செவ்வாய், 22 நவம்பர், 2011


செந்தோழன் மறுப்பும் எனது பதிலும்


  1. செந்தோழன்நவம்பர் 20, 2011 இல் 10:25 பிற்பகல் #
    இப்ராஹிம் அண்ணே ! ஏண்ணே கோபப்படுறீங்க நம்ம 2 பண்டிகையும் ஏழைகளை கவனத்தில் கொண்டே கொண்டாடப்படுகிறது என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.ஆனா ஏங்கூட சேர்கிற பயபுள்ள( மாற்று மதத்தவர்) என்ன சொல்றார்ன்ன இதையேதான் நாங்களும் கோவில்ல அறுத்து செய்கிறோம்.அப்படின்னா 2 மதமும் ஒன்றுதானே என்கிறான்.இப்போ ஹஜ் வழிபாட எடுத்துக்கொள்ளுங்கள் இங்கிருந்து அங்கேபோய் கல் கட்டிடத்தைசுற்றி வாராங்க,மொட்டை போடுறாங்க,புனிதநீருன்னு (ஜம்ஜம் தண்ணீர்) சொல்றாங்க,அப்புறம் அறிவியலின் உச்சகட்டமாம் சைத்தானை (நரபலியை தடுத்த நல்ல மனிதரை)கல்லவுட்டு எரிவது இதுதானே ஹஜ் யாத்திரை.இதைத்தான் இங்குள்ள இந்து மதத்திலும் செய்றாங்க அதுமட்டும் மூடநம்பிக்கை அப்படின்னு சொல்றோம்.எண்ணாண்ணே! இதுக்கு விளக்கம் சொல்லுங்கண்ணே எனக்கு ஒன்னும் புரியமாட்டேங்குது.எனக்கும் இது சரின்னுதான்படுது. ஓரே அறிவியல்,விஞ்ஞானம்னு படுச்சு பார்க்கும்போது கம்யூனிசம் சொல்றது சரின்னுபடுது இஸ்லாத்தில வருசத்தில் 5 நாள் மட்டும் ஏழைகளை கவனிக்கிறோம்(மற்ற நேரம் அவன் எக்கேடும் கெட்டுபோகிறான் ) ஆனால் கம்யூனிசத்தில் ஏழைகளே இருக்கக்கூடாதுன்னு சொல்றாங்க அப்போ எதுண்ணே சரியானது? ஏழையை இல்லாமல் ஒழிக்க அல்லாகிட்ட ஆயுதம் இல்லையா? ஆனால் கம்யூனிசத்தில் ஏழ்மையை ஒழிக்கும் அந்த ஆயுதம் இருக்குண்ணே. அல்லா தன் தூதர் இப்ராஹிமிடம் எனக்காக உன் குழந்தையை அறுத்து நரபலியிடு என்று கட்டளையிடுபவன் எப்படி கருணையாளனாய் இருக்கமுடியும்.(மதம் அன்பை போதிக்கிறதாம் எந்த முட்டாள் சொன்னான்) அப்போ இங்கே பூசாரி குழந்தையை கடத்திக்கொண்டு போய் கருணையே இல்லாமல் கடவுளின் பெயரால் நரபலி கொடுக்கின்றானே! அப்போ 2 மதமும் செய்றதுக்கு பெயர் தியாகமாண்ணே ! அப்போ உங்க அகராதியில தியாகம்ன்னா பெத்த புள்ளய போட்டு ஈவுயிரக்கமில்லாமல் கழுத்த அறுக்கிறதானா ? அண்ணே !சோமாலியா, சோமாலியான்னு ஒரு நாடு இருக்கு அல்லாஹ்வுக்கு தெரியுமான்னு கேளுங்க அங்கே சோறு தண்ணி இல்லாமல் பயபுள்ளைங்க சாகுறாங்க அல்லா எப்போ வருவான் எப்போ வருவாருன்னு கேட்டுக்கொண்டே இருக்கிறாங்க அங்குள்ள மக்கள்.நீங்க துஆ (செல்போன்) மூலமா செய்தியை சொல்லி அல்லாவை அங்கே ஒரு விசிட் போய்ட்டு வர சொல்லுங்கண்ணே! என்ன செய்றது அந்த நாட்டையும் அல்லாதான் படைத்திருப்பான் என்ன செய்ய பல வேலைகள் இருப்பதால் மறந்திருப்பான் நீங்கள் கண்டிப்பாக ஞாபகப்படுத்திடுங்கள். பசியோடுயிருக்கும் ஏழை மக்கள் மத்தியில் இப்ராஹிம் அண்ணன் குர் ஆன் ஹதீஸை படித்து விளக்கி பயான் செய்கிறார். இப்ராஹிம் ; கல்லில்யிருக்கும் தேரைக்கும் அல்லாவே உணவளிப்பவன். ஏழை ;எவண்டா அவன் இங்கே மனுசன் சோறு தண்ணியில்லாம தவிக்கிறான் அல்லா புடுங்கினாறாம்.எங்க ஏழ்மையை கேலி செய்யவா வந்திருக்க ஏய் !இவனை கல்லால் அடித்து வெரட்டுங்கடா………….!

    • S.Ibrahimநவம்பர் 21, 2011 இல் 10:20 மு.பகல் #
      ///ஏழை ;எவண்டா அவன் இங்கே மனுசன் சோறு தண்ணியில்லாம தவிக்கிறான் அல்லா புடுங்கினாறாம்.எங்க ஏழ்மையை கேலி செய்யவா வந்திருக்க ஏய் !இவனை கல்லால் அடித்து வெரட்டுங்கடா………….!////
      ஏழைகளே ,இப்படி உத்தரவு போட்டு ஏமாற்றுபவர் எங்கே இருக்கிறார் தெரியுமா?இவர் உங்களுடன் எத்தனை நாட்கள் பட்டினியாக கிடந்தார் என்று தெரியுமா? ஏழைகள் உணவில்லாமல் இருக்கிறார்கள் அதனால் ஒருநாள் கூட வயிறு புடைக்க சாப்பிட மாட்டேன் என்று இருந்தது உண்டா? என்று இவரிடம் கேளுங்கள். இவர் எங்கேயோ கார்பொரேட் கம்பெனியில் வேலை பார்த்துக்கோ கொண்டு ,கொளுத்த தீனிகளை வயிற்றில் திணித்துக் கொண்டு கம்யுனிச நாடகத்தில் ஆட்டம் போடும் சோமாறி யாக இருப்பார். உழைப்பை பற்றி பேசும் அண்ணன் செங்கொடி தனது பெயரை மாற்ற எவ்வளவு கஷ்டப் படவேண்டும் என்பதை பக்கம் பக்கமாக எழுதுகிறார்.இவர்களுக்கு எல்லாம் பாமர மக்கள் உணவுக்காக ,அரசு சலுகைகளுக்காகக் என்ன பாடுபடுகிறார்கள் என்பது கடுகலவாது தெரியுமா?என்னவோ கீ போர்டில் தட்டிவிட்டால் ஏழைகளோடு உராவாடுவது போல் காட்டிக் கொள்கிறார்கள்.

      • செந்தோழன் ,நீங்கள் சிவப்பு மயமாக பெயர்களை வைத்துக் கொள்வது ,சிவப்பு உடைகள் அணிவது,இதற்கும் பொதுவுடமை கொள்கைக்கும் என்ன தொடர்போ ,அது போன்றே ஹஜ் கிரியைகளும் ,.தனி ஒரு மனிதனாக என்று ஏக இறை கொள்கையை நிலை நாட்ட போரிட்ட இப்ராஹீம் நபி[அலை]அவர்களின் தியாக உணர்வுகளை நினைவு கூறும் வண்ணமாக,நடை பெரும் செயல்பாடுகளைத்த தவிர அதில் கட்டாய கடமைகள் இல்லை.அது போன்றே ஜம்ஜம் நீர் புனிதமாக கருதப் படவில்லை.ஆனால் அதன் அற்புதமும் மகிமையுமே போற்றப்படுகிறது.25 லட்சம் மக்கள் கூடும் நாட்களில் அனைத்து மக்களுக்கும் தலா 20௦ லட்டர் ஒரு கிணற்றிலிருந்து கிடைக்கச்செயகிறது என்றால் அதன் அற்புதத்தை மறைக்கமுடியுமா?
        மேலும் இஸ்லாத்தில் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ஏழைகளை கவனிக்கவில்லை.இரு இரு பெருநாட்களையும் குறிபிட்டது ஏன் என்றால் எங்களது மகிழ்ச்சிகரமான நாட்களும் ஏழைகளின் மகிழ்ச்சியில் பகிர்ந்து கொள்வதே .நாங்கள் கீபோர்டில் உட்கார்ந்து கொண்டு ஏழைகளைப் பற்றி பேசவில்லை.ஏழைகளின் வாசல் தேடி உதவி செய்கிறோம் என்பது கலை நிகழ்ச்சி காணும் கம்யுனிஸ்ட் களுக்கு தெரிய நியாயமில்லை. இன்னும் பிச்சைகாரர்கள் பிச்சை எடுக்க தேர்ந்தெடுத்த நாளை பார்த்தீர்களா? வெள்ளிகிழமை என்னும் ஜும்மா நாளில். சக்காத்,சதக்கா ,போன்ற கடமைகள்,அடுத்த வீட்டுக்காரன் பசித்திருக்க நீ வயிற்றை நிரப்பாதே போன்ற நபிமொழிகள் ஏழைகளின் மீது இஸ்லாம் காட்டும் அக்கறையை வெளிப்படுத்தும்.எங்களது பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு பெரும் செல்வந்தர் தனது வருட “ஏழைவரி” என்னும் சக்காத்தை வருடம் தோறும் தனது உறவு,மற்றும் ஊரை சேர்ந்த [சுமார்ஐந்து லட்ச ரூபாய்] ஒரே நபருக்கு கொடுத்து அவர்கள் அதன் மூலம் வியாபாரம் செய்து முன்னேற வழிவகுக்கிறார்.இது போன்று இரண்டு கோடி ரூபாய் சக்காது கொடுக்கும் செல்வந்தர்களை நான் அறிவேன் என்றும் அந்த மக்களின் சக்காதை முறைப்படுத்தினால் ஏழைகள் இல்லாமற் செய்துவிடலாம் என்று முன்பு ஒரு மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த ஒருவர் இப்போது தமிழ்நாடு தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி ஒரு நிகழ்ச்சயில் கூறியதை இங்கு நினைவு கூறுகிறேன்.கம்யுனிசம் ஏழைகளை இல்லாமற் செய்யுமா?அல்லது இன்னும் ஏழைகளை அதிகரிக்க செய்யுமா?என்று ரஷ்யாவில் சென்று பார்த்து வந்தால்தான் தெரியும்.பெயர் மாற்றம் செய்யவே உழைக்காதவர்கள் ,இது போன்று விசயங்களில் அரசு சலுகைகள் பெற ஏழை மக்கள் படும் அவஸ்தைகளை நேரில் கண்டு அனுபவித்து பார்க்க ,பகிர்ந்து கொள்ள சங்கடப் படுபவர்கள குளிர் சாதன அறையிலிருந்து கொண்டு கீ போர்டில் ஏழைகளை இல்லாமற் செய்வோம் என்று தட்டுவது போன்ற காரியங்களை இஸ்லாம் செய்ய வில்லை.கலை நிகழ்ச்சயில் ஏழைகளாக நடித்தும் காட்டுவதிலும் இஸ்லாம் ஏழை உபகார நிகழ்ச்சியாக்கவில்லை. கிறித்தவர்கள் ஏழை நோயாளிகளை கவனித்தது போன்று உங்களது கம்யுனிச காம்ரேடுகள் செயல் பாட்டினை எங்காவது என்றாவது நடத்தியதாக கூற முடியுமா?
        தனது மகனை சில சமயங்களில் உன்னை கொன்னுடுவேன் என்று சொன்னால் அந்த தாய் பெற்ற பிள்ளையை நரபலி கேட்கிறார் என்று செந்தோழன் பொருள் கொள்வாரா என்ன ?
        ///பசியோடுயிருக்கும் ஏழை மக்கள் மத்தியில் இப்ராஹிம் அண்ணன் குர் ஆன் ஹதீஸை படித்து விளக்கி பயான் செய்கிறார். ///
        நீங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு ரஷ்யாவைப் பற்றி சொல்லாதீர்கள் .இந்தியாவில் மாதம் இப்பொது இருபது கிலோ அரிசி இலவசமாக கிடைக்கிறது .ஆகவே இங்கே யாரும் பசியோடு இருக்கவில்லை.ஏழைகளை அணைத்துக் கொண்டு பணக்காரர்கள் மத்தியில் வியர்வை உலருமுன் உழைப்பவர்களின் கூலியை நியாயமான முறையில் கொடுத்துவிடுங்கள் என்ற குர்ஆன் ஹதிதையே பயான் பண்ணிக் கொண்டிருக்கிறோம் .எங்களின் பயானின் பயன் ஏழைமக்களுக்கு தெரியும்