செவ்வாய், 4 ஜூன், 2013

மார்க்க உயிரோட்டமுள்ள ஏகத்துவ பள்ளிவாசல்

ஆறாம்பண்ணையில் மார்க்க உயிரோட்டமுள்ள ஏகத்துவ பள்ளிவாசல் .
அல்லா என்ன சொன்னானோ அதை மட்டுமே செயல்படுத்தும் பள்ளிவாசல் .
முகம்மது நபி [ஸல்] அவர்கள் என்ன கற்று தந்தார்களோ அதை மட்டுமே நடைமுறைப் படுத்தும் பள்ளிவாசல்
40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் முதல் கட்ட கட்டிட பணியை ,வசூலாகியுள்ள 4 லட்ச ரூபாயில் துவங்கப் பட்டுள்ளது .
இதுவரை இளைஞர்கள் 25000/=ரூபாய் மதிப்பில் சொந்த உழைப்பில் மணல் கொடுத்துள்ளார்கள் .மேலும் கையாள்களை சம்பளத்தை குறைக்கும் முகமாக வேலைகளையும் செய்து வருகிறார்கள் .
இறையருளால் இந்த பள்ளிவாசல் நமது உழைப்பிலும் நமது காசிலுமே கட்டப்பட வேண்டும் .வசூலுக்காக வெளியூர் செல்லுவது தவிர்க்கப் படவேண்டும் .
நமது ஒவ்வொரு தேவைகளுக்காக நாம் பணத்தை சேமிப்பது போன்று ,
நமது கடமைகளை நிறைவேற்ற நமக்கு பள்ளிவாசல் தேவை.அந்த தேவையையும் ,நமது வீட்டுக்கு லேப்டாப் வாங்க பணம் ஒதுக்குவது போல ,எல்சிடி வாங்குவது போல மனைவி மகள்களுக்கு நகை வாங்குவது போன்று ,வீட்டிற்கு தேவையான பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு பணம் ஒதுக்குவது போன்று ,பள்ளிவாசல் கட்டுவதையும் நமது சொந்த தேவை என்பதை உணர்ந்து ,நாம் ஒவ்வொருவரும் 25000ரூபாய் முதல் 1லட்ச ரூபாய் வரை அள்ளி கொடுத்து நமது பள்ளிவாசலை நாமே கட்டி முடிக்க உறுதி கொள்வோம் .இறைவனிடம் வேண்டுவோம்