திங்கள், 4 ஜூன், 2012

முல்லா சொன்ன சுலைகா கதையும்'


27/5/12 அன்று தூத்துக்குடி ஆறாம்பண்ணை கிளை TNTJ சார்பாக பொதுக்கூட்டம் மற்றும் கோடைக் கால பயிற்சி வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட தாஈ சகோதரர் அமீர் தலைமை தாங்கினார். அடுத்ததாக ஆறாம்பண்ணை கிளை மதரச மாணவி ராபியத்துல் பார்ஹானா 'முல்லைப் பெரியாரும் முல்லா சொன்ன சுலைகா கதையும்' என்றத் தலைப்பிலும்,  சென்னை அம்பத்தூர் கிளை TNTJ பள்ளி இமாம் "ஷேய்க் முஹம்மத் பாசி" அவர்கள் 'திருமணம் நபி வழியிலா? நம் வழியிலா?' என்றத் தலைப்பிலும், சிறப்புப் பேச்சாளராக மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் முன்னாள் இமாம் "மசூத் யூசுபி" அவர்கள் 'நபிமார்கள் போல வாழ வாழ்த்துதலும், ஆலிம்கள் வாழும் லட்சணமும். என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். மேலும் கோடைக் கால பயிற்சி வகுப்பில் முதல் மார்க்குகள் பெற்றவர்களுக்கு தகுதி அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டது.