புதன், 1 டிசம்பர், 2010

அரஃபா நோன்பென்பது ஹாஜிகளின் அரஃபா தினம் தான்.

meera சொன்னது…


சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும்.
பிறை கண்டு நோன்பு வைக்கவும் பிறை காணாவிட்டால் ஷஃபான் மாதத்தை 30 நாட்களாகவும் கனக்கில் எண்ணவும் அடுத்து வரும் மாதமாகிய ரமலான் மாதமாகிய நோன்பைப் பற்றியே நமக்கு தெரிவிக்கின்றது. ஆனால் அரஃபா நோன்பென்பது ஹாஜிகளின் அரஃபா தினம் தான்.
இந்த வருட அரஃபா தினம் என்பது ஸவுதியில் ஹாஜிகள் கூடும் தினமான 15/11/2010 திங்கள் கிழமை. அன்றைய தினம் ஹாஜிகளுக்கு சங்கையான நாளாகவும் ஹாஜிகள் அல்லாதவர்கள் நோன்பு வைக்கவும் தான் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் தாங்களின் ப்ளாக்கரில் 17/11/2010 அன்று தான் அரஃபா நோன்பு என குறிப்பிட்டுள்ளீர்கள். முதலில் அரஃபா நோன்பு என்பது எதற்க்காக வைக்கப்படுகிறது, அரஃபா நோன்பா? அல்லது துல் ஹஜ் பிறை 9 நோன்பா? துல் ஹஜ் பிறை 9 நோன்பென்றால் ஏன் அரஃபா நோன்பென்று குறிப்பிட்டுள்ளீர்கள். அரஃபா நோன்பென்றால் ஏன் ஹாஜிகளின் அரஃபா தினமான 15/11/2010 அன்று நோன்பு இல்லை என்று, தாங்களின் விளக்கம் தந்தால் தெரியாத அனைவருக்கும் விளங்க வாய்ப்புள்ளது. வஸ்ஸலாம்
இப்படிக்கு
ஸவுதி அல்கோபரில் இருந்து நன்னி அப்துல் வஹாப்.தங்களது கருத்தை நான் நேற்றுதான் பார்த்தேன். ரமலானை மட்டுமல்லாமல் மாதம் என்பது 29 நாட்கள்தான் மேகமூட்டம் இருந்தால் முப்பது நாட்களாக்கி கொள்ளுங்கள்  என்பது பற்றியும் ஹஜ்ஜு பெருநாள் பிறை பார்ப்பது பற்றியும் ஹதீத்கள் உள்ளன.
அரபா நாளில் ஹாஜிகள் நோம்பு வைக்க தடை உள்ளது .மற்றவர்கள் நோம்புவைப்பது ஒரு வருட முன்னாலும் பின்னாலும் உள்ள பாவங்கள் மன்னிக்கப்படும் 
அரபா நாளில் நோம்பு வைக்கச்சொன்ன நபி[ஸல்] அவர்கள் மக்காவுக்கு ஆள் அனுப்பி அங்கே எந்த நாளில் அரபாவில் கூடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முயன்றதாக தெரியவில்லை.மதினாவில் பிறை பார்த்தபடியே பிறை ஒன்பதில் அரபா நோம்பு வைத்தார்கள்.மக்காவில் பிறை பார்க்கப் பட்ட பின் ஓரிரு நாளில் தெறித்து கொள்ள வசதி இருந்தும் அதற்க்கான முயற்சிகள் செயவில்லை. எப்போது சூரியன் மறைந்ததோ அப்போதுதான் மக்ரிப் வருகிறதோ ,அதுபோல் எப்போது பிறை பார்த்தோமோ ,அதிலிருந்து ஒன்பதாவது நாள் தான் அரபா நாள் ஆகும் .   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.