வியாழன், 2 டிசம்பர், 2010

இது வன்றோ ஜனநாயகம்| இதுவன்றோ பெண்ணுரிமை|

செங்கொடி, பாலியல் வன்முறைக்கு தீர்வு ஆணாதிக்கத்தையும் தனியுடமையும் நீக்கவேண்டும் எனக் கூறியுள்ளீர்கள்.தனியுடமைக்கும் பாலியல் வன்முறைக்கும் என்ன வேண்டிக்கிடக்குது? .மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடா முனைவது ஏனோ? ஆணாதிக்கமாம்.மக்களின் அன்றாட வாழ்க்கைகளையும் அடிப்படைகளையும் தெரியாத புத்தகத்திலே முகம் புதைத்து வாழும் முற்ப்போக்குவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் கண்டுபிடித்த வார்த்தை ஜாலம்.தான் இந்த ஆணாதிக்கம்.இஸ்லாத்தில்  பெண்ணாதிக்கம் உள்ளதைப் பாருங்கள்.உமர்[ரலி]அவர்காளின் ஆட்சி காலத்தில் பெண்கள் கேட்கும் அதிக மகர் தொகை கொடுத்து திருமணம் முடிக்க இயலாத இளைஞர்கள்  திரண்டு அதிபதி உமர்[ரலி] அவர்களிடம் முறையிடுகிறார்கள்.பெண்களின் மகர் தொகைக்கு வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.உமர்[ரலி]நிலைமையை உணர்ந்து வெள்ளியன்று ஜும்மாவில் [அதுதான் நாடாளுமன்றம்] இனி பெண்கள் நானூறு திர்கம்களுக்கு மேல் மகர் தொகை கேட்கக்கூடாது என்று அறிவித்தார்.அப்போது ஒரு பெண் தோழர் எழுந்து மக்களின் தலைவரே | அல்லாஹ் மகராக ஒரு குவியலே பெற்றபோதிலும் அதிலிருந்து எதையும் திரும்ப  பெறாதீர்கள் என்று குர்ஆனில்கூறியுள்ளானே, ஆனால் நீங்கள் நானூறு திர்கம் மேல் பெறக் கூடாது என்று கூறுகிறீர்களே நாங்கள் எதை பின்பற்றுவது? எனக் கேட்கிறார்.ஆடிப்போன உமர்[ரலி] அவர்கள், இந்த பெண் குரான் சட்டத்தை கூறிவிட்டார். அதனால் நான் கூறிய நானூறு திர்கம் என்பது கிடையாது என்று அந்த மேடையிலேயே அறிவிக்கிறார். இது வன்றோ ஜனநாயகம்| இதுவன்றோ பெண்ணுரிமை| அவர் எம்.எல்.ஏ.வும் கிடையாது .எம்.பி.யும் கிடையாது.ஆனால் நியாயம் கேட்கிறார்.இது போன்று ஒரு ஜன நாயகத்தை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் காணமுடியாது.>>>[சோஷலிச காலத்து ரஷ்யாவில் ]      அரசியல் விவகாரங்களில் ஆணுக்கு சமமாக அமர்ந்து விவாதிக்கும் அளவுக்கு பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட்டிருந்தது.]<<< நீங்கள் கூறும் சம உரிமையை இந்த சம்பவம் விஞ்சி நிற்கிறதே |  


>>>கணவன் அழைத்து மனைவி மறுத்தால் அவளை விடியும்வரை வானவர்கள் சபிக்கின்றனர். பெண்கள் தங்கள் அழகை கணவனிடம் மட்டுமே காண்பிக்கவேண்டும் போன்ற ஒழுக்க விதிகளின் பின்னே மறைந்திருப்பது, பெண் என்பவள் ஆணுக்கான ஒரு பொருள் என்பதன் வெளிப்பாடுதான்<<<. 
உடற்கூறு ரீதியாக ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்வு அடக்கியாள்வதில் வித்தியாசம் உண்டு.அவன் அழைக்கும்போது அவள் உடன்படவில்லை என்றால் அவன் உணர்வுகள் அவனை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி விடக் கூடாது என்பதில் இஸ்லாம் கவனம் செலுத்துகிறது.அவள் அழகை மற்றவர்கள் காணக்கூடாது என்பது மற்றவர்களை பொறுத்தவரை அவள் ;'மனுசி' .யாக இருக்கவேண்டும் .கணவனின் காமத்தை இவள் தீர்பபவளாகவும் இவள் காமத்தை கணவன் தீர்ப்பவனாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஒழுக்க விதிகள் ,ஆணை யும் அடுத்த பெண்ணை இயல்பாக அன்றி மறுமுறை பார்க்காதீர்கள் என்றுதான் இஸ்லாம் சொல்லுகிறது.இதில் ஆணாதிக்கமும் இல்லை. பெண்ணாதிக்கமும் இல்லை.
மேலும் பாலியல் வன்முறையில் ஆணாதிக்கம் இருக்க காரணம் ,ஒரு பெண்ணுக்கு பாலியல் தேவை ஏற்படும்போது அவளுக்கு தேவையான ஆண் இலகுவாக கிடைத்துவிடுவான் .இதனால் வன்முறைக்கு வழி இல்லை.ஆனால் ஒரு ஆணுககு பாலியல் தேவை ஏற்படும்போது பெண் கிடைப்பது அரிது ,இதனால் இயற்கையில் பெண்ணைவிட உடல் சார்ந்த பலம் பெற்ற அவன் வன்முறையில் இறங்குகிறான்.இங்கே ஆணாதிக்கம் இல்லை. பெண்ணும் கிடைக்கும் வாய்ப்பு ஆணுககு கிடைக்காதபோது அவன் நிலைகுலைந்து விடுகிறான் .இப்படி பட்டவனை தண்டனை கொடுத்துத்தான் திருத்த முடியும் என்பது வரலாறு கண்ட உண்மை.மன நிலை மாற்றி திருத்திவிடுவோம் என்பதுகாகிதத்தில் எழுதப்படும் தத்துவம் 
இன்சா அல்லாஹ் தொடரும் 
ள் இருக்கவே செய்யும்.ஆனால் பெண்களோ மாதவிடாய் நிறுத்தத்திற்கு பிறகு காம உணர்வுகளை படிப்படியாக இழந்துவிடுகிறாள்.மேலும் பல பெண்கள் குடும்ப பிரச்சனைகளில் அதிகம் கவனம் செலுத்தும்போது பாலியல்தேவைகள் அவசியம் இல்லாமற் போய்விடுகிறது.ஆண்கள் மற்ற பெண்களை தேடுகிறான்.கிடைக்காதபோது வன்முறை வழிவகுக்கிறது.இஸ்லாமோ இரண்டாவது திருமணம் பண்ணுமாறு அழகான வழிகாட்டுகிறது.
         >>>கம்யூனிசம் கூறும் தீர்வு சமூகத்திலிருந்து ஆணாதிக்கத்தையும், தனியுடமையையும் நீக்க வேண்டும் என்பதே. அப்படி நீக்காதவரை பாலியல் வரம்புமீறல்கள் தொடரும்.<<<
>>> சமூக நடைமுறைகளில் நடப்பு காலத்தை விட அதிக பங்களிப்பை பெண்கள் செய்த சோசலிச காலத்தில் நடப்பு காலத்தைவிட பாலியல் குற்றங்கள் குறைவாகவே நடந்தன. சட்டங்கள் மூலம் பாலியல் குற்றங்களுக்கான தண்டனை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீர்வு அது சட்டங்கள் மூலம் ஏற்பட முடியாது.<<<;        
தோற்றுப்போன காணாமல் போன சோஷலிச ஆட்சியில் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப சட்டங்களை, நடைமுறைகளை வகுத்துக்கொண்டு ஆட்சி செய்தபோதும் அந்த சட்டங்கள் மூலம் தீர்வு ஏற்படவில்லை என்கிறீர்கள்.பாலியல் குற்றங்கள் குறைவாக இருந்தன என்பது உங்கள் கருத்து.கம்யுனிசத்திர்க்கான பாதையாம் சோசலிசத்தின் கதையே இதுவென்றால் சோஷலிச பாலமே உடைந்து விட்டது.எத்தனையோ ஆண்டுகள் போராடி கொண்டு வந்த பாதையை இழந்து விட்ட நீங்கள் இனி புது பாதை அமைத்து ,கம்யுனிச தீவை அடைந்து தனிஉடமையை நிலை நாட்டி இல்லாத ஆணாதிக்கத்தை ஒழித்து பாலியல் வன்முறைகளுக்கு தீர்வு காணப் போகிறீர்களா? இந்த நிலைபாட்டைத்தான் ஏட்டு சுரைக்காய் என்றேன்.
  >.>.>குற்ற நிகழ்வின் அடிப்படையாக இருக்கும் குற்றத்திற்கான சமூகத்தேவையை இல்லாமல் செய்துவிட்டால் சட்டங்களின் தேவையின்றியே குற்றத்தன்மை நீங்கிவிடும்.<<<;                                                                            இது ஏட்டு சுரைக்காயிலும் எட்டாத சுரைக்காய்.                                                                                                                                >>.>;ஒரு குற்ற நிகழ்வில் ஒரு மனிதனின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பாடாதவரை சட்டங்களால் ஒரு பலனும் இல்லை<,<,<திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் ,,,,,,,,,என்ற சினிமபாட்டைப்போல் நீங்களும் கதை சொல்லுவதை விட்டு யதார்த்தத்தை எழுதுங்கள் .
.>>>.பாலியல் வன்முறைகள் நடக்கத்தான் செய்கின்றன. நான் கூறவந்தது ஆடை இல்லை என்பதால் அங்கு[பழங்குடியினரிடம்] பாலியல் குற்றங்கள் நடக்கவில்லை என்பதுதான். ,<<<;
உங்கள் ஒப்பீடே தவறு என்பதுதான் என்னுடைய கருத்து. நவீனத்தின் உச்சகட்டத்திற்கு வந்துவிட்டமோ என்ற நிலையில் வாழும் மக்களை ,பழங்குடிகளோடு ஒப்பிடுவது எங்ஙனம் சரி?சம சூழ்நிலையில் வாழ் வோரைத்தான் ஒப்பிடவேண்டும் .பழங்குடி மக்களையும் பழங்குடி முஸ்லிம்கள் இருந்தால் அவர்களையும் வேண்டுமானால் ஒப்பிட்டு பாருங்கள்.  
..
>>>இதையே சுதந்திரமான பாலியல் உறவுள்ள ஒரு சமூகத்திலிருக்கும் ஆணுக்கு கொண்டு சென்றால் ஒரே மாதிரியான ஆடை குறைந்த பெண்களிடம் ஒரே மாதிரியான காம உணர்வு ...........................பாலியல் உறவுகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டே அவனின் காம உணர்வுகள் கிளர்கின்றன<,<<;நான் சொல்லுகிறேன் .அவன் முன் நிற்கும் இரண்டுமே அந்நிய பெண்கள் என்று வைத்துக் கொள்வோம் .அந்த  பெண்களில் ஒருவர் புர்கா அணிந்திருக்கிறாள் மற்றவள் பீச் வாலிபால் உடை அணிந்திருக்கிறாள் அவன் காம உணர்வு யாரிடம் ஏற்படும்? நிச்சயமாக பீச் வாலிபாலிடமே அவன் வாலிபம் மோதும்..புர்கா பெண்ணிடம் அவனுக்கு கண்ணியமே ஏற்படும்
   >>> .பழங்குடியினர் விசயத்திலும், இருவேறு பெண்களிடம் ஒரு ஆணுக்கு ஏற்படும் காம உணர்விலும், பெண் மேலதிகாரியுடன் இருக்கும் ஆண் விசயத்திலும் ......................................ஆணாதிக்கமும், தனியுடமையும் அடிப்படையாக இருக்கிறது. இதை மறுக்க முடியுமா உங்களால்?<<<
 பழங்குடியினரை பற்றியும்  ,இருவேறு பெண்களிடமும் ஒரு ஆணுககு ஏற்படும் காம உணர்வு ஆடைகளின் அடிப்படையில்தான் என்பதையும்   மேலே கூறியுள்ளேன்.பெண் மேலதிகாரியுடன் இருக்கும் ஆண் விசயத்தில் ஆடை காரணம் அல்ல.மூன்றாவது நபரான சைத்தான்தான் முறைகேடாக சுகிக்கவும், ,தப்பிக்கும் வாய்ப்பையும்,பொருத்தமான சந்தர்ப்பத்தையும் சிந்திக்க வைக்கிறான்.,
ஒரு   வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். நீங்கள் வர்க்க பேதங்களை நீக்கிய சமுதாயத்தை உருவாக்கிவிட்டாலும் கூட மனிதனின் உணர்வு பேதங்களை நீக்கிவிட முடியாது பாலியல் தேவைக்கான மனித உணர்வுகள் கட்டுக்கு அடங்காத ஒன்று.ஒரு மனிதன் கையளவு  உம்மி அள்ளும பலம் இருக்கும் வரை அவனிடம் காம உணர்வுக