செவ்வாய், 28 செப்டம்பர், 2010

விவாதத்திற்கு அழைத்த சிறை வாசிகளிடம் ஆதாரத்தை கேட்டு
தட்டி கழிக்க பார்க்கும் விவாதப்புலிகளே!நீங்கள் இந்திய தவ்ஹீத்
ஜமாத்தை இழுப்பதேன்?

இது வரைக்கும் ஆதாரம் வாங்கித்தான்
விவாதத்திற்கு சென்றீர்களா?ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி
'இறைவனுக்கு உருவம் இல்லை' என்று ஆதாரங்களை
சமர்பித்த பின் தான் விவாதத்திற்கு ஒப்பு கொண்டீர்களா?


பாக்கர் விசயத்தில் ஆதாரம் கேட்டதற்கு விவாதத்திற்கு வா
நிரூபிக்கிறோம் என்றீர்கள்! இப்போது ஆதாரம் தந்தால் தான்
விவாதம் என சொல்ல வெட்கமில்லையா ? உங்களுக்கு நீங்களே
முரண்பட்டு ஏன் பொய்யர்கள் என்பதை மீண்டும் மீண்டும்
நிருபிகின்றீர்கள்?

இதில்
'ஆண்மையாளர்களாக இருந்தால்'
என
சவால் வேறு! அப்துல் ரஹீம் சவாலை ஏற்று முதலில் 'அதை'
நீங்கள் நிருபியுங்கள் ! யார் யார் கூடி ,உங்களை கொல்ல,
எங்கு சதி செய்தனர்? என நீங்கள் ஆதாரத்தை தந்து நிருபியுங்கள்!                                                                                                         
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ,,,,,                                                                                              அன்புச்சகோதரர் செங்கிஸ்கானுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் .                உங்கள் தலைவர் இரு பக்கமும் நல்லவராக நடித்துள்ளாரே ,பிறகு அவருடைய சுயரூபம் வெளி கொண்டு வரவேண்டாமா?சிறையில் சிலர் தாக்கினார்கள் என்று பேட்டி கொடுத்ததிலே அவர் எப்படிபட்டவர் தென்பது புரியவில்லையா?                                                                     குமுதம் ரிப்போர்ட்டரில் பீ.ஜே யின் மைத்துனர்தான் ஹாஜிமுஹம்மதை சிதம்பரத்தில் சரணடைய வைத்தார் என்று கூறியதாலும்  இருக்கலாம்.                
ஷேக் அப்துல்லா ஜமாலியிடம் அவர் வீட்டு விசயமாகவா விவாதம் நடந்து வருகிறது.?   மார்க்க விவாதத்திற்கு குரானும் ஹதீத்களும் இருக்கின்றன. இதில் விவாதம் செய்வோர் சம்பந்தப்பட்ட பொருளுக்கு ஆதாரமாக குர்-ஆனிலும் ஹதீத்களிலும் ஆதாரம் எடுத்துக்கொள்ளாலாம்.குர்-ஆன் ஹதீத்கள் வட்டத்திற்குள் வாதாடும்போது அவை நம்மிடமே இருக்கும்போது யாரும் யாரிடம் கேட்கவேண்டிய அவசியமில்லை.இதை உங்களால் புரியமுடிய வில்லையா?                                                                                                                            
!                                                                                                  
பாக்கர் விசயத்தில் ஆதாரம் கேட்டீர்களா? பாக்கர் விசயத்தில் ஆதாரமா ? இதற்கல்லவா வெட்கப்பட்டிருக்கவேண்டும்? நாடறிந்த இயக்கம் ,அதன் பொதுசெயலாளர் மற்றும் அழைப்பாளார் என்று பொறுப்பை வைத்துகொண்டு ஒரு அந்நிய பெண்ணை மடியில் சாயிந்த நிலையில் பனிரண்டு மணி நேரம் பயணம் செய்ததை பலர் முன்னிலையில் ஒப்புக்கொண்டு பின் அதை லட்ச கணக்கான மக்கள் வீடியோவில் பார்த்த பின் ஆதாரம் வேறு கேட்டோம் என்று சொல்வதற்கு நாகூசவில்லையா? "யாரும் அறியாத ,நிலையில் விபச்சாரம் செய்த ஒருவர் நபி[ஸல்] அவர்களிடம் வந்து இறைவன் பார்த்தவனாக இருக்கிறான் என்ற நம்பிக்கையில் தனது குற்றத்திற்கு தண்டனைகேட்ட நபிதோலர்களின் வரலாற்றினை மக்களுக்கு எடுத்துசொல்லும் நிலையில் உள்ள நாம் இத்தனை கையும் களவு மாக மாட்டிய பிறகாவது கவரிமானாக உயிரிழக்க வேண்டாம்.பொதுசெயலாளர் பதவியை ராஜினாமா செய்திருக்கவேன்டாமா? களியாக்க விளையில் மார்க்க விவாதத்தில் சிரமம் எடுத்துவந்து விவாதத்தை உன்னிப்பாக கவனித்த அதேவேளையில் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்ற டென்சனுடன்  அரங்குக்குள் இருக்க உங்களது தலைவர் டீனேஜ் பையனைப்போல் திற்பரப்பு அருவியில் குளித்தகையோடு கணவன் விவாத அரங்குக்குள் இருக்கிறார் என்றுதெரிந்து கொண்டு ஒரு பெண்ணை  சந்திக்க செல்வதற்கு எத்தனை துணிச்சல்? சினிமாககாரனை மிஞ்சிய செயல் அல்லவா? அந்த சமயத்தில் விஷயம் கசிந்திருந்தால் விவாத மேடை நாறியுருக்காதா? திருச்சி செயற்குழுவில் மீண்டும் அவரை  பொ.செ. ஆக்கினார் களே அப்போது நபித்தோழரின் ஞாபகம் வந்து உள்ளம் கூனிகுருகி இருக்கவேண்டாமா? அப்பதவி தனக்கு வேண்டாம் என்று சொல்லியிருந்தால் அவரை மானமுள்ள மனிதராக ஏற்று கொள்ளலாம்.ஆனால் பீடுநடை போட்டல்லாவா மேடை ஏறினார்.கழிசடை அரசியல்வாதிகள் கூட இவரை தலைவராக ஏற்றுகொள்ள தயங்குவான். பாக்கர் சம்பவத்திற்கும் சிறைவாசிகள் விசயத்திற்கும் நிறையவே வேறுபாடுகள் உண்டு.சிறைவாசிகள் குற்ற சாட்டையும் அதற்க்கான ஆதாரங்களையும் வைத்தால் ,அதை அடிப்படையாகவைத்துத்தான் விவாதம் பண்ண முடியும்.அங்கே தவறான ஆதாரங்கள் வைக்கப்பட்டால் அதை தவறு என்று நிருபிக்க அங்கிருந்து எதைத்தேட முடியும்? ஒரு குறிப்பிட்ட நாளில் இன்னாரை சந்தித்து இவ்வாறு கூறினீர்கள் என்று குற்றச்சாட்டை வைத்தால் அந்நாளில் பீ.ஜே.யாரையும் சந்திக்கவில்லை இந்த ஊரில் இருந்தேன் என்று எவ்வாறு நிருபிக்கமுடியும்? சிறைவாசிகள் ,காட்டிகொடுத்ததர்க்கான ஆதாரத்தை கொடுத்தால், பீ.ஜே கொல்லுவதற்கான சதித்திட்டத்தை அவர் ஆதாரமாக கொடுப்பார்.பீ.ஜே வின் ஆண்மைபற்றி நீங்கள் சதேகபடுவது தவறு.சிறை வாசிகளை  தயவு செய்து உசுப்பிவிட்டு அவர்களை சிறைக்கு அனுப்பிவிட்டு நீங்களும் உங்கள் பிள்ளை குட்டிகளும் ஏசிவாசிகாளாக இருக்க நினைக்காதீர்கள்.அன்பார்ந்த கனவான்களே அவர்கள் தொழில் செய்யவும் அவர்களின் குழைந்தைகள் கல்வி கற்கவும் உறுதுணையாக இருங்கள்.