வெள்ளி, 12 ஜூலை, 2013

Ibrahim Sheikதவ்ஹித் மாணவன் ,அஸ்ஸலாமு அலைக்கும் ,வருடந்தோறும் ஷக்காத் கொடுக்கவேண்டும் என்றால் ,
ஒருவருக்கு ஒரு வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை ஷக்காத் கொடுத்த பிறகு மீதி 10 லட்ச ரூபாய்க்கு ஒரு லாரி வாங்கி வாடகைக்கு விடுகிறார்.அடுத்த வருடத்தில் லாரியில் கிடைத்த லாபத்திற்கு மட்டும் ஷக்காத் கொடுக்க வேண்டுமா?அல்லது லாரி கடந்த ஆண்டு வாங்கிய தொகை 10 லட்சத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ,லாரியில் ஓராண்டு கிடைத்த வருமானத்திற்கும் சேர்த்து ஷக்காத் கொடுக்க வேண்டுமா? இல்லையெனில் ஒவ்வொரு வருடமும் அன்றைய சந்தை மதிப்பின் படி லாரியின் மதிப்பு தொகைக்கும் அதிலிருந்து கிடைத்த வருமானத்திற்கும் சேர்த்து ஷக்காத் கொடுக்க வேண்டுமா?
அதை போன்று ஒரு வருட வருமானத்தில் கிடைத்த பணத்திற்கு ஷக்காத் கொடுத்த பிறகு வாங்கிய கூடுதலான வீட்டை வாடகைக்கு விடுகிறார் .அப்போது வருடந்தோறும் வீட்டின் மதிப்பிற்கு ஷக்காத் கொடுக்க வேண்டுமா? அல்லது வாடகை வருமானத்திற்கு மட்டும் வருடந்தோறும் ஷக்காத் கொடுக்க வேண்டுமா?அல்லது மதிப்பு கூடிய வீட்டின் கூடிய தொகைக்கு மட்டும் வருடந்தோறும் ஷக்காத் கொடுக்க வேண்டுமா?

தவ்ஹீத் மாணவன்தரும் பதில்
is Zakaat Should be Paid for Every Year?
Is zakaat required to be paid every year by Dr Zakir Naik
www.youtube.com
Is zakaat required to be paid every year_???? by Dr Zakir Naik
www.youtube.com
Answered by Dr Zakir Naik,even if it is the highest and if you think that you will try and catch the lowest point, the lowest point will keep on changing, it...
YouTube
www.youtube.com
Share your videos with friends, family, and the world

Ibrahim Sheik
தவ்ஹித் மாணவன்,உங்களது பதிவில் என்னால் கமெண்ட் பண்ண முடியாததால் இன்பாக்ஸ்க்கு நான் மெசேஜ் பண்ணினேன் .நீங்கள் எனது request ஏற்று உங்களது பதிவிலே இந்த ஜாகிர் நாயக் படத்தை போட்டிருக்கலாம் .ஆனால் தவ்ஹித் மாணவன் என்று படம் காட்டிவிட்டு மத்ஹப் மாயையிலிருந்து விடுபடாத ஜாகிர் நாயக் உரையை பதிலாக காட்ட வெட்கமாக இருக்கிறது போலும் .அதனால் எனக்கு உங்களது இந்த ஜாஹிர்நாயக்கின் பதிலை மெசேஜ் பண்ணியுள்ளீர்கள்
ஜாகிர் நாயக் உரை நான் ஏற்கனவே அறிந்தது தான் .அதில் என்னுடைய கேள்விக்கு பதில் இல்லை .என்னுடைய கேள்வி ,ஒரு முறை கொடுக்க வேண்டுமா வருடந்தோறும் கொடுக்க வேண்டுமா என்று நான் பொதுவாக கேட்கவில்லை .குறிப்பிட்ட விவகாரத்தில் சக்காத் எப்படி கொடுக்க வேண்டும் என்பதுதான் அதற்குத்தான் நீங்கள் பதில் தர வேண்டும் .