செவ்வாய், 7 டிசம்பர், 2010

சைத்தான் தனது வாலை பெண் அதிகாரியிடம் நீட்டிக் கொள்ளும்

செங்கொடி .>>>தனியுடமை என்பது பொருட்களோடு மட்டும் தொடர்புடைய ஒன்றல்ல, அது பெண்களோடும் தொடர்பு படுத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால், ஆண்கள் பெண்களையும் ஒரு பொருளாகவே பாவிக்கிறார்கள்<<< இஸ்லாம் பெண்ணை பொருளாக பார்க்கவில்லை.பெண்ணின் உடல்வாகு வெளிப்படுத்தினால் அது கவர்ச்சியாக ஆணை ஈர்க்கும் காமப் பொருளாக மாறிவிடும் என்பதற்காக தான் அவள் முகங்களையும் கைகளையும் தவிர மற்றவற்றை மறைத்து அவளை பெண்ணாக ,மனுசியாக உலகுக்கு காட்டுகிறது.ஆதலின் இஸ்லாம் பெண்களை பொருளாக பார்க்கவில்லை.உடனே பார்த்தீர்களா ஆணாதிக்கத்தை என்பீர்கள்.நாயைக்கண்டு ஒதுங்கினால் அது நாயாதிக்கம் என்பீர்களா?

>>>பெண் சமூகத்தை தலைமை தாங்கியதை வீழ்த்தி, தலைமைப் பொறுப்பை ஆண் எடுத்துக்கொண்டான். இதுதான் பொதுவுடமையும் தனியுடமையும் பிரியும் காலகட்டம். பெண் தலைமை தாங்கியபோது சமூகம் பொதுவுடமையாய் இருந்தது,<<<உங்களின் இந்த கூற்றுக்கு ஆதாரம் தருவீர்களா?
பொதுஉடமை யிலும் தனி உடமையிலும் ஆணாதிக்கமோ பெண்ணாதிக்கமோ ,ஆனால் இஸ்லாம் சொல்லுவதை பாருங்கள் ஆணுககு பெண் ஆடை ,பெண்ணுக்கு ஆண் ஆடை என்கிறது.எத்ததனை அர்த்தமுள்ள வார்த்தை இது .ஆணும் பெண்ணும் சமம் என்பதை இதைவிட எந்த இசமும் தனது கொள்கையை அறிவித்ததுண்டா?


.>>> \\உங்கள் கூற்றில் நீங்கள் உண்மையுடன் இருந்தால் ஆணைவிட பெண் முதன்மைப் படுத்தப்படும் சில அம்ச‌ங்களைக் கூறமுடியுமா?// என்று கேட்டிருந்தேன்,<<<ஆணைவிட பெண்ணை ஏன்முதன்மை படுத்தவேண்டும் ?.இருபாலரையும் சமமாக வைத்துள்ளது.எல்லாவற்றிலும் ஆண்கள் உயர்ந்தவர்களும் அல்லர்.எல்லாவற்றிலும் பெண்கள் தாழ்ந்தவர்களும் அல்லர்.எல்லாவற்றிலும் இருபாலினரும் சமமானவர்களும் அல்லர். இஸ்லாம். திருமணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் .இருபாலரையும் இஸ்லாம் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறது.இருவரின் சம்மதமும் தேவை என்கிறது.இருவருக்கும் மன விலக்கு உரிமை உள்ளது.மேலும் இஸ்லாம் ஆண்களுக்கு பெண்கள் மீது உரிமைகள் இருப்பது போன்றே பெண்களுக்கும் ஆண்கள்மீது உரிமை இருக்கின்றது.என்பதையும் வலியுறுத்தி கூறியுள்ளது.நபிமொழி வரலாற்று தொகுப்பிலிருந்து நீங்கள் கேட்டாற்போல் பெண்ணை முதன்மை படுத்தும் ஒரு வரலாற்று குறிப்பை பாருங்கள்.ஒரு நபித் தோழர் ,நபி[ஸல்] அவர்களிடம் வந்து ,இறைதூதரே ,உலகில் நான் அதிகமாக யாருக்கு கடமைப் பட்டிருக்கேன் என்று கேட்டார்.நபி [ஸல்] உன் "தாயாருக்கு" என்று பதில் அளித்தார்கள்.மீண்டும் அத்தோழர்,தாயாருக்குப் பின் அடுத்து யாருக்கு என்று கேட்டார்.அடுத்தும் உன் தாயார்தான் என்று [நபி] அவர்கள் கூறினார்கள்.அடுத்ததாக யாருக்கு என்று மூன்றாவது தடவையாக கேட்டார் .அதுவும் உன் தாயார்தான் என்று நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்.அதன் பின்னரும் நபிதோழர் "நான்காவதாக நான் யாருக்கு கடமைப் பட்டுள்ளேன்?என்று கேட்டார் அதற்க்கு நபி;ஸல்]அவர்கள் அது உன் தந்தையாவார்.என்று கூறினார்கள்.சரி ஆணைவிட பெண்ணை முதன்மை படுத்தும் அம்சங்களை கம்யுனிசத்தில் உள்ளதா? அதைக் கூறமுடியுமா?
2"]பாலியல் குற்றங்களுக்கு தனியுடமையும், ஆணாதிக்கமுமே காரணம். கம்யூனிசம் இந்த இரண்டும் இல்லாத சமூகத்தை அமைப்பதில் துடிப்புடன் இருக்கிறது".
'.சோசலிசத்தை நாங்கள் எப்படி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்போகிறோம் அதற்கு எவ்வளவு காலம்பிடிக்கும், சோசலிசப் பாலத்தை நாங்கள் இழந்திருக்கிறோமா இல்லையா என்பன போன்றவையெல்லாம் நம்முடைய விவாதத்திற்கு அப்பாற்பட்ட விசயங்கள் என்பதை மீண்டுமொருமுறை உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்" 
மேலே உள்ளது இரண்டும் உங்கள் கூற்று.முதலில் பாலியல் குற்றங்களுக்கு காரணமான ஆணாதிக்கத்தையும் தனியுடமையையும் இல்லாத சமூகத்தை அமைக்க கம்யுனிஸ்ட் துடிப்புடன் இருப்பதாகக் கூறும் நீங்கள் பிறகு நம் விவாதத்திற்கு அப்பார்ப்பட்ட விஷயம் என்கிறீர்கள்.அவ்வாறெனின் விஜயகாந்த் ரமணா போன்று சினிமா தயாரிப்புதான் கம்யுனிசமா?
 "சில நாடுகளில் பெண்களுக்கு காரோட்ட அனுமதியில்லை புரியுமா உங்களுக்கு?" 
இது போன்ற அனுமதி கொடுத்த நாடுகளில் அனுமதி கொடுக்காத நாடுகளைவிட பாலியல் வன்முறை கூடுதலா?குறைவா?நீங்கள் கூறும் பெண்ணுரிமைகளை  இஸ்லாம் தடுக்கவில்லை.ஹீரா என்ற பெண் தனியாய் ஹஜ் செய்ய குதிரையில் வருவாள் என்று நபி[ஸல்] அவர்களின் முன்னறிவிப்பும் பின் அந்த சம்பவமும் நடந்துள்ளது,என்பது வேறு விஷயம்.இஸ்லாம் இதையெல்லாம் நிர்பந்தமான நேரங்களில் அனுமதிக்கிறது.மேலும் நீங்கள் கூறும் பெண்ணுரிமைகளை இஸ்லாம் மறுக்கவில்லை.ஒரே வேலைக்கு ஆணுககு பெண்ணுக்கு வெவ்வேறு கூலியெல்லாம் இப்போது இருப்பதாக தெரியவில்லை.இது போன்ற பெண்ணுரிமைகள் கிடைத்த பிறகு பாலியல் வன்முறைகள் கூடி இருக்கின்றன.
 ஒரு பெண் தங்களுடைய உரிமைக்காக போராடிய வரலாற்று செய்தியை கதை என்று சொல்லுவது சரியா?இஸ்லாம் பெண்களை மதிக்கும் கண்ணியத்தை உங்களால் ஜீரணிக்க முடியவில்லை,இந்த எரிச்சல்தான் கதை என்று சொல்லவைத்துள்ளது.[ஜனநாயகத்தைப் பற்றி ஸ்டாலின் ரசிகர் விளக்கத்தேவை இல்லை.]
"மனைவி அழைக்கும்போது கணவன் மறுத்தால்? இந்த விசயத்தின் ஏன் ஹதீஸில் ஒழுக்கவிதி இல்லை"? என்று கேட்டுள்ளீர்கள்.
மனைவி அழைக்கும் போது கணவன் மறுக்கமாட்டான்.என்பது இயல்பு அதனால் அதற்க்கான விதிகள் தேவை இல்லை.பெண்கள்  குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் தாய்ப்பால் ஊட்டவேண்டும் என்கிறது இஸ்லாம்.பெண்கள் மட்டும்தான் ஊட்ட வேண்டுமா?ஆண்கள் ஓராண்டு,பெண்கள் ஓராண்டு ஊட்டக்கூடாதா?என்றெல்லாம் கேட்கமாட்டீர்கள்.ஆண்களுக்கம் பெண்களுக்கும் உடற்கூறு ரீதியாக மனரீதியாக சில வேற்றுமைகள் இருக்கவே செய்கின்றன. ஆணுககு பெண் ஆடை :பெண்ணுக்கு ஆண் ஆடை என்றும் ஆணுககு பெண்ணின் மீதுள்ள உரிமை பெண்ணுக்கும் ஆண்மீதுள்ளது என்று சமத்துவம் பேசும் இஸ்லாம் இந்த வேற்றுமைகளைக் கொண்டு ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியாக சில விதிகளை கூறுகிறது.நபிகள் காலத்து பெண்கள் எந்த அளவுக்கு உரிமை பெற்று இருந்தார்கள் என்பதற்கு நபி வழி வரலாற்று தொகுப்பிலிருந்து கிடைக்கும் ஒரு குறிப்பை பாருங்கள்."இறைத் தூதரே |உங்களுடன் ஆண்கள் தான் அதிக நேரம்  இருக்கிறார்கள் ,அதனால் உங்கள் அறவுரைகளை அவர்கள்தான் அதிகமாக பெறுகிறார்கள். எங்களுக்கு அந்த அளவுக்கு மார்க்க விசயங்கள் கிடைப்பதில்லை.இந்த குறையை நிவர்த்தி செய்யுங்கள் என கோரிக்கை வைக்கின்றனர்.உடன் நபி[ஸல்] அவர்களும் இனி வியாழக் கிழமை தோறும் பெண்களுக்கு அறவுரைக்காக  நேரம் ஒதுக்கித் தருவதாக கூறுகிறார்கள். நபிகள் காலத்து பெண்கள் ஆண்களுக்கு சின்ன விசயங்களிலும் போட்டியிடுகிறார்கள் என்றால் ஆண்களுக்கு  இணையாய் அவர்கள் இருந்துள்ளார்கள் என்பதை விளங்கி கொள்ளமுடிகிறது.
பெண்ணின் உணர்வுகளை மதிக்கும் ஒரு நிகழ்வை பாருங்கள்.ஒரு நபி[ஸல்] காலத்திய பெண் ,தனது கணவரிடம் தன்னுடைய பாலியல் உணர்வுகள் திருப்தியடைய வில்லை என்பதை மறைமுகமாகவும் நாசுக்காகவும் வெளிப்படுத்தி தனது கணவரிடம் இருந்து மணவிலக்கு பெறுகிறார்.
பழங்குடியினரின் விசயத்தில் பாலியல் சார்ந்த குற்றங்கள் இருந்தாலும் அங்கு ஆடை முக்கியமானதாக இருக்கவில்லை என கூறியுள்ளீர்கள்.பெண்கள் மேலாடை இல்லாமை அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.                     கீழாடை யை இன்னும் குறைவாகவோ,அது இல்லாமலோ இருந்தால் பழங்குடியினரிடம் அதன் காரணமாக பாலியல் குற்றங்கள் இன்னும் கூடுதலாகக் கூடும்.அல்லது பழங்குடியினர் மேலாடை அணிந்தால் பாலியல் குற்றங்கள் குறைவாகிவிடும்.புர்கா அணிந்த முஸ்லிம் பழங்குடியினர் ஒருவேளை அங்கு இருந்தால் மேலாடை அணியாத பழங்குடியினரை விட பாலியல் குற்றங்கள் முஸ்லிம் பழங்குடியினரிடம் குறைவாக இருக்கும் .
3]நீச்சல் உடை அணிந்த பெண்ணிடமே காம உணர்வு  மிகுதியாக ஏற்படும் என்பதை ஒப்புக்கொண்ட தாங்கள் அதன் பின் ஆணாதிக்க கருத்தியல் என்று சப்பைகட்ட முயலுவது சரியா?கம்யுனிஸ்ட் கூண்டில் நின்றுகொண்டு "அக்கக்கோ" என்று பாடிகொண்டிருப்பது போல் தெரிகிறது. நான் மழை பெய்தது என்கிறேன்.நீங்கள்,"கடலில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு மையம் ஏற்பட்டுள்ளது,அதனால் காற்று சுழன்று அடிக்கிறது,மேகம் திரண்டது,கருமேகம் சூழ்ந்தது,மழை பெய்தது ,என்கிறீர்கள் 
 +எடுத்துக்காட்டாக சௌதியையே கொள்வோம், இஸ்லாம் தோன்றிய நாளிலிருந்து இன்றுவரை 1400 ஆண்டுகளுக்கும் அதிகமாக அங்கு இஸ்லாமிய சட்ட தண்டனை முறைகள் தான் அதிகாரத்தில் இருக்கிறது+இது உங்கள் கூற்று..
இஸ்லாத்தின் தீர்வுக்கு சவுதியை எடுத்துக் கொள்வோம் ,கம்யுனிஸ்ட் தீர்வுக்கு சோஷலிச காலத்து ரஷ்யாவை எடுத்துக் கொள்வோம் .சம காலத்தில் பாலியல் குற்றங்கள் எங்கு அதிகமாக நடந்துள்ளது என்பதை விக்கி பிடியா புள்ளிவிவரத்தை ஆதாரமாக கொள்வோமா?சவுதியில் அனைத்து குற்றங்களும் பதிவு செய்யப் படவில்லை என்று கூறும் நீங்கள் சோஷலிச காலத்திய ரஷ்யாவிலும் அதேநிலை இல்லை  என்று உங்களால் மறுக்க முடியாது.

மன நிலை மாற்றி திருத்திவிடுவோம் என்பது// ,,,,,,,,,,, கம்யூனிசம் கூறும் தனியுடமை, ஆணாதிக்கத்தை ஒழிப்பது என்பது திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் என்பதைவிட வேறுபாடானது. அது உங்களுக்கு புரியவில்லை என்றால் கேளுங்கள் விளக்குகிறேன். நான் கூறுவதை வேறொன்றாக திரிக்க வேண்டாம்;
நீங்கள் வானை வில்லாக வளைக்கவும்  வேண்டாம்,மணலை கயிறாக திரிக்கவும்  வேண்டாம் மனநிலை மாற்றி திருத்திடுவோம் என்பது உண்மை என்றால் முதலில் உங்கள் ம.க.இ.க.வினரை சமநிலை சமுதயாமாக மாற்றி காட்டுங்கள்.

குறைவான ஆடையணிந்த பெண் உயரதிகாரியாக இருக்கும் பட்சத்தில் வாலைச் சுருட்டிக்கொண்டிருக்கும் சைத்தான்; அந்தப் பெண் ஆணிடம் வேலை செய்யும் வேலைக்காரியாக இருந்தால் வேலையைக் காட்டிவிடும். <<<நான் ஏற்கனவே கூறியுள்ளேன் ,ஒரு பெண்ணுக்கு பாலியல் தேவை ஏற்படும் போது எளிதாக ஆண் கிடைத்துவிடுவான்,நீங்கள் சொல்லும் குறைவானா ஆடை அணிந்த பெண் அதிகாரி,தனது பாலியல் தேவைக்கு தனது கீழ் வேலை செய்யும் ஆணை எதிர்ப்பு இன்றி பயன் படுத்திக் கொள்வாள்.அதாவது சைத்தான் வாலை சுருட்டிக்கொண்டு இருக்காது சைத்தான் தனது வாலை பெண் அதிகாரியிடம் நீட்டிக் கொள்ளும் .மூன்றவதாக இருக்கும் சைத்தான் ஆணிடம் மட்டும் வராது ,பெண்ணிடமும் வரும் இந்த இடத்தில் உங்களிடம் தான் ஆணாதிக்கம் உள்ளது.

. மனிதனின் காம உணர்வு சிந்தனை, அறிவு உள்ளிட்ட அனைத்தும் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. ஒவ்வொருவரின் சிந்தனை செயல் பேச்சு அனைத்தின் பின்னேயும் வர்க்கம் இருக்கிறது. 
உங்கள் ம.க.இ.க.வினர் அனைவருக்கும் ஒரே மாதிரி உணர்வுகளை கொண்டுவந்து விட்டீர்களா? அதுவரை அது ஏட்டுசுரைக்காய் தான் .

"இவைபோன்ற அபத்தங்களுக்கெல்லாம் கம்யூனிசமே முடிவுகட்டும்."
இரண்டாவது திருமணத்திற்கான    காரணத்தை கூறியிருந்தேன் அதை மறுக்க இயலாது ,1400  ஆண்டுகளாக செயல் பட்டுகொண்டிருக்கும் இஸ்லாத்தை ஒரே நூற்றாண்டில் முடிவு கட்டப்பட்ட கம்யுனிசம் முடிவுகட்டும் என்பது அபத்தமல்லவா?
சட்டம் தான் ஏட்டுச்சுரைக்காயாக, மேலெழுந்தவாரியாக இருக்கிறது என்பதை விளக்கியிருந்தேன்; 
எங்கே விளக்கியிருந்தீர்கள்?இஸ்லாமிய சட்டம் செயல்பட்டு கொண்டிருக்கிறது .இஸ்லாமிய சட்டம் அமெரிக்க ஆதிக்கம் இல்லாமல் இருந்தால் இன்னும் சவூதி அரசு இஸ்லாமிய அறிஞரகளின் ஆலோசனையோடு செயல்பட்டால் வட்டி இல்லா வங்கிகளின் செயல்பாடு போல் திறம்பட செயல்பட்டு உலகுக்கு வழிகாட்டலாக இருந்திருக்கும்