அனுப்பிவிட்டு நீங்களும் உங்கள் பிள்ளை குட்டிகளும் ஏசிவாசிகாளாக இருக்க நினைக்காதீர்கள்.அன்பார்ந்த கனவான்களே அவர்கள் தொழில் செய்யவும் அவர்களின் குழைந்தைகள் கல்வி கற்கவும் உறுதுணையாக இருங்கள்.

திங்கள், 20 செப்டம்பர், 2010

முனவ்விருள்  சொன்னது {மேலும்  பதில்கள் baranikaraipannaiyar  ப்ளாக்கரில் }
1,நான் எந்த ஒரு மார்க்க விசயத்திலும் இருதரப்பு ஆலிம்களிடமும் கேட்டுதான் ஒரு முடிவுக்கு வருகிறேன்.2,ஒரு செய்தியின் உண்மை நிலை அறிய இரு தரப்பு கருத்துக்களையும் ஆய்வு செய்தால் உண்மையை ஓரளவுக்கு உணர முடியும்.இந்த வாசகங்களை  படிக்கவும் ,கேட்கவும்  நன்றாக  இருக்கிறது .ஆனால்  உண்மையில்  எத்தனை    விஷயத்தில்  மத்கப்  (உங்கள்  பாஷையில் )ஆலிம்களின்  கருத்தை  ஏற்றுக்கொண்டு ,இந்த (மார்க்க]விஷயத்தில்  PJ சொல்வது  தவறு  என்று  நம்புகிறீர்கள்?ஒரு  உதாரணம்  கூற  முடியுமா ? வார்த்தை  ஜாலம்  வேண்டாம் .உண்மையை  கூறுங்கள் .இரண்டு  தரப்பு  கருத்தையும்  கேட்ட  பின்  எது  உண்மை  என்று  எந்த  அதரத்தை , புத்தகத்தை  படித்து  தெரிந்து  கொள்கிறீர்கள் ? மத்கப்  ஆலிம்  கூறும்  ஒரு  ஹதீதை , PJ "லயீப் "என்று  சொல்லிவிட்டால் ,இந்த  அறிவ்ப்பாளர்  பலஹீனமானவர்  என்று  PJ சொல்லிவிட்டால்  அவர்  உண்மையில்  அப்படித்தானா ? அந்த  ஹதீது  "லயீப் "தானா ?என்று  எந்த  கிதாபை  பார்த்து  தெரிந்து  கொள்கிறீர்கள்?   இது  வரை  PJ சொன்னதில்  இதை  ஏற்றுக்கொள்ள  முடியாது  என்று  நீங்கள்  முடிவெடுத்த  ஒரு  விஷயத்தை  ஆதாரத்துடன்  கூறுங்கள் . நீங்கள்  நியாய  வாதிதான்  என்பதை  ஏற்று  கொள்ள  வசதியாக  இருக்கும் நான்  குர் ஆனின் குரல் ,ரஹ்மத்,சிராஜ்,ஜமாத்துல் உலாமா ,மறுமலர்ச்சி,நர்கிஸ் போன்ற இதழ்களையே  படித்து வந்தேன்.அதன் பின் வெளிவந்த அல்ஜன்னத்,நஜாத்,புரட்சி மின்னல் போன்ற இதழ்களையும் படித்துவருகிறேன்.ஒரே சமயத்தில் மூன்று தலாக் கூறினால் அது ஒரே தலாக்ககத்தான் கருதப்படும் என்று பீ.ஜே. எழுதியதை அறிந்த சமயத்தில் கு.குரலில்,ஒரு உத்தமபாளையத்தை சேர்ந்த உமர் என்ற டாகடர் ,நான் எனது மனைவியை கோபத்தில் ஒரே சமயத்தில்  மூன்று தலாக் கூறிவிட்டேன். ஆனால் அது தவறு என உணர்ந்து ஆவலுடன் வாழ விரும்புகிறேன்.நான் வாழுவது கூடுமா? என்று கேள்விகேட்டார்[1989octobar இதழ்]என்று நினைக்கிறேன்,. அதற்க்கு அந்த முப்தி மூன்றே எழுத்துக்களில் பதில் சொல்லுகிறார்,கூ டா து  என்று. ஒருஆதாரமும் காட்டப்படவில்லை. நான் அந்த கு.குரலுக்கு எழுதி கேட்டேன். எந்த பதிலும் இல்லை. அதில் வேறொரு கட்டுரைத் தொடர் எழுதிக் கொண்டிருந்த முஹம்மது கான் பாகவி ,அப்போது வேலூர் பாகியத்துஸ் சாலிஹாத் மதரசாவில் பேராசிரியராக இருந்தார்.அவரிடம் இது பற்றி விளக்கம் கேட்டேன்.அவர் உமர்[ரலி] காலத்தில் உள்ள நிகழ்வுவைக்கூறி ஒரே சமயத்தில் முத்தலாக் கூடும் என பதில் எழுதினார்.பின் இது பற்றி பீ.ஜே. விடம் விளக்கம் கேட்டேன். அவர் பாத்திமா பிந்து கைஸ் [ரலி] அவர்கள் தனது கணவர் ஒரே சமயத்தில் முத்தலாக் கூறியதை பற்றி  நபி[ஸல்] அவர்களிடம் கேட்டார்கள். நபி [ஸல்] அவர்கள் ஒரே சமயத்தில்  முத்தலாக் கூறினாலும் அது ஒரே தலாக் ஆகவே கருதப்படும்,என்ற ஹதீதை எடுத்து காட்டியதுடன் கான் பாக்கவி கூறிய உமர்[ரலி] சம்பவம் லயிப் என்பதற்கும் ஆதாரங்களை எடுத்து வைத்தார். இவற்றினை கான் பாகவியிடம் அனுப்பி விளக்கம் கேட்டேன். அவர்  கு குரலில் இதற்க்கு ஒரு கட்டுரை எழுதுகிறேன் அதை படித்து பார்த்துகொள்ளுங்கள்.என்று பதில் அனுப்பினார்.அந்த கட்டுரையிலும் அறிவிப்பாளர் வரிசையைத்தான்  நியயாப்படுத்தினார் .நபி[ஸல்] காலத்தில் அவ்வாறு இருந்தாலும் உமர்[ரலி] மாற்றப்பட்டதை ஏற்கவேண்டும் என்றே எழுதினார்.முனவ்விருள் அவர்களே,நபி [ஸல்] காலத்து  ஆதாரம் தெளிவாகவும்  குரான் வசனத்திற்கு பக்க பலமாகவும் இருக்கும்போது குர் ஆன் க்கும் ஹதீதுக்கும் முரணாக ,அதுவும் சந்தேகத்திற்குரிய  ஒரு சம்பவத்தை ஆதாரம் காட்டி ஒரு தம்பதியை பிரிப்பது தான் மார்க்கமா? இதே சம்பவம் நமதூரிலும் நடந்து அவரிடம் மீண்டும் வாழ வழி இருக்கிறது  என்று கூறி வற்புறுத்தினோம்.இது விசயமாக பத்வா வாங்கித் தருகிறோம் என்றோம், ஆனால் அவர் வேறு யாரின் ஆலோசனைக் கேட்டு கு.குரலுக்கு மீண்டும் சேர்ந்து வாழ வழி உள்ளதா என்று கேட்டபோது,அதேபோன்றே கூடாது என்ற பதில்தான்.இந்த விஷயம் இப்போதைய பள்ளிவாசல் துணை தலைவருக்கும் தெரியும்.        2 அடுத்து ஒரு சின்ன விஷயம்.டி.ஜே.எம். சலாவுத்தீன் மவ்லவி  நமதூரில் ஒரு கல்யாண வீட்டில் சொற்பொழிவு பண்ணும்போது  'யூசுப் -சுலைகா" திருமணம் நடந்தது என்றும் அவர்களைப்போல் வாழ  துவா செய்யலாம் .என்றும் பேசினார். அவர் பள்ளிவாசலுக்கு தொழ வந்த  சமயம் நானும் சலிமும் டி.ஜே.எம்.இடம் யூசுப்-சுலைகா வுக்கு ஆதாரம் கேட்டோம் அப்போது அவர் "வந்த இடத்தில் போன இடத்தில் எல்லாம் சொல்லமுடியாது நீங்கள் திருநெல்வேலியில் தானே இருக்கிரரீகள்.வீ.ம.பள்ளிக்கு எதிரில் உள்ள ரகீம் பிரஸ்க்கு வாருங்கள் ஆதாரம் தருகிறேன் "என்றார். அப்போது அவருடன் எஸ்.ஏ,காலேஜ் பள்ளிவாசல் இமாம் சேக்கத்து மவ்லவியும் கபூர் மிஸ்பாகியும் [அப்போது அவர் மத்ஹபில் ]உடன் இருந்தனர்.  பின்னர் டி.ஜே.எம். நான் நிருபித்தால் என்ன செய்வீர்கள் ?என்று கேட்டார். நீங்கள் என்னசொன்னாலும் கட்டுபடுகிறோம் என்றோம்.  அதன்பின் நெல்லையில்  அவர் சொன்ன ரகீம் பிரஸ்க்கு இரண்டு நாட்கள் அலைய வைத்தார். மூன்றாவது நாளில் என்னிடம் இது விசயமாக பேசுவதற்கு நீங்கள் ஒரு ஆள் மட்டும்தான் வரவேண்டும் என்றார்.மேலும் ஒரு தலைவரையும் ,ஒரு நடுவரையும் அவர்தான் ஏற்பாடு செய்வேன் என்றார் .  அவர்கள் யாரென்று நாளைக்கு ரகீம் பிரசில் வந்து கேட்டு கொள்ளுங்கள்.என்றார். அனைத்திற்கும் சம்மதித்துவிட்டு மறுநாள் ரகீம் பிரசில் கேட்டால் தலைவராக கோட்டூர் சிந்தாவும் நடுவராக ஹம்சா தங்களும் வருவார்கள் .நீங்கள் வரத்தயாரா? என்று கேட்டார். சிந்தாவும் ஹம்சா தங்களும்  எப்படிப்பட்டவர்கள்  உங்களுக்கு தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.ஒரு மார்க்க அறிஞரின் ரவுடியிசத்தை பார்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு மில்லத் இஸ்மாயில் [1991 ] இல் வைத்து மிரட்டினார்.                                                                                                                 3.ரஹ்மத் முன்னால் ஆசிரியர் கலீலுர் ரஹ்மான் ரியாஜி அவர் கட்கும் பீ.ஜே வுக்கும் மத்ஹப் குப்பைகளை பற்றி ரஹ்மத்-அல் ஜன்னத் வாயிலாக விவாதம் நடந்தது.88,89 ,ஆம் ஆண்டுகளின் ரஹ்மத் -ஜன்னத் இதழ்களை படித்தாலே பல உண்மைகளை அறியமுடியும்.அபுஹனிபா இமாமுக்கு கிதாபுகள் இருப்பதாக வாதாடிய அவரால் அதற்கான ஆதாரம் காட்டமுடியவில்லை.அவர் மரணமடையும் தருவாயில் கடைசியாக வந்த ரஹ்மத்தில் [89may or90may] அபுஹனிபாவுடைய கிதாபுகள் அனைத்தும் அவரது மாணவர் அபுயுசுப்  பெயராலே விளங்கின என்று எழுதுயுள்ளார். மேலும் இப்போது மதரசாக்களில் நாற்பெரும் இமாம்களின் கிதாபுகள் கற்று கொடுப்பதில்லை.அரபிகள் அல்லாத  அஜமிகளின் கிதாபுகள்தான் கற்று கொடுக்கப்படுகிறது.இது கண்டிக்கத்தக்கது. என்று கூறி முடித்துள்ளார்.அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானகா|                                                                                                                                               4.2006 ஆம் ஆண்டில் நடந்த மீலாது விழா.இதில் சுன்னத் ஜமாஅத் என்ற தலைப்பில் மவ்லவி முஹம்மது முஸ்தபா ரசாதி பேசினார்.ஆனால் சுன்னத் ஜமாஅத் பற்றி பேசவில்லை.அவர் பீ.ஜே. என்ற தனி நபர் பற்றி ,அவர் விவாதத்துக்கு வராமல் ஓடிவிட்டதாக பேசினார். நாங்கள் கேள்விகள தொகுத்து கொடுத்த நோட்டிஸ்க்கு எந்த பதிலும் சொல்லவிலலை. கூட்டமுடிவில் அவரிடம் நாங்கள் பீ.ஜெயை அழைத்து வருகிறோம் நீங்கள் வருவதற்கு எழுதி தாருங்கள்.என்று,கேட்டோம்.அவர்,ஏற்கனவே கூறிய நிபந்தனைகளின் அடிப்படையில் பீ.ஜே.வுடன் விவாதிக்கத் தயார் என்று எழுதி கொடுத்தார்.நாங்கள் அந்த நிபந்தனை பற்றி கேட்டோம்.அவர் இதுதான் சத்தியம் என்ற புத்தகத்தையும் சத்தியம்வந்துவிட்டது என்ற புத்தகத்தையும் கொடுத்தார்.அதிலுள்ள நிபந்தனைகள் பற்றியும் அதிலுள்ள விசயங்கள் பற்றியும் அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன்.அதற்க்கு அவர் பதில் எழுதாமல் அவரது மாத இதழின் துணை ஆசிரியர் மீரான் முஹைதீன் ரஷாதி என்பவர் பதில் எழுதினார். அதன் நகலை ஜாபர் ஆலிமுக்கும் அனுப்பிவைத்தார். ஊரில் ஜாபர் ஆலிமை காண நேரிடுகையில் கடிதம் வந்ததா படித்தீர்களா?என்று மிகுந்த ஆவலுடன் கேட்டார். நானும் படித்தேன் .விரைவில் பதில் தருகிறேன் ,என்று கூறினேன்.மீரான் ரசாதிககு பதில் அனுப்பியதோடு ஜாபர் ஆலிமுக்கும் நகல் அனுப்பினேன்.அவரை மீண்டும் காணும்போது எனது பதிலை படித்தீகளா? என்று கேட்டபோது ,எனக்கு வேறு வேலை இல்லை என்று சொல்லிவிட்டார்.[என்னை மீலாது விழாவுக்கு அழைத்ததும் இவர்தான்] அந்த கடிதத்திற்கு இது வரை பதில் இல்லை.பலமுறை போனில் கேட்டும் பதில் தருகிறேன் என்று கூறினாரே ஒழிய பதில் தரவில்லை. ஒருமுறை முஸ்தபா ரஷாதி கோபமாக பதில் சொன்னார்.உங்களுக்கு பதில் தரவேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டார்.அதன் பின்னர் நமதூர் ஆலிம்சாக்கள் குழு தடம் புரண்ட ஹாமித் பக்ரியை அழைத்து வந்து எங்களுக்கு பதில் சொல்லப்போவதாக கூட்டம் நடத்தினர்.அந்த கூட்டத்தில் கேள்விகளுக்கு பதில் சொல்லப்படும் என்றும் விவாதத்திற்கு வரத்த் தயார் என்றும் முதலில் பேசிய மவ்லவி .கோசு.சாகுல் ஹமித் பேசினார். ஆனால் ஹாமித் பக்றியோ இங்கு யாரும் கேள்விகள் அனுப்ப வேண்டாம்.மேலும் விவாதம் என்பது அருவருக்கத்தக்கது எனக்  கூறிவிட்டார்.கூட்ட இறுதியில் ஜாபர் ஆலிம் ,பீ.ஜே விவாதத்துக்கு வராமல் ஓடிவிட்டதாக கூறினார்.நான் அந்தகூட்டத்தில் உடன் பதில் சொன்னேன். விவாதத்திற்கு தேவை அற்ற முறையில் நிபந்தனை வைத்துள்ளதை புரியும்வண்ணம் ,அதாவது,அவருடைய நிபந்தனை எப்படி இருக்கிறது என்றால்,கிரிக்கெட்டில் ஒரு டீம் ஆடும்போது ஸ்டம்ப்ஸ் வைக்க வேண்டும் .மற்றொரு டீம் ஆடும்போது ஸ்டம்ப்ஸ் வைக்கக்கூடாது  என்றால் சரியாக யுருக்குமா?என்பதை பதிலாக கூறிக்கொண்டு இருக்கும்போதே மைக்கை அனத்துவிட்டனர்.                                                                                                             அதன்பிறகும் ஜாபர் ஆலிம் ,பீ.ஜே கூட்டத்துக்கு வராமல் ஓடிவிட்டார் என்று கூறி வந்தார். ஒருநாள் அவரை சந்தித்து  யார் ஓடினார்? என்று கேட்டபோது  இசாவுக்கு பிறகு பேசலாம் என்று கூறியவாறு இசாவிர்க்கு பிறகு பள்ளிவாசல் முன்பு பேசி விளக்கம் கேட்டோம் பீ.ஜெமீது அவர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தோம். இது போக இன்னும் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறினார். கொண்டுவாருங்கள் பதில் தருகிறோம் என்று கூறினோம் இதுவரை பதில் இல்லை. முனவ்விருள் அவர்களே நீங்களாவது ஜாபரை அழைத்து வரத்தயாரா? மீரான் ரசாதி கடிதமும் எனது பதில் கடிதமும் வெளியிடுகிறேன் .பார்த்து சொல்லுங்கள்.    

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

எனது கேள்விகளைப் போடாமல் அவருடைய பதிலை மட்டுமே போட்டுள்ளார்.எனது கேள்விகளுடன் இவருக்கு பதில் சொல்வோம்.

பக்தி உங்களின் புத்தியை பேதலிக்கச் செய்துள்ளதே!

 அளவில்லா அருளாளன், இணையில்லா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
திருச்சி-8
ஹி. 28.06.1431
ஈ.: 11.06.2010
அன்புச் சகோதரர் S. இப்றாஹீமுக்கு அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் எழுதியது,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் அனைவருக்கும் நேர்வழி கிடைக்க துஆ செய்கிறேன்!
பழனி உமர் உங்களுக்கு வீம்பர் போல் தெரிகிறது. ஆனால் பீ.ஜை. பக்தராகிய உங்களுக்கு உங்களின் வீம்பு நிலை தெரியவில்லையே. பரிதாபம்! நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் அந்நஜாத்தில் 2500 தடவை எழுதியும் பீ.ஜை. பக்தர்களின் பித்தம் தெளியவில்லையே! உங்களுக்கே இன்னும் பித்தம் தெளியவில்லையே!பாக்கருக்கும்,இலாகிக்கும் ஹாமித் பக்ரிக்கும் தெளித்த பித்தம் எங்களுக்கு தெளியவேண்டிய அவசியமில்லை.,அது பித்தமாகவே இருந்து விட்டு போகட்டும். இன்னும் 2500 தடவை எழுத வேண்டியிருக்கிறதே. ஈ.வே.ரா. சொன்னது போல் பீ.ஜை.பக்தி உங்களின் புத்தியை பேதலிக்கச் செய்துள்ளதே.பித்தம் பிடித்தவன் தான் சொன்னதேயே சொல்லிகொண்டிருப்பான்.நீவிர் 25000 தடவை வேண்டுமானாலும் சொல்லி கொண்டே இருங்கள்.அப்புறம் யாரும் கல்லை கொண்டு உஎரியாமல் இருந்தால் சரி.
இல்லை என்றால் 1987லிருந்து 2010 வரை பீ.ஜை. எத்தனை புதிய இயக்க மத்ஹபுகளை உண்டாக்கி இருக்கிறார். குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று தெளிவு பெற்று வந்த வாலிபர்களை எந்த அளவு வழிகெடுத்துள்ளார் என்பதை ஒரு நடுநிலை பாமரன் விளங்குவதை உங்களால் விளங்க முடியாமல் இருக்குமா?எந்த நடுநிலை பாமரன் விளங்கியுள்ளான்? பழனி உமரா?
பித்தம் தெளிந்தவர்கள் பொய்யன் பீ.ஜை.யை அதிகமாக அடையாளம் காட்டச் சொல்கின்றனர்.நீங்கள் பித்தம் தெளிந்த தகாக் கூறும்  நபர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப் பட்டவர்கள்.பாக்கரால் முக்கியத்துவம் இழந்த இலாகி மீண்டும் முக்கியத்துவம் கிடைக்கும் என்றால் ஓடோடி வந்துவிடுவார். கடந்த பல ஆண்டுகளாக அவர் பலரைப் பற்றிப் பரப்பி வரும் அவதூறுகள், குற்றச்சாட்டுக்களை பொது மக்கள் முன்னிலையில் நிரூபித்துக்காட்ட முன் வரும்படி நாம் அழைத்தும் முன்வராத அவர், உங்கள் பார்வையில் யோக்கியர்.பலரைப்பற்றி கூறும் அவதூறுகளுக்கு நீங்கள் எப்படி பதில் சொல்வீர்கள்?அவர்களுக்கு நீவிர்என்ன பதில் சொல்லும்ஏஜென்டா?
சுமார் 100 பேருக்கு முன்னால் பாக்கர் பற்றி பகிரங்கமாகக் கூறியவற்றை நான் கூறவில்லை என்று முபாஹலா செய்தவர் உங்கள் பார்வையில் யோக்கியர்.
ஒரு வருடத்திலேயே பல்ட்டி அடித்து “நான் அவ்வாறு கூறவில்லை” என்று முபாஹலா செய்ததற்கு முரணாக அதே குற்றச் சாட்டுகளை இப்போது கூறி வருகிறவர் உங்கள் பார்வையில் யோக்கியர்.
அல்லாஹ் மீது ஆணையிட்டு அவதூறு பரப்புகிறவர் உங்கள் பார்வையில் யோக்கியர்; நேரடியாக வாருங்கள் உரிய ஆதாரம் தருகிறோம்.இது பற்றிய சி.டி யை பார்த்தால் உண்மை புரியும்.
1987லிலிருந்து இன்று 2010 வரை அவரது வளர்ச்சிக்கும் பேர் புகழுக்கும் காரணமாக இருந்தவர்களை எப்படி எல்லாம் இழிவு படுத்தியுள்ளார். எந்த அளவு அவதூறு பரப்பி இருக்கிறார் என்பதை நேரடியான உரிய ஆதாரங்களுடன் காட்டுகிறோம். நேரில் வாருங்கள்.முன்பு ஒருதடவை நேரில் வந்தபோது ஒரு மோசமான குற்றச்சாட்டை கூறுனீர்கள்.ஆதாரம் கேட்டால் இல்லை என்று சொல்லிவிட்டார்.
எந்த அளவு பீ.ஜை. பக்தி உங்களை மயக்கி இருந்தால் 90க்கு முன்பே முடிந்துவிட்ட ஒரு பிரச்சினை என அப்பட்டமான பொய்யை எழுதியிருப்பீர்கள். பீ.ஜை. அது பற்றி ஏதும் எழுதவில்லை என்றும் ஓர் அப்பட்டமான பொய்யை எழுதியிருப்பீர்கள். 1999ல் கோவை வெடிகுண்டு வழக்கில் அரசு தரப்பு சாட்சியாகி அப்பட்டமான பொய்யைக் கூறிவிட்டு, நாம் தொடுத்த வழக்கிலிருந்து விடுபட லஞ்சம் கொடுத்து எனது வக்கீலையும் சரி செய்து குறுக்கு விசாரணை இல்லாத நிலையில் “நான் அப்படிச் சொல்லவில்லை” என பொய் வாக்குமூலம் கொடுத்ததையும், சமீபத்தில் திருப்பூர் P. நாசருக்காக வசூலித்து அவர் குடும்பத்திற்குக் கொடுக்காமல் நான் மோசடி செய்து விட்டதாக பகிரங்கமான பொய்யை உணர்வில் எழுதியதையும் பீ.ஜை. பக்தி உங்கள் கண்ணை விட்டு மறைத்துவிட்டது.
அவரது வலைதளங்களில் போய் பாருங்கள். எப்படி எல்லாம் அவதூறு பரப்புகிறார் என்பது விளங்கும். அப்படிப் பார்த்தாலும் நீங்கள் உணரப் போவதில்லை.நாங்கள் அதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் உங்களுக்கு பதில் சொல்லி கொடிருக்கிறோம். அந்த அளவு பீ.ஜை. பக்தியில் மூழ்கி இருக்கிறீர்கள். நீங்கள் அவரோடு சில நாட்களாவது தங்கி இருக்கிறீர்களா? பிரயாணம் செய்திருக்கிறீர்களா? கொடுக்கல் வாங்கல் செய்து பார்த்திருக்கிறீர்களா? இதில் எது ஒன்றையும் செய்யாத நீங்கள் எதை வைத்து பீ.ஜை. பக்தியில் இருக்கிறீர்கள்? அவரது பேச்சு நடிப்பில் – பயான் சூன்யத்தில் மயங்கி அவரது பக்தராக இருக்கிறீர்கள். அப்படித்தானே?
நாம் அவரோடு 15 மாதங்கள் தங்கி பழகி இருக்கிறோம். பல நாட்கள் பிரயாணம் செய்திருக்கிறோம். கொடுக்கல் வாங்கல் செய்திருக்கிறோம்.25 ஆண்டுகளுக்கு முன் பழகியதை வைத்து இன்னும் அதையே சொல்லி கதையை ஓட்ட வேண்டாம்.நீங்கள் 15 மாதங்கள்தான் பலகியுள்ளீர்கள் நான் 23 வருடங்களுக்கு மேலாக பழகியுள்ளேன்.ஐங்காலக் கட்டாயத் தொழுகைகளைப் பாழ்படுத்துவதை கண்கூடாகப் பார்த்துக் கண்டித்திருக்கிறோம். நம்மை விட்டு அவர் வெளியேறியதற்கு அதுவும் ஒரு காரணம்.
தர்கா, தரீக்கா, மத்ஹபுகளை விட்டு விடுபட்டு வந்த இளைஞர்களை இயக்க மத்ஹபுகளில் சிக்க வைத்து, அதிலும், ஆக், ஜாக், முஸ்லிம் முன்னணி, முஸ்லிம் பேரவை, ஒருங்கிணைந்த தவ்ஹீத் ஜமாஅத், ததஜ என பல இயக்க மத்ஹபுகளை உண்டாக்கி, இப்போது இதஜ உருவாகக் காரணமாக இருந்தவர் உங்கள் பார்வையில் நேர்மையாளர், சீர்திருத்தவாதி, நபிமார்களின் தாவா பணி செய்கிறார்; அப்படித்தானே?இதஜ  ஆரம்பிக்க அவர்காரனமாக இருந்தாரா ?இதன் மூலம் நீவிர் எவ்வளவு பெரிய போயர் என்பதையும் அறிந்து கொள்ளமுடியும்.
பீ.ஜை. பக்தி எந்த அளவு உங்களது புத்தியை மழுங்கச் செய்துள்ளது என்பதை நடுநிலையோடு சிந்தியுங்கள்.
சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ் ரீன் போன்றவர்களையும் பல நாடுகள் தங்கள் நாடுகளில் நுழைய விடாமல் திருப்பி அனுப்புகின்றன. வெட்டு, குத்து, அடி, உதை என விரட்டி அடிக்கப்படுகிறார்கள். அவர்களது பக்தர்கள் இப்போது நீங்கள் சொல்வது போல்தான் சொல்கிறார்கள். அதையும் ஏற்கிறீர்களா? சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ் ரீன்  போன்றோராவது ஏற்கனவே வழிகேட்டில் இருப்பவர்களைத்தான் மேலும் வழிகெடுக்கிறார்கள். ஆனால் உங்களது பக்திக்குரிய பீ.ஜை. குர்ஆன், ஹதீஸை பற்றிப் பிடித்து அதன்படி நடக்க முன்வந்தவர்களை இயக்க மத்ஹபுகள் என்ற வழிகேட்டில் இட்டுச் செல்கிறார். பெருத்த வழிகேட்டில் இருப்பது யார்? சொல்லுங்கள்!பீ.ஜே மீதான வெறி உங்களை எவ்வளவு கேவலமாக  எழுத வைத்திருக்கிறது என்பதற்கு இது இரு உதாரணம்,
அல்குர்ஆன் 3:7 வசனத்தில் பல பொருள் தரும் முத்தஷாபிஹாத் வசனங்களை ஒரே பொருளான முஹ்க்கமாத் வசனங்களாக மாற்றும் வல்லமை அல்லாஹ்வுக்கு இருப்பது போல் அறிவில் சிறந்தவர்களுக்கும் இருக்கிறது என்றும், “தஃவீல்” என்ற அரபி பதத்திற்கு அந்த இடத்தில் முடிவு என்ற பொருளை எடுக்காமல் விளக்கம் என்ற பொருளை எடுத்து அல்லாஹ்வையும் விளங்கும் மனித கீழ் நிலைக்கும், மனிதனை அல்லாஹ்வின் உயர் நிலைக்கும் உயர்த்தி மிக மோசமான கொடிய ஷிர்க்கை ஏற்படுத்தும் செயலை செய்துள்ள மாபாவி பீ.ஜை. உங்கள் பார்வையில் நபிமார்களின் பிரசார பணியைச் செய்கிறார்.முத்தசாபிஹத் வசனங்கள் பற்றி அந்த சமயத்தில் என்னுடைய சந்தேகங்களுக்கு பதில் சொல்லாத நீங்கள் நேரில் வரச்சொல்லி முத்தசாபிஹாத் வசனங்களுக்கு பதில் சொல்லாமல்,பீ.ஜே. பற்றி அவதூறு கூறி ஆதாரம் தர மறுத்தபோதே உங்கள் நிலை அறிந்துகொண்டேன்.
அல்குர்ஆன் 2:102லுள்ள பாபிலில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகள் என அல்லாஹ் நேரடியாகச் சொல்லியிருப்பதை மறுத்து ஹாரூத், மாரூத் இரண்டு ஷைத்தான்கள் என எழுதி 49:16ல் அல்லாஹ் சொல்வது போல், அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கத் துணிந்த மாபாவி உங்கள் பார்வையில் நபிமார்களின் பிரசார பணியைச் செய்கிறார். இதுபோல் பல குர்ஆன் வசனங்களை 2:159-162 கூறுவதுபோல் திரித்து வளைக்கிறார். இளைஞர்களை வழிகேட்டில் இட்டுச் செல்கிறார்.
உண்மை என்ன தெரியுமா? ஷைத்தானின் நேரடி ஏஜண்டாக இருந்து, குர்ஆன், ஹதீஸ் என்று சொல்லியே வாலிபர்களையும், இளைஞிகளையும், நரகில் தள்ளும் கேடுகெட்ட புரோகிதராகச் செயல்படுகிறார் நீங்கள் பக்தி செலுத்தும் உங்கள் அபிமான பீ.ஜை. இன்றைய நிலையில் அவரைவிட ஒரு கேடுகெட்ட புரோகிதர் இப்புவியில் இல்லை. அதனால்தான் தொடர்ந்து அவரை அடையாளம் காட்டி வருகிறோம்.பொறாமையின் உச்சகட்டம் 
பீ.ஜை. பக்தி உங்களுக்கு முற்றிப் போய் அவர் வாந்தி எடுத்ததையே வாந்தி எடுக்கிறீர்கள். நீங்கள் பழுதான பழைய சகோதரன் என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே அவர் 1987ல் உங்களை விட அதிகமாக பீ.ஜை. மீது பக்தி வெறி கொண்டு என்னை மிகக் கடுமையாக விமர்சித்துக் கடிதங்கள் உங்களைப் போல் எழுதியவர்தான்.அவர் 87 முதல் இப்போது பீ,ஜே மீது அவதூறு கூறுவது போல் தான் எழுதி இருப்பார்.ஆனால் நான் அச்சமயத்தில் எழுதிய  மார்க்க விசயங்களுக்கு பதில் தராமல் நேரில் அழைத்து அவதூறுதான் கூற முடிந்தது.
1987ல் பீ.ஜை. அந்நஜாத்தை விட்டு வெளியேறியவுடன் அரபு நாடுகளின் பட்டி தொட்டி எல்லாம் பீ.ஜை. பேசி வெளியிட்ட ஆடியோ கேஸட்டுகளை எல்லாம் பரப்பி பீ.ஜை.யை அறிமுகப்படுத்த பெரும் கடின முயற்சிகள் எடுத்தவர்தான். பீ.ஜை.யை பிரபலப்படுத்தியவர்தான். இலாகியை மேலாப்பாலயம் தவிர வேறு யாருக்கும் தெரியாது.அவர்தான் பீ.ஜே.யை பிரபலபடுத்தினார் என்றால் உம்மைப்போல் கோமாளி வேறு யாரும் இருக்கமுடியாது.இப்போது பீ.ஜை. பக்தி தெளிந்து உண்மை நிலையை வெளியிடுகிறார்.பாக்கரால் காசு சம்பாதிக்க வழி இல்லாமல் போனதால் அவர் வெளியேறினார். தற்போதைய பீ.ஜை. பக்தராகிய நீங்கள் அதை ஜீரணிக்க முடியாமல் அது யாருடையது என்று நன்கு தெரிந்திருந்தும் மொட்டைக் கடுதாசி என பிதற்றி இருக்கிறீர்கள். யார் எழுதியது என்று தெரியாமல் மறைத்து வெளியிடுவதுதான் மொட்டைக் கடுதாசி என்பதை அறிந்து கொள்ளுங்கள். பீ.ஜை. பக்திதான் உங்களை இப்படி எல்லாம் தடுமாற வைக்கிறது. பிதற்ற வைக்கிறது.நீங்கள் சொல்லும் இலாகி தனக்காக தன்னை முன்னிலை படுத்தவேண்டும் என்பதற்காக பீ.ஜே வுடன் நெருக்கமாக இருந்தார்.அதனால் காசு சம்பாதிக்க வழி இல்லைஎன்றதும் உங்களிடம் அழுது புலம்பி பொய்யை பறை சாற்றுகிறார்.அன்று ஓர்நாள் மேலாப்பலயத்தில் பீ.ஜே.வெட்டுப்பட்ட இரவில் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பீ.ஜே.உயிருக்காக போராடி கொண்டிருந்த நிலையில் தனது பயணத்தை ரத்து செய்யாமல் இரவிலே வெளிநாட்டிற்கு  ஓடிவிட்டார்.அன்று நானும் இன்னொரு மௌளவியும்தான் இரவும் முழுவதும் அவருடன் கழித்தோம்.அன்று இரும்புக்கட்டிலில் இரவு முழுவதும் அவர் பட்ட அவஸ்தையை சொல்லமுடியாது.வீர வசனம் பேசும் ஹாமித் பக்ரி கூட அவருடன் தங்கவில்லை.உயிருக்கு பயந்து தன்னால் அழைக்கப்பட்டு வந்த ஒருவரை உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் காசு சம்பாதிக்க ஓடோடிப் போனவர்தான் இந்த இலாகி.பட்டி,தொட்டியெல்லாம் இப்போது உங்களையோ மூஜிபையோ,இன்னும் மற்றவர்களையோ இவர் அறிமுகப்படுத்த வைக்க வேண்டியது தானே.பீ.ஜே.கூட்டத்தை மேலபலயத்தில் மட்டும்தான் நடத்தினர். வேறு எந்த பட்டி ,தொட்டியில் இலாகி கூட்டம் போட்டார்?அடுத்தவர்கள் கொடுக்கும் காசிலும் தன பெயரை விளம்பர படுத்திக் கொள்ளும் இவரைப்பற்றி உங்களை விட எனக்கு நன்கு தெரியும்.
ததஜ மட்டும்தான் நேர்வழியில் இருக்கிறது. ததஜ பள்ளிகள் மட்டும்தான் ஓறிறைவனை வணங்கும் பள்ளி. இதர பள்ளிகள் அனைத்தம் மஸ்ஜிதுர்ழிரார், மற்றவர்கள் பின்னால் தொழக்கூடாது. ததஜ மேடைகளில் மட்டும்தான் நாங்கள் ஏறுவோம். மற்றவர்களின் மேடைகளில் நாங்கள் ஏறமாட்டோம். வேறு யாரையும் எங்கள் ததஜ மேடையில் ஏற்றமாட்டோம், இப்படி எல்லாம் யாருடைய வாயிலிருந்து வெளிவரும். அப்படியும் நபி என்று கூறிவிடுவாரோ என்றுதான் நாம் எழுதியிருக்கிறோம்.ஃபத்வா கொடுக்கவில்லை.
இதை, அவதூறு கூறுவது நபி வழியா? என்று கேட்டிருக்கிறீர்கள். அவர் மரணிக்கும் வரை அவ்வாறு கூறாவிட்டால் உங்கள் பாவத்தை, பீ.ஜை. மன்னிக்காதவரை அல்லாஹ் எவ்வாறு மன்னிப்பான்? என்று எழுதியிருக்கிறீர்கள் பக்தியால் புத்தி பேதலித்து. உங்கள் அபிமான பீ.ஜை. இதுவரை எத்தனை பேர் மீது எப்படிப்பட்ட கடுமையான அவதூறுகளைப் பரப்பி இருக்கிறார். வல்லம் மாநாட்டில் “நம்மோடிருந்து தடம் புரண்டவர்கள்” என 65 நபர்களைக் குறிப்பிட்டிருந்தாரே. இதஜ தோன்றியபின் அந்த, எண்ணிக்கை 100 ஐத் தாண்டியிருக்குமே!
நபி என்று கூறிவிடுவாரோ என்று கூறுவது அவதூறு கூறுவது நபி வழியா? என்று கேட்கும் நீங்கள், உங்கள் அபிமான பீ.ஜை. பலரை பெயர் குறிப்பிட்டுத் தடம் புரண்டுவிட்டார்கள் என்று உறுதிப்படுத்தியும், பலரை காஃபிர்-முஷ்ரிக் என்றும் அவர்கள் பின்னால் நின்று தொழுவது கூடாது என்றும் ஃபத்வாவே கொடுக்கிறாரே, அல்லாஹ் மீது ஆணையிட்டுப் பலர் மீது அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி வருகிறாரே? அவரிடம் இவை எல்லாம் அவதூறு; நபிவழியல்ல; 42:21, 49:16படி ஷிர்க்-குஃப்ர் ஏற்படுத்தும் செயல்கள் என்று சொல்லும் துணிச்சல் உங்களுக்கு உண்டா? சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பீ.ஜை.யை மன்னிக்காதவரை அல்லாஹ் எவ்வாறு மன்னிப்பான்? என்று பீ.ஜை.யிடம் கேட்டிருக்கிறீர்களா? நபி என்று கூறிவிடுவாரோ? என்று சந்தேக அடிப்படையில் நாம் கூறுவது பெருங்குற்றம். பீ.ஜை. 65 நபர்களைக் குறிப்பிட்டுத் தடம் புரண்டுவிட்டார்கள் என்று (ஃபத்வா) தீர்ப்பளித்ததோடு, மாநாட்டில் பகிரங்கப்படுத்தியது, 42:21, 49:16ல் அல்லாஹ் கண்டித்துக் கூறுவது உங்களுக்குப் பெருங்குற்றமாகத் தெரியவில்லை. எந்த அளவு பீ.ஜ. பக்தியில் மூழ்கித் தடுமாறுகிறீர்கள் என்பதை உங்களால் உணர முடியாது.
அரபி மொழி கற்றவர்களுக்கு மட்டுமே மார்க்கம் சரியாக விளங்கும் அதை நான் நிரூபிப்பேன் என்று எனக்குக் கடிதம் எழுதினாரே இது அவர் புரோகிதர்தான் என்பதற்கு ஆதாரமில்லையா?
இன்று பல புரோகித மதரஸாக்களை ஆரம்பித்து, நாங்கள் புரோகிதர்களை சப்ளை செய்வதில்லை என்று 1986ல் அந்நஜாத்தில் எழுதியதற்கு முரணாக இன்று பல்ட்டி அடித்து புரோகிதர்களை சப்ளை செய்வது அவர் புரோகிதர் என்பதற்கு ஆதாரமில்லையா?
நபி(ஸல்) அவர்களது காலத்தில் இன்றைய முஸ்லிம்களைவிட கேடுகெட்ட முஸ்லிம்கள் (முனாஃபிக்குகள்) இருந்தார்கள் என்று உங்கள் அபிமான பீ.ஜை.யைப் போல் சுய கருத்துக்களை எழுதவில்லை. குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் கொடுத்தே எழுதி இருந்தோம். அந்த முனாஃபிக்குகள் இமாமத் செய்ததற்கு ஆதாரம் உள்ளதா? என்று கேட்டதற்கு பதில் சொல்ல முடியாமல் “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்று நாம் கூறியதாக எழுதியுள்ளீர்கள். ஆம்! அப்படிக் கூறினோம். ஏன் தெரியுமா? பீ.ஜை.யின் மூடத்தனமான கேள்வியை அவரது பக்தராகிய நீங்கள் அப்படியே வாந்தி எடுத்ததால்தான் அப்படிக் கூறினோம். எதையெல்லாம் சாப்பிடக் கூடாது என்பதற்குத்தான் ஆதாரம் கேட்கவேண்டும்; எதையெல்லாம் சாப்பிடலாம் என்பதற்கு ஆதாரம் கேட்பவன் மூடன், எதை எல்லாம் உடுத்தக் கூடாது என்பதற்கு ஆதாரம் கேட்கலாம், எதை எல்லாம் உடுத்தலாம் என்பதற்கு ஆதாரம் கேட்பவன் அறிவிலி. அதேபோல் அன்று நபி(ஸல்) காலத்தில் இணை வைக்கும் நிலை இருந்ததில்லை என்று உங்கள் அபிமான பீ.ஜை. எழுதியதற்கு மறுப்பாக நபி(ஸல்) காலத்தில் கொடிய இணை வைக்கும் முனாஃபிக்குகள் இருந்தார்கள் என்று குர்ஆன் வசனங்களைக் கொண்டு எடுத்துக் காட்டியதை உங்களால் உணர முடியவில்லை.அவர்கள் இமாமத் செய்தார்கள் என்பதற்கு ஆதாரம் தாருங்கள்.கொடிய முனாபிக்குகள் என்று சுட்டிகாட்டியபின் அவர்கள் எங்ஙனம் இமாமத் செய்ய அனுமதிக்கப்பட்டிருப்பார்கள்?சாப்பிடுவதும் உடுத்துவதும் உலக விஷயம்.அதில் எதெல்லாம் கூடாது என்று தான் பார்க்கவேண்டும்.இமாமத் செய்வது மார்க்க விஷயம்.ஆயின் நபி[ஸல்]காலத்தில் முனாபிக்குகள் இமாமத் செய்ததற்கு ஆதாரம் இருக்கிறதா என்றுதான் பார்க்கவேண்டும்.தன்னை பெரிய மார்க்க அறிஞர் நினைத்துகொண்டு மார்க்கத்தில் பீ.ஜே.வை எதிர்க்கவேண்டும் என்பதற்காக உளறி கொட்டாதீர்கள். அந்த அளவு பீ.ஜை. பக்தி உங்களின் மூளையை மழுங்கச் செய்துள்ளது. பீ.ஜை. எழுதியதே வேத வாக்காக(?) உங்களுக்குத் தெரிகிறது. தொழக்கூடாது என்று கூறும் பீ.ஜை.தான் அதற்குரிய ஹதீஸ் ஆதாத்தைக் காட்ட வேண்டும். சுய கருத்தை அல்ல. இந்த அற்பமான அறிவும் உங்களுக்கு இல்லை என்பதை நீங்களே வெளிப்படுத்துகிறீர்கள்.
நபி(ஸல்) காலத்தில் இணை வைக்கும் முனாஃபிக்குகள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தது குர்ஆனைக் கொண்டு (2:8-20) உறுதிப்படுகிறது. அப்படியானால் அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று தெளிவுபடுத்தக் கடமைப்பட்ட நபி(ஸல்) அப்படித் தெளிவுபடுத்தத் தவறிவிட்டார்கள். ததஜ மத்ஹபு நவீன இமாம் தான் அப்படியொரு சட்டம் சொல்லி தெளிவுபடுத்த வேண்டும் என்று எண்ணும் நீங்கள் எந்த அளவு அறியாமையில் இருக்கிறீர்கள் என்பதைச் சிந்திக்கவும்.அப்படி தெளிவுபடுத்தப்பட்டவர்கள் எந்த காரியங்களிலாவது முன்னிலை படுத்தியதற்கு ஆதாரம்  உண்டா?
உங்கள் அபிமான பீ.ஜை. சொல்லுவது போல், நாங்கள்தான் நேர்வழியில் இருக்கிறோம், நாங்கள் சொல்வதுதான் நேர்வழி என்று 1986லிருந்து இன்றுவரை எப்போதாவது சொல்லி இருக்கிறோமா? ஒருபோதும் சொன்னதில்லையே! அல்லாஹ்வும், அவனது தூதரும் சொன்னதுதான் நேர்வழி. அந்நஜாத்தில் வருவதை குர்ஆன், ஹதீஸில் பார்த்து விளங்கிச் செயல்படுங்கள்; அந்நஜாத்தில் வருவதை வேதவாக்காக(?) எடுக்காதீர்கள். அந்நஜாத்தை ஒருபோதும் தக்லீது செய்யாதீர்கள் என்றல்லவா தொடர்ந்து எழுதி வருகிறோம். “லக்கும் தீனுக்கும் வலியதீன்” என்பது பேச்சில் மட்டுமல்ல; அந்நஜாத்திலும் அந்தக் கருத்தையே எழுதுகிறோம். அதுவும் எங்கள் சுயவிருப்பப்படி அல்ல. அல்லாஹ் அல்குர்ஆன் 25:63, 28:55, 39:64 இறைக் கட்டளைக்கு அடிபணிந்தே அவ்வாறு கூறுகிறோம்.
சொந்த உபயோகத்திற்காக உள்ள கட்டிடமாக இருந்தால் மட்டுமே ஜகாத் கொடுக்கத் தேவையில்லை. வாடகை வருமானம் நோக்கமாக இருந்தால், வருமானம் கருதி கடையில் முதலீடு செய்யும் பொருள்களுக்கு ஒரு வருடம் பூர்த்தியான பின்னர் அப்போதிருக்கும் பொருள்களின் மதிப்பிற்கும், அந்த வருடம் வந்த வருமானத்தில் செலவுகள் போக எஞ்சியிருக்கும் பணத்திற்கும் வருடா வருடம் ஜகாத் கடமையாவது போல், வருமானத்தை நோக்கமாகக் கொண்ட கட்டிடங்களுக்கும் வருடா வருடம் ஜகாத் கடமை என்பதையே குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் பார்க்க முடிகிறது. இதுபற்றி அந்நஜாத்தில் தெளிவாக ஆதாரங்களுடன் எழுதியுள்ளோம்.
வரும் வாடகை குறைவாக இருக்கிறது. செலவுக்கே போதவில்லை. இந்த நிலையில் எப்படி வருடாவருடம் ஜகாத் கொடுப்பது என்ற கேள்விக்கு பதிலாக ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும். வருடா வருடம் கொடுக்கத் தேவை இல்லை என்று தீர்ப்பு அளிப்பதற்கு மனிதர்களில் யாரும் எந்த அல்லாமாவும் அதிகாரம் பெறமாட்டார். 42:21 எச்சரிக்கைக்கு முரணாக நாம் ஒருபோதும் தீர்ப்பு அளிக்க மாட்டோம்.
வீம்பர் கேட்ட கேள்வி என சகோ. பழனி உமரின் கேள்வியை விமர்சித்து விட்டு அதைவிட வீம்புத்தனமாக கேள்விகளை நீங்கள் கேட்டுள்ளதால் இந்தப் பதில் தரப்பட்டுள்ளது. நீங்கள் விரும்பினால் அந்நஜாத்திலும், வலைதளத்திலும் இடம் பெறச் செய்ய எமக்கு மறுப்பு இல்லை. கேள்விகள் தொடரும் என்றும் எழுதியுள்ளீர்கள். தொடருங்கள். பதில் அளிக்கிறோம்.
வஸ்ஸலாம்.
 சகோ. இப்றாஹீம் வேண்டுகோளுக்கு இணங்க இது ஏற்றப்படுகிறது.
Comments Off
Comments are closed.