திங்கள், 1 அக்டோபர், 2012

குர்ஆனில் எழுத்து பிழைகள் -விவாதம் டிஎன்டிஜே VS தூத்துக்குடிஉலமா சபை



பிஸ்மில்லா ஹிரஹ்மாநிர் ரஹீம் ,,,,,,
தூத்துக்குடியில் டிஎன்டிஜே வும் ஷேக் அப்துல்லா ஜமாலியின் ஜமாத்துல் உலாம சபையும் குர்ஆனில் எழுத்து பிழைகளா ?என்ற தலைப்பில் விவாதத்தை நேற்று  துவக்கினார்கள் .நேற்றைய விவாதத்தில் குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்று இதுவரை எந்த முஸ்லிம்களும் சொன்னதில்லை ,யூதர்கள் மட்டுமே அவ்வாறு சொல்லி வருகின்றனர் என்று ஜமாலி தரப்பினர் குற்றசாட்டு வைத்து அதற்கு  answering islam  என்ற இணைய தளத்தில் இருந்து பிரின்ட் அவுட் எடுத்து ஆதாரம் வைத்தனர்.
குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்பதை ஹிஜ்ரி 5ஆம் நூற்றாண்டில் பாக்கியான் என்னும் முஸ்லிம் அறிஞர் கூறியதையும் இப்னு ஹுதைபா,தப்ரி கூறியுள்ளதையும் ஆதாரமாக டிஎன்டிஜே எடுத்துவைத்து அவர்கள் வாதத்தை உடைத்ததோடு நில்லாது அவர்கள் கூறிய யூதனும் குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டு என்பதை நேரடியாக கூறாமல் ,ஒரு முஸ்லிம் அறிஞரின் கருத்தையே எடுத்து மேற்கோள் காட்டி கூறியுள்ளதையும்  நிருபித்து ஜமாலி குருப்பின் ஆதாரங்களை தவிடுபொடியாக்கினார்கள் .
அடுத்து குர்ஆனில் நுன்ஜி என்று வரக்கூடிய சொல்லில் நூன் விடுபட்டு நுஜி என்று எழுதப்பட்டிருப்பதையும் அதில் விடுபட்ட நூன் சிறிதாக மேலே சேர்க்கப்பட்டிருப்பதையும் எடுத்து வைத்து குர்ஆனில் பிழை உண்டு என்று தங்கள் வாதத்தை நிலை நிறுத்தினார்கள் இதை மறுக்க பல திரிபு வாதங்களை எடுத்து வைத்து சமாளிக்க முயன்ற ஜமாலி வகையறாக்களின் வாதங்கள் சல்லடையாக்கப்பட்டது 
மேலும் ஜமாலி மாணவர் முஸ்தபா என்பவர் லாகின்ன ,போன்ற நாலு சொற்களை  மட்டுமே வைத்துக் கொண்டு அதிலுள்ள பிழைகளை சொல்லுமாறு மீண்டும் மீண்டும் வேண்டி வந்தார் .அவர் அவ்வாறு கோருவது தவறு..ஏனெனில் தலைப்பு குர்ஆனில் எழுத்து பிழைகள் உண்டுஎன்றும் இல்லை என்றும் என்பதே .அவ்வாறிருக்க எழுத்து பிழைகள் எதுவானாலும் சொல்லலாம்.குர்ஆனில் பிழையான வார்த்தைகள் என்று சொல்லப்பட்ட லாகின்ன ,போன்ற சொல்லில் பிழை இல்லை என்பது மட்டுமே தலைப்பாக இருந்தால் அந்த சொற்களோடு நிற்க முடியும்  ஆனால் அதற்கு மாற்றமாக குர்ஆனில் எழுத்து பிழைகள் இல்லை என்று பொதுவாக சொல்லி விட்டு நான்கு சொற்களில் மட்டுமே நிற்பது தலைப்புக்கு மாற்றமானது 
இறுதியில் லாகின்ன என்ற சொல் எழுதப்பட்ட நிலையிலும் உள்ள.தவறுகள் விளக்கப்பட்டது.அத்ற்கு கடைசி வாதத்தில் லாகின்ன கேட்டு துடித்துக் கொண்டிருந்த முஸ்தபா கடைசி 15 நிமிடங்களையும் அவர் எடுத்து அதற்கு விளக்கம் தந்திருக்க வேண்டும் .ஆனால் ஜமாலி குறுக்கிட்டு சொதப்பி அதன் பின்னர் முஸ்தபாவும் உளறி நேரம் முடிந்தது .

விவாதம் 2 வது  நாள் 

லாக்கின்ன,லிதஸ்லூவ ,லி யப்லூவ ,வ நப்லூவ என்ற சொற்களில் உள்ள பிழைகள்பற்றி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த முஸ்தபா முதலில் சொல்லப்பட்ட லாக்கின்ன என்ற சொல்லில் உள்ள பிழையை கூட நிருபிக்க முடியாமல் தவித்தார். அந்த ஒரு சொல்லில் கூட பிழை இல்லை என்பதை நிருபிக்க அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக செய்த ஆய்வுகள் அவருக்கு கைகொடுக்கவில்லை .ஆக டிஎன்டிஜே தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட னுஞ்சி என்ற சொல் பிழையாக நுஜி என்று எழுதப்பட்டுள்ளதை அவர்களால் மறுத்து  ஆதாரங்கள் தரமுடியவில்லை .மேலும் அவர்கள் தர்ஜுமாவில் சொல்லப்பட்டுள்ள 19 பிழைகளில்  நான்கை மட்டும்  விளக்கம் கேட்டு வற்புறுத்தி வந்த முஸ்தபா அதில் ஒன்றை கூட பிழை இல்லை என்பதை நிருபிக்க இயலாமற் சகாபாக்களை குறை  சொல்லிவிட்டார்கள் என்று ஆரம்ப முழக்கத்தையே இறுதி முழக்கமாக முழங்கிக் கொண்டு சென்றார்.

இரண்டு விவாதங்கள் நடத்தி அதில் தனது கொள்கைகளை நிலை நிறுத்தமுடியாமல் வெறும் சால்ஜாப்புகளையும் ,வெளிப்படையான சமாளிப்புகளையும் வைத்து வாதாடிய ஜமாலி இந்த விவாதத்தில் கலந்து கொண்டார். இவர் கலந்து கொள்வதை ரகசியமாக வைத்து பெரிய ஒரு பூச்சாண்டி காட்டுவது போல தங்களைத்தானே ஏமாற்றிக் கொண்டனர்.  ,பீஜேயுடன் யாரும் விவாதிக்க முன்வராத நிலையில் ஜமாலி தனது கோமாளித்தன வாதங்களுடன் களியக்காவிளை விவாதம் நடத்தி அதில் தன்னைத்தானே வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்ட சர்க்கஸ் கோமாளி விவாதம் நடத்திய பிறகு அறியாத மக்களிடம் பிரபல்யம் ஆகி அதன் மூலம் பல் இடங்களில் கூட்டங்கள் நடத்த offer கிடைத்தது .இஸ்லாத்திற்கு புதிதாக வந்தவர்களுக்கு முஸ்லிம்களிடையே கிடைக்கும் மரியாதை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்தி பண அறுவடை செய்து கொண்ட பெரியார் தாசன் போல ,அதன் பின்னர் பெரியார்தாசனும் பாக்கரும் முகவரி இல்லாமற் போனது போல ஜமாலி நிலையும் கேட்பார் இல்லாமற் போயிற்று.அடுத்து அவர் ,உருவம் அற்ற இறைவன் என்பது முஸ்லிமகள் மத்தியில் ஊறிப்போன விஷயம் அதற்கு மாற்றமான கருத்துடைய பீஜே யுடன் அதன் பின்னர் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா என்ற தலைப்பில் நடத்திய விவாதமும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை .
அதன் பின்னர் ,குர்ஆனில் பிழைகள் என்று பீஜே சொல்லுகிறார். முஸ்லிம்களே 
அய்யையையோ இது அபத்தம் என்று கூறி நாம் நேரடியாக அழைத்தால் அவர் நோக்கம் புரிந்து ஜமாலியின் விளம்பர வேட்டைக்கு பலியாகிவிடக் கூடாது என்று டிஎன்டிஜே மறுத்துவிடும் என்பதால் ,தனது மாணவர் ஜிப்பாவுக்குள் ஒழிந்து கொண்டு விவாதத்திற்கு ஒப்பந்தம் போட்டு கள்ளத்தனமாக் விவாதத்தில் கலந்து கொண்டார்.
விவாதத்தில் எப்போதும் பீஜே அவர்களின் பல வாதங்களை மறுத்து சால்ஜாப்புகளுடன் சமாளித்து வரும் ஜமாலி ,பீஜேயின் வாதங்களால் அவர் மாறியிருக்கும் நிலையை பகிரங்கமாக இறைவன் வெளிப்படுத்தி விட்டான் களியக்காவிளை விவாதத்திர்க்கான கடித பரிமாற்றங்களில் உள்ள கடிதங்களில்  786/92 என்று பிஸ்மில்லாஹ்வுக்கும் கிர்கரிக்கும் அப்ஜத் முறையில் எழுதிய அவர் இப்போது அவர் 786 என்று எழுதுவதில்லை என்றும் பிஸ்மில்லாஹ் என்றுதான் உண்ண முடியும் 786 என்று சொல்லி உண்ண முடியுமா? என்று கேட்டு நீங்கள்தான் நபி [ஸல்] அவர்கள்  சொல்லுக்கு மாற்றமாக இறைவனின் திருப் பெயரால் ,,, என்று எழுதுவதாகவும் கூறினார் .இதை அவர் சொன்னதும் அதை ரசித்து அவர்கள் தரப்பில் வந்த பார்வையாளர்கள் சிரித்தனர்..அதன் பிறகு அங்கு வந்த பார்வையாளர் ஒருவர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டையில் 786 எழுதியுள்ளதையும் சுட்டி காட்டி அந்த அட்டையை பீ ஜெவிடம் கொடுத்தார்.இந்த அடையாள அட்டையில் 786 எழுதியதற்கும் ஜமாலிக்கும்  எவ்வித தொடர்பும் இல்லை யென்பது வேறு விஷயம் .அதைப்போல அங்கு வந்த மக்களுக்கு அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்தெரியாது என்பதும் மற்றொரு விஷயம்..ஆனால் களியக்காவிளை விவாதத்திற்கு முன்னர் 786/92 என்று எழுதியதோடு அந்தவிவாததில் அப்ஜதுக்கு ஆதரவாக வாதாடிய ஜமாலி இன்று நாம் 1980-90 களில் 786 ஐ கேலி செய்தது போல இன்று அவரும் கேலி செய்ததோடு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ,,,,,,,என்று தான் எழுத வேண்டும் என்று திருநெல்வேலிக்கார னுக்கே அல்வா கொடுத்தார் போல நமக்கே பிஸ்மில்லாஹ் பற்றி சொல்லுமளவில் மாறிவிட்டார் .அல்ஹம்துலில்லாஹ் 
முஸ்தபா நல்ல வாதங்களுடன் விவாதிக்க வந்திருந்தால் ,அவர் தனது வாதத்தில் பீஜே தர்ஜுமாவில் அறிவிக்கப்பட்டுள்ள 19 பிழைகளையும் அடுக்கி அவைகளில் பிழைகள் இல்லை என்பதற்கான தனது ஆதாரங்களை எடுத்து வைத்திருக்க வேண்டும் .அதோடு நில்லாது அவர் எதிர் பார்க்காத நிலையில் பீஜே தரப்பினர் பிழைக்கு கூடுதலாக வைத்த னுஞ்சி பற்றியும் அவர் இறுதியில் பேசியிருக்க வேண்டும் .ஆனால் அதற்கு திராணியற்ற அவர் தனது ஈராண்டு ஆய்வு செய்த லாக்கின்ன போன்ற நாலு சொற்களையாவது அவராகவே முன்வந்து பிழைகள் இல்லை என்பதையும் நிருபித்து காட்டியிருக்க வேண்டும்.மாறாக லாகின்ன போன்ற நாலு சொற்களில் உள்ள பிழைகள் சொல்லுங்கள் என்று எதிர் தரப்பினரிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தது அவர் அறைவேக்காடாகவே வந்துள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது .எவ்விதத்திலும் எதிர்கொள்ளாமற் பீஜே  தரப்பினருக்கு பாடம் நடத்துவதாக நடித்துக் காண்பித்தார். அதை அவர்கள் தரப்பினர் படம் எடுத்துள்ளார்கள் .படபிடிப்பில் கலந்து கொண்ட மகிழ்ச்சியுடன் அவரது தரப்பில் வந்திருந்த மக்களும் நாரே தக்பீர் கோசங்கள் முழங்க கர கோசத்துடன் சென்றனர்.