வெள்ளி, 2 நவம்பர், 2012



நந்தன் ,செங்கொடி யில் எழுத விருப்பமில்லை .நீங்கள் விரும்பினால் இங்கு வந்து விவாதித்துக் கொள்ளுங்கள்
///சொத்தை,வீடை,தோட்டத்தை,பங்குவைத்ததை போன்று தங்கள் மனைவியையும் ஓடிவந்த சஹாபிகளுக்கு அவர்களுக்கு பிடித்தவர்களை விவாகரத்து செய்து மணமுடித்து வைத்த கதை உங்களுக்கு ஹதீதாக சொல்லப்படவில்லையா?
உங்களுக்கு இது கிறுக்குத்தனமாக தெரியவில்லை போலும்!////


கம்யுனிசத்தில் திருமண வாழ்க்கை என்பது ஆணாதிக்கத்தனம் .எனவே அங்கு திருமணம் இன்றி எங்ஙனம் வாழவேண்டும் என்று கேட்டு பாருங்கள் .அந்த கிறுக்குத்தனத்தை படித்தீர்களானால் இந்த ஹதித்கள் சொல்லும் விஷயங்கள் புரியும்.

நீங்கள் உங்களுடைய இப்போதைய மனோபாவத்துடன் தவிர்க்க முடியாத ,நிர்பந்தமான காலகட்டத்தில் நடந்ததை ஒப்பு நோக்காதீர்கள்.
ஒருவரை அறிமுகமாகும் வேளையில் ,
உங்களுக்கு மனைவி இருக்கிறாரா?
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா?
உங்களிடம் வீடு ,கார் இருக்கிறதா?

என்றெல்லாம் கேட்கிறோமே ,இதெல்லாம் ஆணாதிக்கமா?

அந்நபர் ,எனக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர் என்று கூறினார் என்று வைத்துக் கொள்வோம் .இந்த சமயத்தில் உங்களது உள்ளத்தில் ஏற்படும் தாக்கமும்  ,
இதே கேள்விக்கு ;ஒரு பெண் ,எனக்கு இரண்டு கணவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களது உள்ளத்தில் ஏற்படும் தாக்கமும் வேறுபடுமா?வேறுபடாதா? 
அப்படியெனில் அதற்கு பெயர் ஆணாதிக்கமா?


////முகம்மதின் வளர்ப்பு மகன் ஸைது தனது மனைவியை விவகாரத்துச் செய்து முகம்மது நபிக்கே திருமணம் செய்துவைத்த நிகழ்வும் உள்ளது.////
நடந்த சம்பவத்தை தவறாக விளங்கிக் கொண்டு இவ்வாறு கூறியுள்ளீர்கள்.
சைதுவுக்கும் அவரது மனைவிஜைனபுக்கும் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருந்து வந்தது .இதனால் அவர்கள் செய்வதறியாது திளைத்தனர் .
அதனாலேயே அவர்கள் விவாகரத்து செய்து கொள்ள முஹம்மது நபி[ஸல்] அவர்கள் அனுமதித்தார் .ஜைனப் முஹம்மது நபி[ஸல்] அவர்களின் மாமி மகளாவர் .அவர் அதன் பின்னர் முகம்மதுநபி[ஸல் அவர்களை விரும்பவே அவரை திருமணம் செய்து கொண்டார்கள் .