திங்கள், 29 நவம்பர், 2010

யார் அது கவ்வா தானே? S.Ibrahim

 >.>>கம்யூனிசத்தின் பார்வையான தனியுடமை, ஆணாதிக்கம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கம்யூனிசத்தின் நிலைபாடு சரியானது என்கிறேன்<<<
நிலைபாடு என்பது ஏட்டு சுரைக்காய்..செயல்பாடுவைச் சொல்லுங்கள்.உங்களது சோஷலிச காலத்திய ரஷ்யா, சீனாவில் பாலியல் குற்றம் எவ்வாறு இருந்தது? சமூக சூழ்நிலைக் கேற்ப சட்டங்களை,நடைமுறைகளை வகுத்துக்கொண்டு அங்கு என்ன தீர்வு மூலம் பாலியல் குற்றங்களை குறைத்து காட்டினீர்கள்.?அனைத்து பாலியல் வன்முறைகளும் பதிவு செய்யப்பட்டனவா?
நீங்கள் ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் நுகர்பொருட்கள் என்று குறிப்பிடுகிறீர்கள் என்றால் அது எப்படி என்று கூறமுடியுமா? என்று கேட்டு உளீர்கள்.பல பெண்கள் ஆண்களை அழைப்பது நுகர்வுக்காக அல்லாமல் வேறு எதற்கு?மேலும் பெண்ணுக்கு ஆண் நுகர்பொருள் என்பதற்கு பாலியல் இணைய தளங்களே சாட்சி.
 ஆதியில் சமூகத்தை பெண் தலைமை தாங்கி வழிநடத்தினாள், யார் அது கவ்வா தானே? உலகில் ஆணாதிக்கமும் இல்லை .பெண்ணாதிக்கமும் இலை.இருபாலரும் இடத்துக்கு தகுந்தவாறு ஆதிக்கம் செலுத்துகின்றனர். பாலியல் தேவை என்பது ஆசையாக இன்பமாகத்தான் நுகரப்படுகிறது இன்றைய உலகில்.ஆனால் இனப்பெருக்கம் தான் உண்மையான நோக்கம் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்கள்.ஆசை,இன்பம் காதல்,காமம், இவைகள்தான் பாலியல் தேவைக்கான காரணங்கள் .இனபெருக்கம் என்பது எதிர்விளைவே.ஆதி மனிதன் பாலியல் உணர்வுக்கு வடிகாலாகத்தான் பெண்ணை  தேடி இருப்பான்.பெண்ணும் அதற்காகவே இணங்கி இருப்பாள்.அதைப்போலவே பெண்ணின் தேவை மிகைத்திருந்தாலும் ஆணை அவள் அழைத்திருப்பாள்.எல்லா காலத்திலும் பாலியல் தேவை ஆசை இன்பத்திற்கு தான் முதலிடம்.
  மேலாடை அணியாத ..................................................................................ஆயிற்று என்று கூற வருகிறீர்களா?// 
இதில் உங்கள் இலக்கு என்ன?இது உங்கள் கேள்வி .மேலாடை அணியாத பழங்குடிகளிடம் பாலியல் வன்முறை இல்லை என சொல்ல வருகிறீர்கள். கேட்டது ,கேட்ட இடத்தில் கிடைக்கிறது.அவர்களை பொறுத்தவரை ருசியான உணவுகள் வாழ்க்கை வசதிகள் ஆகியவை கிடைக்காது.அது அறுதியாக கிடைக்கும்போது அதை அனுபவித்துவிட்டால் அதன் தேவைக்காக வன்முறை வரும்.மற்றபடி பாலியல் தேவை நினைத்த மாத்திரத்தில் அதை நிறை வேற்றிக் கொள்ளுகிறார்கள்.மேலாடை அணிவது அவர்களுக்கொரு பொருட்டல்ல.மேலும் அதன் மூலம் ஏற்படும் பாலியலும் அவர்களுக்கு ஒரு பொருட்டல்லவே,நீங்கள் அவர்களை உதாரணம் காட்டுவது புரட்சி மூலம் வரும் சோஷலிச ஆட்சியில் பழங்குடி மக்களை போல் வரம்பு எது மின்றி மனம் போன போக்கில் வாழ்வதற்கு அதாவது பழங்குடியின் சமூக சூழ்நிலைக்கு  ஏற்றவாறு சட்டம் வகுப்பீர்களா?என்பதற்க்காகத்தான் கேட்டேன்.ஆனால் நீங்கள் சோசலிசம்   நவீன பயன்பாடுகளை முதலாளிய சீரழிவுகள் எதுமின்றி கற்பிக்கும்.  என்று கூறுகிறீர்கள்.அப்படி என்றால் அவர்களும் நம்மைப்போல் ஆகி பாலியல் வன்முறைக்கு உட்படுவார்களே.ஆகவே மேலாடை அணியாவிட்டாலும் பாலியல் வன்முறை இல்லை என்பது தவறு.புர்கா அணிந்தவர்களும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்றால் தினசரி சாலை விபத்து நடைபெறுகிறது என்பதற்காக சாலை விதிகள் தேவையிலை என்பீர்களா?  
ஒன்றில் எச்சரித்து ஆடையை சரிசெய்யவும், மற்றதில் காம வேட்கையும் கொண்டால் ஆடை தவித்து வேறொன்று அதில் செயல்படுகிறது எனலாம். நீங்கள் சொல்லுவதைப்போலவே தான் சொல்லுவான் .இரண்டு பேரிடத்திலும் காமவேட்கை  கொண்டால் அவன் மிருக நிலையை எய்துவிடுவான்.அதனால் தான் தன சகோதரியை குறைந்த ஆடையில் காணும் வேறு ஆடவன் காம வேட்கை கொண்டால் தன சகோதரி அதற்க்கு பலியாகிவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் அவளை எச்சரித்து ஆடையை சரிசெய்ய சொல்லுகிறான்..பிறர் சகோதரியை பார்த்து தனக்கு வரும் காம உணர்வுதான்  தனது சகோதரியை பார்த்து பிறர்க்கும் வரும் என எண்ணுகிறான். ஆக ஆடை பாலியல் வன்முறைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உங்கள் உதாரணம் மெய்ப்பிக்கிறது.
ஆடம்பரத்தின் காரணமாக ஏற்படும் பொருளாதார சுரண்டல் வீரியமே இருபாலரையும் வேலைக்கு செல்லும் நிர்ப்பந்தத்தை உருவாக்கி உள்ளது .இது தவிர்க்ககூடியதே.வேறு வழியே இல்லாத நேரத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதை இஸ்லாம் தடை செய்யவில்லை.இன்றைய கலாச்சார சீரழிவுக்கு காரணம் ஆண்கள் வேலை இல்லாமல் பலர் இருக்க பெண்கள் வேலைக்கு சென்றறது தான் என்பதை மூடி மறைக்க முடியாது.பெண்களுக்கு சமஉரிமை என்று சொல்லும் ஏட்டளவில் முற்போக்கு பேசும் பென்பித்தர்களே இந்த சமூக சீர்கேட்டிற்கு காரணம் . ..
   இது மற்ற நாடுகளில் பதிவாகாமல் இருப்பதைவிட வெகு அதிகம் என்பதால்தான் மற்ற நாடுகளின் பாலியல் குற்றங்களை விட ஒப்பீட்டளவில் சௌதியில் ஒன்றும் குறைந்துவிடவில்லை என்கிறேன்.
இது உங்கள் யூகம்.யூகம் உண்மை ஆகிவிடாது .இதை ஒப்புக் கொண்டால் நம் வாதம் முழுமை பெற்றுவிடும் என்ற பயத்திற்காக தவறான தகவலை தருவதை விட உங்கள் கூற்றுக்கு ஆதாரத்தையோ சரியான வாதத்தையோ சொல்லுங்கள்.
பி.கு.ஜெயகாந்தன் எழுத்துக்களை இலக்கியவாதிகள் மட்டுமே புகழ முடியும் .சாதாரண மக்களுக்கு புரியாதது மட்டுமல்ல.நடைமுறைக்கும் ஒவ்வாதவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.