சனி, 30 ஏப்ரல், 2011


நறுக்கு குத்தாட்டம் போட்ட நாகூர் கலீபா

Friday, April 29, 2011 10:12 PM Posted by பொய்யன் டிஜே

மேன்மைதங்கிய மாட்சிமை பொருந்திய நாகூர் ஷரீப் கவர்ன்மென்ட் டவுன் காஜீ மௌலான மௌலவி சுல்த்தான் கலீபா சாஹிப் காதிரி அவர்கள் ஆடிய கல்லீஜ் ஆட்டத்தின் அதிரடி வீடியோ காட்சி இப்போது வெளியாகியுள்ளது. என்னத்த சொன்னாலும் திருந்தாத மக்களை நாம் என்னவென்று சொல்வது?அடுத்த  ஆண்டு ஆறாம்பண்ணை சிந்தாதர்கா கலீபாவும் விழா கமிட்டியினரும் நாகூர் கலிபாவை விட சிறந்த குத்தாட்டம் போட்டு தவ்ஹித் ஜமாத்தினரின் மூக்கை உடைப்பார்களா? 
இன்சா அல்ல்லாஹ் அடுத்த ஆண்டு ஆராம்பன்னையிலும் சிந்தா கலீபாவும் அவர்களது பண்ணை சிஷ்யர்களும் இதை விட சிறப்பாக  குத்தாட்டம் போட்டு தவ்ஹித் ஜமாத்தின் மூக்கை உடைப்பார்கள்.

வியாழன், 28 ஏப்ரல், 2011

நம்மால் முடியும்

        அருளும் அன்பும் மிக்க அல்லாஹ்வின் திரு பெயரால்,                                                                                                                       

விவேகத்துடனும்,அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக,அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக|உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்'நேர்வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.        குர்ஆன்16';125                                                                                                                                                                 அன்பார்ந்த இளைஞர்களே| அஸ்ஸலாமு அலைக்கும்.                                                                                                  பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருப்பதாலோ என்னவோ நமது இளைஞர்கள் அவ்விளையாட்டில் மிகுந்த ஆர்வமாய் உள்ளனர்.குக்கிராமத்திலும் இருபதினாயிரம் செலவழித்து டோர்ணமன்ட் நடத்தும் அளவில் ஆர்வமாய் உள்ளனர்.இந்த ஆர்வம் இந்தியன் டீமில் முஸ்லிம்கள் இரண்டு அல்லது மூன்று பேர் சிலசமயங்களில் நான்கு பேர்களை கூட இருக்க வைத்துள்ளது.இது 20percent க்கும் அதிகம்.ஆனால் இந்திய,மற்றும் மாநில அரசுகளின் அனைத்து துறைகளிலும் முஸ்லிம்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் 2percent க்கும் குறைவு.நாம் எந்த வகையிலும் எவரை விடவும் ஆற்றலில் குறைந்தவர்கள் அல்ல என்பதற்கு கிரிக்கெட் ஒரு சாட்சி.இன்னும் 90 களில் 10th,plus2 ரிசல்ட் ஐ  பார்த்தால் டாப் 10 rank holder களில் ஒரு முஸ்லிம் பெயரைக்கூட பார்க்க முடியாது.2000 க்கு பிறகு பல ஆண்டுகள் state 1st முதல் 10th ரேங் வரை பல முஸ்லிம் மாணவர்கள் இடம்பெற ஆரம்பித்தனர்.அது மட்டுமன்று பல ஸ்கூல்கள் தங்களது ஸ்கூலின் டாப்பெர்ஸ் லிஸ்ட் ஐ விளம்பர படுத்தும் போது பார்த்தால் அதில் இருபது முதல் நாற்ப்பது சதவீதம் வரை முஸ்லிம் மாணவர்கள் இடம்பெறுவதை பார்க்கமுடிகிறது.ஆம் ,நாம் படிக்க ஆரம்பித்துவிட்டோம் என்பதையே இந்த தேர்வு முடிவுகள் காட்டுகின்றன.நாம் கல்வியில் நல்லதொரு வழிகாட்டலுடன் நமது முனைப்பை காட்டினால் இட ஒதுக்கீடு அவசியமே என்பது ஒரு புறம் ,இட ஒதுக்கீடு இல்லாமலே நாம் இருபது சதவீத அரசு வேலைகளில் நுழைய முடியும்.மெடிக்களிலும் பொதுப்பிரிவில் நாம் முன்னூறுக்கும அதிகமான இடங்களில் இடம் பெற்றிட முடியும் அதேப்போன்று ஐ.பீ.எஸ்.'ஐ.எ.எஸ்.;ஐ.ஐ.டி.யிலும் நமது பங்கை நாம் மீட்டெடுக்கமுடியும்.ஆனால் நமது சமுதாயத்தில் உள்ள கல்வியாளர்கள்,அரசு உயர் பதவி வகிப்பவர்கள்,அதிலிருந்து ரிடையர்ட் ஆனவர்கள்,இதில்  கவனம் கடுகளவும் கொள்வதில்லை.தங்களை முஸ்லிம்களாக காட்டிகொள்வதிலேயே சிலர் வெட்கப்பட்டனர்,இன்னும் சிலர் அச்சப்பட்டனர்.யஸ்வந்த் சின்ஹா,ஜக்மோகன் போன்ற உயர் பதவி வகித்தவர்கள் போன்று ஏராளமானோர் ரிடயர்ட் ஆனபிறகும் ரிசைன் பண்ணியும் தங்களது காவி முகத்தை காட்டினர்.ஆனால் நம்மவர்களை நாம் அப்படி இருக்கச்  சொல்லவில்லை.சமுதாயப்பணி ஆற்றினாலே போதும். வருவார்களா?                          

      நமது மரியாதைக்குரிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இருக்கிறார்.இன்று சமுதாயம் கொள்கை யளவில் சிதறுண்டு கிடக்கும்போது,கல்வியை மட்டுமே   மையமாக்கி ,டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தலைமை ஏற்று வழிகாட்டினால்,இன்சா அல்லாஹ் வெற்றி கிடைக்கும்.                         நான் கடந்த ஆண்டு ரமளானில் டி.வி.நிகழ்ச்சியில் பார்த்தேன்.ஈரோடு முஸ்லிம்  கல்விமாநாட்டில்  நீலகிரி மாவட்ட கலைக்டர் சகோதரர் நசீம் என்பவர் சொற்பொழிவைக் கேட்டேன்.யன்காக ஸ்மார்ட்டாக இருத்த அவரின் அந்த பேச்சை எந்த அறிஞர் களிடமும் கேட்கவில்லை.இஸ்லாத்தையும் கல்வியையும் இணைத்து மிக அருமையாக பேசினார்.மேலும் அவர் சக்காத்தை வரைமுறை படுத்த வழி காண வேண்டும்.தனக்கு தெரிந்த வரை கோடிக்கணக்கில் சக்காத் கொடுக்கும் செல்வந்தர்கள் இருக்கின்றார்கள். இவற்றை செம்மையாக வரை முறை படுத்தினால்,இந்தியாவில் எந்த முஸ்லிமும் ஏழையாக இருக்கமாட்டான் என்றும் தனது பேச்சினூடே தெரிவித்தார். இவர்களைப் போன்ற கல்வியாளர்கள் கண்ணுக்குதெரியாமல் நிறையவே இருக்கிறார்கள்.இவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து டாக்டர் அப்துல் கலாமை சந்திக்க வேண்டும் யார் முயற்ச்சி செய்வார்கள்.அல்லாஹ்விடம்தான் இந்த நல்ல நாளில் துவா செய்ய வேண்டும்.                                                                       
                                 தேசத்திற்கு எதிராக,வலிமை மிக்க ராணுவத்திற்கு,காவல் துறைக்கு எதிராக வெடிகுண்டை தூக்கும் இளைஞன் திருமண விசயத்தில் வரதட்சணைக்கு பெற்றோருக்கு பெட்டிப்பாம்பாய் அடங்குவது ஏன்?  இன்சா அல்லா தொடருவோம்              

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

மோடியின் மூடி உடைகிறது


குஜராத் படுகொலை : முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டுவதற்காக வெண்டுமென்றே அனுமதித்தார் மோடி! – மோடியின் ரகசிய கூட்டத்தில் கலந்து கொண்ட IAS போலீஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு சாட்சியம்!

செய்தி வெளியிடப்பட்ட நாள் Friday, April 22, 2011, 17:39
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட மதக் கலவரத்தை குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடி வேண்டுமென்றே நடக்க அனுமதித்திருந்தார் என்று மூத்த போலிஸ் அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கலவரத்தின்போது உதவி கோரி மக்கள் விடுக்கும் அழைப்புகளை புறந்தள்ளுங்கள் என்று போலிஸ் அதிகாரிகளுக்கு நரேந்திரமோடி உத்தரவிட்டிருந்த கூட்டத்தில் தானும் கலந்துகொண்டிருந்ததாக சஞ்சீவ் பட் என்ற அந்த உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் “கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால் இந்துக்களிடையே பெரும் கொந்தளிப்பு காணப்படுகிறது. இத்தகைய சம்பவம் இனி நிகழாதவாறு இஸ்லாமியர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.” என்று மோடி கூறியதாக அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது, அவர் மாநில ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தின் முதல்வராக உள்ளார்.
tntj net லிருந்து    

புதன், 20 ஏப்ரல், 2011

மூக்கு உடைந்ததா?மூக்கு சளி உடைந்ததா?pannai mannil piranthawan சொன்னது…



சிந்தா சேகு ஒலியுல்லாவே !முஸ்லிம் மதத்தின் இறைதூதர் என்று சொல்லப்படக் கூடிய முஹம்மது நபி கப்ரின் மேல் கட்டிடம் எழுப்பக் கூடாது என்று சொன்னாராம் அதை புகாரி என்ற கிதாபில் படித்து தர்கா கூடாது என்று எங்கள் ஊரில் சில தவ்ஹித் காரன்கள் உளறி வருகிராரர்கள் .ஆகவே உங்களுக்கு இறந்த இடத்த்தில் கட்டினாலும் போதாது என்று ஹதீதை மட்டம் தட்ட வேண்டும் என்று நாங்கள் ஊருக்கு ஊர் உங்கள் பெயரால் தர்கா கட்டி வருடந்தோறும் கிறித்தவர்கள்போல் ,யூதர்கள் போல் ,மேலும் மற்ற சமுதாயங்களின் கோவில் கொடை போல் உங்களது பிறந்த நாளிலே விழா   நடத்தி வருகிறோம்.
எனது கப்ரை விழா கொண்டாடும் இடமாக மாற்றிவிடாதீர்கள் என்று முஹம்மது நபி கூறியதை கேட்டு இந்த தவ்ஹித் காரர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் .நாங்கள் இதை சும்மா விட்டுவிடுவோமா?சிந்தா நாயகமே  உங்களுக்காக சென்னையிலும் வசூல் செய்து உங்கள் நினைவு கப்ரில் நாங்கள் மிகவும் விமர்சையாக விழா நடத்தினோம்.அதிர்வேட்டுகள் போட்டு ஹதீத்களையும் அதை சொன்னவர்களையும் அதிர வைத்தோம்.யானைக் கொண்டுவந்து அதன் மேல் மூன்று பேரை உட்கார வைத்து உங்களது கொடியை பிடித்து தெருவெல்லாம்  ஊர்வலம் போனோம்.சும்மாவா போனோம் .இசை கருவிகளை உடைத்தெறியுங்கள் என்று இந்த முகமது  நபி சொன்னாராமே,அதை இந்த தவ்ஹித்காரன் மேடை போட்டு பேசுகிறான். ஆகவே இவர்களின் மூக்கை உடைக்க புது புது சினிமா பாடல்களை,மற்றும்  "நான் ரெடி நீங்க ரெடியா,,,"."சக்கரை வள்ளி கிழங்கு,,,"பாட்டேல்லாம் நாயானா இசையில் பாடி,யானையையும் அதன் முன்னாள் பின்னால் வந்த மக்களையும் குதுகாழிக்க செய்தோம்.நாயனகாரர்கள் போதையில் இருந்தால் தான் நல்லபாட்டுக்கள் வரும் என்பதற்காக எங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் இல் நன்றாக தண்ணி போட்டு சிந்தா  சேகு ஒலியுல்லாவே உங்கள் கொடியை சிறப்பான  முறையில் வலம் வந்தோமே ,இதனால் த்வ்ஹித் கார்களின் மூக்கை உடைத்தோம் .இதன் பொருட்டால் எங்களுக்கு முஹம்மது நபி அவர்கள் கூறாவிட்டாலும் பரவாயில்லை நீங்கள் அல்லாவிடம் நேரடியாக எங்களுக்கு சிபாரிசு செய்து சுவன பதவி கிடைக்க செய்யுங்கள் .                   ஆ,,மீன் சீலாமீன் 
                                                                                 இவண்
                                                      சிந்தா சேகு ஒலியுல்லா பக்தர்கள் குழு மற்றும் தவ்ஹித் காரனின் மூக்குடைப்புக்குழு ,சிந்தா சேகு மதார் நகர்.சிந்தாபண்ணை.




pannai mannil piranthawan சொன்னது…







அட  எடுவட்ட பயல்களா  என்னடா  அக்கிரமம்  இது .ஒரே  ஊரில்  இருந்து  கிட்டு  நீங்க  அவங்களா  குத்தம்  சொல்வது .அவங்க  உங்களை  குத்தம் சொல்வது இது என்னடா பொழப்பு .அனைவரும்  ஒற்றுமையாக   இருக்க  எப்ப  தான்  கத்துக்க  போகிறீர்கள்? .முதல்ல  அடுத்தவர்களை   பேசும்  முன்பு  தன்னையும்  தன  குடும்பத்தையும்  சரி  செய்து  விட்டு  பொது  விசயத்துல  தலையிடுங்கடா  .எந்த  blogspotளையும்  இந்த  மாதிரி  அசிங்கமாக எழுத  மாட்டார்கள்    .படிக்க  முடியாத  அளவுக்கு அநாகரிகமாக  ,கேவலமாக    எழுதி  உள்ளீர்கள். .முதல்ல தன்னையும் தன குடும்பத்தையும் பாருங்க .அப்புறம்  ஊர்  விசயத்துல தலையிடுங்கள் .அசிங்கமாக திட்டி  எழுதுவதை  தவிருங்கள் .ஏன்  என்றால்  நிறைய  தமிழர்கள்   இதனை  படிக்கிறார்கள். .இந்த வெப்சைட்  இருப்பது  எனக்கே  தெரியாது .மற்ற  ஊர் மக்கள்  சொல்ல  போய்தான்  எனக்கு  தெரியும் .என்னடா நம்மள  சொல்லி  விட்டு இவனே  இப்படி  எழுதுகிறானே    என்று  நினைக்கிறீர்கள். .உங்களிடம்  (athawathu)இந்த ப்ளாக் ஸ்பாட்டில்   இப்படி எழுதினால்  தான் முழுவதும்  படிக்கிறார்கள் .நான்  மரியாதயை   குறைவாக    எழுதியதற்கு  அல்லா உங்களை  மனம்  பொறுத்துக்கொள்ளுங்கள் .