வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

பீஜேவின் 27/01/13 சொற்பொழிவை கண்டிக்கும் வினவுக்கு

வினவு 
அடிக்கடி கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்கவே அது போன்ற பேச்சுக்கள் .கருத்து சுதந்திரத்தின் அளவு கோள் என்ன?சொல்லுங்கள் .எப்படி கமல் அவர் மகள் பற்றிய பேச்சு ,பாரதிராஜா குடும்பம் பற்றி பேச்சுக்கள் எப்படி அவர்கள் மனதில் வலியை ஏற்படுத்தியிருக்குமோ அதே போன்றே அமைதியாக வாழும் எங்கள் மீது அடிக்கடி நடத்தும் மீடியாகளின் தாக்குதல் வலியை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்தவே அந்த மேடையில் அவ்வாறான பேச்சுக்கள் ..எப்படி கமலுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் எங்களுக்கு இல்லையா? இந்து மதத்தைப் பற்றி கமல் பேசவில்லையா? பேசட்டும் அவர் ஹிந்து .மருதநாயகம் தடை செய்யப்படவில்லையா? அதற்காக ராமகோபாலன் கமலிடம் பேச்சுவார்த்தை நடத்திவில்லையா?அப்போது கண்டன குரல்கள் எங்குமறைந்தன?
பாரதிராஜாவும் கமலும் ஆபாச சினிமாவிற்கு அப்பாற்பட்டவர்களா?அவர்கள் படங்களில் படுக்கையறை காட்சிகள் காட்டுவது இல்லையா? இரட்டை அர்த்த வசனங்கள் பேசப்படவில்லையா ? குடும்பத்துடன் சினிமா பார்க்கும் மக்கள் நிலாகாயுது பாட்டில் முக்கல் முனகல் களில் எப்படியெல்லாம் நெளிந்திருப்பார்கள் .சக்கர வள்ளி கிழங்கு சமஞ்சது எப்படி என்று ஊரெல்லாம் கேட்டுத்தான் கவி வல்லமை காட்டுவதா? அந்தபாடலை கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பூப்புனித நீராட்டுவிழாவில் கூட இசைக்கப்படுகிறதே ,அதைவிடவா ஆபாசம்பீஜெ பேசிவிட்டார்.ஆபாசமே சினிமா ,சினிமாவே ஆபாசம் .அப்படிப்பட்ட சினிமாக்காரர்களை மனதில் உரைக்க எப்படி பேசுவது? துப்பாக்கி படத்தில் வரும் காட்சிகளுக்கே முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் .அப்போது இந்த ஜட்டி நாயகன் கமலுக்கு புரிந்திருக்க வேண்டும்.ஆனால் அவர் எனது படத்தை முஸ்லிம்கள் பார்த்தால் எனக்கு பிரியாணி போடுவார்கள் என்று நக்கல் வேறு.பிறகு சிக்கல் வராதா?
கண்ணியத்திற்கு கண்ணியம் .ஆபாசத்திற்கு ஆபாசம் .மாணவன் திருந்த ஆசிரியர்கள் பிரம்பால் அடிப்பார்கள் .திருடன் திருந்த போலீசார் லத்தியால் அடிப்ப்பார்கள்.மாணவனை லத்தியால் அடித்தால் உங்களது கண்டன குரல் ஏற்புடையதே .
பீஜே ,இந்துக்கள் பற்றியோ இந்து தெய்வங்கள் வேதங்கள் சம்பிராதயங்கள் பற்றி பேசவில்லை .இந்துமதத்தை விட்டு வெளியேறிவிட்ட தமிழ் கலாச்சாரத்தை குழிதோண்டி புதைத்து விட்ட கமல் என்னும் பிற்போக்குகாரர் எங்களைப் பற்றியும் எங்களது குர்ஆன் பற்றியும் பொய்யுரைத்து இருப்பதால் ஆவேசம் வரவே செய்யும் .இதில் வார்த்தைகள் கனத்தால் பாதிப்பு கமலுக்கு இந்துக்களுக்கோ மடர்வர்களுக்கோ அல்ல .அவ்வாறு இருக்க சாதாரண இந்துக்கள் ஏன் கொதிப்படைய வேண்டும் ?அவர்களை கொதிப்படைய வினவே முன்னின்று பேசுவது ஏற்புடையதா?
பீஜேவின் பேச்சுக்கள் கமலை தாக்கியதைவிஞ்சி நீங்கள் பீஜேவை தாக்கிடும் நோக்கம் என்னவோ?