வெள்ளி, 31 டிசம்பர், 2010

முஹம்மது நபி[ஸல்] அவர்களே அழகிய முன்மாதிரி

செங்கொடி 
///முகம்மது இறந்து சற்றேறக்குறைய நூறிலிருந்து நூற்றைம்பது ஆண்டுகள் கழித்துத் தான் ஹதீஸ்களின் தேவை எழுகிறது///
இஸ்லாத்தை படித்துவிட்டு நீங்கள் இஸ்லாத்தைப்பற்றி எழுதுவதாக துவக்கத்திக் கூறியுள்ளீர்கள்.ஆனால் ஹதீத்கள் பற்றி மேல் குறிப்பிட்ட கருத்துக்கள் முதல் பல கருத்துக்கள் உங்களை அறை வேக்காடு என்பதை படம் பிடித்து காட்டுன்கின்றன.முஹாம்மது நபி[ஸல்]அவர்கள் காலத்திலே எந்த ஒரு உலக விசயங்களும் நபி[ஸல்] அவர்களின் அறிவுரைகளை கேட்டே செய்துள்ளனர்.அவர்களை சந்திக்க முடியாத தூரத்தில் இருந்தவர்கள் கூட அவர்களை சந்தித்தும்,அல்லது உற்ற தோழர்களிடமும் நபி[ஸல்] கருத்துக் களின் அடிப் படையிலேயே செயல் பட்டனர்.நபி[ஸல்] காலத்திற்கு பின்னும் நபிதோழர்கள் தங்களின் வாழ்க்கை தேவைக்கான நபி[ஸல்] சொல்,செயல்,அங்கீகாரங்களை பற்றி நன்றாக மனனம் செய்த அறிஞர்களிடம் கேட்டு தெரிந்து அதன் அடிப்படையில்  செயல் பட்டனர்.அவர்கள் மனனம் செய்வதில் தேர்ச்சி பெற்று இருந்தனர்.இன்னும் எழுத தெரிந்தவர்கள் தாங்கள் அறிந்த ஹதீத்களை தொகுப்பாக  இல்லாமல் எழுதி வைத்தனர்.சிலர் எழுதுவதால் மனன சக்தி குறைந்துவிடும் என்பதால் எழுதிவைப்பதை தவிர்த்தனர்.எனக்கு கூட செல் போன் உபோயோகிக்காத காலத்தில் சுமார் இருநூறு நம்பர்கள் ஞாபஹத்தில் இருந்தன.செல்போன் மெமரி பயன்படுத்திய பிறகு எனது நம்பரே சில சமயங்களில் மறந்துவிடுகிறது.ஷுஹ்ரி  இமாம் போன்றோர் முறைப்படி தொகுக்காமல் அதிகமான ஹதித்களை எழுதி வைத்திருந்தார்.இஸ்லாத்தை ஒழித்துவிடலாம் என எதிர்த்து பின் இஸ்லாத்தில் இணைந்த யூதர்கள் உட்பட சிலர் மக்களிடம் நபி[ஸல்] சொல்களுக்கு இருந்த செல்வாக்கை அறிந்து நபி[ஸல்] பெயரிலே தங்களது சொந்த கருத்துக்களை மக்கள் மத்தியில் உலவ விட்டனர்.ஆனாலும் ஹாதீத்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் ,ஒரு ஹதீதை கேட்கும்போது நபி[ஸல்] அவர்களிடம் அதை முதலில் கேட்டது யார் ,முதல் தனது அறிவுக்கு எட்டும் வரை உள்ள நபர்களையும் மனனம் செய்தனர். அப்துல்லா இப்னு சபா போன்ற யூதர்   ஷீ ஆ க்களுக்கு ஆதரவாக பல பொய்யான ஹதீத்களை பரப்பியவன் ஆவான்.இமாம் மாலிக் ,இமாம் ஷாபி ,இமாம் ஹம்பல் ஆகியோர் ஹதிகளை முறைப்படி தொகுக்க ஆரம்பித்தனர். இவர்களில் மாலிக் இமாம் மட்டுமே பாடங்களை தலைப்பிட்டு எழுதியுள்ளார்.மற்ற இமாம்கள் அறிவிப்பாளர்களின் பெயரில் தலைப்பிட்டு எழுதியுள்ளனர். இவர்கள் ஹதீத்களை முறையான ஆய்வுகள் இல்லாமல் பதிவு செய்தனர்.ஹதீத் அறிவிப்பாளர்கள் வரிசையை ரெபரென்ஸ் க்காக கொடுக்கப்படவில்லை.ஒவ்வொரு ஹதீதும் மத்ன்' இஸ்னாது என்று இரு பகுதிகளாக உள்ளன.மத்ன்  என்றால் ஹதீதின் கருத்து பகுதியாகும்..இஸ்னாது என்பது அறிவிப்பாளர்களின் வரிசை பகுதியாகும்.அதன் பின்னரே ஹதீத்களில் நயவஞ்சகர்களின் ஊடுருவல் மக்களுக்கு புரிய வந்தது பின்னர் வந்த புகாரி,முஸ்லிம் ,திர்மிதி,நஸாயி,இப்னுமாஜா ,அஹ்மது போன்ற நூல்களில் ஹதீத்கள் அதன்தரத்துடன் பதிவு செய்தனர்.செவிவழி பதிவு ஆனாலும் அந்த ஹதீத் அவர்களுக்கு எப்படி கிடைத்தது,அவர்கள் கூறும் நபர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதா என்றெல்லாம் ஆய்ந்தறிந்து பதிவு செய்தனர்.இந்த ஆறு நூல்கள் குரானுக்கு அடுத்த இடத்தில் இருந்தன .இமாம் புகாரி அவர்கள் ஒரு நபி வழி செய்தியை ஒருவரிடம் அறிந்து கொள்வதாக இருந்தால் அவரது ஹதீத் அறிவை பரிட்சித்தே பதிவு செய்வது வழக்கம்.ஒருவரிடம் ஹதீதை பெறும்போது ,தன்னிடம் ஏற்கனவே உள்ள ஹதீதின் கருத்தை கூறி அதன் அறிவிப்பாளர் வரிசையை மாடி கூறி சரி காண்பார். சிலரிடம் ஏற்கனவே தெரிந்த ஹதீதின் ராவிகள் வரிசையை சரியாகா கூறி கருத்தை தவறாக கூறியும் சோதித்து பார்ப்பார்.இமாம் அபு ஹனிபா,இமாம் ஷாபி ,இமாம் மாலிக்,இமாம் ஹன்பலி போன்றோர் நபி தோழர்களுக்கு அடுத்த இடத்தில் மதித்து வந்தாலும் அவர்களது நூல்களை விட சிஹாஹ் சித்தா எனப்படும் புகாரி,முஸ்லிம் போன்ற ஆறு கிதப்களே முன்னிலை வகிக்கின்றன.இதை அப்பாசிய காலத்தில் எழுதியதையும் அவைகள் முதன்மையாக ஏற்கப் பட்டதற்கும் மர்மம் தேட ஒன்றும் இல்லை. இந்திரா காலத்தில் கணினிகளில்    அரசு தஸ்தாவேஜுகளை பதிவு செய்யாமல் மன்மோகன் சிங் காலத்தில் கணினிகளில் பதிவு செய்ததற்கு என்ன மர்மமோ அதே மர்மம்தான் அப்பாசிய காலத்தில் பதிவி செய்யப்பட்ட ஹதீத்கள் ஏற்கப் பட்டதற்கு காரணம்.
 ///நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து தொகுக்கத் தொடங்கிய ஹதீஸ்கள் அப்படியே உண்மையானவை என்பதை நீங்கள் தான் மெச்சிக்கொள்ள வேண்டும்.////
ஹதீத்களை மனனம் செய்தவர்கள் ஒவ்வொருவராக மரணம் அடைந்து ,அவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்ததால் பதிவு செய்வதன் அவசியத்தை உணர்ந்த பின் பதிவு செய்ய ஆரம்பித்தனர். செங்கொடியின் ஒப்புதலுக்காக ஹதீத்கள் காத்து கொண்டிருக்கவில்லை.இப்போதும் குர்ஆனை உச்சரிப்பு,பல விதமான அளவுகளில் நீட்டல்,நிறுத்தல் களுடன் மனனம் செய்தவர்கள் முஸ்லிம்கள் வாழும் தெருக் களில் தலா பத்து பேர் இருப்பார்கள்.போன நூற்றாண்டு மனிதர் பற்றி குஜராத் பெஸ்ட்பேக்கரி வழக்கு போல் பல்டிகள்.அப்போது காசு வாங்கிஅப்படி  சொன்னோம் இப்போது காசு வாங்காமல் ? இப்படி சொல்லுகிறோம் ,இனி எப்படி சொல்லுவார்களோ?உங்களது தன மான இரும்பு கோட்டை  தலைவரை பற்றி சரியான வரலாறு இல்லாதவர்கள், மிக துல்லியமாக ,இன்னார் ஞாபக சக்தி குறைவு உள்ளவர்.இன்னாரின் தந்தைக்கும் மகனுக்கும் தொடர்பு இல்லை,இந்த  ஆசிரியரின் காலம் இது அவரின் மாணவர் காலம் இது அதனால் தொடர்புக்கு வாய்ப்பு இருக்கிரது,இன்னார் இத்தனை காலம் வரை நன்றாக இருந்தார்,அதன்பின் மனம் குழம்பியவாராக காணப்பட்டார்,என்றெல்லாம் ஆய்வு செய்ய பட்டது. ஷீ ஆ க்களின் நூல்களில் இது போன்று ஆய்வுகள் இல்லாமல் வெறுமனே சொல்லப்பட்டிருக்கும். 
       /// குரானோடு முரண்படும் ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என நீங்கள் தர்க்கித்து வருகிறீர்கள்/// ஆம் ஹதீத்கள் வடிகட்டுவதர்க்காக எடுக்கப்பட்ட அளவுகளில் குர்ஆன் முரண்பாடு ஒன்று. மற்ற தலைவர்கள் பற்றி அவதூறோ ,குற்ற சாட்டோ மறைக்கப்பட்டிருக்கும்  ஆனால் முகம்மதுநபி[ஸல்] அவர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் பதிவு செய்யப் பட்டு அந்த செய்திகளின் தரம் பற்றியும் குறிப்பிடப் பட்டிருக்கும்.இங்கே செவிவழியில் பதிவு செய்யப் பட்டது போல் முன் காலத்தில் பதிவு செய்யப்பட்டதை ஒரு விசயத்தை உங்களால் கூற முடியுமா?
///காலந்தோறும் கிடைக்கும் புதுப்புது ஆதாரங்களைக் கொண்டு உறுதிப்படுத்தி எழுந்த முடிவுகளை கதைகளைப் போல் தள்ளிவிட முடியாது. ஏனென்றால் பழங்காலத்தைக் கண்டுணர இதைவிட சிறந்த ஆய்வுமுறை உலகில் இல்லை///
இந்த ஆய்வுகளெல்லாம் யூகங்கள் தான்.இப்படித்தான் என்று உறுதியிட்டு கூறமுடியாது.உண்மைகளை i நெருங்க முடியுமே தவிர அதுதான் உண்மை என்று அறுதியிட்டு சொல்ல முடியாது.
. ////நீங்கள் ஆதாரம் கேட்டபோது நூல்களின் பட்டியலையே என்னால் தந்திருக்க ,,,,,,,,,,,,,,,                            ஆய்வாளரின் நூலையும் நீங்கள் படித்துப்பார்க்கலாம்// உங்களுக்கு தமிழ் தெரியும் தானே. இதன் பொருள் என்ன என்பது உங்களுக்கு விளங்கவில்லையா///இல்லை கம்யுனிஸ்ட் நூல்களையே ஆதாரமாக   அதாவது பெண் ஆதிக்க மிக்க சமுதாயமாக பாலியல் குற்றங்கள் நடக்காத சமுதாயமாக வாழ்ந்ததுக்கு ஆதாரம் தாருங்கள் .நானும் அரபியில் கேட்கவில்லை.


முகம்மது ஒரு புதிய சமூக ஒழுங்கை படைக்க விரும்பி தன் மதத்தை பிரச்சாரம் செய்த போது எந்த முன்மாதிரியைக் காட்டினார்?////
முஹம்மது நபி[ஸல்] அவர்களே அழகிய முன்மாதிரியாக திகழ்ந்தார்.அவரை கொலை செய்யவந்தவர் பின்னர் அவர் இறந்தபோது கூட அதை நம்ப முடியாமல் தவித்தார்.உங்களைப் போன்று உலகில் ஒரு வெறுப்பான முகத்தை உலகில் பார்க்கவில்லை என்று சொன்னவர் மூன்றே நாட்களில் முகம்மது[ஸல்]அவர்களின் நடவடிக்கைகளை பார்த்தபின் உங்கள் முகத்தைப் போன்று ஒரு விருப்பமான முகத்தை இனி பார்க்கப் போவதுமில்லை என்றார்.தான் செயல்பட்டவாறு மக்களை செயல் படசொன்னார்.செய்ததையே சொன்னார்;சொன்னதையே செய்தார் என்று வெற்று அரசியல் கோசமில்லாமல் தனது வாழ்க்கையையே அதற்க்கு முன்மாதிரியாக்கினார்..அவையில் அமர்ந்திருக்கும்போது உணவை வலதுபுறமாக வழங்கப் படுவதுதான் வழக்கம்.ஒரு முறை முகம்மதுநபி[ஸல்] அவர்களின் வலப்புறம் ஒரு சிறுவன் இருக்கிறார்.இடப்புறத்தில் அபூபக்கர்,உமர் போன்றோர் இருக்கிறார்கள்.இந்நிலையில் உணவு பரிமாறும் வேளையில் நபி[ஸல்] அவர்கள் வலப்பறம் உள்ள சிறுவரிடம் இடதுபுறம் இருக்கும் பெரியவர்களுக்கு முதலில் உணவை வழங்கட்டுமா?என்று கேட்டார்கள்.அதற்க்கு அந்த சிறுவர் வழக்கப்படி வலதுபுறம் இருக்கும் எனக்குத்தான் முதலில் தர வேண்டும் என்றார்.அவ்வாறே முகம்மது நபி[ஸல்] அவர்கள் செய்தார்கள்.நோன்பு,தொழுகை ,சக்காத் போன்றவற்றை சொல்லாக்கும்போதே செயலாக்கினார்கள்.அவர்கள் சிறு குழுவாக இருக்கும்போதே குர்ஆன் மூலம் வந்த  செய்திகளை  அமல் படுத்தினார்கள். வேருமநேவ் பிரச்சாரம் செய்து குறைந்த பட்சம் மக்காவை கைப்பற்றிய பிறகு அப்போது இருக்கும் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப சட்டம் வகுத்து கொள்ளலாம் என்று பிதற்றி  கொண்டிருக்கவில்லை.இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை செயல்படுத்த இந்திய அரசு அனுமதிக்காத பட்சத்தில் மற்றபடி நாங்கள் இதுவரை எதை இஸ்லாம் என்று சொல்லுகிரமோ அதன்படியே தவ்ஹித் ஜமாஅத் அமைப்பில் செயல்படுத்தி வருகிறோம்.எதையும் மறைக்கவில்லை.ஸ்டாலின் காலத்து ரஷ்யா முன்னேரியதை கண்டு மற்ற நாடுகளெல்லாம் பொதுவுடமையை விரும்பியதாக அறிந்தேன்.நமது தமிழக மக்கள் போல் சிறந்த மக்கள் உலகில் எவரும் இல்லை.எது வெற்றி தருகிறதோ ,எது மகிழ்ச்சி தருகிறதோ அதை மதம் இனம் சாதி,மொழி வேறுபாடு இன்றி உடன் ஏற்றுக் கொள்வார்கள் நீங்களும் மகஇக அளவில் "பெற்றோர் பண்ணை'" "குழந்தைகள் பண்ணை" ஆரம்பித்து உங்களது ஆணாதிக்க ,தனியுடமை ஒழிப்பது மூலம் நீங்கள் அடையும் வெற்றி தமிழகத்தை கவர்ந்து ஒருவேளை நீங்களே முதல்வராகவும் வாய்ப்பு உள்ளது.அதை பார்த்து கேரளா போலி கம்யுனிஸ்ட் ஒரிஜினலாக மாறிவிடும் இந்தியாவே மாறி ,பின்னர் உலகமே மாறிவிடும் .பெண் ஆதிக்க மிக்க பொதுவுடைமை சமுதாயத்தில் நீங்கள் உலக தொழிலாள சர்வதிகாரி.
            ////ஆணாதிக்கம். ஒரு பெண்ணால், தந்தையை, சகோதரனை, கணவனை மீறி எதையும் செய்துவிட முடியாது. இந்த விவாதத்தின் தொடக்கத்திலிருந்தே என்னுடைய கேள்விகளுக்கு நேரடியான பதிலை விடுத்து கேள்வியை திரித்து பதில் சொல்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறீர்கள் ///
நீங்கள் கேட்கும் கேள்விகட்க்கு நீங்கள் எதிர் பார்த்தவாறே நான்  பதில் சொல்லவேண்டும்.இல்லையெனில் கேள்வியை திரித்து பதில் சொல்லுவதையே வழக்கமாக வைத்துள்ளதாக கூறுவதையே உங்கள் வழக்கமாக வைத்துள்ளீர்கள்.இப்ப சகோதரன் சொல்லை கேட்டு நடக்கும் சகோதரி  எங்கு இருக்கிறாள்?சம்பாதிக்கும் பெண் தனது தகப்பனை கேட்பதில்லையே ,நீங்கள் எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?
///நிக்காஹாஹ கஃபில்து எனத்தொடங்குவதை ஏன் மந்திரம் என அழைக்கக்கூடாது?///
நாங்கள் இப்படி சொல்வது இல்லை.மனப்பெண்ணின் தகப்பனார் மணமகனிடம் இன்ன மகருக்கு இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டீர்களா?என்றுதான் கேட்பார்கள்.இதைத்தான் மத்ஹப் வாதிகள் கபில்த்து',,, என்று முதலில்அரபியிலும் பின் தமிழிலும்  மணமகளின் தந்தைக்கு பதிலாக ஆலிம் கேட்கிறார்.இப்போது எங்கே உள்ளது மந்திரம்? ஆண்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் வாட்ச் மேன் வேலை ஆணாதிக்கத்தின் காரணமாகவா கொடுக்கப் படுகிறது ?அதற்க்கு பதில் சொல்லுங்கள்.வாட்ச்வுமேன் பற்றி நீங்கள் செவியுற்ற இடத்தை சொல்லுங்கள்.
///, உறவுக்கான உடலியல் தேவை இல்லாத வரை எந்த ஆண்விலங்கும் பெண்விலங்கை அணுகாது, அருகருகே இருந்தாலும் கூட. மனிதனோ மனைவியுடன் கலந்த அடுத்த சில நிமிடங்களிலேயே வேறொரு பெண்ணுடன் வாய்ப்புக்கிடைத்தால் அதை தவறவிடமாட்டார///
ஆணாதிக்கத்தின் செயல்பாட்டுக்கு உதாரணம் சொன்னால் ஒவ்வொரு செயலையும் மிருகத்தோடு ஒப்பிடுவது சரியா?பெண் வெளிப்படுத்தினால்  என்றால் கற்பு நெறி என்பார்கள்.ஆண் என்றால் வீரம் என்பார்கள்.இப்படி நீங்கள்தான் சொல்வீர்கள்.
///ஆணாதிக்கமே இந்த உலகில் இல்லை என வாதிடுகிறீர்கள். இதை மறுத்து உலகில் ஆணாதிக்கமே நிலவுகிறது என்பதை எடுத்துக்கூறினால்///
ஆண்களுக்கு ஏற்றவாறு சில பொறுப்புகள் பெண்களுக்கென்று சில பொறுப்புகள் ,இதை ஆணாதிக்கம் என்றால் கழிப்பறையை பொதுவாக்குவீர்களா?[இது என் மன விகாரம் அல்ல]
///இஸ்லாத்தால் முடியாது என்பது தெளிவாகிவிட்டது. கம்யூனிசத்தால் எப்படி முடியும் என்பது மட்டுமே மிச்சமிருக்கிறது///
நான் இப்புவியில் நிலவுவதை நிகழ் காலத்திலே  தலைப்புகேற்றவாறு சொல்லிவிட்டேன். நீங்களோ இப்போது நிலவும் பாலியல் குற்றங்களுக்கு உங்களது பில்லியன் ஆண்டுக்கான தீர்வை நிலவில் வைத்து காட்டியுள்ளீர்கள்.
///ஆணாதிக்கம், தனியுடமை குறித்த என்னுடைய கேள்விகளுக்கு நேர்மையாக நீங்கள் பதில் கூறும் போது தெளிவாகிவிடும்////
ஓகோ| நீங்களேதான் பேட்ஸ் மேன் ;நீங்கள்தான் அம்பயர் ;நீங்களேதான் ஆடியன்ஸ் ;நான் பவுலர் மட்டுமே .சரி நான் ஆணாதிக்கம் ,தனியுடமை குறித்து உங்கள் கேள்விகளுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் நேர்மையான பதில்களை நீங்களே கூறி  "அந்த தெளிவை " ஆக்கி காட்டுங்கள்