ஞாயிறு, 28 நவம்பர், 2010

எனது பதில்

  1. இஸ்லாம் எந்தக்காலத்திலும் வரும் புதியவைகளுக்கும் தன்னுள் தீர்வை கொண்டுள்ளது.புதியவைகளை இணைக்க முடியாது என்று நீங்கள் எதை சொல்லுகிறீர்கள் என்பது புரியவில்லை. கம்யுனிஸ்ட் சமுக சூழலுக்கு ஏற்ப சட்டங்களை வகுத்து கொள்ளும் என்கிறீர்கள் .அவ்வாறெனின் அது நியாயத்தின் அடிப்படையில் இருக்காது.இப்போதைய தமிழகத்தின் சமூக சூழ் நிலை மதுவிலக்கு ரத்து,அதைப்போல் மும்பையின் சமூக சூழ்நிலை பெண்கள் உடலை வியபரத்தலமாக்கி கொண்டதுக்கான அங்கீகாரம் .சமூக சூழ்நிலை என்பது நியாயத்தின்,தர்மத்தின் அடிப்படையிலா?இல்லை மெஜாரிட்டியின் அடிப்படையிலா?
    சமுகத்தை மாற்றுவதை தனி மனிதனிடம் இருந்துதான் தொடங்கமுடியும் .நீங்கள் ஜெயகாந்தன் கட்டுரை போல் எழுதுவது சாகித்ய அகடமி பெறுவதற்குத்தான் சிபாரிசு செய்ய முடியுமே தவிர உலக வாழ்க்கைக்கு நடை முறையில் கொண்டு வர முடியாது.தனி மரம் தோப்பாகாது என்றாலும் தோப்பை உருவாக்க ஒரு மரத்தி லிருந்துதான் கணக்கிடமுடியும்.பாலியல் குற்றங்கள் ஆணாதிக்கத்தினால் மட்டும் ஏற்படவில்லை.மேலும் ஆணுககு எப்படி பெண் நுகர்பொருளோ,அதுபோல் பெண்ணுக்கும் ஆண் நுகர்பொருள். இன்றைய பெண்களின் உடை அலங்காரம் பெண்ணாதிக்கத்தின் வெளிப்பாடே என்பதையும் மறுக்க முடியாது. .
    ஆசை, இன்பம் என்பனபோன்ற வகைப்பாட்டுக்கு மாறும்போதுதான் அங்கு குற்றம் வருகிறது<<<பாலியல் தேவைகள் என்பது இனபெருக்கம் ,ஆசை,இன்பம் அத்தனையும் உள்ளடக்கியதே.இன்னும் சொல்லப்போனால் இனபெருக்கத்தின் தேவையை விட ஆசை,இன்பத்தின் வடிகாலாகத்தான்"பாலியல் தேவை" அதிக பங்கு வகிக்கிறது..
    ஆதலின் ,புரட்சி மூலம் சோசலிச நடைமுறைக்கு வரும் ஒரு நாடு, அதன் சமூக சூழலுக்கு ஏற்ப சட்டங்களை நடைமுறைகளை வகுத்துக்கொள்ளும்.பாலியல் குற்றங்களை தவிர்த்து விடமுடியாது என்பதால் ,சமுக சூழ்நிலைக்கு ஏற்ப பாலியல் தேவைகளை எப்படி வேண்டுமானாலும் நிறை வேற்றிக் கொள்ளலாம் என்று சட்டம் கொண்டுவந்து விடலாம் .மேலாடை அணியாத பழங்குடியினரின் சமூகங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களையே முன் மாதிரியாகக் கொண்டு அவர்களைப் போலவே அவர்களின் சமுக சூழ்நிலைக்கேற்ப இயங்கியலின் அடிப்படையில் சட்டங்களை ,நடைமுறைகளை வகுத்துககொள்வீர்களா?அல்லது புரட்சி மூலம் சோஷலிச ஆட்சியை எப்போது உலகம் முழுவதும் கொண்டு வருவது ?சாத்தியமா? சாத்தியமற்ற ஒன்றை சபையில் சொல்லிவைத்தால் ஆயிற்று என்று கூற வருகிறீர்களா?
    ;
    ஆணும் பெண்ணும் தனித்திருப்பது இன்றைய சமூகத்தில் சாதாரணமானது தான்.அப்படியெனின் அவர்களிடையே பாலியல் நடவடிக்கைகளும் சாதரணமானதுதான்.
    >>>வெகுசில நிகழ்வுகளில் அவ்வாறு நடந்துகொள்ளலாம் என்பதால் ஆண் பெண் தனித்திருப்பதையே தவிர்க்கவேண்டும் என்பது சரியற்ற ஒன்றாகவே இருக்கும். <<<
    வெகுசில நிகழ்வுகளில் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இருக்கலாம்.வெகுசில நிகழ்வுகளே வெளிவரும் .அதை பொருட்படுத்த தேவை இல்லைஎன்றால் நீங்கள் சொல்லுவதுபோல் ஆண்பெண் தனித்திருப்பது சரியான ஒன்றாகவே இருக்கட்டும்.
    பாலியல் வன்முறைக்கான கிரியா ஊக்கிகளாக கவர்ச்சியான உடைகளுடன் பெண்ணியம் இழந்தவர்களாக கவர்ச்சி பொருள்களாக பெண்கள் பவனி வரும்போது ஆண்களை எப்படி குறைகூற முடியும்? நேற்று கூட டெல்லியில் நடுஇரவில் வேலைமுடித்துசென்ற இரு பெண்களில் ஒருவர் கற்பழிக்கப்பட்டார்.
    ஆண்கள்,சட்டை அணிந்து ,கழுத்துகூட தெரியாதவாறு டை கட்டி,அதற்க்கு மேல் கோட் அணிந்து,கால்கள்,கால் இன்ச் கூட தெரியாதவாறு சாக்ஸ்,சூட்,சூ அணிந்து முகம் மட்டும் தெரியுமாறு உடை அணிந்து வரும்போது பெண்கள் மட்டும் அரைகுறை ஆடையுடன் காட்சிதரவேண்டுமேன்பதை எங்ஙனம் சரிகாணமுடியும்? இஸ்லாம் பெண்களை முகம் கைகள் தெரியும் அளவுக்கே உடை அணிய சொல்லுகிறது.முகம் கைகள் தவிர மற்ற உடலை மறைத்து எந்த ஆடைகள் வேண்டுமானாலும் அணிந்து கொள்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை.
    .
    பணத்தால் உடல் கொழுத்தவர்கள் வேறு வேலையே இல்லாதவர்கள் சிலரை மட்டுமே வைத்து சவூதி முழுவதையும் கணிப்பது தவறு.சவூதியில் மற்ற நாடுகளை ஒப்புநோக்கின் பாலியல் குற்றங்கள் குறைவு என்பதே இதுவரை வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.